Tuesday, June 5, 2018

'ஈரோடு' எழுத்து மாற்றம் : அரசுக்கு பரிந்துரை

Added : ஜூன் 05, 2018 01:20


ஈரோடு: ஈரோடு பெயரில், விரைவில் எழுத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. விரைவில் அரசாணை வெளியாகும் எனத் தெரிகிறது.தமிழில், ஈரோடு என்பதை, ஆங்கிலத்தில், 'erode' என, எழுதப்படுகிறது. தமிழ் உச்சரிப்புக்கு தகுந்தாற்போல், ஆங்கில உச்சரிப்பு இல்லை. ஆங்கில வார்த்தையில் கடைசியில் உள்ள, 'இ' என்ற எழுத்துக்கு பதிலாக, 'டு' என்ற எழுத்தை கடைசியில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழில் உச்சரிப்பது போன்று ஆங்கிலத்திலும், சரியான உச்சரிப்பு அமையும்.எனவே, ஆங்கிலத்தில் ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றியமைக்க, கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை கடிதம், ஈரோடு கலெக்டர் பிரபாகர் மூலம், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில், 'erodu' என ஆங்கிலத்தில் உச்சரிக்கும் வகையில், அரசிடம் இருந்து அறிவிப்பு வெளிவரும். அதன் பின், அரசிதழில் அரசாணையாக வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது என, வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Employer Can't Alter Recorded D.O.B. Of Government Employee Beyond Prescribed 5-Year Period From Date Of Initial Appointment : Calcutta HC

Employer Can't Alter Recorded D.O.B. Of Government Employee Beyond  Prescribed 5-Year Period From Date Of Initial Appointment : Calcutta...