திருப்பதி டூரில் அதிருப்தி: சுற்றுலா துறை கவனம் செலுத்துமா?
Added : ஜூன் 18, 2018 05:09
திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவில், உணவு பிரச்னை, லட்டு முறைகேடு போன்றவற்றால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக சுற்றுலாத்துறை, திருப்பதி ஆன்மிக சுற்றுலாவை செயல்படுத்தி வருகிறது. இதற்கான பஸ், சென்னை-யில் இருந்து, தினமும் காலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு திரும்புகிறது. குளுகுளு பஸ்களில் பெரியவர்களுக்கு, 1,475 ரூபாய்; சிறார்களுக்கு, 1,175 ரூபாய்; வால்வோ பஸ்களில் பெரிய-வர்களுக்கு, 1,675 ரூபாய்; சிறார்களுக்கு, 1,375 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருமலை திருப்பதி, திருச்சானுார் தரிசனத்திற்கான சுற்றுலாவில், திருமலையில், 300 ரூபாய் தரிசனம், காலை, மதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது.தினமும் மூன்று பஸ்களும், புரட்டாசி மாதத்தில், ஐந்து பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த திருப்-பதி சுற்றுலாவுக்கு, முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள், முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் நடப்பதால், அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, திருப்பதி சுற்றுலா சென்ற பக்தர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பதி ஆன்மிக சுற்றுலாவில், காலை திருத்தணியிலும், மதியம் திருப்பதியிலும் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சுற்றுலாத்துறை சார்பில், ஒருவருக்கு, 340 ரூபாய் லவழிக்கப்படுகிறது.அதற்கேற்ப, உணவு தரமாகவோ, சுவையாகவோ இல்லை. சுற்றுலாத்துறை பஸ்சில், தினமும், 100 பேர் திருப்-பதி செல்கின்றனர்.
எனவே, திருத்தணி, திருப்பதியில் கழிப் பறை, ஓய்வறையுடன் கூடிய சொந்த கட்டடம் அமைத்து, பயணி-யருக்கு தேவையான உணவை, சுற்றுலாத்துறையே தயாரித்து வழங்கலாம்.மேலும், திருப்பதியில், 300 ரூபாய் டிக்கெட்டிற்கு, 100 ரூபாய் கொடுத்து, கூடுதலாக இரண்டு லட்டுக்கள் பெற-லாம். ஆனால், 'கெய்டு' என்ற பெயரில் வருபவர்கள், ஒரு லட்டுக்கு, 80 ரூபாய் வசூலிக்கின்றனர். மேலும், இலவசமாக வழங்கும் இரண்டு லட்டுக்களில், ஒன்றரை லட்டுக்களே இருக்கின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, பக்தர்களே நேரடியாக லட்டு பெற வசதி செய்ய வேண்டும். திருச்சானுாரில் ஏற்-படும் காலதாமதம் தவிர்க்க, 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, தரிசனம் செய்யும்படி வலியுறுத்துகின்றனர். இத்தொகையை, சுற்றுலாத்துறை ஏற்க வேண்டும். இதுபோன்ற குறைபாடுகளை களைந்தால், திருப்பதி செல்-லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இது குறித்து, சுற்றுலாத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
Added : ஜூன் 18, 2018 05:09
திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவில், உணவு பிரச்னை, லட்டு முறைகேடு போன்றவற்றால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக சுற்றுலாத்துறை, திருப்பதி ஆன்மிக சுற்றுலாவை செயல்படுத்தி வருகிறது. இதற்கான பஸ், சென்னை-யில் இருந்து, தினமும் காலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு திரும்புகிறது. குளுகுளு பஸ்களில் பெரியவர்களுக்கு, 1,475 ரூபாய்; சிறார்களுக்கு, 1,175 ரூபாய்; வால்வோ பஸ்களில் பெரிய-வர்களுக்கு, 1,675 ரூபாய்; சிறார்களுக்கு, 1,375 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருமலை திருப்பதி, திருச்சானுார் தரிசனத்திற்கான சுற்றுலாவில், திருமலையில், 300 ரூபாய் தரிசனம், காலை, மதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது.தினமும் மூன்று பஸ்களும், புரட்டாசி மாதத்தில், ஐந்து பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த திருப்-பதி சுற்றுலாவுக்கு, முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள், முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் நடப்பதால், அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, திருப்பதி சுற்றுலா சென்ற பக்தர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பதி ஆன்மிக சுற்றுலாவில், காலை திருத்தணியிலும், மதியம் திருப்பதியிலும் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சுற்றுலாத்துறை சார்பில், ஒருவருக்கு, 340 ரூபாய் லவழிக்கப்படுகிறது.அதற்கேற்ப, உணவு தரமாகவோ, சுவையாகவோ இல்லை. சுற்றுலாத்துறை பஸ்சில், தினமும், 100 பேர் திருப்-பதி செல்கின்றனர்.
எனவே, திருத்தணி, திருப்பதியில் கழிப் பறை, ஓய்வறையுடன் கூடிய சொந்த கட்டடம் அமைத்து, பயணி-யருக்கு தேவையான உணவை, சுற்றுலாத்துறையே தயாரித்து வழங்கலாம்.மேலும், திருப்பதியில், 300 ரூபாய் டிக்கெட்டிற்கு, 100 ரூபாய் கொடுத்து, கூடுதலாக இரண்டு லட்டுக்கள் பெற-லாம். ஆனால், 'கெய்டு' என்ற பெயரில் வருபவர்கள், ஒரு லட்டுக்கு, 80 ரூபாய் வசூலிக்கின்றனர். மேலும், இலவசமாக வழங்கும் இரண்டு லட்டுக்களில், ஒன்றரை லட்டுக்களே இருக்கின்றன.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, பக்தர்களே நேரடியாக லட்டு பெற வசதி செய்ய வேண்டும். திருச்சானுாரில் ஏற்-படும் காலதாமதம் தவிர்க்க, 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, தரிசனம் செய்யும்படி வலியுறுத்துகின்றனர். இத்தொகையை, சுற்றுலாத்துறை ஏற்க வேண்டும். இதுபோன்ற குறைபாடுகளை களைந்தால், திருப்பதி செல்-லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இது குறித்து, சுற்றுலாத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment