Saturday, June 9, 2018


இதே நாளில் அன்று

Added : ஜூன் 08, 2018 22:57



ஜூன் 9, 1949

கிரண் பேடி: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில், பிரகாஷ்லால் - பிரேம் லதா தம்பதிக்கு மகளாக, 1949, ஜூன், 9ல் பிறந்தார். முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான இவர், 1971ல் நடந்த, ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றார். 1972ல், நாட்டிலேயே முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரியானார். டில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். கடந்த, 1993ல், டில்லி சிறைச்சாலைகளுக்கு, பொது ஆய்வாளராக இருந்தபோது, திஹார் சிறைகளில், இவர் ஆற்றிய சீர்திருத்தங்கள், பலரின் பாராட்டை பெற்றது. 2007ல், காவல் துறையில் இருந்து, விருப்பப்பணி ஓய்வு பெற்றார். 2015ல், பா.ஜ.,வில் இணைந்தார். டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். தீவிர அரசியலில் இருந்து விலகிய அவர், 2016, மே 29ல், புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுனராக பொறுப்பேற்றார். அவர் பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...