Saturday, April 1, 2017

பசுவதை செய்தால் ஆயுள் தண்டனை : குஜராத் அரசு!

குஜராத்தில் இனி பசுவதை செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என, அம்மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 1954ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்ட
மசோதாவில் திருத்தம் செய்து, பசுக்களை கடத்துதல் மற்றும் வதைசெய்தல் முழுமையாக தடை செய்யப்பட்டது. அதிலிருந்து பசுவதை செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டம் குஜராத்தில் நடைமுறையில் இருந்து வந்தது.

தற்போது அதில் சில மாற்றங்களைச் செய்து புதிய சட்ட மசோதாவாக இன்று மார்ச் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை குஜராத் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவில் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும்படியும், பசு கடத்தலுக்கு பயன்படும் வாகனத்தை நிரந்தரமாக பறிமுதல் செய்யும்படியும் சட்டம் திருத்தப்பட்டு பின்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்றபெயரில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் உத்திர பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுவதும் பசுவை கொள்வதற்கும், மாட்டிறைச்சிக்கும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...