Monday, April 24, 2017

பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா?'

பதிவு செய்த நாள்23ஏப்
2017
23:16

புதுடில்லி: 'காதலிக்கும்படி எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த நாட்டில், பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

காதலிக்க கட்டாயப்படுத்தியதால், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் தற்கொலைக்கு துாண்டியதற்காக, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தவன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளான்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாவது:
இந்த நாட்டில் பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா? காதலிக்கும்படி, யாரையும் எவரும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. காதலிக்கும்படி, சிறுமியர், மாணவியர் துன்புறுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. தான் யாரை காதலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது.இவ்வாறு கேள்வி எழுப்பிய அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...