Friday, June 2, 2017

ஒரு மாதமாக மீட்டர் தட்டுப்பாடு : புதிய மின் இணைப்புக்கு சிக்கல்

பதிவு செய்த நாள்01ஜூன்2017 23:17

சிவகங்கை: மின் வாரியத்தில் ஒரு மாதமாக மீட்டர்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால், புதிய மின் இணைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இலவச இணைப்பை தவிர்த்து, 2.40 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் மின் பயன்பாட்டின் அளவை கணக்கிட 'எலக்ட்ரோ மெக்கானிக்கல்' மீட்டர்களை வாரியம் வழங்கி வந்தது. இதில் பல குறைபாடு இருந்ததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சில ஆண்டுகளாக மின் அளவை துல்லியமாக கணக்கிடும் வகையில் 'டிஜிட்டல்' மீட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை ஒன்றரை கோடி இணைப்புகளுக்கு மேல் புதிய மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பழைய மீட்டர்கள் பழுதடையும்போது, புதிய மீட்டர்களே பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், மாநிலம் முழுவதும் ஒரு மாதமாக தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் கட்டடங்கள், வணிக வளாகங்களுக்கு புதிய இணைப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பழுதடைந்த மீட்டர்களையும் மாற்ற முடியவில்லை. புதிய மீட்டருக்காக ஒரு லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ''மீட்டர்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் வந்துவிடும். சீனியாரிட்டி படி இணைப்பு கொடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...