Friday, June 9, 2017

மெட்ரோ பணியால் வீட்டுக்குள் இருந்து வெளியேறிய சிமெண்ட் கலவை: அச்சத்தில் பொதுமக்கள்

கார்த்திக்.சி

மெட்ரோ பணியின் காரணமாக, சென்னை ராயபுரம் பகுதியில் சிமெண்ட் கலவை சாலையில் வெளியேறியது.




சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.5 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில், பழைய வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் பகுதியிலிருந்து தண்டையார்பேட்டை வரையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான பணி நடந்துவருகிறது. இந்த நிலையில், இன்று ராயபுரம் கல்லறைச் சாலை பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து திடீரென சிமென்ட் கலவை வெளியேறியது.

சுமார் 2 அடி உயரத்துக்கு வெளியேறிய இந்த சிமென் கலவை, ரோடு வரைக்கும் வெளியேறியது. திடீரென சிமென்ட் கலவை வெளியேறியதால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மெட்ரோ ஊழியர்கள் வந்து கழிவை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதிரி சிமென்ட் கலவை வெளியேறுவது இரண்டாவது முறையாகும். சென்னை முழுவதும் நடைபெற்றுவரும் மெட்ரோ பணியின் காரணமாக, அவ்வப்போது விசித்தரமான சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே, இதேபோல வண்ணாரப்பேட்டை பகுதியில் சிமென்ட் கலவை வெளியேறியது. இரண்டு முறை சென்னை அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...