Sunday, June 24, 2018

காவியத் தாயின் இளையமகன் படைப்பதனால் என் பெயர் இறைவன்

Added : ஜூன் 24, 2018 00:12




ஐந்தாயிரம் திரைப்பட பாடல்கள், ஆறாயிரம் கவிதைகள், 232 புத்தகங்கள், தத்துவங்கள், ஆன்மிக கருத்துகள் என தமிழ் கவிதை உலகின் தலை சிறந்த கவிஞர் என்ற பெருமைக்குரியவர். பட்டி தொட்டியெல்லாம் தனது பாடல் வரிகளால், மக்களின் மனங்களை ஈர்த்தவர் கண்ணதாசன். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி கிராமத்தில், 1927 ஜூன், 24ல், கண்ணதாசன் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலம், கவிதையில் யாரும் எட்டாத உயரத்தை பிடித்தார். சிறு வயதிலேயே எழுத்தின் மீது ஆர்வமாக இருந்த இவர், பல்வேறு சிரமங்களை கடந்து, எழுத்து பயணத்தை துவக்கினார். முதலில் பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதினார். சண்ட மாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

இதில் பிரபலமடைந்த இவர், பின் பாடல்கள் எழுத தொடங்கினார். இயல்பான எளிய தமிழ்ச் சொற்களைக் கையாண்டு பாடல்களை எழுதி, பாமர மக்களையும் தன் பக்கம் ஈர்த்தார். அவர் மறையும் வரை, பாடல் எழுதுவதில் அவர் தான் சக்கரவர்த்தி. தன்னம்பிக்கை, காதல், வீரம், தத்துவம், சோகம், பக்தி என மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும், தனது பாடல்களில் எழுதினார். சில படங்களில் நடிக்கவும் செய்தார். சில படங்களை இயக்கியுள்ளார். சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.
அர்த்தமுள்ள இந்து மதம், ஏசு காவியம் போன்ற நுால்களை எழுதியுள்ளார். மறைந்து 37 ஆண்டுகள் ஆனாலும், இவரது கவிதை வரிகளுக்கும் என்றும் மரணமில்லை.

விருதுகள்

சாகித்ய அகாடமி (சேரமான் காதலி) , தேசிய விருது (குழந்தைக்காக திரைப்படம்) போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

அரசியல்

துவக்கத்தில், திராவிடர் கழகத்தில் இருந்த கண்ணதாசன், பின் கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகினார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக பதவி வகித்துள்ளார்.

முத்தான பாடல்களில் சில

* அச்சம் என்பது மடமையா...
* உலகம் பிறந்தது எனக்காக...
* சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்..
* மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?
* நினைப்பதெல்லாம் நடந்து வி்ட்டால்...
* தெய்வம் தந்த வீடு...
* அதோ அந்த பறவை...
* கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...
* நினைக்க தெரிந்த மனமே...
* பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
* நான் பேச நினைப்பதெல்லாம்...
* உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்..
* சி்ட்டுக்குருவி முத்தம் கொடுத்து...
* வீடு வரை உறவு...
* தாழையாம் பூ முடிச்சு
* மலர்ந்து மலராத...
* மனைவி அமைவதெல்லாம்...
* வாழ நினைத்தால் வாழலாம்...
* எங்கிருந்தாலும் வாழ்க...
* நிலவுக்கு என்மேல்...
* பசுமை நிறைந்த நினைவுகளே...
* பரமசிவன் கழுத்திலிருந்து....

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...