Sunday, June 24, 2018

ராஜபாளையத்தை சேர்ந்தவர் ரேபிஸ் தாக்கி பலி

Added : ஜூன் 24, 2018 02:26


காஞ்சிபுரம்: நாய் கடிக்கு சிகிச்சை பெறாததால் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 47, உயிரிழந்தார். காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் பகுதியில் இவர் மளிகைக் கடை வைத்திருந்தார். மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன், அவருக்கு நாய் கடித்துள்ளது. அதற்கு உரிய சிகிச்சை பெறவில்லை. ரேபிஸ் முற்றிய நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட சேகரை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் ராஜபாளையம் சென்றுவிட்டனர். இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை இறந்து விட்டார். 'ரேபிஸ்' நோய் பரவாமல் இருக்க, அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சிகிச்சையளித்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...