Monday, June 26, 2017

தனியாக வந்த பெண்ணுக்கு 'ரூம்' தர மறுத்த ஓட்டல்
பதிவு செய்த நாள்25ஜூன்
2017
23:15

ஐதராபாத்:தனியாக வந்த சிங்கப்பூர் பெண்ணுக்கு, முன்பதிவு செய்திருந்தும், தங்குவதற்கு,'ரூம்' தருவதற்கு, ஐதராபாத் ஓட்டல் மறுத்துள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் தங்குவதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த நுபுர் சரஸ்வத், 22, என்ற பெண், ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தார். அதன்படி, சமீபத்தில் ஐதராபாத் வந்த அவருக்கு, ரூம் தருவதற்கு, ஓட்டல் நிர்வாகம் மறுத்து விட்டது.

'தனியாக வந்ததால், ரூம் தர முடியாது' என, ஓட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால், நீண்ட நேரம் ஓட்டலுக்கு வெளியிலேயே, அவர் காத்திருந்தார். அப்படியிருந்தும், ஓட்டல் நிர்வாகம், அவருக்கு ரூம் ஒதுக்கவில்லை. தனக்கு நேர்ந்த அனுபவத்தை, நுபுர் சரஸ்வத், சமூக தளத்தில் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025