Monday, April 24, 2017

தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ் :  தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு
புதுடில்லி: டில்லியில், தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது.



விவசாய கடன் தள்ளுபடி, விளை பொருட் களுக்கு உரிய விலை, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

எலிகறி சாப்பிடுவது உள்ளிட்ட வித்தியாசமான போராட்டங்களை அவர்கள் நடத்தினர். அவர்களை, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சந்தித்து பேசினர். டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்று அவர்களை சந்தித்துபேசினார். இதன் பின், 'போராட்டத்தை, மே 25 வரை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

முதல்வர் உறுதி :

இது குறித்து, அய்யாக்கண்ணு கூறியதாவது:

எங்களின் கோரிக்கைகளை, பிரதமரிடம் கூறுவ தாக, தமிழக முதல்வர் உறுதி அளித் தார். தமிழக அரசு சார்பில், அனைத்து உதவி களும் செய்யப்படும் என்றும், அவர் தெரிவித் தார். மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ண னும், கடன் பிரச்னை தொடர்பாக, சில வாக்குறுதி களை அளித்துள்ளார். தமிழகத்தில், எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங் களுக்கும், நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்.

வேண்டுகோள் ஏற்பு : இதனால், தமிழக அரசியல் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று,போராட்டம் ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகத் தில் நடக்கும், முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்போம்; கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை எனில், மே 25ல், மீண்டும் போராடு வோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக,கோரிக்கைகள் அடங்கிய மனுவை,முதல்வர் பழனிசாமி யிடம், விவசாயிகள் அளித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.04.2025