Sunday, August 27, 2017

Prominent AIADMK figures join BJP

Warm welcome:BJP president Amit Shah with functionaries who defected from the AIADMK, in New Delhi on Saturday.Special Arrangement  

Former Minister Nainar Nagendran, ex-Mayor of Vellore among those who switched loyalties

Former Minister and prominent leader of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) from the Tirunelveli district, Nainar Nagendran, on Saturday joined the Bharatiya Janata Party (BJP) in New Delhi in the presence of its president Amit Shah.
In addition, R. Srinivasan, another former AIADMK MLA who represented Arcot during 2011-16, P. Karthiyayini, former Mayor of the Vellore Municipal Corporation, and S.S.R. Ramadoss, former Congress Member of Parliament and the son of prominent Vanniyar leader S.S. Ramasami Padyachi, also joined the BJP.
P. Muralidhar Rao, BJP general secretary in charge of Tamil Nadu; Pon Radhakrishnan, Union Minister of State; Tamilisai Soundararajan, president of the State unit; and M. Chakravarthy, vice-president of the State unit, were also present.
Mr. Nagendran, a two-time legislator, was supposed to join the party in Chennai during Mr. Shah’s now-cancelled visit to Tamil Nadu, which was supposed to have taken place from August 22 to 24. Mr. Nagendran joining the BJP was seen as an attempt by the ruling party at the Centre to expand its base in Tamil Nadu where it does not have a single MLA in the Assembly.
Once known to be an associate of sidelined deputy general secretary T.T.V. Dhinakaran, the former Minister lost in the 2016 Assembly elections in Tirunelveli constituency by a narrow margin of about 600 votes. During the AIADMK regime of 2001-06, he held the portfolios of Transport, Industries and Electricity. Despite getting elected in 2011, he did not make it to the Cabinet when Jayalalithaa became the Chief Minister. In February, V.K. Sasikala made Mr. Nagendran deputy secretary of the propaganda wing of the party. However, he maintained a low profile.
Shower praise on Modi
Ms. Karthiyayini hit the headlines in late 2014 for having used a derogatory word against John Michael Cunha, special judge, Bengaluru, who in September that year, convicted Jayalalithaa in a disproportionate assets case. She had later apologised to the Madras High Court for her conduct.
In a chat with The Hindu over phone from New Delhi, Mr. Nagendran said the leadership vacuum in the AIADMK after the death of Jayalalithaa and “impressive leadership qualities” of Prime Minister Narendra Modi made him to switch over to the BJP.
“I would not claim that I would make the BJP the biggest force in Tirunelvei district in no time even though I would do my level best,” he said.
(With inputs from Nistula Hebbar in New Delhi)

HC orders action against 6,400 TN lawyers facing criminal cases

TNN | Aug 26, 2017, 23:51 IST

Chennai: More than 6,400-odd Tamil Nadu lawyers, who have some cases or the other pending against their names, are in trouble, as Madras high court has directed Bar Council of India (BCI) to initiate 'disciplinary action' against all of them.

As first instalment, the court has forwarded two compilations, prepared by a deputy commissioner of police, containing 1,487 names for immediate action.

The directive, issued by Justice N Kirubakaran was intimated to the BCI by its counsel through an internal note saying: "The high court was of the view that the larger issue pertains to the misconduct of advocates involved in the crime of forcibly evicting tenants from houses, and other such serious crimes...On August 17, when the matter came up before Justice Kirubakaran, the public prosecutor had filed two compilation of list of cases pending against persons claiming to be advocates, as handed over to him by a deputy commissioner of police. The court has directed BCI to verify whether they are advocates on the rolls of Tamil Nadu Bar Council or any other Bar council, and, if so, directed the BCI to file a report in that regard. The court also further directed the BCI to initiate disciplinary action against those persons who are found to be advocates."

When the issue was taken up by BCI at an emergency meeting in Kochi on Saturday, it generated heated arguments with some members offering to quit in protest. "It will trigger massive lawyer unrest in Tamil Nadu," cautioned some members, recalling prolonged turbulence among legal fraternity in the state a couple of years ago.

BCI chairman Manan Kumar Mishra, however, has directed the Tamil Nadu Bar Council to verify the list of names forwarded to it, date of enrolment of lawyers concerned, what was their role in the alleged crime.



MBBS admissions: 10-fold jump in students with ‘nativity’ certificates

TNN | Updated: Aug 26, 2017, 23:57 IST

Chennai: It is not just the national common entrance test (NEET) that has snatched away the dreams of several students in Tamil Nadu, the process of medical admission that allows students from other states claiming nativity, some fraudulently, has also played a significant role in stymieing chances of meritorious students from within the state.



After a Villupuram-based advocate submitted names of nine candidates whose names figured in both Kerala and Tamil Nadu rank list on Thursday, several parents pointed out that the name of one of the toppers in Tamil Nadu rank list (name withheld) was also found in neighbouring Kerala's rank list.

But these names could just be a tip of an iceberg considering there is 10-fold increase in the number of applicants claiming nativity. From 47 in 2016, the number of candidates has risen to 499 this year. 

Among southern states, 58 students have come from Karnataka, 44 from Kerala and 17 from Andhra Pradesh, as compared to a mere 2, 9 and 15 students respectively from these states in 2016. Among other states the number rose from 21 to 381.



While the Supreme Court order in May restrains students from moving out of a seat allotted to those under the All India Quota, there is no restriction as far as state counselling are concerned. But senior officials say students who have studied in Tamil Nadu can claim nativity in another state, and vice versa. "This is our state rules. Other states will follow rules as per their policy," the official said.

The prospectus issued by the state selection committee, which is in-charge of medical and dental admissions in the state, said all candidates should be a native of Tamil Nadu or should have studied from VIII to XII standards in schools in Tamil Nadu. If native of Tamil Nadu have studied from VIII to XII standards either partly or completely in schools situated outside Tamil Nadu, they should produce a nativity certificate from the competent authority in a specified format.


The prospectus says producing false nativity certificate will result in expulsion of the candidate from the course and also initiation of criminal proceedings against the candidate as well as the parents as per provision of law.


LATEST COMMENT

At the end of Govt Medical College admission the Health Dept should make available allotted list in terms of Rank, NEET Marks, Name, Board of 12th std, 12th std school of city/town from which the <... Read MoreGopalarathnam Krishna Prasad

Director of Medical Education Dr A Edwin Joe said the committee was, however, exercising caution. "We have taken an undertaking from students but there is nothing in the prospectus that stops a student from seeking admission in two states. Students must have original certificates, including nativity, and mark sheets," he said.


In case of complaints, the committee will forward applications to police and revenue departments, officials said. "We are running short of time for medical admission and it may be impossible for us to check whether or not students are faking certificates," he said.

Rs 1 lakh extra as fee shocks parents

TNN | Updated: Aug 26, 2017, 23:58 IST

Chennai: Several parents were taken by surprise when they were asked to pay Es1 lakh more than the prescribed towards tuition fee at IRT, Perundurai Medical College in Perundurai on Saturday.

Though as per the prospectus issued by the Tamil Nadu Selection Committee, the annual tuition fee for the medical college is Rs2.85 lakh, parents were asked to pay an additional Rs 3.85 lakh as fee.

While selection committee secretary said fee for two colleges had been revised this year, a parent said: "I wouldn't mind paying but I don't know how the authorities cannot make a formal announcement of the change. There was no scroll on the website nor was there any information at the counselling centre. They didn't tell us even when we signed the forms in the counselling centre."



தெரிகிறது மாற்றம்: ஓட்டல்கள், சுவீட் ஸ்டால்களில் துணிப்பைகள்:பிளாஸ்டிக் பைகளுக்கு தடையால் விழிப்புணர்வு

பதிவு செய்த நாள்26ஆக
2017
23:18

ஸ்ரீவில்லிபுத்துார்; நகராட்சி அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் ஓட்டல்கள் மற்றும் சுவீட் ஸ்டால்களில் பிளாஸ்டிக் கேரிபைகளுக்கு பதிலாக, துணிப்பை கொடுப்பதால், பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டில் மக்களிடம் மாற்றத்தை உருவாக்கி வருகிறது. மேலும், கூடுதல் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் முழுஅளவில் வெற்றி பெறலாம் என்ற நிலை எட்டபடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நாகரீகம், போதிய கல்வியறிவு இல்லாத காலத்தில் இயற்கையை சார்ந்து மக்கள் வாழ்ந்தனர். அதனால் நோய் நொடியில்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக தங்கள் அன்றாட வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டனர். சரியான உழைப்பு, சரியான ஓய்வு, சரியான துாக்கம் என தங்களது 24 மணிநேர வாழ்க்கையை இயல்பாகவே மேற்கொண்டனர். அதனால் காய்ச்சலும், அம்மையும் முன்பு பெரிய நோயாக கருதப்பட்டது. இதில் காய்ச்சலுக்கு மருத்துவர்களை நாடினாலும், அம்மை நோய்க்கு வீ்ட்டிலிருந்து இறைவனை வேண்டி, வேப்ப இலையும், மஞ்சள் தண்ணீரும், பழங்களும் மருந்தாக விளங்கியது. ஆனால், நாகரீகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் அதிகரித்த இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர். இதனால் அன்றைய காய்ச்சல் இன்றைய டெங்குவாக உருவெடுத்துள்ளது. இயற்கைக்கு முரணான உணவுப்பழக்கங்கள் இன்றைய மனித சமுதாயத்தை பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கிவிட்டது. இத்தகைய நோய்களை உருவாக்குவதில் பாலிதீன் கவர்களும், பிளாஸ்டிக் பொருட்களுமே முக்கிய பங்கு வகிக்கிறது. 

தமக்குத்தாமே நோய்
இவற்றின் பயன்பாடுகளை அறவே ஒழிப்பதன் மூலமே மனித சமுதாயத்தை நோய்களிலிருந்து காப்பாற்றமுடியும் என்பதை உணர்ந்த அரசு நிர்வாகம், தற்போது அது குறித்தான விழிப்புணர்வினை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கண்துடைப்பு பணியாக இருந்த இந்த பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு, இன்று அதிதீவிரமடைந்துள்ளது. முன்பு ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் வாங்க சில்வர் பாத்திரங்களையும், துணிப்பைகளையும் பயன்படுத்திய மக்கள், இன்று கேரிபேக்குகளிலேயே உணவுப்பொருட்களை வாங்கி, தமக்குத்தாமே நோய்களை உருவாக்கி கொண்டனர். இதனால் உடல் ஆரோக்கியத்தை இழந்தனர். இப்படிநாளுக்குநாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை உணர்ந்த அரசு நிர்வாகம், தற்போது பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு பணியினை தீவிரமாக்கியுள்ளது. 

பேப்பர் கப்ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அதிகாரிகள் ஓட்டல்கள், சுவீட் ஸ்டால்கள், வணிகநிறுவனங்கள், பெட்டிகடைகள் என அனைத்து பகுதிகளிலும் நகராட்சி அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தி கேரிபைைகளை பறிமுதல் செய்தனர். மொத்த விற்பனையாளர்களின் வீடுகளிலும் சோதனை செய்து, பறிமுதல் செய்தனர். இதனால் கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை படிப்படியாக குறைத்துள்ளனர். இதுவரை பிளாஸ்டிக் கப்புகளில் வழங்கிய டீ மற்றும் காபி களை, தற்போது பேப்பர் கப்புகளில் வழங்குகின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஓட்டல்களில் கேரி பைகளுக்கு பதில் துணிப்பை வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை கட்டணம் கேட்டாலும் பெரும்பாலானோர் தருகின்றனர். இதன் மூலம் கேரிபைகள் ஒழிப்பதில் மக்களிடமும் ஒருவித மாற்றம் ஏற்பட்டு இருப்பது வரவேற்கதக்கது.

வாழை இலை ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வாழை இலையின் விலை மற்றும் பற்றாக்குறையினால் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்துவதை ஓட்டல் உரிமையாளர்கள் தாங்களாகவே குறைத்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் பாலிதீன் ஒழிப்பு முழுஅளவில் வெற்றி பெறும். இதற்கு பொதுமக்களும், வியாபார நிறுவனங்களும் தாங்களாகவே முன்வரவேண்டும் என்பதும், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கை , விழிப்புணர்வும் மிகவும் அவசியம் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

தேவை தொடர் நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்துார் ரவீந்திரநாத்,''இயற்கையை பாழ்படுத்தும் கேரிபைகள் முற்றிலும் ஒழிப்பது மிகவும் அவசியம், இதற்கு அரசின் தொடர் நடவடிக்கை தேவை. தற்போது ஓட்டல்களில் கேரிப்பைகளுக்கு பதில் துணிப்பை தரத் துவங்கி உள்ளனர். இது இயற்கை காப்பதில் மக்களின் பங்களிப்பை காட்டுகிறது. ஆனாலும், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு தருவதும். கேரிபையில் சாம்பார், சால்னா பார்சல் கட்டுவதையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மக்களும் தங்கள் வீடுகளிலிருந்து வரும்போதே சில்வர் பாத்திரங்களை கொண்டு வந்து, உணவுப்பொருட்களை வாங்கவேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை அரசு நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்,''என்றார்.
அஞ்சலகங்களில் விரைவில் ஆதார் மையம்

பதிவு செய்த நாள்26ஆக
2017
21:34

ஆதார் விபரங்கள் தொகுக்கும் பணியும், திருத்தங்கள் செய்யும் பணியும் மீண்டும், அஞ்சல் துறை வசமாகிறது. தமிழக அஞ்சலங்களில், இதற்கான பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நாட்டில் குறைந்தது, 182 நாட்கள் வசித்த ஒருவர், ஆதார் அட்டை பெறலாம். இது, ஆரம்பத்தில் அஞ்சலகங்களில் வழங்கப்பட்டது; பின், தனியார் வசம் சென்றது.இதுவரை, 100 கோடி பேர் ஆதார் எண் பெற்று உள்ளனர். தினமும், மூன்று லட்சம் பேர் வரை, ஆதார் விபரங்களை
திருத்தம் செய்து வருகின்றனர்.

ஆதார் தொகுப்பு தனியார் வசம் உள்ளதால், தனிநபரின் ரகசியங்கள் திருட்டு போவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.அரசின் சேவைகளுக்கு, ஆதாரை கட்டாய மாக்கக்கூடாது என, நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ஆதார் திட்டம் முழுவதையும், மீண்டும்
அஞ்சலகங்கள் வசமாக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இது குறித்து, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர், ஆர்.ஆனந்த் கூறியதாவது:
அஞ்சலகங்களில், மீண்டும் ஆதார் மையம் அமைக்கும், ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. ஆதார் பதிவு, ஆதார் மாற்றங்கள் என, இரு பிரிவுகளாக செயல்படும். சென்னை மண்டலத்தில், 568 தலைமை, துணை அஞ்சலகங்கள் உள்ளன.

இதில், சென்னை நகரில் உள்ள, 10 அஞ்சலகங்களில், ஆதார் கார்டு திருத்தம் செய்யும் பணி, ஜூலை முதல் நடந்து வருகிறது. இதுவரை, 5,600 கார்டுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
விரைவில், அனைத்து அஞ்சலகங்களிலும், ஆதார் மையம் திறக்கப்படும். சென்னையில், திறக்கப்பட்டுள்ள நிரந்தர அஞ்சல் தலை கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் சேகரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பசுமை திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -
சென்னை:இறந்தவர்கள் பெயரில், மருத்துவ படிப்பு சான்றிதழ் பெற்ற, ஐந்து போலி ஹோமியோபதி டாக்டர்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

40 பேர்

தமிழகத்தில், முறையாக மருத்துவம் படிக்காத பலர், ஹோமியோபதி டாக்டர்களாக பதிவு செய்துள்ளதாக, சுகாதாரத் துறை செயலர் மற்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், தமிழக ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர், 2016ல், புகார் அளித்தார்.

இதில், நடவடிக்கை எடுக்காததால், சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த, ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர், டாக்டர் ஞானசம்பந்தம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து, பதிலளிக்கும்படி, சென்னை போலீஸ் கமிஷனருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், போலி சான்றிதழ் வழங்கியதாக, தமிழக ஹோமியோபதி முன்னாள் பதிவாளர் மற்றும் உறுப்பினர்கள் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசாரின் விசாரணை

யில், 2010 - 2012 வரை, ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் சார்பில், 40 பேருக்கு போலி சான்றிதழ்வழங்கியது கண்டறியப்பட்டது. தனிப்படைமேலும், இறந்து போன ஹோமியோபதி டாக்டர்களின் பதிவு எண்கள் அடிப்படையில், போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே, போலி ஆவணங்கள் பெற்ற, 10 பேர், தானாக முன்வந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் சான்றிதழ்களை ஒப்படைத்தனர். இந்த வழக்கில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன், ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார்.

மேலும், கோவை - ரவிக்குமார், கடலுார் - வேல்முருகன், திருப்பூர் -ஸ்ரீதரன், தேனி - அனில்குமார், மதுரை - குமார் ஆகிய ஐந்து பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புஉடைய, மற்ற போலி டாக்டர்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனிப்படை அமைத்து, தேடி வருகின்றனர்.
'ரேஸ் கோர்ஸ்' பேருந்து நிலையம் ஆக்கிரமிப்பு

பதிவு செய்த நாள்26ஆக
2017
21:02


பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களால், பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.

சென்னை, அண்ணா சாலையில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால், அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதற்கு தீர்வாக, ரேஸ்கோர்ஸ் வளாகத்தின் ஒரு பகுதி பெறப்பட்டு பேருந்து நிலையமும், பேருந்து, ஷேர் ஆட்டோக்களுக்கு தனித்தனி வழித்தடம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பேருந்து நிலைய சாலையை ஆக்கிரமித்து நிற்கும் ஷேர் ஆட்டோக்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார், காவல் துறையிரிடம் புகார் செய்தால் நடவடிக்கை இல்லை.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

தனியாரிடம் நிலம் பெற்று சாலை விரிவாக்கம் செய்தும், ஷேர் ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பால் பயனில்லாமல் போனது. இங்கு, ஷேர் ஆட்டோக்களுக்காக தனி வழித்தடம் அமைக்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலையத்திலேயே ஆட்டோக்களை நிறுத்தி அடாவடி செய்கின்றனர். ஷேர் ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து பணம் பெறும் போக்குவரத்து போலீசார், புகார் அளித்தால் கண்டுகொள்வதில்லை.சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், மூன்று நாட்களில், 2,500 இடங்கள் நிரம்பிஉள்ளன.

பதிவு செய்த நாள்27ஆக
2017
02:37

சென்னை:எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், மூன்று நாட்களில், 2,500 இடங்கள் நிரம்பிஉள்ளன.தமிழகத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழக அரசின் மாநில ஒதுக்கீட்டில், 3,534 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரி களில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 592 இடங்கள் உள்ளன.அதேபோல, பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 1,198 இடங்கள் உள்ளன; சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்கள் உள்ளன.
முதற்கட்டமாக, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை, சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில், 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், மூன்று நாட்களில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, மாணவர்கள் பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில், தரவரிசை பட்டியலில், 2,674 முதல், 4,269 இடங்களை பிடித்தோர் பங்கேற்கின்றனர்.
வங்கி ஏ.டி.எம்.,களில் 200 ரூபாய் கிடைக்குமா?
பதிவு செய்த நாள்27ஆக201702:36

தமிழகத்தில், வங்கி ஏ.டி.எம்.,களில், 200 ரூபாய் நோட்டுகள், எப்போது கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, வரலாற்றில் முதல் முறையாக, 200 ரூபாய் நோட்டுகளை, 17ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. அந்த நோட்டுகள், சென்னையில் உள்ள, ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வங்கிகளில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல், புழக்கத்திற்கு வரும்.
கிராமப்புறங்களில் உள்ள, வங்கிகளில் சென்று சேருவதற்கு, ஒரு வார காலமாகும். அதேபோல், புதிய, 50 ரூபாய் நோட்டும், நாளை முதல், வங்கிகளில் புழக்கத்திற்கு வரும். வழக்கமாக, புதிய நோட்டுகள் அறிமுகமாகும் போது, அது, நகரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.,களில், உடனடியாக கிடைக்கும்.

'புதிய, 200 ரூபாய் நோட்டு, வடிவத்தில் மாறுபடுவதால், அதற்கேற்ப, ஏ.டி.எம்.,களில், சிறிய மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -
மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு
பதிவு செய்த நாள்26ஆக201721:27

அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, ஒரு வாரத்திற்கு முன், அரசின் கவுன்சிலிங் வழியே, மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது.தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக் கொள்ள, தனியார் கல்லுாரிகளுக்கு, வரும், 31ம் தேதி வரை அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கி உள்ளன. இதில், மாணவர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பள்ளி படிப்பை முடித்து விட்டு வரும் மாணவர்கள், கல்லுாரி என்பதால், ஜாலியாக வகுப்பை, 'கட்' அடித்து, ஊர் சுற்றக்கூடாது என்றும், கல்லுாரிக்கு வராவிட்டால், பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், அண்ணா பல்கலை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலையின், 17 உறுப்பு கல்லுாரிகளிலும், சென்னை அண்ணா பல்கலை வளாக கல்லுாரி களிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதன்படி, மாணவர்கள் வகுப்பு நேரத்தில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.வகுப்பிற்குள் மாணவர்கள் நுழையும் போது, மொபைல் போனை அணைத்து வைக்க வேண்டும். வகுப்பில் அமர்ந்து, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், நேரத்தை வீணாக்க கூடாது.

வகுப்பில், மொபைல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பதை, ஆசிரியர்கள் குழு ஆய்வு நடத்தும். இதில், மாணவர்களின் மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால், போன் பறிமுதல் செய்யப்படும்.பின், பெற்றோரை அழைத்து வந்து கடிதம் கொடுத்த பிறகே, மீண்டும் வழங்கப்படும் என, 'கிடுக்கிப்பிடி' போடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
செப்., 7 முதல், 'ஸ்டிரைக்' அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்26ஆக
2017
21:04

மதுரை:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது.

அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்ரமணியன், மதுரையில் அளித்த பேட்டி:

மறைந்த ஜெயலலிதா அறிவித்தபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; புதிய சம்பள விகிதம் வழங்க வேண்டும். அதற்கு முன், இடைக்கால நிவாரணம், 20 சதவீதம் வழங்க
வேண்டும்.இதை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை. ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலேயே, அரசு கவனம் செலுத்துகிறது.

செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடக்கும். மறியல்,காத்திருப்பு, சிறை நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்படும். மாநிலத்தில், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இந்த போராட்டங்களில் ஈடுபடுவர். எனவே மக்கள் நலன் கருதி ஊழியர், ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் பேசி, பிரச்னைகளுக்கு, அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நான்கு வழிச்சாலை பணிக்காக 150 ஆண்டுகள் பழமையான மரம் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது



திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை பணிக்காக 150 ஆண்டுகள் பழமையான மருத மரம் அப்படியே பிடுங்கி எந்திரங்கள் மூலம் வேறு இடத்தில் நடப்பட்டது.

ஆகஸ்ட் 27, 2017, 03:45 AM

திருப்புவனம்,

திருப்புவனத்தில் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான மருத மரம் உள்ளது. இதன் அருகே மதுரை–ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த மருத மரத்தின் அருகில் விவசாய நிலங்கள் உள்ளன. முன்பு திருப்புவனத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு டவுன் பஸ்களில் விவசாயிகள், அலுவலர்கள் மருத மர நிறுத்தத்தில் இறங்கி செல்வது வழக்கம். இதேபோல் பாதயாத்திரை செல்வோர் இந்த மருத மரத்தில் இளைப்பாறி செல்வார்கள். அந்த அளவிற்கு இந்த மரத்தின் கிளைகள் பறந்து விரிந்து காணப்படும். இதே மரத்தின் முன்புறம் மணிகள் கட்டி சாலையில் செல்வோர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது மதுரை–ராமேசுவரம் நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. மருத மரத்தின் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிக்கு இடையூராக மருத மரம் இருந்ததால் அந்த மரத்தை எந்திரங்கள் மூலம் தூருடன் பிடுங்கி 300 அடி தூரத்தில் நடப்பட்டது.

திருப்புவனம் தாசில்தார் கமலா, இன்ஸ்பெக்டர் திருவானந்தம், நான்கு வழிச்சாலை திட்ட இயக்குனர் முத்துடையார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மரம் மாற்றப்பட்டது. முன்னதாக மானாமதுரையில் பஸ் போக்குரத்து திருப்புவனத்தில் இருந்து சக்குடி வழியாக இயக்கப்பட்டது.
சாராஹா அப்ளிகேஷனும், அச்சுறுத்தலும்..! - உஷார் ரிப்போர்ட்


‘சாராஹா’ இல்லாத பேஸ்புக் பதிவு களையும், டிவிட்டுகளையும் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது முடியாது என்று கூறும் அளவிற்கு ‘டாப் டிரென்ட்டிங்கில்’ சென்று கொண்டிருக்கிறது சாராஹா.

ஆகஸ்ட் 26, 2017, 12:49 PM

‘சாராஹா’ இல்லாத பேஸ்புக் பதிவு களையும், டிவிட்டுகளையும் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது முடியாது என்று கூறும் அளவிற்கு ‘டாப் டிரென்ட்டிங்கில்’ சென்று கொண்டிருக்கிறது சாராஹா. ‘அது என்ன புது அப்ளிகேஷன்?’ என்ற தேடலோடு பிளே ஸ்டோரில் இருந்த சாராஹாவை பதிவிறக்கம் செய்து உபயோகித்தோம். வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற எளிமையான சமூக வலைத்தளங்களை போன்று இல்லாமல்... ‘சாராஹா’ ஆப் சற்று கடினமாகவே இருந்தது. நம்முடைய ஸ்மார்ட் போனில் சேமித்து வைத் திருக்கும் நபர்களை எல்லாம் சாராஹாவில் எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் நமக்கு அறிமுகமில்லாதவர்களையும், ஊர்-பெயர் தெரியாதவர் களையும் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

‘யாரிடம் பேசுகிறோம்’, ‘எதற்காக பேசு கிறோம்’ என்பதை எல்லாம் மறந்துவிட்டு, மனதில் தோன்றுவதையெல்லாம் பேசுபவர்களுக்காகவே அளவு எடுத்து செய்ததை போலவே இருக்கிறது சாராஹா அப்ளிகேஷன். சாராஹாவில் இணையும் ஆண்களுக்கு வசைபாட்டும், பெண்களுக்கு காதல் பாட்டும் காத்திருக்கிறது.

“நீ எல்லாம் எதற்கு இருக்கிறாய்..?”, “உன்னை யார் சாராஹாவில் இணைய சொன்னது” என ஆண் கணக்காளருக்கும், “பீச் போகலாமா..?”, “காதலிக்கலாமா..?” என பெண் கணக்காளருக்கும் குறுந்தகவல் சாராஹாவில் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும். நமக்கு யார் அனுப்புகிறார்கள், எங்கிருந்து அனுப்புகிறார்கள், எதற்காக அனுப்புகிறார்கள்... என்று எல்லாம் சாராஹாவில் பார்க்க முடியாது. நம்மை பற்றிய விமர்சனங் களுக்கு பதில் அளிக்கவும் முடியாது. வேண்டுமானால் நமக்கு வந்திருக்கும் சாராஹா பதிவுகளை பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதனை சவுதி அரேபியாவை சேர்ந்த ஜெயினுலாப்தீன் தவ்பீக் உருவாக்கியுள்ளார். இது சம்பந்தமாக அவரிடம் எப்படியாவது பேசவேண்டும் என்ற முயற்சியில் பேஸ்புக் சாட்டில் இணைந்தோம். அப்போது தான் ஜெயினுலாப்தீன் பக்கம் இருந்த நியாயம் புரிந்தது. சாராஹாவின் அம்சங்களை தெளிவுபடுத்திய ஜெயினுலாப்தீன், நல்ல விஷயத்திற்காக உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் இன்று அச்சுறுத்தலாக மாறிவரும் நிலவரத்தையும் பகிர்ந்துகொண்டார். அதை அவர் சொல்ல கேட்போம்...

“என்னுடைய அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கும். அதில் உயர் அதிகாரிகளை தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொண்டால், வேலை பறிபோய் விடுமோ? என்பது மற்ற ஊழியர்களின் கருத்தாக இருக்கும். இதற்காகவே சாராஹா என்ற இணைய தளத்தை உருவாக்கினேன். அதில் மேலாளர், குழு தலைவர்... என யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தைக் கூறலாம்; ஆனால் யார் கூறுகிறார்கள் என்பதை அறிய முடியாது.

இணையதளமாக செயல்பட ஆரம்பித்ததில் இருந்தே பல குறைகள் வந்து குவிய ஆரம்பித்தன. கடைநிலை ஊழியர்கள் அலுவல் சார்ந்த குறைகளையும், உயர் அதிகாரிகள் பற்றிய மனக்குறைகளையும் தைரியமாக தெரிவித்தார்கள். அதை உடனுக்குடன் சரிசெய்து கொண்டோம்.

என்னுடைய அலுவலகத்திற்கு பயன்பட்ட அப்ளிகேஷன், உலக மக்களுக்கு பயன்படும் நோக்கில் ஆப்பாக வடிவமைத்து வெளியிட்டேன். சாராஹா அப்ளிகேஷனை அலுவலக ரீதியாகவும் பயன்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் இருக்கும் நண்பர்கள் குழுவிலும் பயன்படுத்தலாம். மேலும் தனிநபர் கணக்காகவும் பயன்படுத்தலாம். அலுவலக நிறை-குறைகள் மட்டுமின்றி, நண்பர்களின் நேர்மையான விமர்சனங்களை பெற முடியும். அதற்காகவே அப்ளிகேஷன்களை உருவாக்கினேன்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“ மொட்டை கடிதத்தின் டிஜிட்டல் பிரதி தான் ‘சாராஹா’. நம்மை பற்றி யார் விமர்சிக் கிறார்கள், யார் புகழ்கிறார்கள்... என்பதை எல்லாம் சாராஹாவில் பார்க்க முடியாது. ஆனால் கருத்துகளை பதிவு செய்யலாம். கருத்து தெரிவிப்பவரின் தகவல்கள் எல்லாம் பத்திரமாக பாதுகாக்கப்படும்.

பெரும்பாலான மக்கள் சாராஹாவை நல்ல விதமாகவே பயன்படுத்துகிறார்கள். அதையே எல்லா மனிதர்களிடமும் எதிர்பார்க்க முடியாது. சிலர் நேரடியாக திட்டுகிறார்கள். ஆபாசமான முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆபாசமான வார்த்தைகளால் பின்னப்பட்ட முள் முடியை என் தலையிலும் அணிவித்தார்கள். உறவுக்கார பெண்களுக்கும், தோழிகளுக்கும் ஏராளமான காதல் மொட்டை கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் அப்ளிகேஷனை அழித்துவிடும் முயற்சியிலும் இறங்கினேன். ஆனால் அதற்கு பதிலாக ஒருசில கட்டுப்பாடுகளையும், கருத்து தெரிவிப்பவர்களுக்கு சுடச்சுட பதில் அளிக்கும் ‘ரிப்-பிளே’ வசதியையும் சாராஹாவில் கொண்டு வர திட்டமிட்டிருக் கிறேன். ஒருசில நாட்களில் அந்த பணிகள் முடிந்துவிடும். அதனால் சாராஹாவை தைரியமாக பயன்படுத்தலாம்” என்பவரிடம் சாராஹாவில் இருக்கும் போலி கணக்குகள் பற்றி கேட்டோம். ஜெயினுலாப்தீனின் பதில் நம்மை சிந்திக்க வைத்தது.

“பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-ஆப் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் போலி கணக்குகள் இருக்கிறது. பெண் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் சில ஆண்கள், போலியான காதல் நாடகங்களை அரங்கேற்றுகிறார் கள். அதை உண்மை என நம்பும் சில ஏமாளி ஆண்களும், மனமுருகி பேசுகிறார்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆன்லைன் பேங்கிங் மூலமாக பணத்தை பறிகொடுப்பது, ஆயிரக்கணக்கில் ரீ-சார்ஜ் செய்வது என பல வழிகளில் ஏமாறுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதை இணையதளவாசிகள் தான் சரி செய்து கொள்ளவேண்டும்” என்ற எச்சரிக்கையுடன் விடைபெற்றார்.

அரபு மொழியில் ‘சாராஹா’ என்பது நேர்மையை குறிக்கும். அதனால் தான் ஜெயினுலாப்தீன் தன்னுடைய இணையதளத்திற்கும், அப்ளிகேஷனுக்கும் ‘சாராஹா’ என்று பெயரிட்டுள்ளார். மக்களின் நேர்மையை வெளிக்காட்ட உருவாக்கப்பட்ட ‘சாராஹா’ அப்ளிகேஷன் இன்று தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஜெயினுலாப்தீனை குறை சொல்வதை விட... அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்துபவர்களைதான் குறைசொல்ல வேண்டும். பிளே ஸ்டோரில் இருக்கும் அத்தனை அப்ளிகேஷன்களும் நம்முடைய ஸ்மார்ட் போனில் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமக்கு தேவையான அப்ளிகேஷன்களை மட்டும் நாம் பயன்படுத்தினால் போதும்.

எந்த ஒரு புதிய முயற்சி வந்தாலும் அதில் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். சமூக ஊடகத்தில் உள்ள அனைத்து ‘ஆப்’களுமே இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் இத்தகைய புதிய வரவுகளை சரிவர கையாள மக்கள் புரிந்துகொண்டால், சவால்களை சுலபமாகக் கடந்து அதன் நன்மைகளை பெறமுடியும் என்பதே உண்மை.

இனி ‘சாராஹா’ போன்ற அப்ளிகேஷன்கள் நல்லவையாக இருப்பதும், அச்சுறுத்தலாக மாறுவதும் இணைய வாசிகளின் கைகளில் தான் இருக்கிறது.
மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் போலி ஓமியோபதி டாக்டர்கள் 5 பேர் கைது



தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சிலில் இறந்த ஓமியோபதி டாக்டர்கள் பெயரில் போலி சான்றிதழ் பெற்று சிலர் ஓமியோபதி டாக்டர்களாக பணியாற்றுவதாக

ஆகஸ்ட் 27, 2017, 05:15 AM
சென்னை,

முன்னாள் பதிவாளர் டாக்டர் ஞானசம்பந்தன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் ஹனிமன் ஆகியோர் உடந்தை என்றும், போலி ஓமியோபதி டாக்டர் பெயர்களையும் புகாரில் கூறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் மல்லிகா ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலி ஓமியோபதி மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியது. அதன்படி தஞ்சையில் போலி ஓமியோபதி டாக்டர் பாலகிருஷ்ணன் கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ரவிக்குமார்(வயது 50), கடலூரை சேர்ந்த வேல்முருகன்(53), திருப்பூரை சேர்ந்த ஸ்ரீதரன்(37), தேனியை சேர்ந்த அனில்குமார்(51), மதுரையை சேர்ந்த குமரன்(68) ஆகிய 5 போலி ஓமியோபதி டாக்டர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் ஹனிமன் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் போலி ஓமியோபதி டாக்டர்களை கைது செய்யவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
1–ந்தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உத்தரவு



1–ந்தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 27, 2017, 04:30 AM
சென்னை,

சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 1–ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்லும்போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அண்மையில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார். இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட உத்தரவில், ‘வாகன ஓட்டுனர்கள் அரசு ஆணையின்படி, 1–ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்டது, ‘ஹார்வே’ புயல்

t
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் புரட்டிப்போட்டது.
ஆகஸ்ட் 27, 2017, 03:45 AM

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ புயல் புரட்டிப்போட்டது. மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தை கடந்த சில தினங்களாக ‘ஹார்வே’ புயல் அச்சுறுத்தி வந்தது. இது 4-வது வகை புயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு டெக்சாஸ் மாகாணத்தில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.

மிகவும் வலிமையான ‘ஹார்வே’ புயல் 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவின் பிரதான பகுதியை நேற்று தாக்கியது. இந்த புயல் காரணமாக மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று வீசியது.

பெரிய பெரிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்தன. கார்பஸ் கிறிஸ்டி நகர் உள்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 2 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இந்தப் புயல் தாக்கிய 3 மணி நேரத்தில் அது 3-வது வகை புயலாக தரம் குறைக்கப்பட்டது.

காற்றும் மணிக்கு 201 கி.மீ. வேகமாக குறைந்தது. இருப்பினும் இது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளது. கட்டிடங்களுக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர நகரமான ராக்போர்ட்டில் மேயர் பேட்ரிக் ரியோஸ், அங்குள்ள மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேறி விடுமாறு கேட்டுக்கொண்டார். அங்கு ஒரு முதியோர் இல்லத்தில் மேற்கூரைகள் பறந்து விட்டன. அங்குள்ள மக்களை மீட்பதற்கு மீட்பு படையினர் செல்ல முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாகாண கவர்னர் அப்பாட் கூறும்போது, “டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்திக்கிறது. 1000 தேசிய பாதுகாவலர்கள், பேரழிவு நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

நேற்று காலை 5 மணி நிலவரப்படி தென்கிழக்கு டெக்சாஸ்சில் 10 அங்குலம் மழை பெய்துள்ளது.

பி.பி.சி. செய்தியாளர் ஒருவர், “ இந்தப் புயல் மிகவும் வலிமை வாய்ந்தது. ஆபத்தானது. பயங்கரமானது. மெக்சிகோ வளைகுடா பகுதியில் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. விமானப் போக்குவரத்தும் முடங்கியது” என்றார்.

ஹூஸ்டன் நகருக்கு உள்ளேயும், வெளியேயும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற வகையில் வெள்ளக்காடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

வானிலை அதிகாரிகள் கூறும்போது, இந்த புயலின் பாதை நிச்சயமற்றதாக உள்ளது என்றனர்.

டெக்சாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து பிரகடனம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த மாகாணத்துக்கு மத்திய நிதி உதவி கிடைக்கும்.

மேலும் அடுத்த சில நாட்களில் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஹார்வே புயல், டெக்சாஸ் மாகாணத்தில் தொடரவும், பலத்த மழையை தொடர்ந்து பெய்விக்கவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் 4-வது பெரிய எண்ணெய் உற்பத்தி நகரமான ஹூஸ்டன் நகரில் வரும் நாட்களில் 20 அங்குலம் மழை பெய்யும்.

கால்வெஸ்டன் நகரில் இருந்து 20 ஆயிரம் பயணிகளுடன் 3 கப்பல்கள் புறப்பட முடியாத நிலையில் உள்ளன.

மொத்தத்தில் ‘ஹார்வே’ புயல், டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்டுள்ளது.
காஸ்' சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி
பதிவு செய்த நாள்27ஆக
2017
05:11




ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம் குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.72 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு நிறுவனமும், தங்களின் ஏஜன்சிகள் வாயிலாக, சிலிண்டர் சப்ளை செய்கின்றன.

ஏஜன்சி ஊழியர்கள், வாடிக்கையாளரிடம், ஒரு சிலிண்டர் சப்ளை செய்ய, 30 - 50 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர். அதை தர மறுத்தால், 'வீட்டில் ஆட்கள் இல்லை' எனக்கூறி, சிலிண்டர் பதிவை ரத்து செய்கின்றனர்.சில ஏஜன்சிகள், உரிய ஆவணங்களை வழங்கினாலும், சிலிண்டர் இணைப்பு வழங்குவதில் தாமதம் செய்கின்றன. காஸ் கசிவு காரணமாக, புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வாடிக்கையாளர், விரும்பிய எண்ணெய் நிறுவனத்திற்கு மாறும் திட்டத்தை, மத்திய அரசு, 2014ல் துவக்கியது. ஆனாலும், இதுகுறித்து, தமிழக மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

விரும்பிய நிறுவனம் அல்லது ஏஜன்சிக்கு மாறும் சேவையை பெற, வாடிக்கையாளர்கள், தற்போது உள்ள தங்கள் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். பின், ஏற்கனவே உள்ள ஏஜன்சிக்கு சென்று, சிலிண்டரை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவர் செலுத்திய, 'டிபாசிட்' தொகை மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அவற்றை எடுத்து கொண்டு, விரும்பிய நிறுவனத்தின் ஏஜன்சியிடம் ஒப்படைத்து, புதிய இணைப்பை பெறலாம்.

இணையதளத்தில் பதிவு செய்ததுமே, அதற்கான வழிமுறைகள், வாடிக்கையாளரின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்படும்.ஏஜன்சி சேவையில் திருப்தி இல்லாதவர்கள், விரும்பிய நிறுவனத்திற்கு மாற முயற்சித்தால் தான், அதற்கான காரணத்தை கேட்டு, ஏஜன்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அத்திட்டம் குறித்து, வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Saturday, August 26, 2017

தமிழகத்தில் ரூ.200 நோட்டுகள் புழக்கத்துக்கு வர தாமதமாகும் எனத் தகவல்!

ர.பரத் ராஜ்

நேற்று முதல் நாட்டின் முக்கிய நகரங்களில் இருநூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் இந்த இருநூறு ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வந்துள்ளது.




பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இந்த 200 ரூபாய் நோட்டுகள் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டின் முன்பக்கதில் காந்தி உருவமும் பின்புறத்தில் சாஞ்சி ஸ்தூபி படமும் இடம்பெற்றுள்ளது. ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு கோடுகள் நீல நிறத்தில் உள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நேற்றே புழக்கத்துக்கு வந்த நிலையில், இன்னும் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரவில்லை. மேலும், வரும் 28-ம் தேதி முதல் சென்னையின் வங்கிகளில் இந்த 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் 'ஹார்வி புயல்' பேரழிவை ஏற்படுத்தும்... வானிலை மையம் கணிப்பு!

ஜெ.அன்பரசன்

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளதால் அது கரையை கடக்கும் போது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உருவாயுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலானது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ் கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும். மேலும் 97 செ.மீ வரை மழை பெய்யும். இந்த புயலால் 12 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் எனவும் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த 'ஹார்வி புயல்' பேரழிவை உருவாக்கும் என்பதால் பேரிடர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டன. கடந்த 2005 ஆம் ஆண்டு 'வில்மா' புயலால் ஃபுளோரிடா மாகாணம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. அதன்பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகியுள்ள இந்த 'ஹார்வி புயல்'மக்கள் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
நீட் அடிப்படையில் நடந்த மருத்துவ கலந்தாய்வின் முதல் நாள்! ரிப்போர்ட்

பிரேம் குமார் எஸ்.கே.

Posted Date : 03:03 (26/08/2017)

நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையிலே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நேற்று முதல், பொது பிரிவு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்தது.



முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வுகள் நடைபெற்ற நிலையில், நேற்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்ட கலந்தாய்வின் முதல் நாள், 1,209 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 1,077 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாட பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர். முதல் நாள் கலந்தாவில் 132 பேர் கலந்துகொள்ளவில்லை. கலந்து கொண்ட மாணவர்களில் 987 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர். அதே போன்று 22 மாணவர்கள் இ.எஸ்.ஐ கல்லூரிகளை தேர்ந்தெடுத்தனர். சுயநிதி கல்லூரிகளில் 19 மாணவர்கள் சேர்ந்தனர்.

கலந்தாய்வின் முதல் நாளில் பல் மருத்துவத்தில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஒரே ஒரு இடம் தான் பல் மருத்துவத்தில் நிரப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களில், 1,029 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டது. 8 மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் கலந்தாய்வு நடைபெறுகிறது. நீட் அடிப்படையில் அவசர அவசரமாக நடத்தப்பட்டுவரும் கலந்தாய்வால் குளறுபடிகள் அதிகரித்துள்ளது என்று மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டினர்.
வட தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ர.பரத் ராஜ்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அதேபோல, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் இன்று மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கும் எனப்படுகிறது. மேலும், இதுவரை தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 5,000 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சென்னையில் இருந்து 5000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18-ம் தேதி வருகிறது. இந்த பண்டிகையின்போது, சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதற்கிடைய, அக்டோபர் 16, 17-ம் தேதிகளில் அனைத்து தென்மாவட்ட விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டன. இருப்பினும், பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளில்தான் பயணம் செய்வார்கள்.

போக்குவரத்து நெரிசல்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தீபாவளி பண்டிகையின்போது, பொதுமக்களின் வசதிக்கு ஏற்றவாறு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக, சென்னையில் இருந்து மட்டுமே 5000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கடந்த ஆண்டு போல் அண்ணாநகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்கிடையே, தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது’’ என்றனர்.

திருந்தி வாழப்போவதாக அறிவித்து திருடிய 93 பவுன் நகைகளை திருப்பிக் கொடுத்த திருடன்

சாஸ்திரி முதல் சுரேஷ் பிரபு வரை: ரயில் விபத்தும்-பதவி விலகலும்!

By DIN  |   Published on : 25th August 2017 04:28 PM  |    
train accident -mumbai

இந்தியாவின் மிகப்பெரிய பொதுச்சேவைத் துறையாக ரயில்வே துறை அமைந்துள்ளது. நாடு முழுவதும் தினமும் பல லட்சம் பேர் இதன்மூலம் பயணித்து பயனடைகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போது இந்த ரயில் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையாக ரயில்வே உள்ளது. மேலும், உலகளவிலும் அதிகளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்படும் துறையாகவும் விளங்குகிறது.

இந்தியாவின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்க குறைந்த கட்டணம் மற்றும் நேரம் உள்ளிட்ட காரணங்களால் இவை மிகவும் விரும்பப்படுகின்றன. இந்நிலையில், ஆங்காங்கே மிகப்பெரிய ரயில் விபத்துககள் நடைபெற்றும் வருகின்றன.

போதிய நிர்வாகமின்மை காரணமாகவே இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் அவ்வப்போது குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. மேலும், ரயில்வேத்துறையை தனியார்மயமாக்கும் முடிவை பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அவ்வாறு சமீபத்தில் கூட உத்தரபிரதேச மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு விபத்துகள் நடந்தன. இதனால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ராஜிநாமா செய்தார்.

இதுதவிர, தமிழகம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் முன்னதாக ஏற்பட்ட மாபெரும் ரயில் விபத்துகள் காரணமாக அப்போதைய ரயில்வே துறை அமைச்சர்களும் ராஜிநாமா செய்தனர்.


முன்னதாக 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். எனவே இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அதுபோல 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஸ்ஸாமில் நடந்த மற்றொரு கோர ரயில் விபத்தில் சிக்கி 290 பேர் மரணமடைந்தனர். இதனால் அப்போதைய ரயில்வே துறை அமைச்சரான நிதீஷ் குமார், ராஜிநாமா செய்தார்.

இளமை திரும்ப இளைஞர்களின் ரத்தம்: முதியவர்களுக்கு ஒரு வித்தியாச சிகிச்சை முறை!

By DIN  |   Published on : 25th August 2017 08:09 PM  |   

 சான் பிரான்சிஸ்கோ: வயதானவர்கள் தங்கள் இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை செலுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வயதானவர்கள் தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக் கொள்வதன் மூலம் உத்வேத்துடன் செயல்படலாம் என அறிவிப்பு அளித்துள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 8,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முதலில் இது தொடர்பான சோதனை சிகிச்சை முறை எலிகள் மத்தியில் செய்து பார்க்கப்பட்டதாகவும், அந்த முடிவுகள் தந்த நம்பிக்ககையில்தான் தற்பொழுது இது பரீட்சார்த்த அடிப்படையில் செய்யப்படுவதாகவும்  அது தெரிவித்துள்ளது 
முதலில் இதில் 60 முதியவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இந்த முறையில் ஆரோக்கியமான இளைஞர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா என்னும் திரவம் உடலில் செலுத்தப்பட்டது.
பிளாஸ்மா எனப்படுவது மனித உடலில் இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் ஒரு திரவமாகும். இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்று அந்நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜெஸ்ஸி கர்மாசின் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையின் முடிவில் வயதாவதனால் ஏற்படக்கூடிய தோற்றம், நீரிழிவு நோய், இதய செயல்பாடு அல்லது நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஆரம்பத்தில் எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு சரிப்பட்டு வரும்  என்ற கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.

பதவி விலகுவதால் ஆயிற்றா?

By ஆசிரியர்  |   Published on : 26th August 2017 01:17 AM  |    
ஒரு வாரத்திற்கு முன்பு தடம் புரண்ட புரியிலிருந்து ஹரித்வார் செல்லும் உத்கல் விரைவு ரயிலைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த முறை விபத்துக்குள்ளானது கைஃபியாத் விரைவு ரயில். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உத்தரப் பிரதேச மாநிலம் ஆஸம்கர் நகரிலிருந்து தில்லி நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது அச்சல்டா ரயில் நிலையத்தில் விபத்து நேர்ந்தது. 10 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. 100 பயணிகள் காயமடைந்தனர். 
ரயில்வே கட்டுமானப் பொருள்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து நின்றிருக்கிறது. இது நிச்சயமாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது. அப்படியிருந்தும் அவர்கள் கவனக்குறைவாக கைஃபியாத் விரைவு ரயில் கடந்து செல்வதற்கு அனுமதித்தார்கள் என்று சொன்னால், அதை விபத்து என்று எப்படிக் கூறுவது?
தொடர்ந்து நடைபெற்ற இரண்டு விபத்துகளின் விளைவாக ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மிட்டல் பதவி விலகியிருக்கிறார். ரயில்வே நிர்வாகத்தில் அடிமட்டத்திலிருந்து தனது கடின உழைப்பால் முன்னேறி ரயில்வே வாரியத்தின் தலைவரானவர் ஏ.கே. மிட்டல். இவருக்குப் பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அடிமட்ட ஊழியர்களின் தவறுக்காக ஏ.கே. மிட்டல் அதிரடியாக பதவி விலகியிருக்க வேண்டாம். 
நீதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா பதவி விலகியதைப் போல அல்ல, மிட்டலின் பதவி விலகல். ரயில்வே என்பது தொழில்நுட்பமும் நிர்வாகத் திறமையும் ஒருசேர தேவைப்படும் துறை. தொழில்நுட்பத்துடன் அதிநவீன ரயில்கள் இயக்கப்பட்டால் மட்டும் போதாது. அவற்றை முறையாக இயக்குவதற்குத் தேவையான மனிதவளமும் வேண்டும். அதனால் அடிமட்டத்திலிருந்து தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கும் மிட்டல் போன்ற அனுபவசாலிகள் ரயில் விபத்துக்காக தார்மிகப் பொறுப்பேற்று விலகியிருப்பது அர்த்தமற்றது என்றுதான் தோன்றுகிறது.
ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மிட்டல் மட்டுமல்ல, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் தனது பதவி விலகல் கடிதத்தைப் பிரதமரிடம் அளித்திருக்கிறார். பிரதமர் இன்னும் அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, அமைச்சர் சுரேஷ் பிரபுவின் பதவி விலகலும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதுதான் உண்மை.
அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து சுதந்திர இந்தியாவில் தனது பதவியைத் துறந்த முதல் மத்திய அமைச்சர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. அவருக்குப் பிறகு மாதவ ராவ் சிந்தியா, நிதீஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோரும்கூட அவர்கள் ரயில்வே துறையின் அமைச்சர்களாக இருந்தபோது நடந்த ரயில் விபத்துகளின் பின்னணியில் பதவி விலக முன்வந்தனர். ஆனால் அன்றைய பிரதமர்கள் அவர்களது பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை. 
ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபுவின் செயல்பாடு பாராட்டுதலுக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. இந்திய ரயில்வே நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பதிலும் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வம் காட்டியவர் அவர். 
ஓரளவுக்கு ரயில்களின் பராமரிப்பிலும் பயணிகள் ரயிலின் சுத்தத்திலும் அவர் அக்கறை காட்டியதை மறுக்க முடியாது. அவரது ரயில் கட்டணக் கொள்கை ஏற்புடையது அல்ல என்றாலும்கூட, ரயில் முன்பதிவு குறித்து செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் நிச்சயமாக வரவேற்புக்குரியவை.
இந்திய ரயில்வே மிகவும் சோதனையான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ரயில்வே துறையின் நவீனமயமாக்கலுக்கு ஏற்றாற்போல ரயில் ஊழியர்களின் பொறுப்புணர்வு அதிகரித்திருப்பதாகத் தெரியவில்லை. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை 28 பெரிய ரயில் விபத்துகள் நடந்திருக்கின்றன. 259 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 973 பேர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் 2016-17 நிதியாண்டில்தான் ரயில் தடம் புரண்டதால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த புள்ளிவிவரம் நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 11, 2017-இல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 
பதவி வகிக்கும் ஒவ்வொரு ரயில்வே துறை அமைச்சரும் பயணிகளின் பாதுகாப்புதான் தங்களது முதல் குறிக்கோள் என்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து முழங்கி வருகிறார்களே தவிர, செயல்பாடு என்னவோ அதற்கு நேர் எதிர்மாறாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறதே தவிர, குறைவதாகத் தெரியவில்லை.
ரயில் மோதல் தடுப்புக் கருவிகள் அமைப்பது என்கின்ற நீண்டகால தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் இன்னும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. பழைய ரயில் இன்ஜின்கள், பயணிகள் செல்லும் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் ஆகியவை மாற்றப்படாமல் இருக்கின்றன. வழிகாட்டுதல் கருவிகள் (சிக்னல்கள்) இன்னும் நவீனப்படுத்தப்படவில்லை. இந்தியாவிலுள்ள 40% தண்டவாளங்கள் மிகவும் பழைமையானவை. சில 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை. இவை உடனடியாக மாற்றப்பட்டாக வேண்டும், அல்லது செப்பனிடப்பட வேண்டும். அதற்கெல்லாம் மிகப்பெரிய நிதியாதாரம் தேவைப்படுகிறது.
இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது அமைச்சரும் வாரியத் தலைவரும் பதவி விலகுவதால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 590 ரயில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. என்ன செய்யப் போகிறோம்?

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...