Wednesday, March 18, 2015

7 நாட்கள் தொடர் விடுமுறையா?- வங்கி அதிகாரிகள் விளக்கம்

வங்கிகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தொடர் விடுமுறை வருவதாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக ‘வாட்ஸ் அப்’ உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை என ஒரு தகவல் பரவி வருகிறது.

அதாவது வரும் மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை ராமநவமி என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம். 30-ம் தேதி திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும். 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை நிதியாண்டுக்கான இறுதி நாள் என்பதாலும், ஏப்ரல் 1-ம் தேதி புதன்கிழமை அடுத்த நிதியாண்டுக்கான முதல் நாள் என்பதாலும் கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக இரு தினங்களும் விடுமுறை. ஏப்ரல் 2-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதாலும் அவ்விரு தினங்களுக்கும் விடுமுறை. அடுத்த நாள் ஏப்ரல் 4-ம் சனிக்கிழமை வங்கி அரைநாள் மட்டுமே செயல்படும். அதற்கு அடுத்த நாள் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம் என அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள் ளது.

இந்த தகவலால் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. வங்கிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விடுமுறை விடப்பட்டால் தங்களால் பணப் பரிவர்த்தனை உள்பட எவ்வித வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் மட்டுமே விடுமுறை என தெரிவித்தனர்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மார்ச் 28-ம் தேதி ராமநவமி பண்டிகைக்கு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.

மார்ச் 30-ம் தேதி வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். அடுத்த நாள் மார்ச் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்றாலும்கூட அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு தொடர் விடுமுறை ஆகும். எனினும் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இருப்பில் இருக்கும் என்பதால் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று தெரிவித்த னர்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...