Wednesday, June 14, 2017

இன்று முதல் மீன் பிடிக்கலாம்!
பதிவு செய்த நாள்13ஜூன்2017 22:33

சென்னை: தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வங்க கடல் பகுதியில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால், இன்று மீனவர்கள் உற்சாகத்துடன், மீன்பிடி தொழிலை துவக்குகின்றனர். மீன்களின் இன விருத்தியை கருத்தில் கொண்டு, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட, கிழக்கு கடலோர பகுதியான வங்கக்கடலில், ஆண்டுதோறும், 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இதன்படி, இந்த ஆண்டு தடைக்காலம், ஏப்., 14ல் துவங்கியது; மே, 29ல் முடிவதாக இருந்தது. இந்த தடைக்காலத்தை, மத்திய அரசு, 61 நாட்களாக நீடித்தது. இதன்படி, தடைக்காலம் நேற்று முடிவுக்கு வந்தது. இதனால், மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025