Saturday, April 1, 2017

ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம்! சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்



ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, சென்னையில் இன்று, முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாமல், பழைய குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அதற்குப் பதில், 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், குடும்ப அட்டையில் உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு வந்தது.

இதனிடையே, குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தற்போது நடந்துவருகிறது. பல இடங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் தயாரானது.



இந்த நிலையில், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, சென்னை கொரட்டூரில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...