Saturday, March 14, 2015

கணக்குக்கு விடை தெரியாதவன் கணவனா: மணமகள் ஆவேசம்

லக்னோ: எளியமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனிற்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர்.

உ.பி., மாநிலம் கான்பூர் அருகே உளள ரசூலாபாத்தி்ல் வசித்து வரும் இரு குடும்பத்தினரிடையே கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண தினம் நெருங்கி வந்த வேளையில் மணமகள் மணமகனிடம் விளையாட்டாக எளிய கணக்கு ஒன்றை கேட்டார்.
கணக்கிற்கான பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் எளிய வகை கணக்கிற்கு கூட விடை சொல்ல தெரியாதவனை திருமணம் செய்ய முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தியது மட்டு மல்லாமல் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். மணமகனின் வீ்ட்டார் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத மணமகளின் தந்தை போலீசார் மூலம் மணமகனிற்கு அளித்த வரதட்சனை பணம் மற்றும் நகைகளை திரும்ப பெற்றுக்கொண்டார்.
15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ?மணப்பெண் கேட்ட கேள்வி இது தான். மாப்பிள்ளை உடனடியாக அளித்த பதில் 17 என்பதாகும்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...