Saturday, June 10, 2017

திருப்பதியில் 15 மணிநேரம் காத்திருந்து தரிசனம்: பக்தர்கள் அலைமோதல்
2017-06-09@ 21:40:47



திருமலை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். இன்று காலையில் இருந்தே பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 73,797 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 45,299 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

இலவச தரிசனத்தில் 31 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் வந்த பக்தர்கள் 21 அறையில் நிரம்பி 12 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். நாளையும் (சனி) நாளை மறுதினமும் (ஞாயிறு) விடுமுறை நாள் என்பதால் மேலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...