Monday, June 26, 2017

'நீட்' தேர்வு: மாணவி சாதனை

பதிவு செய்த நாள்25ஜூன்
2017
23:53

சென்னை;'நீட்' தேர்வில் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு பிரிவில், சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி லக் ஷண்யா, இடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் நடந்து முடிந்த, அகில இந்திய அளவிலான, 'நீட்' தேர்வில், சென்னை, முகப்பேர் வேலம்மாள் பள்ளி சார்பில், 109 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இத்தேர்வில், 86 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்து உள்ளனர்.இப்பள்ளியை சேர்ந்த மாணவி ஏ.லக் ஷண்யா, அகில இந்திய ஒதுக்கீடு பிரிவில், 9ம் இடம் பெற்று, சாதனை படைத்துஉள்ளார். இவர், 720க்கு, 635 மதிப்பெண் பெற்றுள்ளார். இச்சாதனை புரிந்த மாணவியை, பள்ளி தாளாளர், முதன்மை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025