Thursday, May 25, 2017

பட்டதாரிகள் படும் பாடு

By எஸ்.சந்திரசேகர்  |   Published on : 25th May 2017 02:35 AM
அரசு மற்றும் வங்கிப் பணிகளுக்கு பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வுக்கான ஐ.பி.பி.எஸ். அமைப்பு என பல அமைப்புகள் தேர்வை நடத்துகின்றன. இதில் அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் மட்டுமே தேர்வுக் கட்டணம் குறைவு.
இந்தத் தேர்வுகளுக்கு தேர்வு மையங்களை எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறார்கள் என்பது புதிராக உள்ளது. ஏற்கெனவே வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், பெற்றோரிடம் பணம் வாங்கித்தான் கட்டணமே செலுத்துகின்றனர்.
அவர்களுக்கான தேர்வு மையங்கள் இருப்பிடத்திற்கு அருகில் இருந்தால் தான் வர முடியும். ஆனால் வெகுதூரத்துக்கு அப்பால் உள்ள கல்லூரிகளே தேர்வு மையங்களாக வைக்கப்படுகின்றன.
உதாரணமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தேர்வருக்கு மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கல்லூரியைத் தேர்வு மையமாக அறிவிக்கின்றனர்.
மதுரையில் உள்ள தேர்வருக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரி தேர்வு மையமாக அறிவிக்கப்படுகிறது. ஏன் இப்படி?
விருதுநகர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால் மதுரை மாவட்டத்தை ஏன் தேர்வு செய்கிறார்கள் என்பதே புரியவில்லை. அதிலும் காலை 8 மணிக்கு தேர்வு மையத்தில் விண்ணப்பதாரர் இருக்கவேண்டும். அழகர்கோவிலில் உள்ள அந்தக் கல்லூரிக்கு மதுரையில் இருந்து செல்வதென்றாலே காலை 6 மணிக்கு புறப்பட்டால் தான் 8 மணிக்குச் செல்ல முடியும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தோ, சிவகாசியில் இருந்தோ வர வேண்டுமானால், முதல்நாளே மதுரை வந்து விடுதியில் அறை எடுத்துத் தங்கினால் தான் சாத்தியமாகும். ஆண்கள்கூட பரவாயில்லை. பெண்களால் எப்படி வர முடியும்?
தேர்வுக் கட்டணத்தையும் செலுத்திவிட்டு அறை வாடகை உள்ளிட்டவையும் பெற்றோரிடம் கேட்டு வாங்க இளைஞர்களால் முடியுமா? விடுதியில் தங்க வேண்டியிருப்பதால், பெண் தேர்வருடன் குடும்பத்தவர் ஒருவரும் வர வேண்டும்.
விடுதி வாடகை மட்டுமின்றி போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கும். இந்த ஒரு தேர்வுக்காக ரூ.2 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். சாதாரண குடும்பத்தால் இவ்வளவு செலவழிக்க முடியுமா?
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், தேர்வு மையம் அமைக்க அதிவேக இணைய தள இணைப்பு வேண்டும். அந்த வேகத்துடன் உள்ள ஒரு சில கல்லூரிகளே தேர்வு மையம் அமைக்கச் சம்மதிக்கின்றன. இதனால் இந்த பிரச்னை ஏற்படுகிறது என்கின்றனர்.
இது ஏற்கக்கூடிய வாதமாக இல்லை. ஏனெனில், ஏறக்குறைய அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் அதிவேக இணையதள வசதி தற்போது உள்ளது. மேலும், இவர்கள் தேர்வு மையம் வைத்துள்ள கல்லூரிகள் ஒன்றும் மிகச்சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டவை எனக் கூற முடியாது.
இதைப்போல பல மடங்கு வசதிகளுடன் கூடிய கல்லூரிகளை தேர்வு மையமாக்க அணுகுவதில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கல்லூரிகள் கூடுதலாக தொகை கேட்கலாம். அதைக் கொடுப்பதால் ஐ.பி.பி.எஸ். நிறுவனத்துக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
காரணம் ஒரு மாணவரிடம் தேர்வுக் கட்டணமாக ரூ.600 பெறப்படுகிறது. அனைத்தும் இணைய வழியில் என்பதால், தபால் செலவுகூட கிடையாது.
தேர்வின்போது தேர்வறைக் கண்காணிப்பாளர் ஊதியம், போக்குவரத்து போன்றவைதான் செலவு. இப்படி தேர்வெழுத வராதவர்கள் மூலம் தேர்வு நடத்தும் அமைப்புகளுக்கு கணிசமான ஒரு தொகை கிடைக்கிறது.
அடுத்து தேர்வு மையங்களில் இளைஞர்களை நடத்தும் விதம். அந்தக் கல்லூரிகளைப் பொருத்தவரை தேர்வு எழுத வருவோர் அனைவருமே நவீன கொத்தடிமைகள் தான். நகரை விட்டு ஒதுங்கி பொட்டல்காட்டில் தான் கல்லூரி இருக்கும்.
கல்லூரியின் வாசலில் இருந்து கட்டடத்துக்கு 2 கி.மீ. தூரம் இருக்கும். வாகனங்களை கல்லூரியின் வெளியில் நிறுத்தச் சொல்கிறார்கள். அதற்கு குறைந்தபட்ச பாதுகாப்போ, நிழலோ கிடையாது.
அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வாகனங்களை கல்லூரி வளாகத்துக்குள் நிறுத்த அனுமதிக்கும்போது, கட்டணம் செலுத்தி தேர்வு எழுதுபவர்களின் வாகனங்களை தெருவில் நிறுத்தச் சொல்வது என்ன நியாயம்?
இதைத் தவிர வங்கித் தேர்வுகளுக்கு செலுத்தும் கட்டணத்துக்குக்கூட பரிமாற்றக் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் ரூ.10 முதல் ரூ.30 வரை வசூலித்து விடுகின்றன. யார்யாரிடமெல்லாமோ விட்ட பணத்தை பாவப்பட்ட மாணவர்களிடம் வசூலித்து இழப்புகளை ஈடுகட்டிக் கொள்கின்றன வங்கிகள்.
சரி இவர்கள் தான் வசூல் ராஜாக்களாக இருக்கிறார்கள் என்றால், அரசு போக்குவரத்துக்கழகம் அதன் அளவுக்கு வசூலில் முனைப்புக் காட்டுகிறது.
தேர்வு நாள்களில் சாதாரண, வழக்கமான நேரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மீது, சிறப்புப் பேருந்து என ஒரு வில்லையை ஒட்டிவிட்டு, சாதாரண கட்டணத்தைவிட கூடுதல் கட்டணத்தை வசூலித்து அதன் கல்லாவை நிரப்புகிறது.
மதிப்புக்குரிய தேர்வாணைய அதிகாரிகளே... அரசு போக்குவரத்துக் கழகத்தினரே... வேலைக்காகத்தான் இவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
அமெரிக்காவில் வழங்குவது போல வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குமாறு கேட்கவில்லை. குறைந்தபட்ச மனிதாபிமானத்தைத் தான் கேட்கிறார்கள். அவரவர் இருப்பிடத்துக்கு அருகில் தேர்வு மையத்தை அமைத்துக் கொடுங்கள்.
குறைந்தபட்சம் விண்ணப்பதாரருக்கு அவர் மாவட்டத்திலாவது தேர்வு மையம் இருக்கும்படி செய்து கொடுங்கள். பட்டதாரிகளை வதைக்காதீர்கள்.


திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்

By DIN | Published on : 25th May 2017 04:29 AM |




தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் (74) உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானார்.

1942-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரத்தில் பிறந்த அவருக்கு, மனைவி லோகமணி, மகள் தைப்பாவை, மகன் திலீபன் ஆகியோர் உள்ளனர்.
இன்று இறுதிச் சடங்கு: அவரது உடல் சென்னை கோடம்பாக்கம் கங்கா நகரில் (பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம்) உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (மே 25) காலை 9 மணி வரை அஞ்சலி செலுத்த வைக்கப்படும். பின்னர் சொந்த ஊரான போடி மீனாட்சிபுரத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு வியாழக்கிழமை (மே 25) மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர். மூலம் அறிமுகம்: திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். மூலம் பாடலாசிரியராக நா.காமராசன் அறிமுகமானார். 'பல்லாண்டு வாழ்க', 'நீதிக்குத் தலைவணங்கு', 'இதயக்கனி', 'இன்று போல் என்றும் வாழ்க', 'நவரத்தினம்', 'ஊருக்கு உழைப்பவன்', 'வெள்ளை ரோஜா', 'நல்லவனுக்கு நல்லவன்', 'இதயகோவில்', 'உதயகீதம்', 'நான் பாடும் பாடல்', 'தங்கமகன்', 'அன்புள்ள ரஜினிகாந்த்', 'கை கொடுக்கும் கை', 'காக்கிச்சட்டை', 'காதல் பரிசு', 'முந்தானை முடிச்சு' உள்பட 33 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். பஞ்சவர்ணம் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதியுள்ளார்.
விருதுகள்: கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியவற்றை நா.காமராசன் பெற்றுள்ளார்.

தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர், காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றில் தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர்.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1964-ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்தபோது நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

அரசு அதிகாரியாக...முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கதர் வாரிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1991-இல் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின்
உறுப்பினராக இவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.
எழுதிய நூல்கள்: கறுப்பு மலர்கள், கிறுக்கன், நாவல்பழம், மகாகாவியம், சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி, தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், சூரியகாந்தி சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், ஆப்பிள் கனவு, அந்த வேப்பமரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
பாடப் புத்தகத்தில்...இவரது பெரியார் காவியம் கவிதைத் தொகுப்புகள், இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக இடம்பெற்றுள்ளது. இவரது 'கறுப்பு மலர்' புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழதிய கவிதை பலரால் பாராட்டப் பெற்றது.

சிறந்த பேச்சாளர்: இலக்கியத் துறை, திரைப்படத்துறை, அரசியல் துறை ஆகியவற்றில் கால் பதித்து முத்திரை பதித்தவர். சிறந்த பேச்சாளர்.

தன் கால்களில் இரத்தம் கசியக் கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன்தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன்கூட
மறந்துவிடக் கூடாது

- கவிஞர் வைரமுத்து

May 25 2017 : The Times of India (Chennai)
I-T summons Lalu's daughter, son-in-law
New Delhi:
TIMES NEWS NETWORK


Asks Them To Appear Before It In Early June Over Property Transactions
The income tax department has summoned Lalu Prasad's daughter and Rajya Sabha MP Misha Bharti and her husband to investigate transactions related to their properties.The summons were issued as part of the “normal practice“ to record statements following recent searches, said an officer. Misha and her husband, Shailesh Kumar, have been asked to appear before the investigating officer early next month.
Misha and Shailesh are facing allegations of owning properties which were transferred to them at rates below the market price when Prasad was railway minister. Some of the properties are in Delhi, including one in upscale Sainik Farms and a farmhouse in Bijwasan.
Last week, searches were conducted at various premises of businessmen linked to Prasad, the former Bihar chief minister who was railway minister during UPA-I's tenure.
The summons to Misha and her husband come a day after the arrest of chartered accountant Rajesh Kumar Agrawal by the Enforcement Directorate. Agrawal is alleged to have advised Prasad's kin. The former RJD chief, who has been convicted for corruption in a fodder scam case and facing other charges, has denied any wrongdoing.
His two sons, Tej Pratap and Tejaswi, ministers in the Nitish Kumar government in Bihar, are also facing allegations of being shareholders in companies that acquired properties during Prasad's stint at the Centre.
May 25 2017 : The Times of India (Chennai)
Clinical trial results to be made public, say funding 
agencies
New Delhi:


Some of the world's largest funders of medical research, including Indian Council of Medical Research (ICMR), UK Medical Research Council and international organisations like PATH and Bill and Melinda Gates Foundation, have decided to make public results of all clinical trials funded and supported by them. This assumes significance as almost half of clinical trials go unreported currently . Moreover, the move will enhance access to crucial data which can be useful in advancement of medical research.The decision is part of an agreement on standards, framed by the World Health Organisation (WHO), signed by the agencies at the ongoing United Nations' World Health Assembly in Geneva. Health minister J P Nadda and senior officials from the health ministry are attending the Assembly where delegates from health groups and civil society from across the world are present.
The research institutes and other funding agencies agreed to develop and implement policies within the next 12 months that require all trials they fund, co-fund, sponsor or support to be registered in a publiclyavailable registry . They also agreed that all results would be disclosed within specified time-frames on the registry or by publication in a scientific journal. “We need timely clinical trial results to inform clinical care practices as well as make decisions about allocation of resources for future research,“ said Dr Soumya Swaminathan, DG of ICMR. “We welcome the agreement of international standards for reporting time-frames that everyone can work towards.“
Most of these trials and their results will be accessible through WHO's International Clinical Trials Registry Platform, a unique global database of clinical trials that compiles data from 17 registries around the world, including the US' clinicaltrials.gov, the EU's Clinical Trials Register, the Chinese and Indian Clinical Trial Registries and many others.
Experts say unreported trial results leave an incomplete and potentially misleading picture of the risks and benefits of vaccines, drugs and medical devices, and can lead to use of suboptimal or even harmful products.
May 25 2017 : The Times of India (Chennai)
Rajiv case convict seeks to globalise issue, writes to 
UN
Chennai:


Seeking to internationalise denial of release from prison, India's longest serving woman prisoner Nalini Sriharan, who is doing her life imprisonment in the Rajiv Gandhi assassination case, has written to the United Nations high commissioner for human rights, Geneva, Switzerland. She has been in jail since 1991.“I suffer discriminatory treatment at the hands of the Government of India, and the government of Tamil Nadu,“ Nalini said, adding that she became eligible to be considered for release in 2001. She now wants the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCR) to `impress upon the government of India to exercise its powers under Article 72,' and release her from prison.
When Gopal Vinayak Godse, conspirator in the Mahatma Gandhi assassination case, could be released from prison in 1965, why could she not be released, that too after 26 years in jail, Nalini asked. “I have not been considered for early release from prison only on political grounds, not on legal grounds.
After a human bomb killed former prime minister Rajiv Gandhi on May 21, 1991, 26 people, including Nalini, were sentenced to death by a special court. The Supreme Court, however, limited death term to Nalini, her husband Sriharan, Santhan and Perarivalan. On April 24, 2000, the Tamil Nadu governor commuted her death sentence to imprisonment for life.
Like other states, Tamil Nadu used to release life convicts after specified periods of incarceration if they exhibited good conduct. The last such release came in 2008, when the DMK government released 2,200 life convicts who had completed minimum of seven years in jail. Citing this, and pointing out that her case was not at all considered, Nalini said: “I have been denied the benefit of early release from prison, which is available to all the life convicts in the country , only on the ground that I was convicted in the case of assassination of Rajiv Gandhi, a former prime minister of India.“
May 25 2017 : The Times of India (Chennai)
`PM to attend MGR function
Chennai:
TIMES NEWS NETWORK


The AIADMK (Puratchi Thalaivi Amma) faction has said Prime Minister Narendra Modi confirmed his participation in the valedictory function of the birth centenary celebrations of AIADMK founder M G Ramachandran (MGR), organised by the faction, in October. According to a release, leaders of the faction met on Wednesday , to brief members about their recent meeting with the Prime Minister in New Delhi. They also discussed MGR's birth centenary celebrations, and steps to be taken by the faction in the future, the release said.Former chief minister O Panneerselvam chaired the meeting of MPs and MLAs who have joined his faction, besides other senior leaders, the release said.
The release said Panneerselvam discussed the drought situation in the state, Cauvery, Avinashi-Athikadavu project, farmers' issues, NEET, Salem steel plant and other issues with the PM. He also invited the PM to the grand finale of MGR's birth centenary celebrations.
May 25 2017 : The Times of India (Chennai)
FRESH FIELD - Agri sciences turn new favourite of 
undergrads


Agriculture, the largest profession in the country, seems to be gaining impetus in Tamil Nadu. The past few years have seen agriculture emerge as one of the most sought-after undergraduate courses in the state. Career experts say , emergence of cutting-edge farming techniques, availability of research opportunities and an increased interest of youth in organic farming have made agriculture a preferred stream among students today . While nearly 50% candidates who pursue BSc in agriculture join the stream out of genuine interest, another 20%-30% take up the course keeping in mind employment opportunities the stream offers, both in government and private sectors. Experts say about 10% of agriculture undergraduates are UPSC aspirants. Last year, the top three candidates in the counselling of Tamil Nadu Agricultural University (TNAU) had given away engineering seats in top engineering institutions to take up agriculture. The number of applications for agriculture and allied courses at the university is constantly on the rise. Last year, the university received around 39,772 applications while the count for the current year stands at 39,491 so far. With 10 more days left for the applications to close, the university expects to receive nearly 45,000 applications this year. The number of applicants is thus nearly 150 times the number of seats on offer (2,820).Professor of agriculture at TNAU, R Krishnan says nearly 50% of applicants opting for BSc in agriculture hail from the farming background. “In many cases we see students studying agriculture only to solve the problems faced by their parents in the profession. Some of them pursue higher studies while others become entrepreneurs in the field of agriculture,“ Krishnan says.
With agriculture being a subject in the UPSC examination and the university providing coaching classes for the same, many students pursue the course to crack UPSC and other competitive examinations of the state and central governments.
“Besides, the stream provides many research opportunities. Emergence of farming options like soilless farming, hydroponic farming and organic farming have also contributed to the increase in aspiring agriculturists and farmers,“ Krishnan says.
Farmers admit to the growing interest among youth in the study of agriculture and agricultural practices.C Thangaraj, president of Farmers Association in Coimbatore says, “Five years ago, we did not have a single person below 30 in our association. Today, at least 15% of our 5,000 members are youngsters. The association will soon have a youth wing.“ He says the young members will be celebrating the association's farmers' day for the first time this July .
Young farmers, who recently began practising agriculture, say the rising demand for organic farming and new farming techniques have motivated them to take up agriculture as a serious profession. “I started organic farming with friends in 2012. At that time, there wasn't a huge demand for organic produce. But, today I see many youngsters practising organic farming,“ says 32-year-old Azarudeen T, who quit his job in media to practise agriculture.
Email your feedback to southpole.toi@timesgroup.com

May 25 2017 : The Times of India (Chennai)
Docs who failed to serve at govt hosps get notice

Chennai:


`Resume Work Or Cough Up Rs 20 Lakh Fine'
The state health department has slapped notices on more than 500 post-graduate doctors and super specialists who signed a bond promising to serve the government but reneged on it.These doctors may have to pay up to `20 lakh as fine if they don't don't join duty , mostly in rural hospitals and PHCs.Heads of various hospitals and departments found that for more than six years now, several doctors haven't either joined duty or have been absent without leave or approval before completing their term. “The bond was introduced so we can have nonservice doctors work in government hospitals for at least two years. They are experienced and are posted to rural and difficult areas so people there can benefit. But we found several people haven't even joined duty. We are asking them why we should not initiate revenue recovery procedure against them,“ said director of medical education A Edwin Joe. Noticies will be issued to at least 100 more doctors in the next few weeks, he said.
The government was forced to act as it was unable to reserve 50% of PG seats for government doctors after introduction of NEET, say senior doctors. “Now, students from across the state will en ter government colleges where the clinical experience is rich and the fee is subsidised.If we mandate them to serve in the government for at least two years, we will have a steady stream of experienced doctors. Else there will be an acute shortage,“ said TN Government Doctors' Association president K Senthil.
Until 2016, non-service candidates admitted to government-run medical colleges at a subsidised fee -10 times lower than private colleges and deemed universities -were asked to execute a bond with sureties for up to `10 lakh on admission to PG diploma courses and up to `20 lakh (changes every year) on admission to PG degree and super-speciality courses such as neurosurgery with an undertaking to serve the government for a period of not less than two years, in the posting issued.
If a candidate is unable to work in state-run hospitals for the specified period the bond has to be credited to the government along with the stipend received. These doctors are paid a salary on a par with fresh recruits of the state medical services.
The notices issued are showing results, said director of medical services Dr P Bhanu. “At least eight doctors have joined duty in districts already .“
May 25 2017 : The Times of India (Chennai)
`One India, one question paper is a must for NEET'


`Question Paper In Tamil Easy, English Hard'
In an order that may throw the National EligibilityCum-Entrance Test (NEET) schedule for MBBS and BDS admissions off the track, the Madras high court on Wednesday stayed all further proceedings with regard to the examination held on May 7.The interim order restrains CBSE from continuing with the evaluation of answer scripts, releasing answer key and declaring results. While answer keys were slated for release on May 31, results were to be declared on June 8. CBSE officials, meanwhile, said they were “seeking legal opinion on the case.“
Justice M V Muralidharan granted the interim stay on Wednesday on a writ petition filed by T Sakthi Malarkodi of Trichy , seeking to scrap NEET-2017 on the ground of discrimination.
The judge issued notices to Union health and family welfare secretary , directorgeneral of health services, Medical Council of India (MCI), CBSE and Tamil Nadu health and family welfare secretary . They shall file replies by June 7.
A group of students from Madurai had filed a joint writ petition on May 18 praying for cancellation of NEET-2017, as there was no uniformity in the question papers set for different languages in different states. CBSE had set the question papers in 10 languages including Tamil. The petitioners, S Jonila, P Surya, P Siddharth, K Ajay Sharan, S Nitin Prakash Sivasubramanian, Gauthaman Shankar, J Aditya, D Richard Rishaban Das and M Naveen Kumar, said they were shocked when they found the question paper was not uniform for all states and all languages.
In Tamil Nadu, the paper in Tamil was easy compared to the one in English. They urged the court to order CBSE to conduct a fresh exam in a uniform manner after cancelling the May 7 test. “One India, one question paper is a must for NEET,“ they said.
Writ petitions from some other students are pending before the principal seat of the court in Chennai. Had they known Tamil questions would contain state board syllabus, they would have opted for Tamil language, they said.
Unless the interim stay order is vacated, the CBSE can not continue the evaluation process and it would delay declaration of results as scheduled, on June 8. It will also have an impact on commencement of counselling for MBBSBDS courses in states, more so because admission for both government and management quota seats is to be done by the respective state governments.
NEET became the sole criteria for medical and dental admission throughout the country after a SC ruling in 2016. The examination is conducted by CBSE on behalf of the medical and dental councils. While CBSE on its website said its role was limited to conducting the examination, MCI officials said they had no role to play .
“The CBSE is responsible for setting question papers, issuing hall tickets, setting up centres, conducting exams, evaluating them, and declarating of results and merit list,“ said MCI vice-president Dr C V Bhirmanandham.
May 25 2017 : The Times of India (Chennai)
Moderation fine, but many worried over results 
delay
TIMES NEWS NETWORK


Timing A Problem As Admission Process Has Begun For State Board Students
If lack of clarity on a date for CBSE Class XII exam results had got students and parents worked up, the decision to moderate marks, following Tuesday's Delhi high court order, has only increased fears of a further delay in the results.While the court's order was welcomed by many students, the timing does not seem to have gone down well with several parents who are worried about admissions.
Most colleges in Tamil Nadu began admissions on May 12, soon after the state board results were out. Some institutions have kept the window open for CBSE students, while some like Loyola College and MOP Vaishnav said they halted admissions on May 22 and would resume after the CBSE results were declared. Most col leges will be car rying out admis sions till June. A few are yet to is sue a deadline.
For many stu dents, however, it is not the window of admissions but the availability of seats that is a big ger concer n as state board stu dents would have taken a major chunk.
“I don't know how much of a difference moderation will make now but if they had done this a little sooner it would have definitely made life easier for students. Especially for students who are only waiting for these results to proceed with their counselling in engineering. This is making children tense and could have been avoided“ said Manjula J, a parent.
A former CBSE officer said the moderation process was quick and felt it would not delay results.“Since the entire process is computer generated, the process will not take too long,“ echoed Ajeeth Prasad Jain, senior principal of Bhavan's Rajaji Vidyashram and CBSE board member.
Ramesh Swaminathan, another parent, said the uncertainty of results, more than anything else, had been an unhealthy trend for years and was keeping all concerned on tenterhooks. For some students, getting the moderated marks will be crucial even if it means a delay in results or admissions. Anjali, a Class XII student of Schram Academy , said: “The scrapping of the policy might just be a ripple in a puddle for the board but it is an indefinite tsunami for the student. This was the right step taken to demolish the pessimistic actions that may ruin a child's academic future,“ she said.
Yash, another student, said that CBSE results were usually expected at the end of May and another week's delay was not likely to affect college admissions much. “It will be helpful for those who get average marks as it increases the marks,“ he said.
May 25 2017 : The Times of India (Chennai)
MDS counselling postponed after students protest
Chennai:
TIMES NEWS NETWORK


The Directorate of Medical Education indefinitely postponed counselling for admission to postgraduate dental courses on Wednesday after students went on a protest asking why self-financing colleges have not surrendered at least 50% of seats to the state quota.“We scheduled the counselling based on the number of seats we received from colleges. While most nonminority colleges have surrendered the required number of seats, some have not,“ selection committee secretary G Selvaraju said. “We stopped the counselling when students protested.“
“We have put out a notice and are waiting for government orders on how we sho uld proceed with the counselling,“ he said.
On Tuesday, when the government began counselling for the self-financing dental colleges affiliated to the Dr MGR Medical University, students argued that there should have been at least 180 seats from private colleges but the government put out only 108 seats on the matrix.
The DCI website shows that of the 549 MDS seats in the state 245 were from selffinancing colleges and an additional nine seats were pending approval.
Senior officials in the Directorate of Medical Education said they were in talks with the legal department to see what could be done. “We can't delay counselling indefinitely,“ an official said.



May 25 2017 : The Times of India (Chennai)
CBSE likely to move SC against moderation order
New Delhi


1.5Cr Students In Suspense; Class XII Results May Be Delayed
The fate of at least 1.5 crore school-leaving students hangs in balance as chaos over moderation of marks grows. Amid indications that CBSE may move the Supreme Court against the Delhi high court order asking it not to do away with the moderation policy this year, several other school boards are likely to delay announcing Class XII results as they wait and watch the developments.The Uttar Pradesh board decided on Wednesday to follow whatever decision CBSE takes on the issue while the Council for the Indian School Certificate Examinations, which normally declares its results by mid-May , also seems to have adopted a similar strategy .
Adding to the uncertainty is CBSE's silence on whether the moderation muddle will hold up its Class XII results.Delay in results will have a spiralling effect, hitting the admission calendar. Besides, a move to apply mod eration, or not apply it, will impact candidates across boards.
On Wednesday, HRD ministry decided to seek legal opinion on the Delhi HC's order. Sources said CBSE is likely to move a special leave petition in Supreme Court against the verdict.
The court order has complicated matters for CBSE, as it along with 31 education boards had reached at a consensus on April 24, 2017 to not moderate marks and around seven boards have already declared their results based on that understanding.
Thirty-two education boards including the CBSE and CISCE had agreed to create a “level playing field for all students“ and to buck the trend of college admission cutoffs reaching unprecedented highs in recent years.
Following the HC's order, the matter was discussed in a meeting called by HRD minister Prakash Javadekar with secretary, school education and chairperson of CBSE on Wednesday morning.
“In the meeting it was decided that a legal opinion is to be taken on the matter as well as explore other options. Further course of action can be taken only after the legal opinion, which is awaited.The fact that some of the schools boards, for example Punjab, have already declared their results without moderation is creating confusion,“ said a senior HRD official. While HRD sources said that “results should not be delayed be cause of this issue,“ according to CBSE sources, nothing is certain till a final decision is taken on the matter by the Board.
“If CBSE decides to act as per the HC's order there could be issues with other boards which have declared their results and in case CBSE seeks a review of the court's order, that could also delay the results,“ said a CBSE official Schools feel that such decisions should not have been taken in haste. Most of them added that the high scores in board results were also a matter of concern.
“Any new measure should have been taken in consultation with all stakeholders ­ school teachers, subject experts, among others. Such decisions are not taken unilaterally and if the government was planning any such move it should not have been in the middle of the exams, but from next year. Now with the high court's order, whole thing has gone astray,“ said Tania Joshi, principal, Indian School.
“There should be grace marks as it increases the morale of the students. Grace marks to the extent of giving 33 marks to a student who scored 28 and helping himher to pass is fine. But when a child scores 65% in the pre-boards and 95% in the board exams, that raises questions,“ said Meena Sharma, principal of government girls school, sector 17, Rohini.


May 25 2017 : The Times of India (Chennai)
HC doubts uniformity of NEET, tells CBSE to hold 
back result

Madurai


`Question Paper In Tamil Easy, English Hard'
In an order that may throw the National EligibilityCum-Entrance Test (NEET) schedule for MBBS and BDS admissions off the track, the Madras high court on Wednesday stayed all further proceedings with regard to the examination held on May 7.The interim order restrains CBSE from continuing with the evaluation of answer scripts, releasing answer key and declaring results. While answer keys were slated for release on May 31, results were to be declared on June 8. CBSE officials, meanwhile, said they were “seeking legal opinion on the case.“
Justice M V Muralidharan granted the interim stay on Wednesday on a writ petition filed by T Sakthi Malarkodi of Trichy , seeking to scrap NEET-2017 on the ground of discrimination.
The judge issued notices to Union health and family welfare secretary , directorgeneral of health services, Medical Council of India (MCI), CBSE and Tamil Nadu health and family welfare secretary . They shall file replies by June 7.
A group of students from Madurai had filed a joint writ petition on May 18 praying for cancellation of NEET-2017, as there was no uniformity in the question papers set for different languages in different states. CBSE had set the question papers in 10 languages including Tamil. The petitioners, S Jonila, P Surya, P Siddharth, K Ajay Sharan, S Nitin Prakash Sivasubramanian, Gauthaman Shankar, J Aditya, D Richard Rishaban Das and M Naveen Kumar, said they were shocked when they found the question paper was not uniform for all states and all languages.
In Tamil Nadu, the paper in Tamil was easy compared to the one in English. They urged the court to order CBSE to conduct a fresh exam in a uniform manner after cancelling the May 7 test. “One India, one question paper is a must for NEET,“ they said.
Writ petitions from some other students are pending before the principal seat of the court in Chennai. Had they known Tamil questions would contain state board syllabus, they would have opted for Tamil language, they said.
Unless the interim stay order is vacated, the CBSE can not continue the evaluation process and it would delay declaration of results as scheduled, on June 8. It will also have an impact on commencement of counselling for MBBSBDS courses in states, more so because admission for both government and management quota seats is to be done by the respective state governments.
NEET became the sole criteria for medical and dental admission throughout the country after a SC ruling in 2016. The examination is conducted by CBSE on behalf of the medical and dental councils. While CBSE on its website said its role was limited to conducting the examination, MCI officials said they had no role to play .
“The CBSE is responsible for setting question papers, issuing hall tickets, setting up centres, conducting exams, evaluating them, and declarating of results and merit list,“ said MCI vice-president Dr C V Bhirmanandham.





திருப்பூரை புகழ்ந்த அமைச்சர்... பெருமிதம்! தொழில் துறையினர் உற்சாகம்
பதிவு செய்த நாள்25மே2017 01:44




திருப்பூர் : "திருப்பூரை போல் தொழில் நகரங்கள், நாடு முழுவதும் அமைக்க உரிய ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,' என்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அறிவிப்பு, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திருப்பூர் வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, திருப்பூர் பகுதியில் ஆய்வு செய்தார். இங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிகள் குறித்து கேட்டறிந்த அவர், திருப்பூரை பின்பற்றி, நாடு முழுவதும் தொழில் நகரங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்."நேற்றைய தொழிலாளர்கள்; இன்றைய தொழிலதிபர்கள்' என்று, திருப்பூரின் வளர்ச்சியை புகழ்ந்துள்ள அவர், திருப்பூர் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு கள், ஏற்றுமதி வாய்ப்பு கள், தொழில் முதலீடுகள் ஆகியன குறித்து, ஜவுளி துறை ஆணையத்தின் மூலம், புள்ளி விவரங்களை சேகரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில், திருப்பூரில் தொழில் நிறுவனங்களின் முதலீடு, உற்பத்தி முறை, வேலை வாய்ப்பு, மூலப்பொருட்களின் தேவை, மாதாந்திர உற்பத்தி அளவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் நாடு முழுவதற்குமான ஜவுளி கொள்கை வகுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஜவுளி தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் வகையில், "டெக்ஸ்டைல் இந்தியா 2017' என்ற தலைப்பில், ஜூன், 30 முதல், ஜூலை, 2 வரை குஜராத்தில், ஜவுளி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் துவக்கி வைக்கும் இக்கண்காட்சியில், 20 நாடுகளில் இருந்து, 2,500 சர்வதேச வர்த்தகர்களும்; 15 ஆயிரம் உள்நாட்டு வர்த்தகர்களும் பங்கேற்க உள்ளனர். இதில் ஏராளமான வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் எனவும், மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், "இக்கண்காட்சி, திருப்பூர் தொழிற் துறையினருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். திருப்பூர் தொழிற்துறையை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் தொழில் நகரம் உருவாக்கவும், ஜவுளி கொள்கை வகுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது திருப்பூருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது,' என்றனர்.
ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: வீடுகளில் நேரில் ஆய்வு

பதிவு செய்த நாள்24மே2017 22:09

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வாங்கியவர்களின் வீடுகளில், உணவு துறை ஊழியர்கள், நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். தமிழகத்தில், 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 83 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகளில் ஆய்வு செய்ய, உணவு துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வசிக்கும் நபர்களுக்கு மட்டும், 'ஆதார்' விபர அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் வழங்கப்படுகிறது; வட மாநிலங்களைச் சேர்ந்த பலர், தமிழகத்தில் கட்டுமான பணி, ஓட்டல்களில் வேலை பார்க்கின்றனர். அவர்கள், உள்ளூர் மக்கள் உதவியுடன், ஸ்மார்ட் கார்டு பெற முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது; ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்கள், அந்த முகவரியில் தான் வசிக்கின்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களின் வீடுகளில், ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கு, உணவு துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: பலரின் ஆதார் விபரங்கள் சரியாக இல்லாததால், அனைவருக்கும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு தர, தாமதம் ஏற்படுகிறது. இதற்காக, அவர்களை தொடர்பு கொண்டு, பிழை திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களின் வீடுகளில் ஆய்வு செய்வது, கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தும். அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்ய, ஊழியர்களும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
ராணுவ வீரரின் மனைவிக்கு 18 ஆண்டு பென்ஷன்

பதிவு செய்த நாள்24மே2017 21:56

சென்னை: முன்னாள் ராணுவ வீரரின் மனைவிக்கு, 18 ஆண்டுகளுக்கான குடும்ப ஓய்வூதியம் அளிக்கும்படி, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, முடிச்சூரை சேர்ந்தவர் கெஜலட்சுமி, 82. அவர், ராணுவ தீர்ப்பாயத்தில் தாக்கல் மனு:

என் கணவர், சிட்டி பாபு, 1942 முதல் 1946 வரை ராணுவத்தில் பணியாற்றினார். பின், 1951 முதல், 1966 வரை, பகுதி நேரமாக பணியாற்றும், பிரதேச ராணுவத்தில் பணியாற்றினார். 

கணவர் இறந்த பின், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பிரதேச ராணுவத்தில், 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளதால், குடும்ப ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷா சந்திரன், உறுப்பினர் சுரேந்திரநாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர், பிரதேச ராணுவ வீரரின் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர். அவருக்கு, 18 ஆண்டு களுக்கான, குடும்ப ஓய்வூதியத்தை அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.
அக்கியை குணப்படுத்தும் மருத்துவம்

2017-05-24@ 15:13:07



நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அக்கி கொப்புளங்களை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு பருப்புக்கீரை, கொத்துமல்லி, சீரகம், பூங்காவி, ஊமத்தன் இலை போன்றவை மருந்தாகிறது. மிக கடுமையான நோயாக கருதப்படுவது அக்கி. இதனால், தோலில் அரிப்பு, வீக்கம், திட்டு திட்டான கொப்புளங்கள் ஏற்படும். இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல், தோலில் எரிச்சல், வலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். உதட்டு பகுதியில் பற்றிக்கொண்டு துன்புறுத்தும். நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும். அக்கி நோய்க்கான மருத்துவத்தை காணலாம்.

பருப்புக்கீரை, கொத்துமல்லி இலைகளை கொண்டு அக்கியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய், சீரகம், பருப்பு கீரை, கொத்துமல்லி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் எடுக்கவும். இது உருகியதும் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். இதனுடன் 2 ஸ்பூன் பருப்பு கீரை பசை, ஒருபிடி கொத்துமல்லி இலைகளை சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர அக்கியின் தாக்கம் தணியும். காய்ச்சல் சரியாகும். அக்கி புண்கள், கொப்புளங்கள் குணமாகும். நரம்புகளில் ஏற்படும் வலி குறையும்.

பூங்காவியை பயன்படுத்தி அக்கி புண்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூங்காவி, பன்னீர்.செய்முறை: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூங்காவியுடன், பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து அக்கி கொப்புளங்களுக்கு மேல் பூச வேண்டும். சுமார் 3 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்துவர அக்கி கொப்புளங்கள் சரியாகும். அக்கியால் ஏற்படும் எரிச்சல், வலி சரியாகும். செம்மண் வகையை சேர்ந்த பூங்காவி பல்வேறு மருத்துவ குணங்களை உடையது.

ஊமத்தன் இலையை பயன்படுத்தி அக்கிக்கான மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெண்ணெய், ஊமத்தன் இலை.
செய்முறை: பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் எடுக்கவும். இது உறுகியதும் ஊமத்தன் இலையை போட்டு லேசாக வதக்கவும். இலைகளை இளஞ்சூடாக எடுத்து அக்கி புண்கள் மீது போட்டுவர அக்கி புண்கள் சரியாகும். ஊமத்தன் இலையை எக்காரணத்தை கொண்டும் உள் மருந்தாக எடுத்துக்கொள்ள கூடாது. வறட்டு இருமலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடை, குளிர் காலத்திலும் வறட்டு இருமல் ஏற்படும். இப்பிரச்னைக்கு சீரகம் மருந்தாகிறது. அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் சீரகத்துடன் சம அளவு சர்க்கரை சேர்த்து பொடித்து வைத்துகொண்டு இருமல் இருக்கும்போது ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர வறட்டு இருமல் சரியாகும்.
துபாயில் நாளை முதல் ரோந்து பணியில் ஈடுபடவுள்ள போலீஸ் ரோபோக்கள்
2017-05-24@ 17:22:01




துபாய்: உலகநாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதன்மையான இடத்தைப் பெறும் முயற்சியாக, நாளை முதல் போலீஸ் ரோபோக்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த துபாய் காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த போலீஸ் ரோபோவை அரபு, ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் தொடர்பு கொள்ளலாம். ரோபோவின் மார்பின் மீது தொடு திரை மூலமாக மக்கள் அபராதம் செலுத்துவது, மற்றும் தகவல்களைப் பெறுவது போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ரோபோவின் கண்கள் எதிரில் உள்ளவரின் உணர்வுகள், சைகைகள் கண்டறியும் வகையிலும், முகங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தொடங்கப்பட இருக்கும் இச்சேவையில் முதலில் சுற்றுல்லாத் தளங்களிலும், மால்களிலும் ரோபோக்களின் செயல்திறன் பரிசோதிக்கப்பட உள்ளது. கால்களில் உள்ள சக்கரங்களும், கண்களில் உள்ள கேமரா, மற்றும் ரோபோவிடம் உள்ள வரைபடமும், தடைபடாமல் சரியாக செல்ல உதவுகிறது. உலகிலேயே முதன்முதலில் இந்த ரோபோ போலீசை அறிமுகப்படுத்துவது, உலகநாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதன்மையான இடத்தைப் பெறும் முயற்சியில் முக்கியமான மைல் கல்லாக அமையும் என படைப்பகுதித் தலைவர் மற்றும் துபாய் காவல்துறையின் நவீன சேவைப் பிரிவின் தலைமை அதிகாரியுமன, காலித் நாசர் அல் ரசூகி தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை முயற்சி திருப்திகரமாக அமைந்தால் 2030-ம் ஆண்டிற்குள் காவல்துறையில் 25% வரை ரோபோக்கள் இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த முறை முழுமை பெறுவதற்கு இன்னும் பலக் கட்டங்களைத் தாண்டிப் போக வேண்டிய உள்ளது. கூகுள் மற்றும் ஐ.பி.எம் வாட்சனின் உதவியுடன் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ள துபாய், இந்த ரோபோ காவல்துறைக்கு ஆயுதங்கள் ஏதும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. ஆயுதங்களோடு இருக்கும் குற்றவாளியை எதிர்கொள்வது, ரோபோவிற்கு சற்று சவாலாகவே அமைந்தாலும், நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இது ஒரு நல்லத் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
18 வயது நிரம்பாத மைனர் பெண்ணின் ஒப்புதலுடன் உறவு கொள்வதும் பலாத்காரம் தான்

2017-05-25@ 01:22:57




பெங்களூரு: பதினெட்டு வயது நிரம்பாத மைனர் பெண்ணை அவரது ஒப்புதலுடன் உறவு கொண்டாலும் அதை பாலியல் பலாத்கார குற்றமாகத்தான் கருத முடியும். அத்தகைய குற்றம் செய்தவருக்கு சட்டத்தில் கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவை சேர்ந்த ராமண்ணா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மூன்றாண்டுகளாக இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராமண்னாவை கைது செய்து விசாரணை நடத்திய பின் சிறையில் அடைத்துள்ளனர்.

அவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சாம்ராஜ்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு நேற்று முன்தினம் விடுமுறைகால நீதிபதி கே.எஸ்.முதகல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்யும்போது, எனது கட்சிக்காரர் மைனர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவரின் ஒப்புதலுடன் தான் உறவு கொண்டுள்ளார். இது பாலியல் பலாத்கார புகாரில் வருவதில்லை. மேலும் எனது கட்சிக்காரர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததும், அவர் தலைமறைவாகாமல் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஆகவே எனது கட்சிக்காரரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்து அரசு வக்கீல் கே.நாகேஷ்வரப்பா ஆஜராகி வாதிடும்போது, பாதிக்கப்பட்ட பெண்னமனர். அவரை திருமண ஆசை காட்டி தொடர்ந்து மூன்றாண்டுகளாக உடலுறவுக்கு பயன்படுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அதை மறைத்து விட்டு மைனர் பெண்ணின்அறியாமையை பயன்படுத்தி அவரை நாசப்படுத்தியுள்ளார். இப்படிப்பட்டவரை ஜாமீனில் விடுதலை செய்தால், சாட்சியை கலைத்து விடுவார். ஆகவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இக்பால் என்பவர் சிறுமி ஒருவரி–்ன் ஒப்புதலுடன் பாலியல் உறவு கொண்ட புகார் தொடர்பாக வழக்கை விசாரணை நடத்திய கொச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை கேரள மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அத்தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் ஒப்புதலுடன் பாலியல் உறவு கொண்டாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளி–்க்கு வழங்கிய தண்டனை சரியானது என்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு இவ்வழக்கிற்கும் பொருந்தும், மைனர் பெண்ணின் அறியாமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவரின் தவறை மன்னிக்க முடியாது. ஆகவே அவரி–்ன் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக கூறி தள்ளுபடி செய்தார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம் வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட்
பதிவு செய்த நாள்24மே2017 23:24

சென்னை: 'அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம், வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது' என, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரியான ராம்பிரசாத் என்பவர், தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலையில், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான, தேடல் குழுவை நியமித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கவர்னரின் பிரதிநிதியாக, திறந்தவெளி பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன், அரசின் பிரதிநிதியாக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹேமந்த்குமார் சின்ஹா, சிண்டிகேட் பிரதிநிதியாக, டாக்டர் கருமுத்து கண்ணன் ஆகியோர், தேடல் குழுவில் இடம் பெற்றனர்.

கோரிக்கை : அண்ணா பல்கலை சட்டப்படி, தேடல் குழுவில் இடம் பெறுபவர்கள்,
பல்கலையின் கீழ் உள்ள எந்த அமைப்பிலும், உறுப்பினராக இருக்கக் கூடாது. தேடல் குழுவில், சிண்டிகேட் பிரதிநிதியாக இடம் பெற்றுள்ள, கருமுத்து கண்ணன், மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் தலைவராக உள்ளார்.அண்ணா பல்கலையின் இணைப்பு பெற்ற
கல்லுாரியாக, தியாகராஜர் கல்லுாரி உள்ளது. இதை சரிபார்க்காமல், தேடல் குழுவை, கவர்னரின் முதன்மை செயலர் நியமித்து உள்ளார். அண்ணா பல்கலை சட்டத்துக்கு முரணாக, சிண்டிகேட் பிரதிநிதி இடம் பெற்றுள்ளார்.எனவே, புதிய உறுப்பினர்களை கொண்டு, தேடல் குழுவை மாற்றி அமைக்க வேண்டும். தற்போதைய தேடல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அண்ணா பல்கலை துணைவேந்தரை நியமிக்க, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், மகாதேவன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எல்.சந்திரகுமார் ஆஜரானார்.

உத்தரவு : மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கவர்னரின் முதன்மை செயலர், உயர்கல்வித் துறை செயலர் உள்ளிட்டோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.துணைவேந்தர் நியமனமோ, தேடல் குழுவின் பரிந்துரையோ, எது நடந்தாலும், அது, இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும், டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
கலை கல்லூரியில் சேர்ந்தாலும் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்!

பதிவு செய்த நாள்25 மே2017  00:39

'கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், இன்ஜி., 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க முடியும்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங், அண்ணா பல்கலை சார்பில் நடத்தப்படுகிறது. ஜூன், 27 முதல் கவுன்சிலிங் நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. இன்ஜி., கவுன்சிலிங்கில், விரும்பிய பாடம், கல்லுாரி கிடைக்காமல் போனால், என்ன செய்வது என, பயந்த மாணவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்து வருகின்றனர். அவர்களிடம், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ்களை பெற்று, கல்லுாரிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சான்றிதழ்களை கொடுத்துவிட்டால், இன்ஜி., கவுன்சிலிங்கில் சான்றிதழ்களை எப்படி சமர்ப்பிப்பது என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.இது குறித்து, கவுன்சிலிங் அதிகாரிகள் கூறியதாவது: கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முன், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதால், மாணவர்களுக்கு, எந்த பிரச்னையும் இல்லை. 'கட் - ஆப்' மதிப்பெண்ணின்படி, அவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கும் நாளில், சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும்.

மேலும், எந்த கல்லுாரியில் சேர்ந்தனரோ, அந்த கல்லுாரி முதல்வர் அல்லது முதன்மை நிர்வாகியிடம், அசல் சான்றிதழ்கள் தங்களிடம் உள்ளதாக, கடிதம் பெற்று வர வேண்டும்.

அந்த சான்றிதழ்களின் நகல்களில், கல்லுாரி முதல்வரின் சான்றொப்பம் இருக்க வேண்டும். கவுன்சிலிங் நாள் வரைக்கும், மாணவர்கள் காத்திருக்காமல், தற்போதே வாங்கி வைத்து கொள்வது நல்லது. கடிதம் மற்றும் நகல்களை காட்டினால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
ஆனால், இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவு, மாணவரிடம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்படும். அந்த மாணவர், அசல் சான்றிதழ்களை வாங்கி வந்தவுடன், இட ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும்.

- நமது நிருபர் -



ஸ்ரீவி., ராஜபாளையத்தில் மழை

பதிவு செய்த நாள்24மே2017 23:57

ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் ராஜபாளையத்தில் நேற்று மாலை 6:00 மணி முதல் இடி, மின்னலுடன் 50 நிமிடத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக காலையில் வெயில் அதிகமாக இருந்தாலும், மாலையில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. 

கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால், பேயானாற்று படுகையில் நீர்வரத்து காணப்பட்டது. ஆனால், வாட்ஸ் ஆப்பில் அதிகளவில் தண்ணீர் செல்வது போல் ஒரு வீடியோ வைரலாக பரவியது. இதை வனப்பகுதியில் வசிப்பவர்கள் மறுத்துள்ளனர்.
நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ந்த வானிலை காணப்பட்டது மக்களுக்கு சற்று ஆறுதலை தந்தது.ராஜபாளையத்தில் வாறுகால் அடைப்பட்டதால் கழிவு நீருடன் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியது.
முதுநிலை பல் மருத்துவ படிப்பு 'கட் - ஆப் மார்க்' குறைப்பு
பதிவு செய்த நாள்24மே2017 23:28

சென்னை: தேசிய அளவிலான முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண்ணை, மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, தேசிய அளவிலான கவுன்சிலிங் நடந்து வருகிறது. பொதுவாக, 'நீட்' தேர்வில் மாணவர் எடுக்கும் அதிகபட்ச மதிப்பெண்ணில், பொது பிரிவினருக்கு, ௫௦ சதமானம், பிற ஒதுக்கீடு பிரிவினருக்கு, 40 சதமானம் என, 'கட் - ஆப்' கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உடன் ஆலோசித்த, மத்திய சுகாதார அமைச்சகம், இந்த கல்வியாண்டு முதல், முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண்ணை குறைத்துள்ளது.
இது குறித்து, தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜ் கூறுகையில், ''தேசிய அளவிலான பல் மருத்துவப் படிப்புகளுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண், 7.5 சதமானம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், பொது பிரிவினருக்கு, 42.5 சதமானம், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 32.5 சதமானமாக, 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படும்,'' என்றார்.
துணைவேந்தர் தேர்வு: கவர்னர் இன்று முடிவு

பதிவு செய்த நாள்24மே2017 23:27

மூன்று பல்கலைகளின் துணைவேந்தர் தேர்வு குறித்து, கவர்னர், இன்று முடிவு எடுக்கிறார். 

தமிழகத்தில், மதுரை காமராஜர் பல்கலையில், இரு ஆண்டுகளுக்கும் மேலாக, துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை நியமிக்க, சென்னை பல்கலை முன்னாள் பேராசிரியர், முருகதாஸ் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளாக, துணைவேந்தர் பதவி காலியாக உள்ள, சென்னை பல்கலைக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் அதிகாரி வேதநாராயணன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டது. ஓராண்டாக காலியாக உள்ள, அண்ணா பல்கலை புதிய துணைவேந்தர் பதவியை நிரப்ப, திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த தேடல் குழுக்கள், மே, 21ல், கவர்னர் வித்யாசாகர் ராவிடம், இறுதி பட்டியலை சமர்ப்பித்தன. இன்று, உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன், கவர்னர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒவ்வொரு பல்கலைக்கும், பட்டியலில் இடம்பெற்றுள்ள, மூன்று பேரின் தகுதி, அனுபவங்களின் அடிப்படையில், ஒருவரை தேர்வு செய்வார் என, தெரிகிறது. மூன்று பேரையும் நேரில் அழைத்து, நேர்முக தேர்வு நடத்தியும், கவர்னர் முடிவு எடுக்கலாம் என, கூறப்படுகிறது.
மீன்வள பல்கலை துணைவேந்தரை, நேர்முக தேர்வு நடத்தியே முடிவு செய்தார். 

அதே போல், தேடல் குழு பட்டியலை நிராகரித்து, புதிய நபர்களின் பெயரையும், கவர்னர் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -
மானாமதுரையில் 'நுங்கு'விற்பனை அமோகம்
பதிவு செய்த நாள்24மே2017 23:26

மானாமதுரை, மானாமதுரையில் கடந்த 3 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திர வெயிலால் மக்கள் வெளியே செல்ல தயங்கி வருகின்றனர்.

வெயிலிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்பானங்கள்,நுங்கு,இளநீர்,தர்பூசணி பழங்கள்,வெள்ளரிக்காய், போன்றவற்றை அருந்தி வருகின்றனர்.தற்போது மானாமதுரை சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் இருந்து 'நுங்கு'சீசன் ஆரம்பித்ததை தொடர்ந்து பல இடங்களில் நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 நுங்கு ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.வியாபாரி இடைக்காட்டூர் பாண்டி கூறுகையில்: தற்போது மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளன.தற்போது குறைந்த அளவு மரங்களே உள்ளன.கடந்த 4 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் ஏராளமான
மரங்கள் பட்டுப்போய்விட்டன.இதனால்' நுங்கு' வரத்து குறைந்துள்ளது.ஆகவே விற்பனைக்கு கொண்டு வந்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விடுகின்றன என்றார்.
முதுநிலை மருத்துவம் 67 பேருக்கு 'சீட்'
பதிவு செய்த நாள்24மே2017 22:26

சென்னை: அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில், 67 பேர் இடங்கள் பெற்றனர்.சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவ
மனையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. நேற்று முதல், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 335 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவங்கியது.மேலும், சுயநிதி கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையில் உள்ள, 172 அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கும் நடைபெறுகிறது. நேற்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்ற, 624 பேரில், 67 பேர் இடங்கள் பெற்றனர். வரும், 27 வரை, கவுன்சிலிங் நடைபெறுகிறது.

கிரேஸ் மார்க்' பிரச்னையால் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்
பதிவு செய்த நாள்24மே 2017 22:18

'கருணை மதிப்பெண் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது' என, நீதிமன்றம் உத்தரவிட்டதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில், 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், கணிதம் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டும், கடினமாக இருக்குமோ என்ற அச்சத்தில், மாணவர்கள் இருந்தனர்.
ஆனால், கணிதம் எளிதாகவும், விலங்கியல் கடினமாகவும் இருந்தது. எனவே, விலங்கியல் வினாத்தாளை ஆய்வு செய்து, 'கிரேஸ் மார்க்' எனப்படும் கருணை மதிப்பெண் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது.ஆனால், கிரேஸ் மதிப்பெண், போனஸ் மதிப்பெண் போன்ற முறைகளை கையாளக் கூடாது என, மத்திய மனிதவள அமைச்சகம், ஏப்., 27ல் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் உத்தரவு : இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவை, நேற்று வெளியிடுவதற்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் முடிவு செய்திருந்தது. நேற்று முன்தினம் மாலை, டில்லி உயர் நீதிமன்றம், கிரேஸ் மதிப்பெண் தொடர்பாக, ஒரு உத்தரவு பிறப்பித்தது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:தேர்வு அறிவித்து, அதன் நடைமுறைகளை மாணவர்களுக்கு தெரிவித்த பின், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது. கிரேஸ் மார்க் இருப்பதால், மாணவர்கள் பலர், பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி, வெளிநாட்டு பல்கலைகளில், உயர் படிப்புக்கு இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். 

நிதி நெருக்கடி : தற்போது, திடீரென மதிப்பெண் முறையில் மாற்றம் செய்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், நிதி நெருக்கடியும் ஏற்படும். எனவே, இந்த ஆண்டு மதிப்பெண் கொள்கையில் மாற்றம் கொண்டு வரக்கூடாது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதனால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதை, சி.பி.எஸ்.இ., திடீரென நிறுத்தி
வைத்துள்ளது. இதுகுறித்து, வாரிய உறுப்பினர்கள் கூடி முடிவு செய்த பின், மதிப்பெண் மாற்றுவதா அல்லது ஏற்கனவே தயாரான மதிப்பெண் பட்டியலை வெளியிடுவதா என, முடிவு செய்யப்பட உள்ளது.

- நமது நிருபர் -
மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம்


பதிவு செய்த நாள்24மே2017 22:07

சென்னை: தமிழகத்தில், நான்கு அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, புதிய டீன்களை நியமித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உத்தரவிட்டு உள்ளார்.

பெயர் புதிய இடம் பழைய இடம்

அசோகன் இ.எஸ்.ஐ. கோவை கோவை

சுவாமிநாதன் தர்மபுரி இ.எஸ்.ஐ. கோவை

சீனிவாசலு புதுக்கோட்டை தர்மபுரி

சாரதா பேராசிரியர் கோவை, புதுக்கோட்டை
ஆதாருக்கு பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை'


பதிவு செய்த நாள்25மே2017 01:24




புதுடில்லி: 'ஆதார் பதிவுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இல்லை' என, ஆதார் அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், அவர்களின் கண் கருவிழி பதிவு மற்றும் கைரேகை பதிவு அடிப்படையில், ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இதில், பயனாளியின் பெயர், தந்தை பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறும்.

இந்நிலையில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில கிராமங்களில், பலருக்கு ஒரே தேதியே அவர்களின் பிறந்த நாளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தவிர, ஆதார் அட்டை பெறுவதற்காக பிறந்த தேதி குறிப்பிடும் முறையில் குழப்பம் நீடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, ஆதார் அட்டை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் பதிவுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் அல்ல. ஆதார் பதிவின் போது, பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு, அவர்கள் பிறந்த ஆண்டு அல்லது அவர்கள் தெரிவிக்கும் வயதின் அடிப்படையில், ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.

எனினும், ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியில் மாற்றம் செய்ய, அதற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, பிறப்பு சான்றிதழ் இருந்தால் தான், ஆதார் அட்டை பெற முடியும் என பரவும் தகவல்கள் தவறானவை. மேலும், இந்த நடைமுறையில் எவ்வித குழப்பமும் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


நீட்' தேர்வு முடிவு வெளியிட தடை:ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: 'நீட்' தேர்வு முடிவை வெளியிட, இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.



மதுரையைச் சேர்ந்த, ஜொனிலா உட்பட, ஒன்பது பேர் தாக்கல் செய்த மனு: எம்.பி.பி. எஸ்.,- - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' என்ற தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்த, 2012ல் முடிவு செய்யப்பட்டது. மொத்தம், 180 வினாக்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா, 45 வினாக்கள் இடம்பெறும்.

அறிவிப்பு

மத்திய அரசின், 'நீட்' தேர்வுக்கு, 2016ல், உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2016ல், 'நீட்' தேர்வை ஆங்கிலம், ஹிந்தியில் நடத்த அறிவிப்பு வெளியானது. 2017லிருந்து, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, அசாமி, குஜராத்தி, கன்னடம், ஒடியா மொழிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்தியா முழுவதும், 2017 மே, 7ல், 'நீட்' தேர்வு நடந்தது.

நாங்கள் ஆங்கிலத்தில் எழுதினோம். இந்த அகில இந்திய போட்டி தேர்வை, ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், வெவ்வேறு மாறுபட்ட வினாக்கள் அடங்கிய வினாத்தாள்கள், பல்வேறு இடங்களில் வினியோகிக்கப்பட்டன; இது, அதிர்ச்சியளிக்கிறது. 'நீட்'தேர்வு முடிவு, ஜூன், 8ல் வெளியாகிறது.

இதன் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெறும். இதனால், எங்களை போன்ற மாணவர் களுக்கு பாதிப்பு ஏற்படும்; தேர்வு முடிவை வெளி யிட தடை விதிக்க வேண்டும். மே, 7ல் நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். அகில இந்திய அளவில், ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப் படையில், புதிதாக, 'நீட்' தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்திருந்தனர்.

திருச்சி சாந்தமலர்க்கொடி, தன் தந்தை தமிழன்பன் மூலம், 'நாடு முழுவதும் ஒரே மாதிரியாக, 'நீட்' தேர்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசின் அவசர சட்டம் - 2016 கூறுகிறது. ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் வினாக்கள் எளிதாக இருந்தன; ஆங்கிலத்தில் கடினமாகவும், தமிழில் எளிதாகவும் இருந்தன.

இதில் பாரபட்சம்காட்டப்பட்டு உள்ளது. தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். ஒரே மாதிரியாக புதிதாக, 'நீட்' தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என மனு தாக்கல் செய்தார். நீதிபதி, எம்.வி.முரளிதரன் விசாரித்தார்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்விவாரியம் தான், 'நீட்' தேர்வை நடத்துகிறது. ஜொனிலா உட்பட ஒன்பது பேர், கடந்த வாரம் தாக்கல் செய்த வழக்கில், இதுவரை, சி.பி. எஸ்.இ., பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ''சி.பி.எஸ்.இ., பதில் மனு தாக்கல் செய்த பின்பே, இவ்விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியும்,'' என்றார்.

உத்தரவு

நீதிபதி, 'வினா அமைப்பில், மாநிலத்திற்கு மாநிலம் பாகுபாடு காட்டப்பட்டு உள்ளதாக, மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். 'நீட்' தேர்வு முடிவை வெளியிட, இடைக்கால தடை விதிக் கப்படுகிறது. 'மத்திய சுகாதாரத் துறை செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர், சி.பி.எஸ்.இ., செயலர், ஜூன், 7ல், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Wednesday, May 24, 2017

அ.தி.மு.க-வின் அசரடிக்கும் ஓராண்டு சாதனை! - அவல நகைச்சுவை
த.கதிரவன்
ப.சுப்ரமணி
vikatan
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க இரண்டாவது முறையாக ஆட்சி அரியணையைத் தொடர்ந்து தக்கவைத்து சாதனை படைத்தது. கடந்த ஆண்டு இதே மே 23-ம் தேதி ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றபோது, தமிழக மக்களும் அவரிடம் நிறைய எதிர்பார்த்தார்கள்; ஜெயலலிதாவும் தனது தலைமைக்கு தமிழக மக்கள் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரத்துக்கு நன்றிக் கடனாய் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளிட்ட மக்கள் பணிகளைச் செயல்படுத்தும் ஆர்வத்தோடு முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஆனால்....



ஜெயலலிதாவின் மன வலிமைக்கு ஈடாக அவரது உடல் வலிமை இல்லாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டம். தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவந்தார். இறுதியாக, அவர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி... விமானநிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாதான். அந்த நிகழ்விலும் அவரால் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை; காணொளி காட்சிமூலம்தான் தொடங்கிவைத்தார்.

இப்படிப் போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில்தான் திடீரென செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 'காய்ச்சலால்' பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மருத்துவமனை சிகிச்சையில் அவர் இருந்த 75 நாள்களும், மர்மமும் சர்ச்சைகளாகவும் கடந்துபோயின. இந்தநிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அந்த அதிர்ச்சி செய்தியை அறிவித்தது மருத்துவமனை.... 'தமிழக முதல்வர் ஜெயலலிதா, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்'

நாடே துக்கக் கடலில் மூழ்கிக் கிடந்தபோதும், 'அடுத்து செய்யவேண்டியது என்ன?' என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மட்டும் சுறுசுறுப்பாகக் களமாடினர். ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில், சிறை சென்றபோது தாடி வளர்த்து, சோக மயமாக அழுது புலம்பி கண்ணீர் வடித்த அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும், ஜெ.மறைந்த அன்றைய தினம் நள்ளிரவே புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்து அவசர அவசரமாகப் பொறுப்பேற்று அனைவரையும் வியக்கவைத்தனர்.



அன்னையை இழந்த குழந்தையாக பரிதவித்துக்கிடந்த அ.தி.மு.கவைக் காப்பாற்றுமாறு அக்கட்சியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் 'சின்ன அம்மா' சசிகலாவை வற்புறுத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்க துளியும் விருப்பம் இல்லாதிருந்த நிலையிலும், அ.தி.மு.க-வின் எதிர்கால நலன் கருதி கட்சியின் பொதுச்செயலாளராக வேண்டா வெறுப்பாக பொறுப்பேற்றுக்கொண்டார் சசிகலா. அதன்பிறகும், 'கட்சியும் ஆட்சியும் ஒரே நபரிடம்தான் இருக்கவேண்டும்' என்று மறுபடியும் அ.தி.மு.க-வில் இருந்தே குரல்கள் ஒலிக்கத் தொடங்க... மறுபடியும் வேண்டா வெறுப்பாக சசிகலாவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான ஆயத்த வேலைகள் அரங்கேறின. முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எந்த கேள்வியும் கேட்காமல், பிப்ரவரி 5ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து சசிகலா முதல்வர் பொறுப்பேற்க வசதியாக சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்.

ஆனால்....

திடீரென பிப்ரவரி 7ஆம் தேதி இரவு மெரினா கடற்கரையில் உள்ள ஜெ. சமாதிக்கு வந்தமர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து 40 நிமிடங்கள் ஜெ. ஆன்மாவுடன் அவர் நடத்தியப் பேச்சுவார்த்தையின் பலனாக அவருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டது. மெரினாவில் கூடிய அத்தனைப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு சசிகலா கும்பலால் நான் மிரட்டப்பட்டேன்'' என்று துணிச்சலாகப் பேசி கண் கலங்கினார். ஒட்டுமொத்த தமிழகமும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையைப் பார்த்து கதறித் துடித்தது.

அதன்பிறகு நடைபெற்ற தமிழக அரசியல் மாற்றங்கள் எல்லாம் திட்டமிட்டு எழுதி முடிக்கப்பட்ட திரைக்கதையாக.... மென்பொருள் கட்டளைகளுக்கு அடிபணியும் கணினியாக இயங்கத் தொடங்கியதுதான் ஆச்சர்யம்.



'சசிகலாவை முதல்வராக்கியேத் தீருவது' என்று கங்கணம் கட்டிக்கொண்டு கூவத்தூர் சொகுசுவிடுதிக்குள் போய் தானாக அடைபட்டு, 'மகிழ்ச்சி' தவம் இருக்க ஆரம்பித்தனர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். மர்மப் புன்னகையோடு க்ரீன்வேஸ் சாலை வீட்டிலேயே தனி அணி சேர்த்துக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கிடையில், சொல்லிவைத்தது போல் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை கிடைத்தது சசிகலாவுக்கு. வேறு வழியின்றி தனது முழு ஆதரவோடு முதல்வர் பொறுப்பில் எடப்பாடி பழனிசாமியை அமரவைத்த சசிகலா, சிறைத்தண்டனையை அனுபவிக்க ஆயத்தமானார். கடைசி நிமிடத்தில் என்ன நினைத்தாரோ... தலைமை யாரும் இன்றி திக்கற்று நின்ற அ.தி.மு.க-வை வழிநடத்த தனது அக்காள் மகன் டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஆக்ஸிலேட்டரை மிதித்துக் கிளம்பினார். துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரனை நியமனம் செய்த சசிகலாவின் தொலைநோக்குப் பார்வையை பாராட்ட மனமின்றி 'குடும்ப அரசியல், வாரிசு அரசியல்' என்று வாரித் தூற்றினர் தமிழக அரசியல்வாதிகள்.

32 வருடங்கள் ஜெயலலிதாவோடு அரசியல் கற்றிருந்த சசிகலாவின் இந்தக் காய் நகர்த்தல்களை எல்லாம், இஷ்டத்துக்கு கலைத்துப்போட்டு ஆட ஆரம்பித்தனர் டில்லி ராஜாக்கள். ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிப்பு, பணப்பட்டுவாடா, இரட்டை இலை முடக்கம், தொப்பி, மின்விளக்கு, அம்மா அ.தி.மு.க, புரட்சித்தலைவி அம்மா அ.தி.மு.க... என்று கடந்த சில மாதங்கள் தமிழக அரசியலை சுத்தவிட்டவர்கள்... 'தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுக்க முயன்றதாக'க் கூறி டி.டி.வி தினகரனையும் திகாருக்கு அனுப்பி வைத்தனர். இத்தனைக் களேபரங்களுக்கு மத்தியில், காவிரிப் பிரச்னை, வரலாறு காணாத வறட்சி, விவசாயிகள் தற்கொலை, நிர்வாணப் போராட்டம், நீட் தேர்வு... என கொசுறு செய்திகளும் தமிழக செய்தி வரிசையில் அவ்வப்போது இடம்பிடித்தன. இந்தப் பிட் செய்திகளால், உருகிப்போன அமைச்சர் ஒருவர், தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக, தெர்மக்கோலால் வைகை அணையை மூடி வரலாற்றுப் புகழ் பெற்றது தமிழகத்தின் பெருமை!



சசிகலா சொந்தங்கள் தமிழகத்தைவிட்டே வெளியேறிவிட்ட சூழலில், 'மறுபடியும் முதலில் இருந்து....' எனப் புது ரூட் பிடித்த ரத்தத்தின் ரத்தங்கள்.... 'அ.தி.மு.க அணிகள் இணைப்பு' என்று அடுத்த அட்ராசிட்டியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். 'நிபந்தனை இல்லை', 'நிபந்தனை உண்டு', 'அமாவாசை இருட்டில் பெருச்சாளி போவதெல்லாம் வழி'.... என்று இந்த விளையாட்டும் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், கொங்கு மண்டல எம்.எல்.ஏ-க்கள் 8 பேர் தனிக்கூட்டம் நடத்தி எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கே செக் வைக்கும் முயற்சியில் அறிவிப்பு வெளியிட்டு அடிவயிற்றைக் கலக்கியிருக்கிறார்கள். 

இத்தனை சங்கதிகளுக்கு இடையிலும், 'அ.தி.மு.க-வின் ஒரு வருட ஆட்சி சாதனை' எப்படி?' என்று கேள்வி கேட்பவர்களுக்குப் பதில்... 'இருட்டில் கறுப்புப் பூனையைத் தேடும் கதைதான்!'

ரூ.10 கோடி மோசடி புகாரில் சிக்கிய கெஜ்ரிவால் உறவினர் வீட்டில் ரெய்டு..!





டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறார். அவரது நெருங்கிய உறவினரான சுரேந்தர் குமார் பன்சால் மீது 10 கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்தது. அவர், கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியை செய்த போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் பல்வேறு நிறுவனங்களின் பெயரால் போலி பில்களை அளித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் பேரில், 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சுரேந்தர்குமார் பன்சால் கடந்த 7–ம்தேதி மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், 22-ம் தேதி இரவு அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகளான பவன் குமார், கமல்குமார் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்; சினிமா டிக்கெட் விலை குறையும்..!



நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) வருகிற ஜூலை 1–ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.




மத்திய நிதி அமைச்சகம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய சேவைகளுக்கு சரக்கு, சேவை வரியை குறைக்க முடிவு செய்து உள்ளது. இதனால் கேபிள் நெட் ஒர்க், சினிமா டிக்கெட் கட்டணங்கள் குறையும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தற்போது சினிமா அரங்குகளில் திரையிடப்படும் சினிமா படங்களுக்கான கேளிக்கை வரி அதிகபட்சமாக 100 சதவிகிதம் வரை உள்ளது. இது ஜி.எஸ்.டி-யில் 28 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கேளிக்கை வரி உள்ளிட்ட அனைத்துவித வரிகளும் அடங்கிவிடுவதால் இனிமேல் கேளிக்கை நிகழ்ச்சிகள், காட்சிகள் மீது பஞ்சாயத்து அல்லது மாநகராட்சிகள் விதிக்கும் வரி மட்டும் நீடிக்கும். கேபிள் டி.வி மற்றும் டி.டி.எச் சேவைகளுக்கான வரியை 18 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்து இருக்கிறது. ஸ்மார்ட் போன் வரி ஒரு சதவிகிதம் குறைவதால் அதன் விலையும் குறையும்'' என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

NEWS TODAY 21.12.2025