Saturday, June 10, 2017

அடுத்தடுத்து 'டீன்'கள் ஓய்வு : மருத்துவ கல்லூரிகள் பாதிப்பு

பதிவு செய்த நாள்10ஜூன்2017 00:52

'அரசு மருத்துவ கல்லுாரி, 'டீன்'களின் பதவி காலம், அடுத்தடுத்து முடிவதால்,
ஐந்திற்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், டீன்கள் இல்லாத நிலை ஏற்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மருத்துவ கல்லுாரிகளில், டீன் பதவி காலியாக உள்ளது. அங்கு துறை சார்ந்த டாக்டர்களே, டீன் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி, துாத்துக்குடி மற்றும் நெல்லை மருத்துவ கல்லுாரி டீன்களின் பதவி காலமும், நவம்பர் மாதத்திற்குள் முடிகிறது. அதனால், ஐந்திற்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுாரிகளில், டீன் இல்லாத நிலை ஏற்படும்.ஏற்கனவே, சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரிகளில் காலியாக இருந்த டீன் பணியிடம், இரண்டு மாதத்திற்கு பின் தான் நிரப்பப்பட்டது. இதே நிலை, தற்போது ஏற்பட்டுள்ளது.பொறுப்பு டீன் இருந்தாலும், மருத்துவ கல்லுாரிக்கும், மாணவர்களுக்கும் வேண்டிய வசதிகள் அளிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. மேலும், டீன் இல்லாத மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் மெத்தனம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ கல்லுாரி டீன்கள், அடுத்தடுத்து ஓய்வு பெறுகின்றனர். நவம்பர் மாதத்துக்கு பின், புதிய டீன்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதுவரை, பொறுப்பு டீன்கள் நியமிக்கப்படுவர்' என்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...