Monday, June 19, 2017

நடுவானில் குழந்தை பிறப்பு : விமானம் தரையிறக்கம்

பதிவு செய்த நாள்18ஜூன்
2017
21:45




புதுடில்லி: நடுவானில் பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு விமானம் ஓன்று புறப்பட்டது. விமானத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் பயணமானார். விமானம் அரபிக் கடலின் மேல் பறந்து கொண்டிருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதனையடுத்து பெண்ணிற்கு விமான சிப்பந்திகள் உதவி செய்தனர். தொடர்ந்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டு பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமானம் 90 நிமிடம் காலதாமதமாக கொச்சி சென்றடைந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025