Tuesday, April 11, 2017

மருத்துவ மாணவர் செய்த 'வாட்ஸ் ஆப்' பிரசவம்

நாக்பூர்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், மிகவும் சிக்கலான சிகிச்சையை, 'வாட்ஸ் ஆப்' மூலம் ஆலோசனை பெற்று, இரண்டு உயிர்களை காப்பாற்றியுள்ளார், ஒரு மருத்துவ மாணவர்.ஆமதாபாத் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த, சத்தீஸ்கரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது; கடும் ரத்தப் போக்கும் ஏற்பட்டது. அப்போது, அந்த ரயிலில் யாராவது டாக்டர்கள் உள்ளனரா என, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் தேடியுள்ளார்.

அந்த ரயிலில் பயணம் செய்த, மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் விபின் காட்சே, 24, வேறு வழியில்லாமல் களத்தில் இறங்கினார்.அந்த பெண்ணை சோதித்தபோது, குழந்தையின் தலைக்கு பதிலாக, தோள் தெரிந்தது. மேலும், அந்தப் பெண்ணுக்கும் ரத்தப்போக்கு கடுமையாக இருந்தது. உடனடியாக, தனக்கு பாடம் எடுக்கும் டாக்டர்களுக்கு, வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பினார். அவர்கள் சொல்லி கொடுத்தது போல், சரியாக செயல்பட, சுகப்பிரசவமானது. அதற்குள் ரயில், நாக்பூரை அடைய, முன்பே அளித்த தகவலின்படி, மருத்துவர்கள் தயாராக இருந்தனர். தாயும், குழந்தையும், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

IOB unveils 444-day term deposit scheme with higher interest rates  Published - February 14, 2026 09:20 pm IST - MUMBAI THE HINDU BUREAU 16...