Monday, June 19, 2017

தந்தையர் தின கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் உருக்கம்

பதிவு செய்த நாள்19ஜூன்
2017
01:00


தந்தையர் தின கொண்டாட்டத்தை ஒட்டி, சமூக வலைதளங்களில் உருக்கமான கருத்துக்களை பலரும் வெளியிட்டனர். தமிழகத்தில், சமூக வலைதளங்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. மொபைல் போன் மூலம் அவற்றை பலரும் பயன்படுத்துகின்றனர். தங்களின் புகைப்படங்கள், கருத்துக்கள் போன்றவற்றை உடனுக்குடன் அவர்கள் பதிவு செய்கின்றனர்.உலக தந்தையர் தினம், நேற்று கொண்டாடப்பட்டது. இதன் தாக்கம், சமூக வலைதளங்களில், நேற்று அதிகரித்தது.

 பலரும், தங்களது தந்தையின் பழைய படங்கள், குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட படங்கள், பணி புரிந்த போது பயன்படுத்திய அடையாள அட்டை உள்ளிட்டவற்றை துாசு தட்டி எடுத்து பதிவேற்றம் செய்தனர். இது மட்டுமின்றி, தங்கள் தந்தை குறித்த சுவாரசியமான மற்றும் உருக்கமான கருத்துக்களையும் வெளியிட்டனர். பிரபலங்களில் துவங்கி சாமானியர்கள் வரை பலரும், படங்கள் மற்றும் கருத்துக்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டினர். இது மட்டுமின்றி தந்தைக்கு வாழ்த்து கூறுவது, பரிசளிப்பது, கேக் வெட்டுவது போன்ற படங்களையும் பலர் வெளியிட்டனர். தங்கள் தந்தை இல்லாத சோகத்தை, பலரும் வெளியிட்டனர்.இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில், தந்தை மீதான பாசத்தை அதிகரிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் பதிவிடப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025