Friday, June 22, 2018

நான்கு வழிச்சாலை ரூ. 50 கோடியில் சீரமைப்பு

Added : ஜூன் 22, 2018 00:09

விருதுநகர், மதுரையில் இருந்து விருதுநகர் வரையிலான நான்கு வழிச்சாலை ரூ. 50 கோடியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.விருதுநகர் மாவட்ட பகுதியான கே.உசிலம்பட்டியில் நேற்று சீரமைப்பு பணி நடந்தது. அங்கிருந்து புல்லலக்கோட்டை பாலம் வரை இப்பணி நடக்க உள்ளது. பணி நடப்பதால் நான்குவழிச்சாலையின் ஒருபுறம் மட்டும் போக்குவரத்து நடக்கிறது. தேசியநெடுஞ்சாலை தொழில்நுட்ப மேலாளர் மதிவாணன், ''சமயநல்லுார் முதல் விருதுநகர் வரை உள்ள 8.75 மீட்டர் அகலம் உள்ள 48 கி.மீ., சாலையை சீரமைக்கும் பணியில் 40 பேர் ஈடுபட்டு உள்ளனர். விருதுநகர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள சாலையை மூன்று பிரிவுகளாக பிரித்து சீரமைப்பு பணி நடக்க உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இப்பணி துவங்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.01.2026