Saturday, June 10, 2017

'நீட்' நுழைவுத்தேர்வு விவகாரம் : ஐகோர்ட் சரமாரி கேள்வி

பதிவு செய்த நாள்10ஜூன்2017 00:09

சென்னை: 'வெவ்வேறு பாடத்திட்டங்களில் படிக்கும் போது, மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வு மூலம் மட்டுமே, மாணவர்களின் அறிவு திறனை கண்டுபிடிக்க முடியுமா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், தேசிய நுழைவுத் தேர்வான, 'நீட்'டில் பெற்ற மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணையும் கணக்கில் எடுக்க வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

உத்தரவு
மனுவை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' மனுதாரர் அனுப்பிய மனுவை, மூன்று வாரங்களில் பரிசீலிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, மே மாதம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், வழக்கில் முக்கிய பிரச்னை எழுப்பப்பட்டதால், மனுவை நிலுவையில் வைத்திருந்தது. இவ்வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், வி.பி.ராமன், மனுதாரரின் மனுவை பைசல் செய்து விட்டதாக, நீதிபதி
களிடம் தெரிவித்தார். 

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. 'நீட்' தேர்வு நடத்துவதில், அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், இந்த நீதிமன்றம் ஆர்வம் காட்டுகிறது.

கஷ்டம்
தேசிய அளவில், ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்துவது, முறையானதாக இருந்தாலும், வெவ்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள், பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். 

பிளஸ் 2 பாடத் திட்டங்கள், ஒரே மாதிரியாக இல்லை. மாநில பாடத் திட்
டம், மத்திய பாடத் திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டம் என, வெவ்வேறு முறைகள் உள்ளன.

தமிழகத்தில், 268 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 4,675 அறிவியல் பிரிவு மாணவர்கள்; 6,877 மாநில பள்ளிகளில், 4.20 லட்சம் அறிவியல் பிரிவு மாணவர்கள், 2016 - 17ம் ஆண்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். 

l வெவ்வேறு பாட திட்டங்களில் மாணவர்கள் படிக்கும் போது, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் ஒரே தேர்வான, 'நீட்' மூலம், மாணவர்களின் அறிவுத்திறன், தகுதியை கண்டுபிடிக்க முடியுமா?

l சி.பி.எஸ்.இ.,யால் கேள்விகள் தொகுக்கப்படும் போது, அதே சி.பி.எஸ்.இ., முறையில் பயின்ற மாணவர்களுக்கு எளிதாகவும், மற்ற
மாணவர்களுக்கு கடினமாகவும் இருக்காதா?

l மொத்த மாணவர்களில், ௫ முதல், 10 சதவீதம் வரை உள்ள சி.பி.எஸ்.இ., மாணவர்கள், அதிக இடங்களை கைப்பற்றும் வகையில், இது இருக்காதா?
l வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும், சம வாய்ப்பு வழங்குவது தேவையில்லையா?

l 'நீட்' தேர்வுக்கு மட்டும் கவனம் செலுத்தும் வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கு, அதிக கவனம் செலுத்தாமல், தவிர்ப்பது சரியாக இருக்குமா?

l ஒரே தேர்வு என்ற அடிப்படையில் முடிவு செய்வதை விட, பிளஸ் 2
மதிப்பெண், 'நீட்' மதிப்பெண்களை சம அளவில் சேர்த்து வழங்கி, மாணவர்களின் தகுதியை, திறனை மதிப்பிடுவது சரியாக இருக்காதா?

l பிளஸ் 2 தேர்வோடு, 'நீட்' தேர்வையும் தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லையா; அதனால், 'நீட்' தேர்வுக்கு தயாராக, கூடுதல் நேரம் ஒதுக்குவதையும், அதன்மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் தவிர்க்கலாம் அல்லவா?

l இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் இந்தியா முழுவதும், ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை, ஏன் கொண்டு வரக் கூடாது?

l 'நீட்' தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில், பாடத்திட்டங்களை மாற்றியமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கல்வியின் தரத்தை நீர்த்து போக செய்வதில், மாநில அரசுக்கு பொறுப்பில்லையா?

l 'நீட்' தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், அனைத்து பள்ளிகளிலும், நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை, ஏன் நியமிக்கக் கூடாது?

இந்த கேள்விகள் அனைத்துக்கும், வரும், 27க்குள் பதிலளிக்க வேண்டும். மருத்
துவ மாணவர்கள் சேர்க்கையில், அகில இந்திய அளவில் விளைவுகள் ஏற்படும் என்பதால், இந்த வழக்கை, தலைமை நீதிபதிக்கு 
பரிந்துரைக்கிறோம்.

இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...