Tuesday, April 11, 2017

இமாச்சல் முதல்வருக்கு 'சம்மன்' : அமலாக்க துறை அனுப்பியது

புதுடில்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், நேரில் ஆஜராகும்படி, இமாச்சலப் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங்கிற்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பி உள்ளது.

காங்., கட்சியைச் சேர்ந்த, இமாச்சல் முதல்வர் வீர்பத்ர சிங், 82, மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரும், அவர் குடும்பத்தினரும், வருமானத்தை விட, அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வீர்பத்ர சிங், அவர் மனைவி பிரதிபா சிங், எல்.ஐ.சி., ஏஜன்ட் ஆனந்த் சவுகான் உட்பட, 10 பேருக்கு எதிராக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், 225 சாட்சியங்கள், 442 ஆவணங்களை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, வீர்பத்ர சிங்கிற்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பி உள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், ஏற்கனவே அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்காத வீர்பத்ர சிங், அரசாங்க பணி இருப்பதாக கூறி, நேரிலும் ஆஜராகவில்லை. இதனால், தற்போது, புதிதாக, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

IOB unveils 444-day term deposit scheme with higher interest rates  Published - February 14, 2026 09:20 pm IST - MUMBAI THE HINDU BUREAU 16...