Saturday, June 2, 2018

'பிச்சை புகினும் கற்கை நன்றே' மகள் கல்விக்கு கையேந்திய தந்தை

Added : ஜூன் 02, 2018 03:47


விருத்தாசலம்:மகளின் பொறியியல் படிப்புக்கு உதவி கேட்டு, விருத்தாசலத்தில் தந்தை பிச்சை எடுத்த சம்பவம், காண்போரை நெகிழச் செய்தது.

கடலுார் மாவட்டம்,விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் பாரதிரங்கன், 55.இவருக்கு, 25- ---23வயதில் இரு மகன்கள்,ஜெயபாரதி, 20, என்ற மகள் உள்ளனர்.மகன்கள் இருவரும்,வறுமை காரணமாக,கல்லுாரி படிப்பை பாதியில்நிறுத்திவிட்டனர்.
ஜெயபாரதி, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில்,'இன்பர்மேஷன் டெக்னாலஜி'இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது படிப்பும், பணமின்றி நின்று விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் காலை, 10:30 மணியளவில் விருத்தாசலம், எம்.ஜி.ஆர்., சிலை எதிரில், பாரதிரங்கன் மகளின் படிப்புக்கு உதவி கேட்டு, பதாகைகளை ஏந்தி, நோட்டீஸ் வினியோகம் செய்து, பிச்சை எடுத்தார். இது, காண்போரை நெகிழச் செய்தது.

கல்விக்காக உதவும் உள்ளங்கள், பாரதி ரங்கனின், 75983 97240 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...