Friday, April 14, 2017

திருமங்கலம்-நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் 80 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

ஏப்ரல் 14, 04:30 AM

சென்னை,

சென்னை திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் நேரு பூங்கா வரை பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தப்பாதையில் திருமங்கலம்-ஷெனாய் நகர் வரை 3.3 கி.மீ. தூரத்துக்கு இருவழி சுரங்கப்பாதையும், ஷெனாய் நகர் முதல் நேரு பூங்கா வரை 4.3 கி.மீ. தூரத்துக்கு ஒரு வழி சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சோதனை ஓட்டம் நடந்துவந்த நிலையில், மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று முன்தினம் ஆய்வுப்பணியை தொடங்கினார்.

80 கி.மீ. வேகம்

முதல் நாள் திருமங்கலம்-ஷெனாய்நகர் வரை இரு வழி சுரங்கப்பாதையில் ஆய்வு நடந்தது. 2-ம் நாளான நேற்று காலை நேரு பூங்கா முதல் ஷெனாய்நகர் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் ஆய்வு தொடங்கியது. நேரு பூங்காவில் இருந்து ஷெனாய் நகர் வரை டிராலியில் சென்று ஆணையர் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் நேற்று மாலை திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்கா வரை 7.6 கி.மீ. தூரத்துக்கு 80 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “பாதுகாப்பு ஆணையர், திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை 2 நாட்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியில் ஒரு சில மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தி உள்ளார். அந்த மாற்றங்கள் செய்த பின்னர் ஆய்வு செய்யப்பட்டு, முறையாக பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிகிறது. மே மாதம் ரெயிலை இயக்குவதற்கான போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும்” என்றனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...