Saturday, June 10, 2017

கான்பூர், அலகாபாத் ரயில் நிலையங்கள் தனியாருக்கு ஏலம்!

பதிவு செய்த நாள்10ஜூன்2017 06:15




புதுடில்லி: ரயில் நிலையங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. அதன்படி, கான்பூர் ரயில் நிலையத்துக்கு ரூ.200 கோடியும், அலகாபாத் ரயில் நிலையத்துக்கு ரூ.150 கோடியும் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவீனமயம்:

ரயில் நிலையங்களை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, பெங்களூரு, புனே, தானே, மும்பை, விசாகப்பட்டினம், ஹவுரா, அலகாபாத் உள்ளிட்ட நாட்டின் 25 முக்கிய ரயில் நிலையங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட முடிவுவெடுத்துள்ளது. இந்த ரயில் நிலையங்களை ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஏலம் விட முடிவு செய்துள்ளது.

ஏலம்:

இந்நிலையில், தற்போது கான்பூர் மற்றும் அலகாபாத் ரயில் நிலையங்களுக்கான அடிப்படை தொகையை நிர்ணயித்துள்ளது. கான்பூர் ரயில் நிலையத்துக்கு ரூ.200 கோடியும், அலகாபாத் ரயில் நிலையத்துக்கு ரூ.150 கோடியும் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கான ஏலம் ஜூன் 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறும். ஜூன் 30ல் ஏலத்தின் முடிவு அறிவிக்கப்டவுள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...