ஆதரவாளர்கள் எதிர்ப்பு : விழி பிதுங்கும் தினகரன்
dinamalar 19.06.2018
தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க் களில், தங்க தமிழ்செல்வனை தவிர, மற்ற, 17 பேரும், வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால், தினகரன் விழிபிதுங்கி நிற்பதாக, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற மனுவை, கவர்னரிடம், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், 18 பேர் வழங்கினர். இதை தொடர்ந்து, 18 பேரையும், கட்சி தாவல் சட்டத்தில், தகுதி நீக்கம் செய்து,
சபாநாயகர், தனபால் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 பேரும் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள், 'பெஞ்ச்'மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதனால், மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், மாறுபட்ட தீர்ப்பால், அதிருப்தி அடைந்த தங்கதமிழ்செல்வன், தன் வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக, வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இதற்கு,தினகரனும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தன்னை போல, மற்ற, 17 பேரும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, தமிழ்செல்வன் வலியுறுத்தி வருகிறார். இது,
தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக முடிவு எடுக்க, தினகரன், நேற்று தன் ஆதரவாளர்களிடம், ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு, 17 பேரும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், எந்த முடிவும் எடுக்க முடியாமல், தினகரன் திணறி வருவதாக, தகவல் ெவளியாகியுள்ளது.- நமது நிருபர் -
dinamalar 19.06.2018
தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க் களில், தங்க தமிழ்செல்வனை தவிர, மற்ற, 17 பேரும், வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால், தினகரன் விழிபிதுங்கி நிற்பதாக, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற மனுவை, கவர்னரிடம், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், 18 பேர் வழங்கினர். இதை தொடர்ந்து, 18 பேரையும், கட்சி தாவல் சட்டத்தில், தகுதி நீக்கம் செய்து,
சபாநாயகர், தனபால் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 பேரும் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள், 'பெஞ்ச்'மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதனால், மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், மாறுபட்ட தீர்ப்பால், அதிருப்தி அடைந்த தங்கதமிழ்செல்வன், தன் வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக, வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இதற்கு,தினகரனும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தன்னை போல, மற்ற, 17 பேரும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, தமிழ்செல்வன் வலியுறுத்தி வருகிறார். இது,
தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக முடிவு எடுக்க, தினகரன், நேற்று தன் ஆதரவாளர்களிடம், ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு, 17 பேரும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், எந்த முடிவும் எடுக்க முடியாமல், தினகரன் திணறி வருவதாக, தகவல் ெவளியாகியுள்ளது.- நமது நிருபர் -
No comments:
Post a Comment