Saturday, June 10, 2017

மதுரை ஏ.டி.எம்.,மில் 'விளையாட்டு' : போலி 2,௦௦௦ ரூபாய் வந்தது எப்படி

பதிவு செய்த நாள்10ஜூன்2017 01:13



மதுரை: மதுரை வண்டியூர் கனரா வங்கி ஏ.டி.எம்.,மில் போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வந்தது குறித்து விசாரணை நடக்கிறது.

மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் வகிதாராணி. ஜூன் 1ல் கனரா வங்கி ஏ.டி.எம்.,ல் இருந்து எட்டாயிரம் ரூபாய் எடுத்தார். அனைத்தும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக வந்தன; அதில் ஒன்று போலி. 'ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா' என்பதற்கு பதில் 'மனோரஞ்சன் பேங்க் ஆப் இந்தியா' என அச்சிடப்பட்டிருந்தது. மேலும், 'விளையாட்டு பொருள்' என குறிப்பிடும் வகையில் 'புல் ஆப் பன்' என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அண்ணாநகர் கனரா வங்கி கிளையில் வகிதாராணி புகார் அளித்தார். நோட்டை ஆய்வு செய்த அதிகாரிகள், 'இது சிறுவர்கள் விளையாடும் நோட்டு. எங்களுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.,மில் நிரப்பும் தனியார் நிறுவனம்தான் பொறுப்பு' என திருப்பி அனுப்பினர்.
ஒருவாரமாக வங்கிக்கு அலைந்தும் நடவடிக்கை இல்லாததால், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.வங்கி தரப்பில் புகார் பெற்று, தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...