Monday, June 26, 2017

வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் பரோல் விவகாரத்தில் அரசுக்கு சிறைத்துறை அறிக்கை

2017-06-26@ 02:54:53



வேலூர்: பேரறிவாளன் பரோல் கேட்ட விவகாரம் தொடர்பாக அரசுக்கு சிறைத்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேர் வேலூர் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பேரறிவாளன் பரோல் கேட்டு மறுத்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதன்பேரில், சட்டசபை செயலகத்தில் இருந்து வேலூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், பேரறிவாளன் பரோல் கோரி எப்போது மனு தாக்கல் செய்தார்? அதற்கு எடுத்த நடவடிக்கை என்ன? சமீபத்தில் பரோல் கேட்டு மீண்டும் விண்ணப்பித்தாரா? ஆகிய விவரங்களை உடனடியாக அறிக்கையாக அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘பேரறிவாளன் ஓராண்டுக்கு முன்னர் ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அப்போது அந்தந்த சிறை டிஐஜிக்கள் உத்தரவின்பேரில் கைதிகளுக்கு பரோல் வழங்கலாம் என உத்தரவு வந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்போது சிறைத்துறை டிஐஜியாக இருந்த முகமது ஹனிபா, பேரறிவாளனின் பரோல் மனுவை நிராகரித்தார். அதன்பிறகு பரோல் கேட்டு பேரறிவாளன் சார்பில் மனு அளிக்கவில்லை. இதுதொடர்பான விவரங்களை அரசுக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளோம்’ என்றனர்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...