Saturday, June 23, 2018


நீலகிரி, ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி சுகாதாரத் துறை திட்டம்


Added : ஜூன் 22, 2018 23:17

கோவை, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், மருத்துவக் கல்லுாரிகளை அமைக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 23 அரசு மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒரு மருத்துவக் கல்லுாரியை ஏற்படுத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. சமீபத்தில், சென்னையில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இவ்விரு மாவட்டங்களின் மக்கள் தொகை, சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.01.2026