Saturday, September 9, 2017

SC upholds conversion of MBBS NRI seats to general category

Dismisses petitions submitted against government decision



The Supreme Court on Friday rejected the writ petitions submitted by two MBBS aspirants against the conversion of NRI quota seats to general category seats during the spot allotment for MBBS courses held here the other day.
The plea was heard by a Bench headed by the Chief Justice of India Deepak Mishra.
Even though counsel for the students argued that the NRI quota seats could not be converted into merit seats, the Bench was not inclined to listen.
Mukul Rohatgi, appearing for the State government, argued that it was because the candidates did not have sufficient documents with them to prove that they were legitimate claimants to the NRI quota that the seats were later converted to general category seats.
Hearing postponed
In the meantime, the Supreme Court postponed to Monday the hearing on writ petitions filed by the managements of three self-financing colleges against the cancellation of admission to the MBBS seats in their institutions. Notices would be sent to the Medical Council of India and the Central government.
On the basis of an interim ruling of the Kerala High Court, 400 students were admitted to Al Azhar College, Thodupuzha, Mount Zion Medical College, Adoor, and DM Institute of Medical Sciences, Wayanad.
The apex court had the other day set aside these admissions.
The MCI’s case is that permission to admit students should not be given to colleges that do not have the necessary infrastructure.
The State government’s stand is that these 400 students were taken from the NEET list and so the admissions should be okayed.
Precedence
Counsel for the managements led Kapil Sibal argued that there were parallels in this case with that of the Appollo Institute of Medical Science, Hyderabad, and the medical college run by the Saraswathi Charitable Trust, Karnataka. These colleges were allowed admissions by the apex court. A similar approach may be adopted in this case too, they argued.
Pilot smokes in cockpit, suspended

Saurabh Sinha| TNN | Sep 9, 2017, 05:29 IST

NEW DELHI: The commander of an airline has been suspended for smoking in the cockpit while flying an aircraft, an action unprecedented in India. While rare, crew members are known to smoke in the cockpit.

The commander in question got punished as his co-pilot filed a complaint with the airline after landing. The episode occurred on an AirAsia India flight from Hyderabad to Delhi last Monday (August 28). "The commander was smoking in the cockpit of the Airbus A-320 en route.

The Directorate General of Civil Aviation (DGCA) came to know about this from the airline and are going to take strict action as smoking is banned inside aircraft. The action against this commander could include the suspension of his flying licence for some time, and asking the airline to get an FIRregistered against him," said a highly placed source.

"The DGCA rules and action on tipsy flying have had a sobering impact. It is time that smoking in cockpit gets the required deterrent," said a nonsmoker pilot. An AirAsia India spokesperson said the airline had "apprised the DGCA of the breach... immediately after the incident and the Captain has been suspended with immediate effect".
Higher education department to focus on countering ragging on social media

TNN | Updated: Sep 8, 2017, 11:00 IST



Director general of police T K Rajendran, additional chief secretary Niranjan Mardi, chief secretary Girija Va... Read More

CHENNAI: The Tamil Nadu higher education departmentwill soon be working on ways to counter ragging faced by students via social media platforms. This was one of the key points discussed on Thursday during a meeting of the state-level monitoring cell to eradicate the menace of ragging in educational institutions.

The meeting held at Raj Bhavan was attended by TN governor Vidyasagar Rao, higher education minister K P Anbalagan, and higher education secretary Sunil Paliwal.

Paliwal said ragging was earlier usually associated with physical forms of harassment which is not the case anymore. "It is now more of online platforms and social media forums that have become channels of harassment. We want to come up with strategies so that students would know whom to approach and how to counter such kinds of ragging issues. We will discuss on how colleges can counter such non-conventional modes of ragging," he said, speaking to TOI.

It was also suggested that district-level meetings on ragging could be held during the month of July at the commencement of the academic year so as to review measures related to ragging.

Another point raised during the meeting was to help freshers as well as students across all years bond through extra-curricular activities on campuses. The department will be instructing colleges on encouraging extra-curricular activities as a mode of building bonds and familiarising new students as well.

The department has also prepared a documentary on anti-ragging that was entrusted to National Film Development Corporation of India (NFDC) which was approved by the governor on Thursday and will be screened at cinema halls and educational institutions.
Illegal telephone exchange case: CBI court to frame charges against Maran brothers on Oct 3

Sureshkumar| TNN | Sep 8, 2017, 12:06 IST


Former Union minister Dayanidhi Maran

CHENNAI: Four years after the CBI registered an FIR against former Union minister Dayanidhi Maran and his elder brother Kalanidhi Maran for illegally setting up high-end telecommunication facilities in his residences here under service category of BSNL and thereby causing a financial loss to the exchequer, a special court for CBI cases in Chennai has said charges would be framed against the accused on October 3.

On Friday, when the case came up for hearing before the XIV additional judge for CBI cases Natarajan, four out of seven accused, including Dayanidhi Maran, appeared in the court.

Kalanidhi Maran and two others filed petitions under Section 317 of the CrPC to dispense with their appearance citing health reasons.

Allowing the petitions, the judge directed appearance of all the seven accused on October 3, to frame charges based on the chargesheet filed by the CBI.

According to the CBI, Dayanidhi Maran, during the check period of June 2004 to December 2006, when he was Union minister for communication and information technology, misused his office and installed a private telephone exchange at his residences in Chennai and utilised the facility for business transactions involving Sun Network.
It said he had caused a loss of Rs 1.78 crore to the exchequer. More than 700 telecom lines had been installed at their residences in Boat Club and Gopalapuram here, the agency charged.

Among the accused were former BSNL general manager K Brahmnathan, former deputy general manager M P Velusamy and Dayanidhi Maran's private secretary Gauthaman.
I-T unearths Rs 246 crore one-shot Tamil Nadu bank deposit

TNN | Updated: Sep 9, 2017, 05:45 IST

(

CHENNAI: Sleuths of the income tax department (Tamil Nadu and Puducherry region) have detected a bank deposit of Rs 246 crore, made in a single transaction, during the ongoing drive against black money in Tamil Nadu. Sources said the money, suspected to have belonged to a leading politician, was deposited during the demonetisation exercisecarried out between November 8 and December 30.

It has also come to light that 441 account-holders with cumulative bank deposits of Rs 240 crore were untraceable in the state, as banks do not have proper details of these customers. The department has also sent notices to 27,739 account-holders over suspicious high-value transactions."During our inquiry, it came to light that an individual deposited Rs 246 crore in a bank account well after banking hours. It is one of the highest deposits made during demonetisation," said an official.

"After we sent notice to him, he agreed to join the Pradhan Mantri Garib Kalyan Yojana and pay tax, fine and penalty," said the official.

This is the second round of scanning of bank accounts that the I-T department is carrying out after demonetisation was announced. "The current exercise is based on details provided by the RBI about suspicious deposits. We sent notices to 27,739 bank account holders through email and asked them to show source of money in their accounts. We received reply only from 18,220 account holders. Despite several reminders, others have not revealed source of money in their accounts," said the official.

"As a follow-up action, the I-T department carried out a survey of the accounts and found that details of 441 account holders were not available in the banks. The RBI has given clear-cut guidelines that all accounts should have 'know your customer' (KYC) details. But the bank officials did not bother to update such details. We have instructed many banks to initiate action against their officials who helped customers open benami accounts to convert black money into white," said the official.

In many cases, the replies provided by account holders were not satisfactory, he said. In all, Rs 3,600 crore of suspicious deposits have been detected, he said.

A sizeable section of people who deposited money during the demonetization window are businessmen. They had shown the deposited money as their income. Officials are also screening many realty transactions above Rs one crore that took place after demonetization was announced, he said.
8-floor building in Pallavaram sealed for violating norms

Yogesh Kabirdoss| TNN | Updated: Sep 9, 2017, 05:50 IST



CHENNAI: The Chennai Metropolitan Development Authority (CMDA) sealed an eight-storey showroom under construction belonging to Chennai Silks in Pallavaram on Friday, barely 100 days after a fire gutted the T Nagar showroom of the retail chain, for carrying out construction without plan permission.

The building, to be leased to Chennai Silks after completion of construction, had come up in just one month without building approval, government sources said. "The land owner applied for planning permission for a multistorey building and the CMDA sought no-objection certificate (NOC) from three agencies, including the Airports Authority of India. But, construction started in the absence of a CMDA nod, making the structure illegal," an official said.

When contacted, Chennai Silks managing director Manickam directed an associate of the property owner and developer, J M Amanuallah, to issue a response. M Basheer, who identified himself as an associate of Amanuallah, said, "We have received a government order from the department of housing and urban development allowing construction. Besides we have paid the development charges of Rs 4.65 crore and submitted NOC from AAI." Planning permission was likely to be issued on Monday, he added. Basheer said they applied for planning permission five months ago after an application was rejected two years ago. However, it was not clear on what grounds the planning permission for the building was rejected two years ago.
தேசத்துக்கு ஏதாவது செய்துவிட்டு என்னை விமர்சிக்கட்டும்: நீட்டை எதிர்த்து ராஜினாமா செய்த அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா பேட்டி

Published : 08 Sep 2017 17:34 IST


க.சே.ரமணி பிரபா தேவி





அரசுப் பணியில் சேர லட்சக் கணக்கானோர் காத்திருக்க, நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் கிடைக்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறி, தனது அரசுப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார் சபரிமாலா.

இவரின் செயலுக்கு ஒரே நேரத்தில் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்துவரும் வேளையில் சபரிமாலாவிடம் பேசினோம்.


உங்களின் ராஜினாமாவுக்கு அரசு உயர் அதிகாரிகள் தரப்பில் என்ன விமர்சனம் எழுந்தது?

இதுவரை எந்த அதிகாரிகளுமே கருத்து கூறவில்லை. ஆசிரியர்கள் 10 பேர் போனில் தொடர்புகொண்டு பேசினர். அவ்வளவுதான்.

ஆசிரியர்கள் என்ன எதிர்வினையாற்றினர்? உங்களுடன் பேசிய ஆசிரியர்கள் கூறியது என்ன?

ஆசிரியர்களோ, அதிகாரிகளோ பெரியளவில் எதையும் சொல்லவில்லை. போனில் பேசிய இரண்டு ஆசிரியர்கள் என்ன நடந்தாலும் உன்னுடன் இருப்போம் என்றனர். மற்றவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர், அவ்வளவுதான்.

இன்று நீங்கள் அடையாள உண்ணாவிரதம் இருந்தது குறித்து...

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கிடைக்காததால்தான் அரசு வேலையை ராஜினாமா செய்தேன். அதனால் ஆத்ம திருப்திக்காக திண்டிவனத்தில் உள்ள எங்களின் வீட்டுக்கு வெளியே இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தேன்.

ஆனால் என்னுடைய உண்ணாவிரதத்தை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. உங்களைப் பார்க்க யாராவது வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அனுமதியளிக்க மறுத்தனர். நான் அமைதியான முறையில்தான் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினேன். ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.

ராஜினாமாவுக்குப் பிறகு உங்கள் மகனைப் பள்ளிக்கு அனுப்பினீர்களா?

இல்லை. இன்று அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. நான் வேலை பார்த்த வைரபுரம் அரசுப் பள்ளியில்தான் அவர் படிக்கிறார். அங்கிருந்து டிசி வாங்கி, வீட்டுக்கு அருகேயுள்ள பள்ளியில் சேர்க்க எண்ணியுள்ளேன். அவரை மீண்டும் அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பேன்.

சமூக ஊடகங்களில் உங்களின் செயலுக்கான விமர்சனங்களைப் பார்த்தீர்களா?

பார்த்தேன். ஏராளமான இளைஞர்களும் வெளிநாடு வாழ் தமிழர்களும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். அவர்களின் பதிவுகளைப் பார்க்கும்போது மிகுந்த நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களால் நம் தாய்நாட்டுக்கே பெருமை என்று மகிழ்ந்து பேசியவர்கள் ஏராளம்.

உங்களின் ராஜினாமா உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்று சொல்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அப்படிச் சொல்பவர்களுக்கு நான் முதலில் சொல்ல நினைப்பது உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேருங்கள் என்பதைத்தான். ''அவர்களை எல்லாத் தரப்பு மக்களுடனும் பழகவிட்டு, சமூக நீதிக்கு வழி செய்யுங்கள். என்னை விமர்சிக்கும் முன்பு நாட்டுக்கு ஏதாவது செய்துவிட்டு வாருங்கள். அப்போது நிச்சயம் உங்களின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கிறாரே?

ஆம், அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். நம் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எனது செயலை வரவேற்றதில் சந்தோஷம்.

திருமாவளவன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் எனது முடிவை வரவேற்றுள்ளனர். ஆனால் அதுமட்டும் போதாது. உரத்த குரலில் கல்விப் பிரச்சினைக்காக அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். அரசியல் தலைவர்கள் எல்லோரும் நினைத்தால் முடியும். அதனால் கல்வியில் சம நீதி என்ற மாற்றம் நடக்கக் கூடும்.

ராஜினாமா செய்த பிறகு வந்த எதிர்வினைகளைக் குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டனர்?

வேலையை விட்ட செய்தியைக் கேட்டு என் அம்மா நேற்று வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் மக்கள் அளித்துவரும் வரவேற்பைப் பார்த்து இன்று மதியம் வீடு திரும்பிவிட்டார். செத்தால் கூட வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று சொன்ன அப்பா இப்போது உலகமே அங்கீகாரம் அளித்தபிறகு, அம்மாவிடம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

எல்லோருமே அங்கீகாரத்துக்கு ஆசைப்படுபவர்கள்தான். இதற்கு தாயும் தந்தையும்கூட உட்பட்டு விட்டார்கள். ஆனால் நானும் என் கணவரும் மட்டுமே இவை எதையும் எதிர்பார்க்காமல் சுய மரியாதைக்காக மட்டுமே செயல்படுகிறோம். செயல்படுவோம்.

இவ்வாறு சபரிமாலா தெரிவித்தார்.
குடிபோதையில் குடும்பத்தையே சித்ரவதை செய்ததை பொறுக்க முடியாமல் பெற்ற மகனை கொன்று சிறைக்கு சென்ற தாய்: யார் மீது தவறு... தாய் மீதா? தமிழக அரசு மீதா?

the hindu tamil

Published : 08 Sep 2017 08:01 IST

டி.எல்.சஞ்சீவிகுமார்



செந்தில் (பழைய படம்)


காமாட்சி


சரஸ்வதி

தாயிற் சிறந்த கோயில் இல்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரில் முதலில் நிற்கிறாள் தாய். தன்னிகரற்ற தாய்ப் பாசம் மனிதனுக்கு மட்டுமின்றி மொத்த உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அத்தகைய தாயே தனது மொத்த குடும்பத்தையும் மதுபோதையில் சித்ரவதை செய்த மகனின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக சாகடித்திருக்கிறார்.

சென்னை திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் செந்தில், மருமகள் காமாட்சி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள். மூவரும் அருகே உள்ள கோலடி அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். மது போதைக்கு அடிமையான செந்தில் கடந்த 16 ஆண்டுகளாக மொத்தக் குடும்பத்தினரையும் சித்ரவதை செய்துவந்தார். மனைவிக்கு அரிவாள் வெட்டு, தாய்க்கு உருட்டுக் கட்டை தாக்குதல், குழந்தைகளைத் தூக்கிப் போட்டு பந்தாடுவது என தினம் தினம் செந்திலால் அந்தக் குடும்பம் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

ஆவேசமும்.. பாசமும்..

மகனால் தனது மருமகளும், குழந்தைகளும் படும் சித்ரவதைகளைச் சகிக்கமுடியாத சரஸ்வதி, 2 நாட்களுக்கு முன்பு, போதையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார். இறந்துபோன மகனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கதறி அழுதவர், பின்னர் திருவேற்காடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போதையின் பிடியில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் மொத்த நிலையையும் தனது ஒற்றைச் செயலால் உணர வைத்திருக்கிறார் அந்தத் தாய். ‘மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம்’ என்று சொல்லிக்கொண்டே, சில நாட்களுக்கு முன்பு சத்தமின்றி 1,000 மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசு மீது மகனின் ரத்தக்கறையைப் பூசிவிட்டு சென்றிருக்கிறார் அந்தத் தாய். இப்போது அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது.

இங்கே குற்றவாளி யார்? கொலை செய்த தாயா? மதுபோதையில் குடும்பத்தையே சித்ரவதை செய்த மகனா? இல்லை, வீதிதோறும் மதுக்கடைகளை திறந்துவைத்திருக்கும் தமிழக அரசா?

பல ஆண்டுகளாக சித்ரவதை செய்த கணவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். குடும்பத்துக்கு ஆதரவாக இருந்த மாமியார் சிறைக்குச் சென்றுவிட்டார். குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், செய்வதறியாது பரிதவிக்கும் காமாட்சியை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம். கணவனை இழந்த அவர், தொடர்ந்து நடக்கவுள்ள சடங்குகளுக்காக கைநிறைய கண்ணாடி வளையல்களும், கண்களில் முட்டி நிற்கும் கண்ணீருமாக நின்றிருந்தார்.

16 ஆண்டுகளாக சித்ரவதை

“சொந்த ஊரு அனகாபுத்தூரு அண்ணே, நானும் செந்திலும் சின்ன வயசுலயே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 16 வருஷமாச்சு. இத்தனை வருஷத்துல நானும், மாமியாரும், குழந்தைகளும் பட்ட சித்ரவதை கொஞ்ச நஞ்சமில்லை. கல்யாணமான புதுசுல ராத்திரி மட்டும் குடிச்சிட்டு இருந்தாரு. அப்புறம் பகல்லயும் குடிக்க ஆரம்பிச்சிடுச்சு.

நாலைஞ்சு வருஷமா அதுக்கு காலையில எழுந்திருச்ச உடனேயே ஆஃப் பாட்டில் பிராந்தி வேணும். நைட்டே குழந்தைங்க போயி வாங்கிட்டு வந்து வெச்சிடணும். இல்லைன்னா விடியற்காலை குழந்தைகளை அடி பின்னிடுவாரு. அப்புறம் நாள்பூரா அழிச்சாட்டியம்தான். பக்கத்துல செக்யூரிட்டி வேலை வாங்கிக் கொடுத்தேன். வேலைக்கு சரியா போறதில்ல.

நான் அண்ணா நகர்ல இருக்குற ஒரு ஹோட்டல்ல வேலை பாக்குறேன். பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல மாமியார் பாத்திரம் கழுவுறாங்க. எங்க சொற்ப வருமானத்தை வெச்சுத்தான் மூணு குழந்தைகளையும் காப்பாத்துறேன். இதுல தினமும் புருஷனுக்கு குடிக்கவும் பணம் தரணும். சரி குடிச்சுத் தொலையட்டும், பிறகாவது அமைதியா இருக்கலாம்ல.. அதுவும் கிடையாது. கோவம் வந்திச்சின்னா, அரிவாளை எடுத்து என்னை வெட்டிடுவாரு. உடம்பெல்லாம் அரிவாள் வெட்டு. அவங்க அம்மாவை உருட்டுக் கட்டையால பலமுறை மண்டையை உடைச்சிருக்காரு. பசங்களை தெருவுல ஓட விட்டு அடிப்பாரு. போலீஸ் ஸ்டேஷன்ல பலமுறை புகார் கொடுத்தோம். மகளிர் போலீஸம்மா, ‘கண்ணு நீ ஸ்ட்ராங்கா ஒரு கேஸ் கொடு, பத்து வருஷம் உட்கார வெச்சிடுறேன்’னாங்க. மனசு கேட்கலை.

அடியாச்சும் வாங்கிக்கலாம். ஆனா, அது கேட்குற வார்த்தை ஒவ்வொண்ணும் செத்துடலாம்போல இருக்கும். தெனமும் வேலைக்குப் போயிட்டு நானும் அத்தையும் வருவோம். ரெண்டு பேரையும் வாய்கூசாம அசிங்க அசிங்கமா பேசுவாரு. மூணு நாளு முன்னாடி இவர் பண்ண அழிச்சாட்டியம் தாங்க முடியாம அம்மா வீட்டுக்குப் போயிட்டேன். திங்கள்கிழமை காலையில போன் வருது.. வந்து பார்த்தா, முகமெல்லாம் ரத்தக்கறையோட அத்தை உட்கார்ந்திருந்தாங்க.

“தங்கம், உனக்கு தாலி எடுத்துக் கொடுத்த கையாலேயே உன் தாலியைப் பறிச்சிட்டேன். என்னை மன்னிச்சிடும்மா. அவன் இருந்தா உங்களை உசுரோட விடமாட்டான்”னு என் காலில் விழுந்து கதறினாங்க. கையில் இருந்த ஏழாயிரம் ரூவாயையும், கம்மலையும் கழட்டிக் கொடுத்துட்டு, ‘எப்படியாச்சும் பொழைச்சுக்கோ’ன்னு சொல்லிட்டு, அழுதுகிட்டே போலீஸ்கூட போயிட்டாங்க. எனக்கு அம்மா இல்லை. விவரம் தெரியாத வயசுலேயே இறந்துட்டாங்க. அத்தைதான் அம்மாவா இருந்து பார்த்துக்கிட்டாங்க. அவங்களும் ஜெயிலுக்கு போயிட்டாங்க. இனி எனக்கு யாரு இருக்கா...?” கதறி அழுகிறார் காமாட்சி.

இதில் தவறு யார் மீது? மகனைக் கொன்ற தாய் மீதா? குடிநோயாளி மீதா? தெளியாத மதுக் கொள்கையுடன் செயல்படும் தமிழக அரசு மீதா?
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு: அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கலாம்; சட்டம் ஒழுங்கை பாதித்தால் போலீஸ் நடவடிக்கை

2017-09-09@ 00:05:08




புதுடெல்லி: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. அதே நேரம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்து 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் அரியலூர் மாணவி அனிதாவுக்கு மருத்துவ சீட் கிடைக்காமல் போனது. இதனால் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகத்தில் அமைதி குலைந்துள்ளது.

இந்நிலையில், அனிதா தற்கொலைக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் 3 தினங்களுக்கு முன் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், ‘நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வல்ல. நாடு முழுவதும் நடத்தப்படும் பொதுவான தேர்வு. அதனால், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த போராட்டங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் செய்யப்பட்ட வாதத்தில், ‘‘போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதித்துள்ளது. மாணவியின் தற்கொலையை மூடி மறைக்க ஆளும் கட்சியினர் பள்ளிக் குழந்தைகள் உட்பட பலரை மறைமுகமாக போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். அதனால், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. அதனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்துவது சட்ட விரோதமாகும். அதனால், அரசியல் கட்சிகள், தனி நபர்கள் மற்றும் மாணவர்கள் யாராக இருந்தாலும் நீட் தொடர்பாக சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. இந்த விவகாரத்தில் எந்த வடிவிலான போராட்டங்களாக இருந்தாலும் அதற்கு தடை விதிக்கப்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழங்கு பாதிக்கப்படுவதை தலைமை செயலாளரும், உள்துறை செயலாளரும் தடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சட்டம் ஓழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை அல்லது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் பந்த் அல்லது இதர நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதே நேரம், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது, விமர்சனங்கள் செய்வது அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துவது ஆகியவை, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் இருந்து மாறுப்பட்டவை என்பதை மிகவும் தெளிவாக தெளிவுப்படுத்துகிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் அடிப்படை உரிமையுண்டு. ஆனால், அவை சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவோ அல்லது வன்முறையில் முடியவோ கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

காலையில் தடை: மாலையில் மாற்றம்

நீட் தேர்வுக்கு எதிரான எல்லா போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக நேற்று காலை விசாரணையின்போது நீதிபதிகள் முதலில் தெரிவித்தனர். பின்னர் வெளியிட்ட இறுதி உத்தரவில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அதில், ‘நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலான போராட்டங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது அடிப்படை உரிமை’ என்று நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

உயிரை வளர்க்கும் உயிர்க்காற்று


By ஆர்.எஸ். நாராயணன்  |   Published on : 09th September 2017 01:16 AM  | 
narayanan
Ads by Kiosked
உடம்பு வாழ உயிர் வேண்டும், உயிர் வாழ உணவு வேண்டும், உணவு வாழ உயிர்க்காற்று வேண்டும், உயிர்க்காற்று வாழ நீர் வேண்டும், நீர் வாழ நீரில் உயிரிகள் வாழ வேண்டும். இவ்வாறு நாம் பகுத்தாய்ந்து உண்மைகளைக் கண்டெடுக்க வேண்டும். முடிவில் நம் முன்னோர் கண்டெடுத்த பஞ்சபூதத் தத்துவத்தில் உண்மையின் பிறப்பைக் கண்டறியலாம். 
நீர், காற்று, தீ, வான், மண் என்ற ஐந்து சக்திகளில் உலகம் அடங்கியுள்ள உண்மையை ரிக் வேதம் கூறுகிறது. உணவு வாழ நீரும், உயிர்க்காற்றும் பற்றாது. விவசாயம் செய்ய வேண்டும். விதை வேண்டும். விதை ஊன்ற மண் வேண்டுமே! 
மண்ணில் ஊன்றிய விதை முளைத்து மரமாகிக் குடை விரிக்க வெளி வேண்டும். வெட்டவெளி என்பது ஆகாயம். உண்மையில் சூரியன் உட்பட அனைத்து கிரகங்களையும், கிரகச் சுழற்சிகளுக்கும் இடம் தரும் வெளிக்கும் எல்லையில்லாத வானத்திற்கும் நிறம் இல்லை. நீல நிறம் என்பதுகூட மாயத்தோற்றமே. 
அடுத்த கிரகம் பற்றி அறிவதைவிட இந்த பூமியையும் கடலையும் முழுமையாகத் தெரிந்து கொண்டோமா? படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றிய கதையை டார்வின் விளக்கினார். விதை வளர்ந்து மரமான கதை என்ன?
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளிலிருந்து உருவத்தில் பெரிதாயுள்ள யானை வரை வாழக்கூடிய இயற்கை அற்புதங்கள் பல, நம் அறிவுக்கு எட்டாமலேயே உள்ளன. எட்டியமட்டில், இந்த உலகம் எவ்வளவு தூரம் இயங்கும்? அழியும் காலம் நெருங்கிவிட்டதா? அணுகுண்டு போட்டு அழியப் போகிறதா? இயல்பு மீறிய வகையில் இயற்கைக்கு சேதம் விளைவித்து அழியப் போகிறதா? 'கடல் உள்ள வரை உலகு இயங்கும்' என்று எண்ணத் தோன்றுகிறது. 
ஏனெனில் எது இல்லாவிட்டாலும் 'ஆக்சிஜன்' உள்ளவரை உயிரியக்கம் இருக்கும். ஆக்சிஜன் தொழிற்சாலைகளையுள்ள கடலும், மரங்களும் எப்படி உலகை இயக்குகின்றன? ஆக்சிஜன் எப்படி உருவாகிறது? தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதுபோல் ஆக்சிஜ பகவானாயிருப்பவர் மகாவிஷ்ணுவே. 
ஆக்சிஜ பகவானின் அற்புதச் செயலை அறிவியலில் விளக்க முடியாமல், திருப்பாற்கடல் கடைந்தெடுக்கப்பட்டு கற்பக விருட்சமும், காமதேனுவும் வெளிப்பட்டதைப் புராணமாகக் கற்பித்தனரோ! திருப்பாற் கடலில் ஆதிசேஷன் என்ற பாம்புப் படுக்கையில் மகாவிஷ்ணு அனந்தசயனனாகப் பள்ளிகொண்டுள்ளார். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா? என்று கேட்டால், 'இந்த உலகத்தைக் காப்பாற்றவே' என்று பதில் வரும். இது விஞ்ஞான உண்மை. 
நாமெல்லாம் பூமிக்கு வேண்டிய ஆக்சிஜனை மரங்கள் தருவதாக நினைக்கிறோம். மரங்கள் 30 சதவீதம் மட்டுமே தருகிறது. காடுகள் அழிக்கப்பட்டதால் 20 சதவீதம். மீதி நச்சுக்காற்றே. ஆனால், கடல் வழங்குவது 70 சதவீத உயிர்க்காற்று.
உலகில் நமது உயிர் இயக்கமே உயிர்க்காற்று சூழற்சியினால்தான். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்க்காற்றை உள்ளே வழங்கி வெளிவந்த கார்பன் காற்று மீண்டும் மரங்களால் சுத்தமாகிய உயிர்க்காற்று மனிதர்களாலும், விலங்குகளாலும் மாசாகிக் கடலுக்குள் வாழும் ஜீவராசிகளுக்கு உயிர்தந்து, கடல் நீர் உதவியால் உயிர்க்காற்றாகிக் கடலையும் பூமியையும் காப்பாற்றுகிறது. 
கடலில் எப்படி உயிர்க்காற்று உருவாகிறது? கடலில் உள்ள தாவரங்களுக்கும் மீன்களுக்கும் உணவாயுள்ள பாசிகளில் கண்ணுக்குப் புலப்படாத பிளாங்க்டன் (PLA NKTON) கார்பனை உட்கொண்டு உயிர்க்காற்றை உற்பத்தி செய்கிறது. 
பிளாங்க்டன் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க் கூட்டம். கடல் பாசிகளிலும், வேறு பல்லாயிரக்கணக்கான கடல்தாவரங்களிலும் பின்னிப் படர்ந்துள்ள இந்த நுண்ணுயிரிக் கூட்டம் கடல் தாவரங்களுக்கு வேண்டிய உயிர்க்காற்றை நீரிலிருந்து பிரித்து வழங்குகிறது. 
நாம் மண்ணைப் படித்திருக்கிறோம், மரங்களைப் படித்திருக்கிறோம், பயிர்களைப் படித்திருக்கிறோம், ஆனால் கடலைப் படிக்கவில்லை! பூவுலகில் இருப்பதுபோல் பாதாள உலகிலும் பல அற்புதங்கள் உள்ளன. பூமியின் கீழ்மட்டம் ஆழி. ஆகவே, 'ஆழி சூழ் உலகு' என்று கூறுகிறோம். மழை பெய்கிறது. வெள்ளம் ஏற்படுகிறது. கரை புரண்டோடும் வெள்ளம் கடலில் சேர்கிறது. 
அவ்வாறே புவிமீது வளர்ந்த மரங்கள், மண்ணுக்கு அடியில் உள்ள உலோகங்களிலிருந்து சத்தைப் பெற்று விண்ணில் உயர்ந்து பச்சைக்குடைகளை விரித்தவண்ணம் உள்ளன. இந்தப் பச்சை நிறம் எப்படி வந்தது? இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறார்கள். 
ஆங்கிலத்தில் Photo Synthesis  என்ற சொல்லுக்கு ஏற்ப இணையான தமிழ்ச்சொல் இல்லை. ஒளிச்சேர்க்கையில் என்ன சேர்கிறது? மரம் தனக்குத் தேவையான உணவைத் தயார் செய்துகொள்ள உயிரிகளும் ரசாயனங்களும் சேர்கின்றன. மண்ணிலிருந்து மரங்களின் வேர் வழியே செல்லும் கார்பன், ஒளியின் உதவியால் மரம் உணவைப் பெற்றுக்கொண்டு மூன்று பங்கு உயிர்க்காற்றை வெளியேற்றுகிறது. 
அதாவது தண்ணீர் எச்2ஓ உடன் உட்கொள்ளப்பட்ட கார்பன் சிஓ2-வும் சேர்ந்து ஓ3. அதாவது ஒளிச்சேர்க்கை மூலம் (ஓ2-வில் உள்ள 2 பங்கு ஆக்சிஜனும், எச்2ஓ-வில் உள்ள ஒரு பங்கு ஆக்சிஜனும் வெளியேறுவதால் நம்மால் உயிர்வாழ முடிகிறது! 
இதே நிகழ்ச்சி கடலிலும் நிகழ்கிறது. மரங்கள் வழங்கும் உயிர்க்காற்றைவிட கடல் வழங்கும் உயிர்க்காற்று இரண்டு மடங்கு அதிகம்.
மண்ணில் நாம் காணும் இயற்கையின் அற்புதங்கள் கடலிலும் நிகழ்கின்றன. ஆழ்கடலில் காணக்கூடிய அற்புதங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. கடலுக்குள் பவழப்பாறைகள் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் போல் உயர்ந்தும் நீண்டும் குகைகளை உருவாக்கியும் உறைந்துள்ளன. 
பூமியின் அடியில் உள்ள உலோகச் சத்துக்களை மரம் ஏற்பதுபோல கடல் அடியில் உள்ள பாறைகளில் உள்ள உலோகச்சத்தைக் கரைத்து உணவாக மாற்றிக்கொள்ளும் கடல்தாவர இனங்களால்தான் மீன்களின் வாழ்வு மட்டும் அல்ல, மனிதனுக்கும் உயிர்வாழ்வு கிட்டுகிறது. யானையைவிடப் பெரிய பெரிய திமிங்கலங்கள் வாழ்கின்றன. சிங்கம், புலி போன்ற கொடிய சுறாமீன்களும் உண்டு.
உயிர்க்காற்று இல்லாமல் கடலில் அவை வாழ்வது எப்படி? கடல்வாழ்ப் பிராணிகளுக்கெல்லாம் வாழ்வு தருவதே கடல் தாவரங்கள்தாம். இக்கடல்வாழ் தாவரங்களில் உள்ள பிளாங்க்டன் நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கைக்குக் காரணமாயுள்ளன. 
கடல் தாவரங்கள் பல வகைப்படும். அவை இலை வடிவில் அடர்ந்து படர்ந்து கடலில் வியாபித்துள்ளன. விஷப்பாசிகளும் உண்டு. நல்ல பாசிகளும் உண்டு. அட்லாண்டிக் சமுத்திரத்தில் மனிதன் உண்ணத்தக்க கடல்பாசி - தாவரங்களை விசைப்படகுகள் மூலம் சென்று கடலில் குதித்து அறுவடை செய்து திரும்பும் ஸ்காண்டிநேவிய மக்களைப் பற்றிய தகவல்கள் உண்டு.
ஆண்டுகள் செல்லச் செல்ல பூமியில் விளைவிக்கப்படும் உணவுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இப்போதே கடலில் மீன்பிடித்துக் கரை சேர்த்து அப்படியே விற்பனைக்கு வருகின்றன. மிகுந்தவை உப்புக்
கருவாடு. 
பலவகை கடல் பாசிகளும் உணவுச் சங்கிலியில் இடம் பெற்றுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள (ரூபாய் சுமார் 2.5 லட்சம் கோடி) கடல் வாணிபப் பொருள்கள் உலகப் பொருளாதாரத்தில் பங்கு பெற்றுள்ளன. இவ்வளவு நிகழ்ந்தும் இன்னமும் ஆழ்கடல் மர்மம் புரியாத புதிராயுள்ளது. 
கடலில் இயங்கும் பல்லுயிர்ப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியே தொடக்க நிலையில் உள்ளபோது, மக்கள் கடலை மாசுகளின் சங்கமமாக மாற்றிவிட்டனர்.
உணவுச் சங்கிலி என்று சாதாரணமாகப் பலரும் பேசுகிறோம். மண்ணில் விளைந்த பொருள், உங்கள் உணவு மேஜைக்கு ஒரு சாப்பாடாக வரும் வரையில் உள்ள பின்னலமைப்பு இது. ஒரு பக்கம் ஜங்க் ஃபுட், மறுபக்கம் விளைபொருள்களில் எஞ்சியுள்ள நச்சு. 
கத்தரிக்காய் விஷம், தக்காளி விஷம், ஆப்பிள் விஷம், திராட்சை விஷம், பீட்ரூட் படுவிஷம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வயிற்றுக்குள் தள்ளி உயிர் வாழ்கிறோம். இயற்கையாகக் கடலில் விளையும் இவை நஞ்சில்லாதது என்று கடல்பாசி விற்பவரும், மீன் விற்பவரும் சொல்லலாம். அது உண்மையா? கடலில் எவ்வளவு மாசுகளைக் கொட்டுகிறோம்? அவை பற்றிய கணக்கைக் கேட்டால் மீனையும் கடல்பாசிகளையும் கையில் தொடமாட்டோம். 
நாம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக், மின்சாதனங்கள், துணிகள், பல்வேறு சாயம், கச்சா எண்ணெய்.... எல்லாம் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாகச் சிதைத்து, ஏறத்தாழ 51 டிரில்லியன் (ரூபாய் சுமார் 51 லட்சம் கோடி) துகள்கள் பிளாங்க்டனுடன் கலந்து மீன்களையும், கடல் தாவரங்களையும் நச்சாக்குகின்றனவாம். 
MILKYWAY என்று சொல்லப்படும் பால்வளி மண்டலத்தில் காணப்படும் நட்சத்திரங்களைப்போல் ஐந்து மடங்கு பிளாஸ்டிக் துகள்கள் கடலில் மின்னுகின்றனவாம். அப்படியானால் மண்ணைவிட கடல் இன்னமும் அதிக மாசாகி வருகிறது. 
கடலையும் மண்ணையும் காப்பாற்ற மனிதனால் ஆவது ஒன்றுமில்லை. நாம் உயிர்வாழ, உயிர்க்காற்றுப் பெற, உணவு பெற, ஊன் பெற, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளே துணை.

தற்கொலை தவிர்ப்போம்

By ஆர். வேல்முருகன்  |   Published on : 09th September 2017 01:13 AM  |
DINAMANI
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர், முதுநிலை மருத்துவம் படிக்கும்போது பேராசிரியர் திட்டியதால் மதுரையில் தற்கொலை செய்து கொண்டார். 
கேரளத்தைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவி கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்டார். பிளஸ் 2 தேர்வுகளின் போது எதிர்பார்த்ததை விடக் குறைந்த மதிப்பெண் பெறும்போது பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மாணவரும் பெற்றோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்புவதற்குப் பழகவும் பழக்கவும் வேண்டும். விரும்பியபடி வாழ்க்கை என்பது இந்த உலகில் சிலருக்கு வேண்டுமானால் அமைந்திருக்கலாம். 
மீதியுள்ளவர்கள் அனைவருமே கிடைத்த வாழ்க்கைக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொண்டவர்கள்தான். இந்தப் படிப்பு இல்லாவிட்டால் மற்றொன்று. இந்த உலகில் வாழ்வதற்கும் படிப்பதற்கும் ஆயிரம் மாற்று வழிகள் இருக்கின்றன. 
இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை. அதற்கெல்லாம் தற்கொலைதான் தீர்வென்றால் இங்கு வாழ்வதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். 
அந்தத் திறமையை வைத்து ஒவ்வொருவரும் முன்னேற வேண்டுமே தவிர எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை எண்ணமே வரக்கூடாது. இதற்குச் சிறு வயதில் இருந்தே மன நல நிபுணர்களைக் கொண்டு பயிற்சி தர வேண்டும். 
தற்கொலை கூடாது என்ற அளவில் பாடத்திட்டங்களுடன் வாழ்வியல் நடைமுறையையும் கற்றுத் தர வேண்டும்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்றாலும் அவர் மீண்டும் உயிருடன் வரப்போவதில்லை. அவர் இறந்த சோகம் பிறரை விட அந்தக் குடும்பத்துக்குத்தான் அதிக நாள் நீடிக்கும். 
கட்சி வித்தியாசமில்லாமல்அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் அந்தக் குடும்பத்தை நோக்கிச் சென்றனர், நிதி அறிவிக்கப்பட்டது. தேவையான உதவிகளைச் செய்ய அரசு காத்திருக்கிறது. 
ஆனால் இதுவெல்லாம் உயிரிழந்த மாணவி அனிதாவின் தற்கொலையை நியாயப்படுத்துமா?
இப்போது வருத்தம் தெரிவிப்பவர்கள் சிறப்பு ஒதுக்கீடாக அம்மாணவிக்கு ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தந்திருக்க முடியும். 
மதிப்பெண் குறைந்த அரசியல்வாதிகளின் மகளுக்கு முதல்வரின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கித் தர முடியும்போது ஏன் அனிதாவுக்குத் தரப் போராடியிருக்கக் கூடாது? அனிதாவைப் போல பல நூறு மாணவியர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசு கொள்கை முடிவுகள் எடுக்கும்போது மாணவர்கள் பாதிக்காதவாறு எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகள் வாங்கும் நன்கொடையை நேரடியாகத் தடுத்திருக்கலாம். ஆனால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொள்வதை இன்று வரை அரசால் உறுதி செய்ய முடியவில்லையே. 
கட்டணம் ரூ.4 லட்சம் என்றால் ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகிறார்களே. இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
இப்போது சமத்துவம் குறித்துப் பேசும் அரசியல் கட்சிகள் தமிழக மாணவர்களிடையே பாகுபாடு காட்டுகின்றன என்பரை மறுக்க முடியாது. அரசின் நலத்திட்ட உதவிகளில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமே. 
தனியார் மற்றும் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி. அரசுப் பள்ளிகளிலும் சுயநிதிப் பிரிவு மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட சலுகைகள் தரப்படுவதில்லை.
எதிர்க்கட்சிகள் எப்படியோ ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற நினைப்பிலும் ஆளுங்கட்சி எப்படியோ தங்கள் ஆட்சி தொடர்ந்தால் போதும் என்ற நினைப்பிலும்தான் உள்ளனவே தவிர தங்கள்பெயர் சொல்லும்படி ஆட்சியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு சிறிது கூடக்கிடையாது. 
தமிழகப் பிரச்னைகளில் அரசியல் செய்யட்டும், ஆனால் நீட் போன்ற பொதுப் பிரச்னைகளிலாவது தமிழக மாணவர்களின் நலன் கருதி ஒன்றிணையலாமே. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்றார். மருத்துவமனையில் இருந்து மறைந்தார். அவருடைய சாவு மர்மமாக உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 
அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் போராட்டத்தில், நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டு வரப்படாது என்ற முழங்கியதால் மாணவர்கள் இப்போது ஜெயலலிதாவை நினைவு கூர்கின்றனர். 
எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் உள்ள இந்தச் சமுதாயத்தில் மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டுமே தவிர தற்கொலை குறித்து சிந்திக்கக் கூடாது. 

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை நோக்கி மட்டுமே முன்னேற வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே சிறக்கும்.
 
வேலையை துறந்த ஆசிரியை உண்ணாவிரத போராட்டம்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:55




திண்டிவனம்: நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தி, தன் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அடுத்த வைரபுரம் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றியவர் சபரிமாலா, 34. இரு தினங்களுக்கு முன், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரியும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தியும், இரண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகனுடன், பள்ளி வளாகத்தில் தர்ணா நடத்தினார். போராட்டத்துக்கு, போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம், வேலையை ராஜினாமா செய்வதாக ஆசிரியை கடிதம் அளித்தார். இந்நிலையில், திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள தன் வீட்டின் எதிரில், நேற்று காலை, 8:15 மணிக்கு, உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.

அரசியல் கட்சியினர் அவரை சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சமாதானம் செய்தும், சபரிமாலா தன் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

'நீட்' தேர்வு - யாருக்கு அதிக பலன்

பதிவு செய்த நாள்09செப்
2017
02:04

'நீட்' தேர்வு மூலம் தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முன்பு கிருஷ்ணகிரி, நாமக்கல் என குறிப்பிட்ட சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் பலன் பெற்றனர். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு தான் 'நீட்' (national eligibility cum entrance test). கடந்த முறை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலாவ தேர்வு முறையில் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து மட்டும் 1,750 பேர் தேர்வாகினர். இந்த ஆண்டு இப்பகுதியில் இருந்து நீட் அடிப்படையில் 373 பேர் தான் தேர்வாகினர். மறைந்த மாணவி அனிதாவின் அரியலூரில் இருந்து 4 பேர் தான் கடந்த முறை வாய்ப்பு பெற்றனர். இம்முறை 21 பேர் தேர்வு பெற்றுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இம்முறை அதிக எம்.பி.பி.எஸ் இடங்களை பெற்றுள்ளனர்.






நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்தவர்கள் 471 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகம். கடந்த முறை 113 மாணவர்கள் மட்டுமே தேர்வாகி இருந்தனர்.
109

நாமக்கல்லுக்கு தான் அதிக பாதிப்பு. இங்கு இருந்து கடந்த முறை 957 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வாகினர். இம்முறை 109 பேர் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளனர்.
'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் முடிவுக்கு வருகிறது
பதிவு செய்த நாள்08செப்
2017
20:33

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 'செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்திய பின், ஒரு தரப்பினர் பின்வாங்கினர். இன்னொரு தரப்பினர் மட்டும், இரு நாட்களாக வேலைநிறுத்தம், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், வேலைநிறுத்தத்தை தொடரக் கூடாது என, மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்தது. ஆனாலும் நேற்று, வேலைநிறுத்த போராட்டம் தீவிரமானது. பின்வாங்கிய சங்கத்தினரும், நேற்றைய போராட்டங்களில் பங்கேற்றனர். அதனால், ௫௦ சதவீத அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. அரசு பணிகள் பாதிக்கப்பட்டன; பள்ளிகள் முடங்கின.

நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில், இன்றுடன் போராட்டத்தை முடித்துக் கொள்ள, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், சென்னையில், இன்று பிற்பகலில் கூடி முடிவு எடுக்கின்றனர்.

முதல்வரின் வாக்குறுதிப்படி, நவ., 30௦க்குள், ஊதிய உயர்வு வழங்கப்படாவிட்டால், மீண்டும் அக்டோபரில் போராட்டத்தில் குதிக்க, முடிவு செய்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை
பதிவு செய்த நாள்08செப்
2017
20:33

தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தீவிரமாக பெய்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், மேகாலயா, தெலுங்கானா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், தமிழக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 'மஹாராஷ்டிரா முதல், தமிழகத்தின் வட மாவட்டங்கள் வரை, நில பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில், புதிய மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. 'அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பரவலாக கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், கடலோர பகுதி, கேரளா, ஆந்திரா, அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று காலை, 8.30மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கொள்ளிடத்தில், ௯ செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

- நமது நிருபர் -
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல்2 மாதங்களுக்கு 144தடை உத்தரவு

பதிவு செய்த நாள்08செப்
2017
20:26




ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் இமானுவேல்பூஜை,தேவர் ஜெயந்திவருவதையொட்டி இன்று நள்ளிரவு முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் வரும் 15-ம் தேதி வரையிலும், அக்டோபர் 25ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் மாவட்டத்திற்குள் வாடகை வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கு எதிராக பிச்சைக்காரர் வழக்கு



கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு பிச்சைக்காரர் வங்கிகளை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் காஞ்சன் ருய்.

செப்டம்பர் 09, 2017, 03:45 AM

கொல்கத்தா,

கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு பிச்சைக்காரர் வங்கிகளை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் காஞ்சன் ருய்.

அவர் தனது மனுவில், ‘‘ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களால் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. வங்கிகளில் அந்த நாணயங்களுக்கு பதிலாக ரூபாய் நோட்டுகளை தர மறுக்கிறார்கள். இதனால், என்னிடம் ஏராளமான நாணயங்கள் குவிந்து விட்டன. எனது பிச்சைக்கார தொழிலும் பாதிப்படைந்துள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஷிதா மாத்ரே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் சுசிஸ்மிதா சட்டர்ஜி, ‘ஒரு ரூபாயில் இருந்து அனைத்து நாணயங்களும் செல்லும். மனுதாரர், எந்த வங்கியையோ, கிளையையோ குறிப்பிட்டு கூறவில்லை’ என்று கூறினார்.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் எந்த குறிப்பிட்ட வங்கியையும் பிரதிவாதியாக சேர்க்காததால், இந்த மனுவை திரும்பப்பெற்று, கூடுதல் விவரங்களுடன் புதிய மனு தாக்கல் செய்யுமாறு காஞ்சன் ருய்யுக்கு உத்தரவிட்டனர்.
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி போராட்டம்: சென்னையில், கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை



மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 09, 2017, 03:30 AM

சென்னை,

‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்த விலக்கு அளிக்க கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 8-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நேற்று காலையில் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் வகுப்பிற்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னையில் உள்ள சில கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி புதுக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, விவேகானந்தர் கல்லூரி, அம்பேத்கர் சட்ட கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று(சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்களும் வழக்கமான விடுமுறை தினம் என்பதால் திங்கட்கிழமை முதல் கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் மாணவர்கள் தரப்பில் சிலர் கூறும் போது, எங்களது கல்லூரிக்கு விடுமுறை அளித்தாலும், எங்களது போராட்டத்திற்கு விடுமுறை அளிக்க முடியாது. ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்த விலக்கு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினர்.
மாநில செய்திகள்

75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பாயுமா?


தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 09, 2017, 03:30 AM

சென்னை,

ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒரு பிரிவு 7-ந் தேதியில் இருந்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. 20 சதவீத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை.

இந்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் யார்-யார்? என்பது பற்றி துறைத் தலைவர்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும், வேறு வழியை தேர்வு செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை 7-ந் தேதி உத்தரவிட்டது. அதேபோல வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனாலும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதேசமயம் 7-ந் தேதி வேலைநிறுத்தம் செய்த 20 சதவீதம் பேர், நேற்று 11 சதவீதம் பேராக குறைந்தது. இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஆசிரியர்கள் சுமார் 36 ஆயிரம் பேரும், அரசு ஊழியர்கள் சுமார் 39 ஆயிரம் பேருமாக மொத்தம் 75 ஆயிரம் பேர் 8-ந் தேதி வேலைக்கு வரவில்லை. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கனவே அரசு விதிகள் உள்ளன.

ஐகோர்ட்டும் இந்த விஷயத்தில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட செய்திகள்

குரோம்பேட்டையில் 8 மாடி கட்டிடத்துக்கு ‘சீல்’ சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை



குரோம்பேட்டையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட 8 மாடி வணிக கட்டிடத்துக்கு சென்னை பெருநகர வளாச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

செப்டம்பர் 09, 2017, 04:45 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் இடத்தில் கடந்த சில மாதங்களாக பிரமாண்டமாக அடித்தளத்துடன, தரைதளம் மற்றும் 8 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. பிரபல துணிக்கடை இந்த வணிக கட்டிடத்தில் வர உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

கடந்த மாதம் 3–ந் தேதி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், அந்த கட்டிடம் கட்டும் இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அனுமதி பெறாமல் அந்த கட்டிடம் கட்டுவது தெரிந்தது.

இதையடுத்து கட்டிடம் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கட்டிட உரிமையாளருக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

அதற்கு கட்டிட உரிமையாளர் பதில் அனுப்பியதில், அனுமதி பெற்ற பிறகே கட்டிடம் கட்டும் பணிகளை செய்வதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 21–ந் தேதி அதிகாரிகள் அங்கு சோதனை செய்தனர். அப்போது 4 மாடிகள் கட்டப்பட்டு 5–வது மாடி கட்டும் பணி நடைபெற்று வந்தது தெரிந்தது. முறையான அனுமதி பெற்ற பிறகு கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்வதாக கூறி விட்டு கட்டுமான பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தது தெரிந்தது.

கடந்த 6 மற்றும் 7–ந் தேதிகளில் அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்த போது 8 மாடிகள் கட்டப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று காலை 20–க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அனுமதி இல்லாமல் கட்டிட பணிகள் செய்யக்கூடாது என முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகும் அதை செயல்படுத்தாமல் தொடர்ந்து கட்டிட பணிகள் செய்து 8 மாடிகள் கட்டியது தெரிய வந்ததால் அந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்தனர். அங்கு எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என அறிவிப்பு செய்து நோட்டீசும் ஒட்டினர்.
தலையங்கம்

வேலைநிறுத்தம் வேண்டாமே!

செப்டம்பர் 09 2017, 03:00 AM




பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில்  பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கவேண்டும், அவ்வாறு புதிய ஊதியம் நிர்ணயிக்க காலதாமதம் ஏற்படும் நிலையில், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களில் 79 சங்கங்களைக்கொண்ட ஒரு பிரிவான ஜாக்டோ–ஜியோ என்று கூறப்படும் தமிழக அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், முதல்–அமைச்சரே ஈரோட்டில் இந்த சங்கங்களை அழைத்து பேசினார். இதில் ஒருபிரிவினர் முதல்–அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த் தையை ஏற்று வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்றனர். ஆனால், மற்றொரு பிரிவினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். 

அரசு நிர்வாகத்தில் பெரியளவில் பாதிப்பு இல்லா விட்டாலும், பல அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இன்றியமையாத பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆசிரியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் வரவில்லை. சேலம் மாவட்டம், கருத்தராஜாபாளையம் என்ற ஊருக்கு வேறொரு பணியாக சென்ற மாவட்ட கலெக்டர் ரோகிணி, அங்குள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்ததை பார்த்து, உடனடியாக அவர்களை பள்ளிக்கூடத்திற்குள் அழைத்துச்சென்று, தானே ஆங்கில பாடம் நடத்தினார், போர்டில் ஒரு திறமைமிக்க ஆசிரியரைப்போல் பாடங்களை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். மாணவர்கள் மகிழும் வண்ணம் ஆசிரியரான கலெக்டர் ரோகிணியை தமிழ்நாடே பாராட்டு கிறது. இந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், ஜாக்டோ–ஜியோ நடத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் பணி விதிமுறைகளை மீறியதாகும். இது போன்ற வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் எந்தவித இன்னலையும் அனுபவிக்கக்கூடாது. அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேலைநிறுத்தத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் போராட்டம், மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜனுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடந்த ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பில், ‘அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வது என்பது அடிப்படை உரிமையோ, சட்டபூர்வ உரிமையோ, தார்மீக உரிமையோ இல்லை. தங்கள் கோரிக்கைகளுக்காக வேறுவழிகளை பின்பற்ற லாம்’ என்று வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இப்போது ஜாக்டோ–ஜியோவை சேர்ந்தவர்கள் இது காலவரையற்ற போராட்டம் இல்லை என்றுகூறி, நேற்றும் பணிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால், அவர்களுடைய கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டால், மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக பொதுமக்களும், மாணவர்களும் அதை வரவேற்கமாட்டார்கள். அவர்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்கவேண்டும். ஜப்பான் நாட்டில் தங்கள் கோரிக்கைக்காக போராட்டம் செய்பவர்கள் வழக்கமான பணிகளைவிட, கூடுதலாக தங்களை வருத்திக் கொண்டு வேலைசெய்து, உற்பத்தியை பெருக்கிக்காட்டி, அதன்மூலம் அனுதாபத்தை சம்பாதித்துக்கொள்வார்கள். அதுபோல, பொதுமக்களின் ஆதரவு இருந்தால்தான் எந்த போராட்டமும் வெற்றிபெறும் என்றவகையில், அரசு பணி களிலோ, பொதுமக்களுக்கான பணிகளிலோ, மாணவர் களின் கல்வி பணிகளிலோ பாதிப்பு ஏற்படாமல் வேறு பலவழிகளில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதுதான் சாலச்சிறந்ததாகும். அரசும் இதுபோல அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும்போது, வேலை நிறுத்தம் வரை செல்லவிடாமல் சுமுகமான முடிவுகளை பேச்சுவார்த்தை மூலம் எடுக்க வகை செய்யவேண்டும். மொத்தத்தில், அரசும், அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது.
மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்


தாம்பரம், பெருங்களத்தூரில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

செப்டம்பர் 09, 2017, 04:00 AM
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தாம்பரம், பெருங்களத்தூரில் பாதசாரிகள் செல்வதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 4.32, 5.20, 5.38, 6.07, 6.40, இரவு 7.32, 7.56, 8.52, 9.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.13 மணிக்கு புறப்படும் திருமால்பூர் விரைவு வண்டி தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

* குருவாயூரில் இருந்து நேற்று புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, அரக்கோணம், சென்னை கடற்கரை வழியாக இன்று இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

பகுதியாக ரத்து

* செங்கல்பட்டில் இருந்து இன்று மாலை 6.40, இரவு 7.00, 7.25, 7.45, 8.10, 8.45, 9.10, 10.15, 11.10 மணிக்கும், திருமால்பூரில் இருந்து மாலை 5.10 மணிக்கும், காஞ்சீபுரத்தில் இருந்து இரவு 7.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பயணிகள் சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து இன்று இரவு 7.05, 8.10, 9.10, 10.15, 11.10 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும். அதேபோல் மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 7.40, 8.45, 9.50, 11.00, 11.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும்.

* தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

* புதுச்சேரியில் இருந்து இன்று பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில், புதுச்சேரி-செங்கல்பட்டு இடையே மட்டும் இயக்கப்படும்.

சிறப்பு மின்சார ரெயில்

* சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.55, 4.40, 5.00, 5.20, 5.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டில் இருந்து நாளை அதிகாலை 3.55, 4.30, 4.45, 5.10, 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* பயணிகள் சிறப்பு மின்சார ரெயில் செங்கல்பட்டில் இருந்து நாளை அதிகாலை 3.55, 4.30, 4.45, 5.10, 5.55 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி வரை செல்லும். மறுமார்க்கமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து அதிகாலை 4.30, 5.06, 5.30, காலை 6.00, 6.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லும்.
ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா : ஏர்டெல் அதிரடி சலுகை

பதிவு செய்த நாள்08செப்
2017
10:25


புதுடில்லி : ஜியோ நிறுவனம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்தும், ஜியோ மற்றும் ஏர்டெல் இடையேயான போட்டி குறைந்தபாடில்லை. ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலும், பிஎஸ்என்எல்., நிறுவனமும் பல அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இதன் அடுத்த கட்ட ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக மிக குறைந்த கட்டணத்திலான 4 புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த கட்டணமாக ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ளது. 7 நாட்கள் வாலிடிட்டி கொண்ட இந்த திட்டம் 4ஜி சிம் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. 7 நாட்களுக்கு பிறகு மீதமுள்ள டேட்டா நீட்டிக்கப்படாது.

அதே சமயம் புதிதாக ஏர்டெல் சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 4ஜிபி டேட்டா சலுகை 54 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த திட்டமாக ரூ.8 க்கு நிமிடத்திற்கு 30 பைசா கட்டணத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது. இதன் வாலிடிட்டி 56 நாட்களாகும்.

மேலும் ரூ.15 க்கு நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது. இதன் வாலிடிட்டி 27 நாட்கள். ரூ.40 க்கு அன்லிமிடெட் வாலிடிட்டியில் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட உள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்த சிங்கப்பூர் பெண்ணுக்கு விருது
பதிவு செய்த நாள்08செப்
2017
21:23




சிங்கப்பூர்: சிங்கப்பூரில், அனாதைக்குழந்தைகள் வளர்ப்பில், 32 ஆண்டுகள், சேவையாற்றிய பெண்ணுக்கு, 'சிறந்த சமூக சேவகர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசியாவிலுள்ள தீவு நாடான, சிங்கப்பூரைச் சேர்ந்தவர், இந்திராணி எலிசபெத் நாடிசன், 77. சீன நாட்டைச் சேர்ந்தவரான இவர், சிங்கப்பூரில், இந்திய குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அம்புரோஸ் அந்தோணி என்பவரை, இந்திராணி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐந்து மகன், ஒரு மகள் உள்ளனர்.

குழந்தை பிரியரான இந்திராணி, பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார். இதற்காக, தனியாக அனாதை இல்லம் தொடங்கவில்லை.

தன் கணவர், ஆறு குழந்தைகளுடன் வசித்து வந்த நான்கு அறைகள் அடங்கிய சிறிய வீட்டிலேயே, மற்ற குழந்தைகளையும், இந்திராணி வளர்த்தார்.
குழந்தைகள், 2 வயதானதும், அவற்றை தத்து கொடுத்து விடுவார். கடந்த, 1976ல் தொடங்கி, 2008 வரையில், 43 அனாதைக் குழந்தைகளை இந்திராணி வளர்த்து ஆளாக்கினார்.

வளர்ப்புத் தாயாக, 32 ஆண்டுகள் இந்திராணி ஆற்றிய மனிதாபிமான சேவையை, சிங்கப்பூர் பிரதமர், லீ சுன் லுாங், தன் முகநுால் பதிவில் பாராட்டி, சமீபத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், இந்திராணிக்கு, சிங்கப்பூரின் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. 

இந்திய வம்சாவளியினருக்காக நடத்தப்படும், 'தப்லா' பத்திரிகை, இந்த விருதை வழங்கியது. விருதுடன் வழங்கப்பட்ட, 4.8 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை, இரண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக, இந்திராணி வழங்கினார்.

இந்திராணி கூறியதாவது:

ஒவ்வொரு குழந்தையும், என்னை விட்டுச் செல்லும்போதும் வேதனைப்படுவேன். குழந்தைகளை வளர்க்க பொறுமையும், அன்பும் தேவை; என் கணவர், ஆறு குழந்தைகள் எனக்கு உதவியாக இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

உடல் நிலை மற்றும் முதுமை காரணமாக, குழந்தைகள் வளர்ப்பதை, 2008ல் இந்திராணி நிறுத்தி விட்டார்.
செப். 11 ல் பள்ளிக்கு விடுமுறை
பதிவு செய்த நாள்08செப்
2017
22:48

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்.11ல் இம்மானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அன்று நடக்கவிருந்த காலாண்டு தேர்வு செப்., 25க்கு மாற்றப்பட்டது.
'லைசென்ஸ்' விண்ணப்பத்துக்கு இணையதளத்தில் மாற்றம்
பதிவு செய்த நாள்08செப்
2017
22:43

அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால், புகார் அளிக்கும், போலீஸ் இணையதள பகுதியில், மக்கள் எளிதாக அறியும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், அசல் ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்தால், போலீசில் புகார் அளித்து, தடையின்மை சான்று பெற வேண்டிய நிலை இருந்தது. அதேபோல், விபத்து ஆவணங்கள் பெறுவதிலும் சிக்கல் நீடித்தது. இதை, மாநில குற்ற ஆவண காப்பகம், தற்போது எளிமைப்படுத்தி உள்ளது. அதற்காக, போலீஸ் இணையதளத்தில், 'ஆன் -லைன் சர்வீசஸ்' என்ற பகுதியில், பொதுமக்கள் புகார் அளிக்க, 'லாஸ்ட் டாக்குமென்ட் ரிப்போர்ட்' மற்றும் விபத்து ஆவணங்கள் பெற, 'டவுன்லோடு ரோடு ஆக்சிடென்ட்' என்ற பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகள், தற்போது முதல் வரிசைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், 'நியூ' என, சிறப்பு நிறத்திலும், அந்த பகுதி கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

'நீட்' போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை

பதிவு செய்த நாள்
08செப்
2017
21:55

'நீட்' தேர்வு போராட்டத்தை கட்டுப்படுத்த, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்டு, சில அமைப்புகள், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில், ஆங்காங்கே போராட்டம் நடக்கிறது. சென்னையில் மாணவர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், புதுக் கல்லுாரி மற்றும் அம்பேத்கர் சட்டக் கல்லுாரிக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், தேவைப்படும் இடங்களில் விடுமுறை அறிவிக்கலாம் என, உயர்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து, மண்டல கல்லுாரி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, கல்லுாரிமுதல்வர்களே முடிவு எடுக்கலாம் என, அறிவுறுத் தப்பட்டு உள்ளது. பள்ளிகளில், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் தடுக்க, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ல்லுாரி ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாணவர்களின் போராட்டமும் சேர்ந்ததால், கல்வித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது. வரும் திங்களன்று, மீண்டும், பள்ளி, கல்லுாரி கள் இயங்கும் சூழலை ஏற்படுத்த, தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
பல் மருத்துவம் படிக்க ஆசை : தடுக்கிறது ஏழ்மை நிலை

பதிவு செய்த நாள்
செப் 08,2017 21:42




சென்னை: 'நீட்' தேர்வின் பலனாக பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், ஏழ்மையால், சென்னை மாணவி கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், சுரேஷ் மகள் ரீனா. பிளஸ் 2 தேர்வில், 983 மதிப்பெண் பெற்றார். 'நீட்' தேர்வில் பங்கேற்ற இவர், தேர்ச்சி பெற்று, 121வது இடம் பெற்றார்.
அரசு நடத்திய கவுன்சிலிங்கில், திருவள்ளூரில் உள்ள, பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லுாரியில், பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

கல்லுாரி கட்டணமாக, 4.25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். குடும்ப ஏழ்மையால், கட்டணம் செலுத்த வழியின்றி, மாணவி திணறி வருகிறார். இதனால், அவரின் மருத்துவ கனவு, கனவாக முடிந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாணவி ரீனா கூறியதாவது:

என் தந்தை, அரசு அலுவலக உதவியாளராக உள்ளார். அவர் வாங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்தவோ, மூன்று குழந்தைகளை படிக்க வைக்கவோ போதுமானதாக இல்லை. பிளஸ் 2வில், குறைந்த மதிப்பெண் பெற்றாலும், 'நீட்' தேர்வால், பி.டி.எஸ்., படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றாலே, அதை, கட்டுவது பெரிய விஷயம். இப்போது, 4.25 லட்சம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்.

ஏழ்மையால், கல்லுாரியில் சேர முடிய வில்லை. சேவை மனம் உள்ள யாராவது, உதவிக்கரம் நீட்ட முன் வந்தால், நான் மருத்துவத் துறையில் சாதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், 98841 14742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பி.டி.எஸ்., வகுப்புகள், 11ல் துவக்கம் : 'ராகிங்'கில் ஈடுபட்டால் நடவடிக்கை

பதிவு செய்த நாள்08செப்
2017
21:34

சென்னை: ''தமிழகத்தில், பி.டி.எஸ்., வகுப்புகள் வரும், 11ம் தேதி துவங்கும்,'' என, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறினார்.

தமிழகத்தில், நீண்ட இழுப்பறிக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பியதால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பி உள்ளன. ஆனால், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில், 494 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
இவற்றை, அந்தந்த மருத்துவ கல்லுாரிகளே நிரப்பிக்கொள்ள, மருத்துவ கல்வி இயக்ககம் அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.டி.எஸ்., வகுப்பு கள், வரும், 11ம் தேதி துவங்கும். மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களிடம், மூத்த மாணவர்கள், 'ராகிங்' போன்ற செயல்களில் ஈடுபட்டால், இடைநீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னை வராமல் இருக்க, விடுதிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு என, தனி வளாகங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வளாகத்திற்கு, சீனியர் மாணவர்கள் செல்வதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
'ஆதார்' மையம் அமைக்காத வங்கிகளுக்கு வருது சிக்கல்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:37

'இம்மாத இறுதிக்குள், அரசு மற்றும் தனியார் வங்கிகளில், 'ஆதார்' பதிவு மையங்கள் அமைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்குடன், ஆதார் எண்ணை, இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கு ரத்து செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

உத்தரவு : இது தவிர, புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவோரும், ஆதார் எண் தருவது கட்டாயமாகி உள்ளது. எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளமானோர், ஆதார் எண்களை, வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். அதனால், ஆதார் அட்டையை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம், 'வங்கிகளில், ஆதார் பதிவு மையங்களை, ஆகஸ்டுக்குள் அமைக்க வேண்டும்' என, ஜூலையில் உத்தரவிட்டது. 

ஆனால், பெரும்பாலான வங்கிகள், மையங்களை அமைக்கவில்லை.

அபராதம் : 'ஆதார் பதிவு செய்யும் கருவிகள் கொள்முதல், முகவர்கள் தேர்வு போன்ற பணிகள் முடியாததால், கெடுவை நீட்டிக்க வேண்டும்' என, தனியார் மற்றும் அரசு வங்கிகள் கோரின. அதை தொடர்ந்து, செப்., 30 வரை, கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இந்த காலக்கெடுவுக்குள், 10 சதவீத கிளைகளில், ஆதார் பதிவு மையங்களை, வங்கிகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு கிளைக்கு, ஒரு மாதத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான வங்கிகள், ஆதார் மைய பணிகளை துவங்கவே இல்லை; அதனால், அவற்றுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
விரைவில், '4ஜி' சேவை : பி.எஸ்.என்.எல்., ஏற்பாடு
பதிவு செய்த நாள்08செப்
2017
20:35

சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், அதிகவேக இன்டர்நெட் இணைப்புக்காக, '4ஜி' சேவையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கஉள்ளது; இதற்காக, 200 தொலை தொடர்பு கோபுரங்களை நிறுவ உள்ளது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் பெரும்பாலானவை, '௪ஜி' சேவை தருகின்றன. பி.எஸ்.என்.எல்., மட்டும், மிகவும் கால தாமதமாக தற்போது, '௪ஜி'க்கு மாற முடிவு செய்துள்ளது. முதலில், மூன்று மாவட்டங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலை தொடர்பு வட்டார, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர், கலாவதி கூறியதாவது:

எங்கள் வாடிக்கையாளர்களில், 80 சதவீதம் பேர், '4ஜி' வசதி இல்லாத, சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். 20 சதவீதம் பேர் தான், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். அதனால் தான், 2ஜி, 3ஜி, 'டவர்'களுக்கு, பி.எஸ்.என்.எல்., தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறது.
எனினும், தனியார் போட்டியை சமாளிப்பதற்காகவும், இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் நலன் கருதியும், '4ஜி' சேவையைத் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 200 டவர்களை கொள்முதல் செய்ய, 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டு விட்டது; அக்டோபரில் கொள்முதல் நிறைவடைந்து, நிறுவும் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் இன்று இயங்கும்
பதிவு செய்த நாள்08செப்
2017
20:34

சென்னை: 'அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள், இன்று இயங்கும்' என, அரசு அறிவித்துள்ளது. 'வாகன ஓட்டிகள் கட்டாயம், 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும்' என, தமிழக அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஏராளமானோர், 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாமல் உள்ளனர். பலர், லைசென்சை தொலைத்து விட்டு, நகல் மட்டுமே வைத்துள்ளனர். இது போன்றோர், லைசென்ஸ் பெற, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர்; இதனால் அங்கு, கூட்டம் நிரம்பி வழிகிறது.

அவர்கள் பயன்பெறும் வகையில், விடுமுறை நாளான இன்று, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் இயங்கும் என, அரசு அறிவித்து உள்ளது. 

டிரைவிங் லைசென்ஸ் புதிதாக பெறுதல், புதுப்பித்தல், நகல் லைசென்ஸ் வழங்குதல் போன்ற பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



விமானத்தில் ரகளை செய்தால் இரண்டு ஆண்டு பறக்க முடியாது!
பதிவு செய்த நாள்  08செப்
2017
20:42

புதுடில்லி: விமானம் மற்றும் விமான நிலையத்தில், ரகளை செய்வது உள்ளிட்ட குற்றங்களை செய்வோர் மீது, வழக்கமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட விதிகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய வழிமுறை : மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் கூட்டணி கட்சியான சிவசேனா, எம்.பி., ரவீந்திர கெய்க்வாட் மற்றும் மற்றொரு கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், எம்.பி., திவாகர் ரெட்டி ஆகியோர், விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதில், ரவீந்திர கெய்க்வாட்டுக்கு, விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது. பார்லிமென்டில் அவர் மன்னிப்பு கேட்டதால், அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

ரகளையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்தது. ரகளையில் ஈடுபடுவோரை, விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கும் வரைவு சட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் மற்றும் தொடர்புடையோர் தெரிவித்த கருத்து அடிப்படையில், புதிய வழிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான, அசோக் கஜபதி ராஜு கூறியதாவது: விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் ரகளையில் ஈடுபடுவோர் மீது வழக்கமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதைத் தவிர, அவர்கள், விமானங்களில் பறப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

குற்றங்கள் மூன்று வகை : விமானங்கள், விமான நிலையங்களை சேதப்படுத்துவதை தடுக்கவும், பயணியர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த புதிய சட்ட வழிமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. குற்றங்கள், மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் நிலை - உடல் ரீதியில் மோசமான செய்கைகள் செய்வது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, அதிக போதையில் இருப்பது போன்ற குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்.

இரண்டாவது நிலை - தள்ளுவது, உதைப்பது, அடிப்பது, தவறான முறையில் தொடுவது போன்ற உடல் ரீதியான குற்றங்களுக்கு ஆறு மாதங்கள் வரை தடை விதிக்கப்படும்

மூன்றாவது நிலை - உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்துவது, விமானம் மற்றும் விமான நிலையத்தில் சேதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும்.

இந்தக் குற்றம் செய்யப்பட்டது தொடர்பான புகாரை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலையிலான குழு விசாரித்து, 30 நாட்களுக்குள் முடிவை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இயங்காத ஆட்சி: இணையமே சாட்சி! 30 மாதங்களாக முடங்கியுள்ள கலெக்டர் முகநூல்
பதிவு செய்த நாள்
செப் 09,2017 03:49



ஒரு மாதம், இரு மாதங்களில்லை; முப்பது மாதங்களாக, கோவை மாவட்ட நிர்வாகம், முடங்கிக் கிடப்பதை ஊருக்கு மட்டுமின்றி, உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, மாவட்ட கலெக்டரின் முகநுால்.
புகார் எழுதி, வரிசையில் நின்று, டோக்கன் போட்டு, கலெக்டரைப் பார்த்து, மனு கொடுக்கும் நடைமுறைகள், மலையேறி வருகின்றன. மக்களுக்கு இதில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கவே, அரசின் துறைகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முகநுால் பக்கங்கள், தனித்தனி முகவரி கொடுத்து, அரசால் தொடங்கப்பட்டுள்ளன.வெறும் 513 பேர் மட்டுமே!
வெள்ளம், புயல் போன்ற அவசர காலங்களிலும், தேர்தல் போன்ற முக்கிய நேரத்திலும் அரசு நிர்வாகங்கள் இலவச தொலைபேசி எண்களை (டோல் ப்ரீ) அறிவித்து தொடர்பு கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களே எல்லா நாளிலும், எல்லா நேரத்திலும் அந்த வேலையை எளிதாக்கி இருக்கின்றன.

அரசுத்துறைகளுக்கு முகநுால் கணக்கு தொடங்கிய பின்னர், பொதுமக்கள் பலரும் தங்களது பகுதி பிரச்னைகள், அரசு நிர்வாகம் தலையிடவேண்டிய விஷயங்களை முகநுாலில் பதிவிடும் பழக்கம் பெருகி வருகிறது. அதற்கு உடனுக்குடன், தீர்வும் காணப்படுகிறது. இந்த விஷயத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகமே, மிகச்சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது.
கடந்த மார்ச் 6ம் தேதியன்று, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பகுதி மக்கள் டாஸ்மாக் கடை பிரச்னையை, கோவை துணை கலெக்டர் முகநுால் பக்கத்தில் 'டேக்' செய்துள்ளது, மக்களின் அணுகுமுறைக்கான உதாரணம். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தனது முகநுால் பக்கத்தில் அரசு நிகழ்ச்சிகளை தவறாது பதிவிட்டு வருகிறார்.பொதுமக்களும் அவரது பக்கத்தில் தெருவிளக்கு பிரச்னை முதல் பல்வேறு புகார்களை அந்த முகநுாலில் பதிவிடுகின்றனர். நேற்றைய நிலவரப்படி, மதுரை கலெக்டரின் முகநுால் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை, 30 ஆயிரத்து 124 ஆகும். கோவை கலெக்டரின் முகநுால் பக்கத்தை பின் தொடர்பவர் எண்ணிக்கை, வெறும் 513 மட்டுமே.
இதற்குக் காரணம், அவரது பெயரிலான முகநுால், 30 மாதங்களாக முடங்கிக் கிடப்பது தான். கடந்த 2015, ஜனவரி 28 அன்று மாலை 5:08 மணிக்கு, அன்றைய கலெக்டராக இருந்த அர்ச்சனா பட்நாயக், குடியரசு தினத்தில் கொடியேற்றிய நிகழ்ச்சிக்கான படங்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியின் படங்களைப் பதிவேற்றியதே 'கோயம்புத்துார் மாவட்ட முகநுால் பிரிவு' பக்கத்தில் கடைசியாகும்.

'அட... அப்படியா!'

இதேபோல், கலெக்டரின் 'வாட்ஸ் ஆப்'பில் புகார் தெரிவித்தாலும் கூட, எந்த நடவடிக்கையும் இருப்பதில்லை என்பதே கோவை நகரிலுள்ள சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.இதற்கு சாட்சியாக, அவர்கள் பதிவிட்ட பல்வேறு விஷயங்களையும்கலக்கும் கமிஷனர்!
தமிழகத்தின் 'ஹைடெக்' நகரம் என்று பெயர் பெற்ற மாநகரம், கோவை. சமூக வலைதளங்களில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், கோவை மக்களின் பங்களிப்பு அபரிமிதமாகவுள்ளது. இதற்கேற்ப கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாகத்தை வழி நடத்த, 25 'வாட்ஸ் ஆப்' குழுக்களை (அட்மின்) ஏற்படுத்தி, உடனுக்குடன் பல விஷயங்களுக்கு தீர்வு கண்டு வருகிறார்.

இவை தவிர, நகரிலுள்ள பல்வேறு தன்னார்வ நிறுவனங்களின் குழுக்களிலும் இணைந்து, அதில் குறிப்பிடப்படும் புகார்களுக்கு கூடுமான வரை உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்கிறார்.-நமது நிருபர்-

'நீட்' தேர்வுக்கு எதிராக, அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களை உடனே நிறுத்தச் சொல்லி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017,23:27 IST



'சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து, 'உள்ளே' தள்ள வேண்டும்' என்றும், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த குழப்பங்களுக்கு, முடிவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்கு பின் நடத்தப்பட்டது; 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு கூட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில், போதுமான அளவு மதிப்பெண் எடுக்காத, அரியலுாரைச் சேர்ந்த, அனிதா என்ற மாணவி, அத்தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்; மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என்று, தற்கொலை செய்தார்.இதனால், தமிழகம் முழுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில், சில நாட்களாக

போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர், ஜி.எஸ். மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

நீட் எதிர்ப்பு போராட்டங்களால், தமிழகத்தில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் என்று,அரசியல் கட்சிகள்,மாணவர்கள், சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவாக, தி.மு.க., போராட்டங்கள் நடத்தியபோது, அதை நிறுத்தும்படி, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்ததை, அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தால், உறுதி செய்யப்பட்டுள்ள, நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்பது, நீதிமன்ற அவமதிப்பாகும். தற்போது தமிழகத்தில், அசாதாரணசூழ்நிலை உள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசு திணறுகிறது.

அரசியல் காரணங்களுக்காக, இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தை கொண்டு வரும்படி மாநில அரசை வலியுறுத்தாமல், போராட்டத்தில் ஈடுபடும்படி, மாணவர்களை, சில
அரசியல் கட்சிகள் துாண்டி விடுகின்றன.

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும், இந்த அரசியல் கட்சிகள்
நடத்தும்போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, போராட்டங்கள் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது; அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

நீதிபதிகள் கண்டனம்

இடைக்கால உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

நீட் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு உறுதி செய்துள்ளது.அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்த, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. போராட்டங்கள் நடப்பதால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழக அரசின், தலைமை செயலர், உள்துறை முதன்மை செயலரின் கடமை.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறை யில் அடையுங்கள். 18ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும். அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நேரில் ஆஜராகி, எங்களுக்கு உதவ வேண்டும்.இந்த உத்தரவு களை செயல்படுத்தும்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் உள்துறை முதன்மை செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

- நமது நிருபர் -

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...