Wednesday, June 14, 2017

அடுத்த மாப்பிளை நாங்க... பொண்ணு இருந்தா தாங்க!

பதிவு செய்த நாள்14ஜூன்2017 00:42

'அடுத்த மாப்பிளை நாங்க; பொண்ணு இருந்தா தாங்க' இப்படி ஒரு வாசகத்தை பார்த்தா என்ன நினைக்க தோணும். எதோ ஒன்றை வித்தியாகமாக சொல்ல இவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று மட்டும் தெரியும்.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர். ஆண்டுக்கும் அது சொந்த, பந்தங்கள் மனதில் நிலைத்திருக்க ஒவ்வொரு விசயத்தையும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. திருமண வைபவத்தில் முக்கிய இடம் அழைப்பிதழுக்கு உண்டு.

'எங்க ஒன்னு விட்ட சித்தாப்பா பெயர் கட்டாயம் இருக்கனும்,' இது அம்மா. 'எங்க மாமா எனக்கு பல உதவி செஞ்ருக்காரு, அவரு பெயர் கட்டாயம் சேர்க்கனும்,' இது அப்பா.

'யாரு பேர போடுவிங்கலோ, இல்லையோ என் வீட்டு சொந்தக்காரங்க பேரை மறந்துராதீங்க அப்பறம் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,' இது அவசரமாக ஆஜரான சகோதரி. இப்படி ஒவ்வொரு உறவுகளின் அன்பு எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் கலவையாக அழைப்பிதழ் அமைகிறது.



பார்த்து, பார்த்து அழைப்பிதழ் தயார் செய்த காலம் மாறிப்போய் அனைத்தும் ரெடிமேட் யுகமாக மாறிவிட்டது. மேலும், நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்றைய காலத்தில் டிஜிட்டல் அழைப்பிதழ்கள் பலரின் கருத்தையும் கவர்ந்து வருகின்றன. எதையும் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் இருக்கும் வரை இந்த உலகத்தில் மாற்றத்துக்கு குறைவிருக்காது. அப்படி ஒரு புதுமையை தான் திருமண அழைப்பிதழில் புகுத்தியுள்ளனர்.
'வாட்ஸ்ஆப்' இன்று உலகங்களின் எல்லைகளை சுருக்கி விட்டதே என்ற சொல்ல வேண்டும். ஆம் அழைப்பிதழ்களும் அதற்கு தப்ப வில்லை. திருமண வரவேற்புக்கு இப்படி ஒரு அழைப்பிதழை தயார் செய்துள்ளனர் குணா, பிரியா ஜோடியின் நண்பர்கள். இந்த அழைப்பிதழில் நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் இறுதியில் தங்களது திருமண கனவுக்கு அச்சாரம் போட்டுள்ளனர் அடுத்த மாப்பிளை நாங்க; பொண்ணு இருந்தா தாங்க என்ற வாசகங்கள் வழியாக இளைஞர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025