Saturday, April 22, 2017

அரசுக்கு நாட்டில் உள்ள விதவைகளைப் பற்றி கவலையில்லை - உச்ச நீதிமன்றம் சாடல்!

ர.பரத் ராஜ்




கடந்த 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் விருந்தாவனில் உள்ள விடுதிகளில் இருக்கும் விதவைகளின் நிலையைப் பற்றி விவரித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம், 'மத்திய அரசு தேசிய பெண்கள் ஆணையத்துடன் இணைந்து நாட்டில் இருக்கும் விதவைகளின் நிலையை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று கூறியது. இதையடுத்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் 'தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று உத்தரவாதம் கொடுத்தது. ஆனால், இப்போது வரை அந்தப் பணிகள் துவங்கப்படாத நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசை விமர்சித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, 'உங்களுக்கு நாட்டில் இருக்கும் விதவைகளைப் பற்றி கவலையில்லை. நீங்கள் அவர்கள் நலன் சார்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால், இதைப் பற்றி நீதிமன்றம் கருத்து கூறினால், நாங்கள் தான் அரசை நடத்துகிறோம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.' என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...