Wednesday, June 14, 2017

கலர் கலராய் துவரம் பருப்பு : கலகலக்குது ரேஷன் கடைகள்

பதிவு செய்த நாள்14ஜூன்2017 00:31



அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் துவரம் பருப்பு பல வண்ணங்களில் உள்ளது.'ரேஷன் துவரம் பருப்பு தரம் இல்லை' என புகார் எழுந்துள்ள நிலையில் அருப்புக்கோட்டையில் கலர் கலராய் பருப்பு வினியோகிக்கப்படுகிறது. துாசியும் அதிகம் உள்ளதாக நுகர்வோர் புலம்புகின்றனர்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'எல்லோ டால்' என்ற பருப்பை, துவரம் பருப்பில் கலந்து வினியோகிப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ரங்கநாதன் என்பவர் கூறுகையில், ''சிவப்பு, கறுப்பு நிறங்களில் தரமற்ற துவரம் பருப்பு வழங்கப்படுகிறது. துவரம் பருப்பை பிரிப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது. கிராமப்புற கடைகளில் இதுபோன்ற பருப்பை அதிகளவில் வழங்குகின்றனர்,'' என்றார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேஸ்வரி கூறுகையில், ''தரமான பருப்புகளைத்தான் வழங்கு கிறோம். தரமற்ற பருப்பு வினியோகம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025