Saturday, August 26, 2017



ரேஷன் கடைகளில், இலவசமாக வழங்கப்படும் கோதுமைக்கு, மக்களிடம் மவுசு ஏற்பட்டுள்ள தால், முழு அளவில் சப்ளை செய்யுமாறு, ஊழியர்கள், அதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட் டவை குறைந்த விலையிலும் விற்கப்படு கின்றன. ஒரு கிலோ கோதுமை விலை, 7.50 ரூபாய்.ஒரு ரேஷன் கார்டுதாரருக்கு, சென்னை
மற்றும் மாவட்ட தலைநகரங்களில், மாதம் தோறும், 10 கிலோ; மற்ற பகுதிகளில், ஐந்து கிலோ கோதுமை வழங்கப்பட்டது. தமிழகத் தில், 2016 நவ., மாதம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டது.

அரிசி பெறும் கார்டுதாரர்கள், தங்கள் விருப்பத்தில், அரிசிக்கு மாற்றாக, பாதி அளவுக்கு கோதுமையை இலவசமாக பெற்று கொள்ளலாம் என, உணவுத் துறை அறிவித்தது. அதன்படி, 25 கிலோ இலவச அரிசி பெறும் ஒரு கார்டுதாரர், விருப்பத்தின்படி, ஐந்து அல்லது, 10 கிலோ கோதுமையை வாங்கி கொள்ளலாம். தற்போது, ரேஷனில் கோதுமை வாங்குவோர் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது: கோதுமைக்கு விலை இருந்த போது, சிலர் மட்டுமே வாங்கினர். தற்போது,இலவசமாக தருவதால், அரிசி வாங்காதவர்கள் கூட, கோதுமை கேட்கின்றனர். ஆனால், 1,000 கார்டுகள் உள்ள, ஒரு கடைக்கு, 400 - 500கார்டுகளுக்குமட்டுமே கோதுமை அனுப்பப்படுகிறது.இதனால், அனைவருக்கும் கோதுமை சப்ளை செய்ய முடிய வில்லை. எனவே, கிடங்குகளில் இருந்து, முழு அளவில் கோதுமை சப்ளை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
குடிநீர் பாட்டிலில் குச்சி இழப்பீடு தர உத்தரவு

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:13


சென்னை;குடிநீர் பாட்டிலில் குச்சி கிடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், வாடிக்கையாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்த, ரவி தாக்கல் செய்த மனு:உணவு சாப்பிட, தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில், 20 ரூபாய் கொடுத்து, 'அக்குவா பாஸ்ட்' பெயரிலான குடிநீர் பாட்டில் வாங்கினேன்.சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டது. தண்ணீர் குடிக்க பாட்டிலை திறந்த போது, அதில், குச்சியோ, நாடா புழுவோ மிதப்பது போல இருந்தது.மன உளைச்சல்விக்கல் அதிகமாகி தவித்தபோது, அருகில் இருந்தவர் தண்ணீர் கொடுத்ததால், உயிர் ப்பினேன்.கடைக்காரரிடம் கேட்டதற்கு, 'விற்பதுடன் என் வேலை முடிந்தது; ஏதும், பிரச்னை என்றால் தயாரிப்பு நிறுவனத்தையே நாட வேண்டும்' என்றார். தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் செய்தும், கண்டு கொள்ளவில்லை; எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.மன உளைச்சலுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்; சேவை குறைபாட்டிற்கு, இரண்டு லட்சம் ரூபாய்; வழக்கு செலவாக, 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உத்தரவு
வழக்கு விசாரணையின் போது, 'குடிநீர் தயாரிப்பில் குறை ஏதும் இல்லை; பாட்டிலையும் எங்களிடம் காட்டவில்லை. பணம் பறிக்கும் நோக்கில், வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்த வழக்கில், நீதிபதி கலியமூர்த்தி, நீதித்துறை உறுப்பினர்கள் பிரமிளா, பாபுவரதராஜன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது. தண்ணீர் பாட்டிலை சோதனை செய்த, கிண்டி, 'கிங்க்' ஆய்வு மையம், 'தண்ணீர் பாட்டிலில், குச்சி போன்ற ஒரு பொருள் உள்ளது. தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல' என, தெரிவித்து உள்ளது.குடிநீர் பாட்டிலை விற்ற கடைக்காரரும், தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து, 15 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுடன், வழக்கு செலவாக, 5,000 ரூபாயும் சேர்த்து, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு செப். ௨௦ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:01

புதுடில்லி, '௨ஜி' அலைக்கற்றை முறைகேடு வழக்கில், நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு வழங்கும் தேதியை, அடுத்த மாதம், ௨௦ம் தேதி அறிவிப்பதாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி. ஷைனி தெரிவித்துள்ளார்.மத்தியில், மன்மோகன் சிங் தலைமையில், முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சி இருந்த போது, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, '2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால், அரசுக்கு, 1.78 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி., என்கிற மத்திய தலைமை கணக்கு அலுவலகம் குற்றஞ்சாட்டியது. இது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.விசாரணை முழுதும், ஏப்ரல் ௨௬ல் முடி
வடைந்தது. தீர்ப்பு எழுதும் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தீர்ப்பு வழங்கும் தேதியை, செப்., ௨௦ல் அறிவிப்பதாக, நிதிபதி, சைனி நேற்று தெரிவித்தார்.
'தனிமனித சுதந்திரம் தீர்ப்புமாட்டிறைச்சிக்கும் பொருந்தும்'

பதிவு செய்த நாள்25ஆக
2017
19:40


புதுடில்லி, 'ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.ஆதார் தொடர்பான வழக்கில், 'தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே' என, உச்ச நீதிமன்றத்தின், ஒன்பது நீதிபதிகள் அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.இந்த நிலையில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மஹாராஷ்டிர அரசின் உத்தரவுக்கு, மும்பை ஐகோர்ட் விதித்த தடையை எதிர்க்கும் வழக்கு, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிமனித சுதந்திரம் தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். 'என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்று மற்றவர்கள் நம்முடைய விருப்பத்தில் தலையிடுவதை எவரும் விரும்புவதில்லை. 'அதனால், இந்த வழக்கில், தனிமனித சுதந்திர தீர்ப்பும் பொருந்தும்' என, அமர்வு கூறியது.வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஆற்றங்கரையில் செத்து மிதக்கும் மீன்கள் தொடர்வதால் மீனவர்கள் பாதிப்பு
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:52




ராமநாதபுரம், ராமநாதபுரம் அருகே, கழிமுக பகுதியில் இறால் பண்ணை
கழிவுகளால் கடலில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம்,
ஆற்றங்கரை கடற்கரை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். பாரம்பரிய முறையில் கரைவலை, வல்லம், பைபர் படகுகளில் மீன் பிடித்து வாழ்கின்றனர். 

இப்பகுதியில், வெளியூர் விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால், மீன் வளம் குறைந்துள்ளது. இந்நிலையில், ஆற்றின்கரை கழிமுக பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடலில் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏற்கனவே, ஆக.,9ல் இதுபோல் கரை ஒதுங்கின. தற்போது கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.
ஆற்றங்கரை மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் முகமது அலி ஜின்னா கூறியதாவது:

இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இறால் உணவு, விரைவான வளர்ச்சி, நோய்களுக்காக வேதிப்பொருட்களை கலக்கின்றனர். கழிவுகளை கடலில் விடுவதால் ஏற்படும் நச்சுத்தன்மையால் மீன்கள் செத்து கரை ஒதுங்கலாம். கடலில் மீன் வளம் குறைந்து தொழில் நசிந்து வரும் நிலையில், பாதிப்பை ஏற்படுத்தும், இறால் பண்ணைகளை அரசு தடை செய்ய வேண்டும், என்றார்.

இந்நிலையில், நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள், பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் கடல் நீரை சேகரித்து, மத்திய மீன்வளத்துறை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
பேரறிவாளனுக்கு திருமணம் தாய் அற்புதம்மாள் தகவல்

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:10




வேலுார், ''பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளோம்,'' என, அவரது தாய் அற்புதம்மாள் கூறினார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வேலுார் சிறையில், 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு உள்ளார். 

உடல்நிலை பாதிக்கப்பட்டுஉள்ள, தன் தந்தை ஞானசேகரன், தாய் அற்புதம்மாள் ஆகியோரை பார்க்க, அவருக்கு, நேற்று முன்தினம், ஒரு மாதம், 'பரோல்' வழங்கப்பட்டது.அன்று இரவு, ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு, இரவு, 11:00 மணிக்கு, பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார். டி.எஸ்.பி., பழனிசெல்வம் தலைமையில், 11 போலீசார், 24 மணி நேரமும், அவரதுவீட்டுக்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.'ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு, பேரறிவாளன் தினமும் சென்று, கையெழுத்து போட வேண்டும்' என, பரோல் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, போலீசாரே, பேரறிவாளன் வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்குகின்றனர்.

பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பேரறிவாளன், 20 வயதில் சிறைக்குச் சென்று, 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின் தான் வெளியே வந்துள்ளார். தற்போது, அவருக்கு, 46 வயதாகிறது. பரோலில் விடுவிக்கப்பட்டது தற்காலிக மகிழ்ச்சி தான்.
அவர், நிரந்தரமாக விடுதலை செய்யப்பட வேண்டும். 

அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசை; பெண் பார்த்து
வருகிறோம். வரன் அமைந்து விட்டால், பரோல் முடிவதற்குள், திருமணம் செய்து வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
தோப்புக்கரண தண்டனை

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:03

பெண்ணாடம், கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில், நேற்று காலை, 6:00 மணியளவில், அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை, கிராம மக்கள் திரண்டு, சிறை பிடித்தனர். கிராம மக்களுக்கும், மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த, அரியலுார் மாவட்டம், தளவாய் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.ஐ., ஸ்ரீதர், கிராம மக்களை சமாதானம் செய்தார். 

மணல் ஏற்றிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தோப்புக் கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பினார்.
உயர் சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:44

சென்னை, 'உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது' என, மத்திய அரசின், மருத்துவ மாணவர் சேர்க்கை கமிட்டி தெரிவித்துள்ளது.இது குறித்து, அக்கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துஉள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு,
ஐதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிமன்றத்தில் இருந்து, முழுமையான தீர்ப்பு வரும் வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்ப்பு வந்ததும், கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு, www.mcc.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும். அதனால், மாணவர்கள் தொடர்ந்து இணையதளத்தை பார்வையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



ஓணம் கொண்டாட்டம் துவக்கம்: செப்.4 திருவோணம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:22




நாகர்கோவில், ஆவணி அஸ்தம் நட்சத்திரமான நேற்று ஓண கொண்டாட்டம் தொடங்கியது. இனி 10 நாட்கள் மலர்களால் அமைக்கப்படும் கோலங்கள் மக்களை வரவேற்கும்.

விஷ்ணு பகவானின் 10 அவதாரத்தில் வாமன அவதாரத்தை விளக்குவதுதான் திருவோண பண்டிகையின் வரலாறு. திருக்காக்கரை பகுதியை வாய்மை தவறாமல் ஆண்டு வந்த மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்று அடி நிலம் கேட்ட போது தருகிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்ற மூன்றாவது அடிக்கு தனது தலைை-யை கொடுத்து மண்ணுக்குள் அந்த மன்னர் மாய்ந்து போனார். 

அவ்வாறு மாய்ந்த மன்னர் விஷ்ணுபகவானிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி ஆவணி மாதம் ஓணம் நாளில் மக்களை காண வருவதாக ஐதீகம்.
செப்., 4-ம் தேதி திருவோண பண்டிகை . அதற்கு முன்னோடியாக அஸ்தம் நட்சத்திர தினமான நேற்று காலையில் ஓண கொண்டாட்டம் தொடங்கியது.
வீடுகளின் முன் மலர்களால் அமைக்கப்பட்ட கண்கவர் கோலங்கள் அணி வகுத்தது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையில் நேற்று காலை அத்தப்பூகோலம் போடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்தனர். 

ஓண கொண்டாட்டம் 2வது நாளில் கோலம் மெருகூட்டல் தொடர்ந்து ஒவ்வொறு நாள்களிலும்,ஓணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், அறுசுவை விருந்துக்கான ஆயத்தம்,படகு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்துதல், கலாசார விழாக்கள் நடத்துதல், அத்தப்பூ கோலத்தை மேலும் மெருகூட்டுதல், அத்தப்பூ கோலத்தில் களிமண் மேடு அமைத்து அலங்கரித்தல், திருவோணத்தை வரவேற்கும் முன்னேற்பாடுகள், கடைசி நாளான பத்தாம் நாளன்று திருவோணத்தை அறுசுவை உணவுடன், புத்தாடை அணிந்து கொண்டாடுதல்.

இப்படி 10 நாட்கள் கேரளா மட்டுமல்ல, அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஓண கொண்டாட்டம் களை கட்டும். ஓணத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பூ மார்க்கெட்டான தோவாளையில் பூக்களின் விலை
உயர்ந்தது.
மலைக்க வைக்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 22:20

திண்டுக்கல் என்றவுடன் ஞாபகம் வருவது கமகமக்கும் பிரியாணியும், பூட்டும் மட்டுமல்ல, மலைக்க வைக்கும் மலைக்கோட்டையும்தான்.

இந்த மலைக்கோட்டை பல வரலாற்று போர்களையும், சுதந்திர போராட்ட வடுக்களையும் தாங்கி நிற்கிறது. இருப்பினும் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏனோ கண்டு கொள்ளவும் அவர்களுக்கு ஆர்வமில்லை. திண்டுக்கல்லில் பல வரலாறுகள் பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றை கேட்டாலும், நிகழ்வுகள் நடந்த இடத்தை பார்த்தாலும் சுவையாகவும், பெருமையாகவும் இருக்கும். ஆனால், நகர வளர்ச்சியால் பல வரலாற்று சுவடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எனவே இதனை சுற்றுலா தலமாக்கினால், அதிகளவு வருமானம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.





மலைக்கோட்டை

திண்டுக்கல் மலைக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 360 அடி உயரத்தில், 400 மீட்டர் நீளத்திலும், 300 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மதுரைக்கு நுழையும் வாயில் பகுதியாக அப்போது திண்டுக்கல் இருந்தது.

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் திண்டுக்கல் மலை மீது கோட்டையை கட்டி பாதுகாப்பு அரண் அமைத்தனர். 1605ல் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கோட்டையை கட்டினார். பின்பு கடந்த 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கர் இந்த கோட்டையை ஆட்சி செய்தார்.
மராட்டியர்கள் படையெடுப்பிற்கு பின்பு நாயக்கர் ஆட்சி இறக்கப்பட்டது. பின்பு மைசூர் உடையார்கள் படையெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் மைசூருவை சேர்ந்த ஹைதர் அலி 1755ல் திண்டுக்கல் படைக்கு 'பவுத்ஜ்தாராக' நியமிக்கப்பட்டார். ஹைதர்அலி 1766ல் கோட்டையை பிடித்து ஆட்சி செய்தார். அவர் காலத்தில்தான் கோட்டைப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது.

திப்புசுல்தான்

கடந்த 1755ல் ஹைதர்அலி தனது மனைவி, மகன் திப்புசுல்தானுடன் திண்டுக்கல்லில் குடியேறினார். 1784 முதல் 1790ம் ஆண்டு வரை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இவரது படைத்தளபதி சையது இப்ராகிம் சாகிப் மூலம் திண்டுக்கல் மலைக்கோட்டை சிறைகூடம், பீரங்கித்தளம் ஆகியவை முழுவை பெற்று, புதுப்பிக்கப்பட்டது. பிரஞ்ச் கட்டடக்கலை அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

பிரிட்டிஷார் வசமானது

கடந்த 1860ம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் திப்புசுல்தான் தோற்றதையடுத்து கோட்டை பிரிட்டிஷார் வசமானது. பின்பு படை பாதுகாப்பு அரணாகவே விளங்கியது.

சுனைகள்

மலைக்கோட்டை மேலே நீர் சுனைகள் உள்ளன. இது சிறைக்காவலர்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.

அகழிகள்:
மலைக்கோட்டையை சுற்றி கோட்டைக் குளம், அய்யன் குளம் என அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அய்யன் குளத்தை குதிரை லாயமாக பயன்படுத்தினர். இதன் மூலம் எதிரிகள் மேலே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது.

கல்வெட்டு உள்ளது

மலைக்கோட்டையில் தம்பிரான் சுவாமிகள் கல்வெட்டு உள்ளது. இதில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கோயிலுக்கும், பொதுமக்களுக்கும் அளித்துள்ள நன்கொடை தெரிவிக்கப்பட்டுள்ளது. 1790 மைசூர் யுத்தம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

தாலுகா சமாதி

தற்போது திண்டுக்கல் மேற்கு தாலுகாவாக இருக்கும் இடம், இறந்த வீரர்களை புதைக்கும் இடமாக இருந்தது. மேலும் கோட்டை மேலாளராக இருந்த பிரிட்டிஷார் சமாதியும், தாலுகா அலுவலகம் அருகேயுள்ளது.

கோபால சமுத்திரம் குளம்

திண்டுக்கல்லில் தற்போது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், மழை நீர் சேகரிப்பு மையமாகவும் இருப்பது கோபால சமுத்திரக்கரை. இந்த இடத்திலும் பல வரலாற்று சிறப்புகள் புதைந்து கிடக்கிறது.

திண்டுக்கல்லில் வேலுநாச்சியார்

ஆங்கிலேயேரை எதிர்த்து போருக்கு கிளம்பிய முதல் இந்திய பெண்ணரசி சிவகங்கை அரசி வேலுநாச்சியார். இவருக்கு ஏழு மொழிகள் தெரியும். போர்கலைகள் பலவும் கற்று தேர்ந்தவர்.
கடந்த 1746ல் தனது 16 வயதில் அப்போதைய சிவகங்கை மன்னராயிருந்த முத்து வடுகநாத துரையை மணந்தார். முத்துவடுகநாதரின் படைதளபதிகள் பெரியமருது, சின்னமருது.

18ம் நுாற்றாண்டில் தமிழகம் பல்வேறு ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கித் தவித்தது.

சிவகங்கையில் தமது வியாபார உரிமையை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. ஆங்கிலேயரின் எதேச்சதிகாரம் பிடிக்காத சிவகங்கை மன்னரோ பிரெஞ்சுகாரர்களை தேர்வு செய்து விட, ஆங்கிலேயருக்கு கோபம் உண்டானது. இதனால் சிவகங்கையின் மீது ஆங்கிலேய கர்னல்கள் ஜோசப் ஸ்மித், பான்ஜோர் தலைமையில் போர் தொடுத்தனர். இந்த போரில் மருது சகோதரர்கள் தலைமையில் சிவகங்கை படைகள் வீரத்துடன் ஆங்கிலப்படைகளை எதிர்த்து நின்றன.

இந்த போரில் வேலுநாச்சியார் தாமே போர்க்களத்துக்கு வந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ஆனால் முடிவோ துயரமானதானது. அரசர் முத்து வடுகநாதனை, ஆங்கிலேயர்கள் ஏமாற்றி போர்க்களத்தின் முன்னணிக்கு வரவழைத்து வஞ்சமாக கொன்றுவிட்டனர். இதன் பின்பு சிவகங்கை படை அழிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் தஞ்சம்

வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளை நாச்சியாருடன், நம்பிக்கைக்கு தகுந்த அமைச்சர் தாண்டவராயருடன் தப்பிச் சென்று திப்புசுல்தான் எல்லைக்குட்பட்ட திண்டுக்கல்லில் தஞ்சம் அடைந்தார். திப்புசுல்தான் ஆதரவோடு திண்டுக்கல் விருப்பாச்சி கோபால்நாயக்கர் உதவியுடன் அய்யம்பாளையத்தில் மறைந்து வாழ்ந்தார். சிவகங்கை பகுதி, ஆங்கிலேயர்களின் கூட்டாளியான ஆற்காடு நவாப்பின் கைக்கு சென்றது. மக்கள் புரட்சி செய்தனர். ஏழு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்த வேலுநாச்சியார் இந்த புரட்சிக்கு தலைமை வகித்தார்.

போரில் உதவி

இந்த நேரத்தில் திப்புசுல்தானும், கோபால நாயக்கரும் 5,000 குதிரை வீரர்களையும், 5,000 தரைப்படையினரையும், பீரங்கிப்படையின் ஒரு பிரிவையும் அனுப்பி வைத்தனர்.

படை வென்றது

கடந்த 1780ம் ஆண்டு அக்.,17ம் தேதி வேலுநாச்சியார் தலைமையில் மருதுபாண்டியர் தளபதிகளாக செயல்பட்ட படை, சிவகங்கையை பிடித்தது. இந்த வெற்றிக்கு காரணம் கோபால் நாயக்கரும், திப்பு சுல்தான் படைகளும்தான்.

படைகள் ஓய்வெடுத்த குளம்

வேலு நாச்சியாருக்கு அனுப்பி வைத்த 5 ஆயிரம் படை வீரர்களும், குதிரைகளும் தண்ணீர் குடிப்பதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் தோண்டப்பட்ட குளம்தான் கோபால் நாயக்கர்
சமுத்திரக் குளம். இந்த குளம் வெட்டுவதற்கு கோபால்நாயக்கர்தான் தலைமை வகித்தார். இந்த குளத்திற்கு நடுவில் 2 கிணறுகளும் வெட்டப்பட்டது.

- -எஸ்.அரியநாயகம்- - படம்: ஏ.ரவிச்சந்திரன்

அபிராமியம்மன் கோயில்

விஜயநகர ஆட்சியில் அபிராமியம்மன் கோயில் கட்டப்பட்டது. செதுக்கப்பட்ட துாண்கள், அழகாகவும், விஜயநகர பேரசின் கட்டட கலையை விளக்கும் சிற்பங்களும் உள்ளன. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுரம், சுற்று பிரகாரம், அர்த்த மண்டபத்தில் பல சிற்பங்கள் பொதிந்து கிடக்கின்றன. பல கலை சிற்பங்களும் உருவாக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு வருவது போல எதிரிகள் மலைக்கோட்டை வரக்கூடும் என்பதால், அபிராமியம்மன் கோயில் அடிவாரத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அடிவாரத்தில் திப்புசுல்தான் ஒரு பள்ளிவாசலையும் ஏற்படுத்தினார்.

பாறை மீது சிறைக்கூடம்

இங்கு பாறைகள் நடுவே சிறைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரும்பு கதவுகள், மேற்பரப்பில் புகை போக்கி, பாதாள சிறையில் 20 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் சூரிய வெளிச்சம் இருக்காது. புகை போக்கி வழியாக காற்று உள்ளே புகும். மேற்பரப்பில் செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் கொண்டு பூசப்பட்டு இருக்கும்.

கோபால் நாயக்கருக்கு துாக்கு

சிவகங்கை வேலுநாச்சியாருக்கு உதவியது, ஆங்கிலேயரை தீரமுடன் எதிர்த்து போரிட்டது ஆகிய காரணங்களுக்காக கோபால நாயக்கருடன் ஆங்கில அரசு போர் தொடுத்தது. இதில் முதலில் வெற்றி பெற்றாலும், வஞ்சக வலை விரித்து கோபால நாயக்கரை ஆங்கில அரசு கடந்த 5.9.1801ல் கைது செய்தது. மறுநாள் கோபாலசமுத்திரக்கரையில் உள்ள புளியமரத்தில் துாக்கிலிட்டனர். அதன்பின் இந்த குளம் கோபாலசமுத்திரக்குளம் என பெயர் பெற்றது.

குடிநீர் ஆதாரமானது


இந்த குளம் நாளடைவில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமானது. பின்பு ஆடு, மாடுகள் குளிக்கும் இடமாக மாறியது. நாளடைவில் கழிவு நீர் கலந்து குளம் மாசுபட்டது.

சீரமைப்பு

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் ரூ.1.50 கோடி செலவில் குளத்தை மழைநீரை சேகரிக்கும் மையமாக மாற்றியுள்ளது. இந்த குளத்தை சுற்றி நடைப்பயிற்சி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவு நீர் கலப்பது சுத்தமாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும் 108 நன்மை தரும் விநாயகர் கோயில் மற்றும் 'திண்டிமா வனம்' அமைப்பினர் மூலம் குளத்தை சுற்றி நிழல் மற்றும் பலன் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்கள் பெற 98421 -31524ல் தொடர்பு கொள்ளலாம்.

எத்திசை வந்தாலும் கண்காணிப்பு

திண்டுக்கல் மலைக்கோட்டை மீது மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையில் தங்கும் சிப்பாய்கள், கோட்டையை சுற்றி வட்ட வடிவில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து எதிரிகள் எத்திசையில் வந்தாலும் பார்க்க முடியும். மேலும் அவர்களை நோக்கி பீரங்கிகளும் வைக்கப்பட்டுள்ளன. தற்போதும் பிரிட்டிஷாரின் பீரங்கியுள்ளது.

வீரர்கள் கண்காணிப்பு கோபுரம்

எதிரி படைகள் வருவதையும், உள்ளே வீரர்கள், கைதிகள் செயல்பாட்டையும் கண்காணிக்க ஆளுயரத்தில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்று கொண்டே கண்காணிக்கலாம். கூண்டுக்குள் ஆள் நிற்பது வெளியே தெரியாது. வீரனின் கண்கள் வெளியே பார்க்க ஓட்டைகள் உள்ளன. வெளியில் இருந்து பார்த்தால் படைகலன் இருப்பது தெரியும். இதில் ஆயுத சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் வசிப்பதற்கும் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரமுகர்கள் சொல்வதென்ன

நகரமே சிறப்பு பெறும்

வரலாற்று சிறப்புமிக்கது திண்டுக்கல் மலைக்கோட்டை. இங்குள்ள கோட்டைக் குளத்தில் எப்போதும் தண்ணீர் உள்ளது. இதனை அகலப்படுத்தி படகு சவாரி விடலாம். இதற்கு பல கலெக்டர்கள் முயற்சித்துள்ளனர். சுற்றுலா மூலம் பல ஓட்டல்கள், லாட்ஜ்கள், விடுதிகள் வளர்ச்சி பெறும். போக்குவரத்து வசதியும், வணிகமும், வர்த்தகமும் சிறப்பு பெறும்.

ஜி.சுந்தரராஜன் வர்த்தகர்கள் சங்க துணை தலைவர் திண்டுக்கல்

வசதிகள் செய்துதர வேண்டும்

மலைக்கோட்டையை சுற்றி தரமான ரோடுகள் போட வேண்டும். பயணிகள் வந்து செல்வதற்கு போக்குவரத்து, கார் பார்க்கிங் வசதிகள் செய்து தர வேண்டும். இதன் மூலம் மலைக்கோட்டையின் புகழ் உலகம் முழுவதும் பரவும்.கிருபாகரன் தொழில் வர்த்தக சங்க மாவட்ட தலைவர், திண்டுக்கல்.

புதுப்பொலிவு பெறும்

திண்டுக்கல் மலைக்கோட்டை பொலிவு பெற, ஒளி வீசும் விளக்குகள் அமைக்கவும். பாதுகாப்பு அரண்கள், குமரன் பூங்காவில் இருந்து பயணிகள் மலைக்கோட்டை ஏறுவதற்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கு பயணிகள் அமர்வதற்கும், பூந்தோட்டம் அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை கலெக்டர் மூலம் தொல்லியல் துறையிடம் அளித்துள்ளோம்.

உமாராணி சுற்றுலாத்துறை அதிகாரி.
நாளை தமிழகம் வருகிறார் கவர்னர்

பதிவு செய்த நாள்25ஆக
2017
15:04




தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சனியன்று சென்னை வருகிறார்.

சென்னை: முதல்வர் மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பை கிளம்பினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை (ஆகஸ்ட் 26) மாலை மும்பையிலிருந்து சென்னை வர உள்ளாதாக கூறப்படுகிறது.
விருந்தில் திளைக்கும் எம்.எல்.ஏக்கள்
பதிவு செய்த நாள்
ஆக 25,2017 21:10



புதுச்சேரி:தினகரன் ஆதரவு எம்.எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் விடுதியில் தடபுடல் கவனிப்பு நடந்து வருகிறது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு முன்பதிவு செய்த காலம் முடிந்துவிட்டதை அடுத்து புதுச்சேரி 100 அடிசாலையில் உள்ள சன்வே என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி தினமாகையால் எம்.எல்.ஏக்களுக்கு கேக், புரூட்ஸ்,கொழுக்கட்டை, சக்கரை பொங்கல் , சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர்சாதம், மட்டன் பிரியாணி, காடை, ஈரல், நூடுல்ஸ், பன்னீர் கிரேவி, பன்னீர் டால், பப்பாளி ஜூஸ், அன்னாசி ஜூஸ் போன்றவை வழங்கப்பட்டன.
மாலையில் பீச்சில் சில எம்.எல்.ஏ.,க்கள் ஜாலியாக வாக்கிங் சென்றனர். சிலர் ஷாப்பிங் சென்றனர்.
சுதந்திர போராட்ட தியாகிக்கு 'பென்ஷன்' வழங்க ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்26ஆக
2017
02:20

சென்னை, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற தியாகிக்கு, 'பென்ஷன்' வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, முத்தைய்யன்
தாக்கல் செய்த மனு:

நாடு முழுவதும், 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடந்தது. மயிலாடுதுறையில், நான் பங்கேற்றேன். 1942 அக்., 7 முதல், 21 வரை, மயிலாடுதுறை கிளை சிறையில் இருந்தேன்; பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தேன். 

அதை, நாகை மாவட்ட கலெக்டர் நிராகரித்து விட்டார். நான் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உள்ளேன். எனக்கு, பென்ஷன் தர மறுப்பது சரியல்ல. எனவே, பென்ஷன் வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ரூபா ஆஜாரானார். அரசு தரப்பில், வழக்கறிஞர் அகில் அக்பர் அலி ஆஜராகி, 'தியாகிகளுக்கான பென்ஷன் பெற வேண்டும் என்றால், குறைந்தது, 21 நாட்கள் சிறையில் இருந்திருக்க வேண்டும்.
'சுதந்திர போராட்டத்தில் மனுதாரர் பங்கேற்றதற்கு, எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை' என்றார்.மனுவை விசாரித்த,
நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

பென்ஷன் கோரிய மனுவை நிராகரித்து, அரசு பிறப்பித்த உத்தரவில் மனுதாரர், அப்போது, 18 வயதை பூர்த்தி செய்து இருக்கவில்லை. 21 நாட்கள் சிறையில் இல்லை என, கூறப்பட்டு உள்ளது.
ஆனால், மனுதாரர் தரப்பில், சிறையில் இருந்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறார். அந்த நாட்கள், பென்ஷன் பெற போதுமானதாக இல்லை என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மனுதாரரை பொறுத்த வரை, 15 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.சுதந்திரத்திற்காக போராடியவர்களின், துன்பங்களை குறைப்பதற்காக, பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திர போராட்டத்தில், 18 வயதுக்கு குறைவானவர்களும் பங்கேற்று
உள்ளனர். 

அவர்கள் தரப்பில் ஆதாரங்களை சமர்ப்பித்தால், அதை பரிசீலிக்க வேண்டும். தொழில்நுட்ப காரணங்களுக்காக, விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியல்ல.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற போது, 18 வயது நிரம்பாதவர்களுக்கும், பென்ஷன் வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டுஉள்ளது.

மனுதாரரை பொறுத்தவரை, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். தாக்கல் செய்த, ஆவணங்களின் அடிப்படையில் பென்ஷன் வழங்கப்பட வேண்டும். பென்ஷன் பெற தகுதியான தேதியில் இருந்து, இன்று வரை, பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும்.நாட்டின் விடுதலைக்காக போராடிய, மனுதாரர் போன்றவர்களுக்கு, சட்டப்பூர்வமான உரிமை மறுக்கப்படுவதை கண்டு, இந்த நீதிமன்றம் வேதனை கொள்கிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடித்து குதறிய குரங்குகள் அரக்கோணத்தில் 12 பேர் காயம்
பதிவு செய்த நாள்26ஆக
2017
02:24


அரக்கோணம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், குரங்குகள் கடித்து, 12 பயணியர், காயம் அடைந்தனர்.வேலுார் மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும், நுாற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன; 140 சரக்கு ரயில்கள் தினமும் சென்று, வருகின்றன. இதனால், இங்கு எப்போதும் பயணியர் கூட்டம் நிரம்பி வழியும்.
இங்கு, நுாற்றுக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் உடமைகள், சாப்பாட்டு பொட்டலங்களை, குரங்குகள் பறித்து செல்கின்றன. 

அப்போது, பயணியரை குரங்குகள் தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த மே, 7ல், பிளாட்பாரத்தில் காத்து இருந்த பயணியரை
குரங்குகள் கடித்ததில், 21 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, இரண்டாவது பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த, காட்பாடி, வேலுாரை சேர்ந்தவர்கள் உட்பட, 12 பயணியரை, குரங்குகள் கடித்து குதறின.

காயமடைந்தவர்களை, ரயில்வே போலீசார் மீட்டு, அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.குரங்குகளை அப்புறப்
படுத்தாவிட்டால், விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அரக்கோணம் ரயில்வே பயணியர் நலச்சங்கம், எச்சரித்துள்ளது.
ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:38

திருவள்ளூர்;திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும், 12ம் தேதி, ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்ட ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் வரும், 12ம் தேதி, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள், தங்கள் பெயர், முகவரி, இறுதியாக பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகத்தின் முகவரி, ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதியப் புத்தக எண் மற்றும் கோரிக்கை விபரங்களை, மனுவில் குறிப்பிடப்பட வேண்டும்.
இம்முறையீடுகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன், வரும் 12ம் தேதி காலை, 10:30 மணிக்கு, பரிசீலனை செய்யப்பட்டு, தீர்வு காணப்படும்.ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சைக்கு 'எய்ம்ஸ்' வேண்டும் பிரதமருக்கு குவியும் மனுக்கள்
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:29

தஞ்சாவூர், 'தஞ்சாவூர் அருகே, செங்கிப்பட்டியில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வேண்டும்' என, தஞ்சை மக்கள் சார்பில், பிரதமருக்கு ஆயிரக்கணக்கில் மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.தமிழகத்தில், 2,000 கோடி ரூபாய் செலவில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.அதற்கான இடங்களை தேர்வு செய்து அனுப்ப, தமிழக அரசை கேட்டுக் கொண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தஞ்சாவூர் - செங்கிப்பட்டி, ஈரோடு - பெருந்துறை, செங்கல்பட்டு, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய, ஐந்து இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.தஞ்சை மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பலரும், 'செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்' என, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்னர்.எய்ம்ஸ் மருத்துவமனை போராட்டக்குழு தலைவர் முருகேசன் கூறியதாவது:

செங்கிப்பட்டியில், எய்ம்ஸ் அமையும் பட்சத்தில், கடைக்கோடி பகுதியான நாகை வரை உள்ள மக்கள் பயன்பெறுவர்.
இது குறித்து, பிரதமருக்கு தொடர்ந்து, கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறோம். 

எங்கள் கோரிக்கை மனுக்கள், பிரதமருக்கு குவியலாக சென்றுள்ளது. செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமையும் என, நம்புகிறோம்.செங்கிப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலம், மாவட்ட, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், 24 மணி நேர தண்ணீர் வசதி, 30 கி.மீட்டரில் திருச்சி விமான நிலையம், பஸ் மற்றும் ரயில் வசதி உள்ளதால், இங்கேயே எய்ம்ஸ் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுக்களில் குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ கவுன்சிலிங் முதல் 26 பேர் 'ஆப்சென்ட்'

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 22:35



சென்னை: தரவரிசை பட்டியலில் முதல், 26 இடங்களை பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் வந்த, 10 பேர், சென்னை அரசு மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தனர்.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. அதிலிருந்த, 131 இடங்களில், 14 இடங்கள் நிரம்பின; நிரம்பாத, 117 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டன.

பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், ஒன்று முதல், 1,209 இடங்கள் வரை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், தரவரிசையில், ஒன்று முதல், 26 இடங்கள் வரை பெற்ற மாணவர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலைகளில், இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தரவரிசையில், 27வது இடத்தில் இருந்த மாணவர் அசிபக் சுலைமான், முதல் ஆளாக கவுன்சிலிங்கில் பங்கேற்று, சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தார். அதைத்தொடர்ந்து வந்த, 10 மாணவர்களும், சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், எம்.பி.பி.எஸ்., இட ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.

நேற்றைய கவுன்சிலிங்கில், 800க்கும் மேற்பட்டோர், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றதாக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று, தரவரிசையில், 1,210 முதல், 2,673 வரை இடம் பெற்றோர் பங்கேற்கின்றனர்.
கலெக்டர் மாற்றத்தில் மகிழ்ச்சி ஸ்வீட் எடு... கொண்டாடு...!

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:30

சேலம், சேலம் கலெக்டர் சம்பத் மாற்றப்பட்டதை, அரசு அலுவலர்கள் பலரும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இரு ஆண்டுகளாக,சேலம் கலெக்டராக இருந்த சம்பத், நேற்று முன்தினம் இரவுமாற்றப்பட்டு, புதிய கலெக்டராக, ரோகிணி நியமிக்கப்பட்டார். இது, மாவட்டஅதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.எந்நேரமும், கலெக்டர் அலுவலகத்திலேயே ஆலோசனைக் கூட்டத்துக்கு காத்திருக்கும் நிலை; கோப்புகளில் கையெழுத்திடாமல், பல மாதங்களுக்கு இழுத்தடிப்பது; பெண்கள் என்றும் பாராமல், இரவு, 11:00 மணி வரை கூட்டத்தில் இருக்க வைப்பது என, பலவித இடையூறுகளை அனுபவித்து வந்த அலுவலர்களுக்கு, தற்போதைய கலெக்டர் மாற்றம் அறிவிப்பு, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நேற்று காலை, நடைபயிற்சியில் சந்தித்து கொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு சிலர், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அரசு பஸ்சில் 'வை-பை': கண்டக்டரின் தாராள மனசு

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 22:07



ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்சில், சொந்த செலவில் 'வை-பை' வசதி செய்த கண்டக்டரை பயணிகள் பாராட்டினர்.

ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து கிளையில் 70 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மதியம் 2:20 மணிக்கு, மதுரை வழியாக தஞ்சாவூருக்கு டி.என்.63-என் 1710 என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது.இதன் கண்டக்டராக திருச்சியை சேர்ந்த எம்.ஜெயபாலாஜி,28, பணியாற்றுகிறார்.

பயணிகளை கவரவும், அதன் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டவும் இவர் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டுள்ளார்.இதற்காக, தனது சொந்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, தனியார் பஸ்களுக்கு இணையாக பஸ்சில் கலர் ஸ்டிக்கர் ஒட்டி பயணிகளை கவர்ந்தார். இதனால், பயணிகள் இவரது பஸ்சை எதிர்பார்த்து பயணிக்க துவங்கினர். இதை பார்த்த ஜெயபாலாஜிக்கு பஸ்சில் இலவச இணைய சேவை வழங்க வேண்டும், என்ற எண்ணம் ஏற்பட்டது.

இதையடுத்து, 5000 ரூபாய் செலவு செய்துஇலவச வை-பை வசதி செய்துஉள்ளார். இதனால், பஸ்சில் பயணிக்கும் பயணிகள்இலவசமாக இந்த வசதியை பெறுகின்றனர். இதற்காக அவரை, பயணிகள் பாராட்டி வருகின்றனர்.

ஜெயபாலாஜி கூறுகையில்,'பொதுவாக அரசு பஸ்கள் குறித்து குறை தான் சொல்வார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும், என நினைத்தேன். இதற்காக தனியார் பஸ்களுக்கு இணையாக பஸ்சில் வண்ண வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டிஓராண்டிற்கு முன் அலங்கரித்தேன்.இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, பஸ்சில் அனைவரும் இலவசமாக இணைய சேவை பெறும் வகையில், வை-பை வசதி ஏற்படுத்த வேண்டும், என நினைத்தேன். கடந்த வாரம் எனது சொந்த செலவில் இதனை செய்துள்ளேன்.

புறநகர் போக்குவரத்து கழக மேலாளர் தேவேந்திரன் இதனை, பாராட்டி ஆதரவு தெரிவித்தார்.

இலவச வை-பை வசதி குறித்து பஸ்சின் முன்புறம் ஒட்டப்பட்டுள்ளது.இதனை பார்த்து தற்போது, இன்னும்பயணிகள் வருகை அதிகரித்துஉள்ளது, மகிழ்ச்சி தருகிறது, என்றார். தமிழகத்தில் முதன் முறையாக அரசு பஸ்சில் தனது சொந்த செலவில், இலவச
வை-பை வசதி ஏற்படுத்திய கண்டக்டர் ஜெயபாலாஜியை நாமும் பாராட்ட,96267 32184.
நள்ளிரவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
20:30

சென்னை : நான்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டதும், அதற்கான அரசாணை, நள்ளிரவில் வெளியானதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசு, நேற்று முன்தினம், நான்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்தது.இதற்கான அரசாணை, இரவு, 11:00 மணிக்கு வெளியானது. பள்ளிக் கல்வித் துறை செயலர், உதய சந்திரனுக்கும், துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. இதனால், பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை செயலர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு, அந்தப் பொறுப்பிற்கு, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்விபரம், பகல் நேரத்தில் வெளியானால், பெரும் விவாதத்தை உருவாக்கும் என்பதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் அரசாணையை, நள்ளிரவில் அரசு வெளியிட்டதாக கூறப்படுகிறது.



மருத்துவ கல்வி சேர்க்கையில்போலி இருப்பிட சான்றிதழ்

பதிவு செய்த நாள்25ஆக
2017
19:00

சென்னை, ''மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, போலி இருப்பிட சான்றிதழ் அளிக்கும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர், அஜ்மத் அலி; வழக்கறிஞர். பட்டியலில் ஆய்வுஇவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார்:கேரளா மருத்துவக் கல்வி குழு மற்றும் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட தரிவரிசை பட்டியல்களை ஆய்வு செய்தேன். அதில், கேரளா முகவரியில் விண்ணப்பித்திருந்த, ஒன்பது பேர், தமிழகத்திலும் வசிப்பது போல், இருப்பிட சான்றிதழ் பெற்றுள்ளனர்; அதை பயன்படுத்தி, இரு மாநிலங்களிலும், மருத்துவ இடம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். 

இவ்வாறு, புகார் அளித்திருந்தார்.இது குறித்து, சென்னையில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:மருத்துவம் படிக்க, கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேர், போலி இருப்பிட சான்றிதழ் அளித்தாக புகார்கள் வந்துள்ளன. இதை தடுக்க, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ்கள் வாங்கப்படுகின்றன. நடவடிக்கைபோலி இருப்பிட சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், அகில இந்திய கவுன்சிலிங் மற்றும் நிகர்நிலை பல்கலையில் இடம் கிடைத்த மாணவர்கள், மாநில கவுன்சிலிங்கில் இடம் பெற முடியாது. அது போன்று, இடம் பெற்ற மாணவர்கள் கண்டறியப்பட்டாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


'முத்தலாக் நடைமுறை செல்லும்!'   முஸ்லிம் மத தலைவர் கருத்து

ஐதராபாத்'மூன்று முறை, 'தலாக்' கூறி விவா கரத்து பெறும் முறை தவறு, பாவச் செயல்; ஆனால், மூன்று முறை தலாக் கூறி, விவா கரத்து பெறுவது செல்லும்' என, ஜமாயித்தே உலாமா ஹிந்த் அமைப்பின் தெலுங்கானா, ஆந்திரா பிரிவு தலைவர் கூறியுள்ளார்.





பாவச் செயல்

'முஸ்லிம்களின், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறை, சட்டவிரோத மானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இந்நிலையில், முஸ்லிம் மதத் தலைவர்கள் அடங்கிய, முஸ்லிம்களின் சமூக - மத அமைப்பான, ஜமாயித்தே உலாமா ஹிந்த் அமைப்பின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிவின் தலைவர், ஹபீஸ் பீர் ஷப்பீர் கூறியதாவது:

எங்கள் அமைப்பின் மத்திய குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதித்தோம். உடனடி விவாகரத்து பெறும் முத்தலாக் முறை தவறு, பாவச் செயல், அதை பயன்படுத்தக் கூடாது என்பதை நாங்கள் ஏற்கிறோம்.அதே நேரத்தில், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறினால், திருமணம் ரத்தாகும் முறை தொடரும். இவ்வாறு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றால், நீதிமன்ற அவமதிப் பாக எடுத்துக் கொள்வார்களா?உடனடி விவாகரத்து முறையின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மதத் தலைவர்கள் தவறிவிட்டனர். இந்த பாவச் செயலை தடுக்க முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது; பலர் தவறாகப் பயன் படுத்துகின்றனர்; இதை தவிர்த்திருக்கலாம்.

நிதி உருவாக்கப்படும்

முத்தலாக் தீர்ப்பின் மூலம், ஷரியத் சட்டத்தில், நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான அரசின் முயற்சி. முஸ்லிம் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறோம். முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவும் வகையில், ஒரு நிதி உருவாக்கப்படும்.ஷரியத் சட்டம், விவாகரத்தை ஏற்கவில்லை. அதனால், மூன்று முறை தலாக் கூறும் முறையை பயன்படுத்த வேண்டாம் என, முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.

வழக்கு தொடர்ந்தவருக்கு சிக்கல்

முத்தலாக் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த, முஸ்லிம் பெண்களில் முக்கியமானவர், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த, இஷ்ரத் ஜகான். 2004ல் திருமணமான இவருடைய கணவர் வெளிநாட்டில் உள்ளார்; 2014ல், வெளிநாட்டில் இருந்தபடியே, தொலை பேசி மூலம், மூன்று முறை தலாக் கூறி, கணவர் விவாகரத்து பெற்றார்.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், தான் புறக்கணிக்கப்படுவ தாக, இஷ்ரத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு விடாது. மக்களிடையே, சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். தீர்ப்புக்கு பின், என்னுடன் பேசுவதை, எங்கள் பகுதியில் உள்ளவர்களும், உறவினர்களும் நிறுத்திக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், முஸ்லிம் பெண்களின் சமூக நீதிக்கான என்னுடைய போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மீரட்டில் முதல் வழக்கு

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின், முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றதாக, உத்தர பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த ஒருவர் மீது, அவருடைய மனைவி போலீசில் புகார் கொடுத் துள்ளார்.முத்தலாக் சட்டவிரோத மானது என்று உச்ச நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு கூறியது. அதன்பின், மீரட்டைச் சேர்ந்த சிராஜ் அலி என்பவர், தன் மனைவி, ஆர்ஷி பேகத்தை, பொது இடத்தில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றார்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வும், அதை தராததால் விவாகரத்து பெற்றதாக வும், ஆர்ஷி பேகம், போலீசில் புகார் கொடுத் துள்ளார். குடும்ப வன்முறை சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், சிராஜ் அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2௦௦ ரூபாய் நோட்டு வெளியீடு ஏ.டி.எம்.,மில் கிடைக்காது

பதிவு செய்த நாள்25ஆக
2017
19:43




புதுடில்லி, ரிசர்வ் வங்கி, புதிய ௨௦௦ ரூபாய் நோட்டு வெளியிட்டது; இந்த நோட்டுகள், ஏ,.டி.எம்.,களில் கிடைக்க தாமதமாகும் என, தெரிகிறது.கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு, நவ.,௮ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிதாக ௨,௦௦௦ - ௫௦௦ நோட்டுகள் வெளியிடப்பட்டன.எனினும், சில்லரை தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால், ௨௦௦ ரூபாய் நோட்டு வெளியிட, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டை, ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டது. நாட்டில் பல வங்கி கிளைகளில், புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்தது. எனினும், இந்த நோட்டு களை வழங்கும் வகையில், 'புரோகிராம்' செய்யப்படாததால், ஏ.டி.எம்.,களில் நேற்று, இந்த நோட்டு கிடைக்கவில்லை. 'ஏ.டி.எம்.,களில், புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டு கிடைக்க, சில நாட்களாகும்' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டு, வெளிர் மஞ்சள் நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. நோட்டை மேலும், கீழுமாக அசைக்கும் போது, நோட்டில் உள்ள பச்சை இழையின் நிறம், நீல நிறமாக மாறுகிறது.இந்த நோட்டு, 66 மில்லி மீட்டர் உயரமும், 146 மில்லி மீட்டர் அகலமும் உடையது.

மக்கள் ஆர்வம்

புதிய ௨௦௦ ரூபாய் நோட்டை பார்ப்பதில், மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.புதிய ௨௦௦ ரூபாய் நோட்டு வாங்குவதற்காக, டில்லியில், பார்லிமென்ட் தெருவில் உள்ள வங்கி கிளையில், வங்கி திறப்பதற்கு முன்பே, வரிசையில் மக்கள் நின்றனர். புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டு கிடைத்தவுடன், அதை மற்றவர்களிடம் காட்டி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி முன், நீண்ட வரிசையில் நின்று, புதிய ௨௦௦ ரூபாய் நோட்டுகளை, மக்கள் பெற்றனர்.
காலாவதியான பதிவை புதுப்பிப்பதற்கு வந்தது வாய்ப்பு: போகாது மூப்பு!தவற விட்ட 20 ஆயிரம் பேருக்கு மகிழ்ச்சி!

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 23:01



அரசு வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று விரக்தியடைந்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செய்திருந்த பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, பதிவு மூப்பை திரும்பப்பெறுவதற்கு அரசு சலுகை வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவு எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் பயனடைவர்.

ஆரம்பப் பள்ளியில் படிப்பை முடித்தவர் முதல், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், டாக்டர், இன்ஜினியர், மருந்தாளுனர், டர்னர், வெல்டர், பிட்டர், தையல் கலைஞர் படிப்புகளை நிறைவு செய்தவர்கள், அரசு வேலைக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர், அரசு வேலைக்கு உதவுமென்று, இதைப் பதிவு செய்து விட்டு, மறக்காமல் புதுப்பித்தும் வருகின்றனர்.காலியிடங்கள் நிறைய...!இவர்களில், கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, முன் அனுபவம் ஆகிய தகுதிகளின் அடிப்படையில், அரசு வேலைகள் முன்பு ஒதுக்கப்பட்டு வந்தன. 

ஆனால், சமீபத்திய ஆண்டுகளாக, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வேலை வாய்ப்புப் பெறுவோர் எண்ணிக்கை, மிகவும் குறைந்து விட்டது. பெரும்பாலும் போட்டித்தேர்வு அல்லது ஆளுங்கட்சியினரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே, அரசு வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.

உண்மையில், தமிழக அரசின் கீழ் உள்ள, 57 துறைகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும், பல ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆனால், அரசின் கஜானா நிலை மோசமாக இருப்பதால், பணியிடங்களை நிரப்புவது, கூடுதல் பணியிடங்களை உருவாக்குவது போன்ற எந்த வேலையும் நடப்பதில்லை. இருப்பினும், கீழ்நிலையில் உள்ள சில பணியிடங்கள், வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.இதன் காரணமாகவே, ஆரம்பக்கல்வி படித்தவர்கள் முதல், உயர்கல்வி, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மேற்படிப்பை நிறைவு செய்தவர்கள் வரை, அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். போட்டித்தேர்வில், தேர்வு செய்யப்படுவோர்க்கும், பணி ஒதுக்கீடுக்கு, இந்த வேலைவாய்ப்பு பதிவு உதவுகிறது.அது மட்டுமின்றி, கல்வித் தகுதியின் அடிப்படையில், மாதாந்திர உதவித்தொகையும் அரசால் வழங்கப்படுகிறது. 

அதற்கும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அவசியம்.ஆனாலும், பல காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரில் சிலர், தங்களது வேலை வாய்ப்பு பதிவினை, சரியான கால அவகாசத்தில் புதுப்பிக்காமல் தவறவிட்டிருப்பர். அப்படி தவறியவர்களுக்கு கடந்த, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழக அரசு, மீண்டும் புதுப்பிப்பதற்கு, ஒரு சலுகையை வழங்கியது. அதே போல சலுகையை நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது புதிய அரசு உத்தரவு வாயிலாக வழங்கியுள்ளது.

நேரில் வர வேண்டாம்!

கடந்த ஆக., 22ம் தேதி அரசின் வேலை வாய்ப்புப் பயிற்சித்துறை வெளியிட்ட அரசாணையின் படி (எண்:500), 2011 முதல் 2015 வரை உள்ள வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், இப்போது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவர்களின் பதிவு மூப்பு, பழைய நிலையில் தொடரவும் இந்த அரசாணை வழி வகுத்துள்ளது. இச்சலுகையை பெற விரும்பும் வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள், 'ஆன்லைன்' வாயிலாகவும் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.இதற்கு, tnvelaivaaippu@gov.in என்ற இணையதளத்தில் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட அனைத்து உண்மை சான்றிதழ்களுடன் நேரில் வந்தோ, அல்லது பதிவஞ்சல் மூலமோ வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். இச்சலுகை 2017 நவ., 21 வரை மட்டுமே வழங்கப்படும்.

கோவை மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் 3.25 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில், 20 ஆயிரம் பேர் பதிவை புதுப்பிக்கவில்லை; இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, பதிவை புதுப்பித்தால், இழந்த பதிவு மூப்பை பெறமுடியும்; அரசு வேலை பெறவும் வாய்ப்புண்டு. நேரில் வராமல், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கும்போது, சரியான தகவல்களுடன் விண்ணப்பிப்பது அவசியம்,'' என்றார்.

இந்த உத்தரவு, பதிவைத் தவற விட்டுள்ள, 20 ஆயிரம் பேருக்கு, நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இவர்களில் எத்தனை பேர், இழந்திருந்த பதிவு மூப்பைப் பெறப்போகின்றனர் என்பது, வரும் நவ.,22 அன்று தெரிந்து விடும். போட்டித் தேர்வுகளில், ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெறுவோர், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் பணியில் சேர்வதற்கு, இந்த பதிவு மூப்பு பெரிதும் உதவும். இத்தகைய ஒரு வாய்ப்பை, மறுபடியும் தவற விடாமலிருப்பதே, புத்திசாலித்தனம்.

கலெக்டர் வேண்டுகோள்!
கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில், ''நான்குஆண்டுகளுக்கு பின்பு, இச்சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதை, பட்டதாரிகள் உட்பட அனைத்துப் பதிவுதாரர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். காலாவதியான வேலை வாய்ப்பு பதிவு மூப்பை சரிப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, 35 வயதிற்குள் அரசுப்பணியில் சேரவேண்டும் என்று விரும்புவோர், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்,'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-நமது நிருபர்-
பான்- ஆதார் இணைப்புக்கு 31 வரையே அவகாசம்
பதிவு செய்த நாள்26ஆக
2017
02:55




புதுடில்லி: 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு :

'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 31ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதனால், ஆதாரை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

காலக்கெடு:

இது குறித்து, ஆதார் எண்ணை வழங்கும் ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், ஆதார் எண்ணை பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவு, நிதி மசோதா மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதியுடன் முடிகிறது; அந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது.

செல்லும்:

பல்வேறு அரசு திட்டப் பணிகள், நல திட்ட உதவிகள், மானியங்களுக்கு, ஆதார் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. அதனால், ஆதார் தொடர்ந்து செல்லுபடியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, August 25, 2017

GITAM UNIVERSITY....New Indian Express


தேசிய செய்திகள்

காந்தியின் குடும்ப புகைப்படங்களை நீக்க பள்ளி கூடங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய அரசு ஊழியர்


காந்தியின் குடும்ப புகைப்படங்களை வலைதளங்களில் இருந்து நீக்கும்படி பள்ளி கூடங்களுக்கு ஷில்லாங் மண்டல அலுவலக ஊழியர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 24, 2017, 09:18 PM
புதுடெல்லி,

கடந்த 16ந்தேதி ஷில்லாங் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து 90 பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், உங்களது வலைதளங்களில் இருந்து காந்தி குடும்பத்தினரின் புகைப்படங்களை நீக்கி விடுங்கள். ஆணையாளர், துணை ஆணையாளர், மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி மற்றும் பிரதமர் புகைப்படங்களை பயன்படுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த 22ந்தேதி நவோதயா வித்யாலயா சமிதி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய செய்தியில், முந்தைய சுற்றறிக்கை அதிகாரபூர்வமற்றது என தெரிவித்திருந்தது.

இந்த சுற்றறிக்கையை அனுப்பும்படி ஷில்லாங் மண்டல அலுவலக ஊழியருக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. அதிகாரபூர்வமற்ற மற்றும் தவறான தகவல் அளித்த அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் நவோதயா வித்யாலயா சமிதியின் இணை ஆணையாளர் ராமசந்திரா தெரிவித்துள்ளார்.

நவோதயா வித்யாலயா பள்ளிகள் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளுடன் இணைந்து நடத்தப்படுபவை. இவற்றில் 6 முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன. நாட்டில் இதுபோன்று 590 பள்ளி கூடங்கள் உள்ளன.
கோரக்பூரில் குழந்தைகள் பலியான விவகாரம்: மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் உள்பட 9 பேர் மீது வழக்கு


உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70–க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தன.

ஆகஸ்ட் 25, 2017, 04:45 AM

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70–க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் அறிக்கை அளித்தனர்.

இந்த நிலையில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் புஸ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 9 பேர் மீது ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு கோரக்பூருக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சதி, கொடூர கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும், ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் (மருத்துவக்கல்வி) அனிதா பட்நாகர் ஜெயின் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வருவாய்த்துறை முதன்மை செயலாளரான ரஜ்னீஸ் துபே புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது மாணவர்களுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை



‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை என்ற கோழைத்தனமாக முடிவை எடுக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை கூறி உள்ளார்.

ஆகஸ்ட் 25, 2017, 04:30 AM

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருத்திகா தாக்கல் செய்த மனுவில், ‘மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த நான் பிளஸ்–2 தேர்வில் 1,184 மதிப்பெண் பெற்றுள்ளேன். ‘நீட்’ தேர்வில் 154 மதிப்பெண் பெற்றுள்ளேன். ‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு நடக்குமா? என்ற குழப்பத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்தை வாங்காமல் இருந்து விட்டேன். எனவே, பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள எனக்கு, மருத்துவ படிப்பில் ஒரு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு முறையான பயிற்சியினை தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கவில்லை. இதனால் பிளஸ்–2 பொது தேர்வில் ஆயிரத்து 184 மதிப்பெண் பெற்று, டாக்டராக வேண்டும் என்ற மனுதாரரின் கனவு, கனவாகவே ஆகிவிட்டது. ‘நீட்’ தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு, அவர் 154 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நீட் தேர்வில் மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை விட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளது பத்திரிகைகளில் வெளியான செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.

மொத்தம் 3,382 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1,310 இடங்களை தட்டிச் சென்றுவிட்டனர். வெறும் 2,220 இடங்கள் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிலும், 943 மாணவர்கள், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் ஓர் ஆண்டாக ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு ஆரம்பத்திலேயே நிராகரித்து இருந்தால், இவ்வளவு பெரிய குழப்பமும், பிரச்சினையும் ஏற்பட்டு இருக்காது. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் செயல் ஏற்புடையதல்ல. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக அரசும், ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரிய அதேநேரம், அந்த தேர்வுக்காக தமிழக மாணவர்களை தயார்படுத்தி இருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக கல்வித்தரத்தை உயர்த்தாமல், கடைசி நேரத்தில் தான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.

‘நீட்’ தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவை மீறி வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

எனவே, மனுதாரரின் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

அதேநேரம், ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்து விட்டோம் என்பதற்காக வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்று எந்த ஒரு மாணவரும் கருதக்கூடாது. இதற்காக தற்கொலை எனும் கோழைத்தனமான, முட்டாள் தனமான முடிவை மாணவர்கள் எடுக்கக்கூடாது.

எனவே தமிழக அரசு இனிமேலாவது ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய ஆறுதல் அளிக்கும் வகையில் பிரபலங்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், மனுதாரர் கூறியுள்ளது போல மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

NEET rank holder on course to realising his dream

Syed devoted a year to prepare for the exam

Syed Hafiz who secured the third position in NEET (National Eligibility Cum Entrance Test) ranking at the State-level is all set to be the first doctor in the middle-class family.
His father Syed Zakir Hussain, a loco pilot with Indian Railways, is, no doubt, happy, but regrets what he terms as a one-year loss for his son. He said: "I committed an error by shifting my son from CBSE to State Board for higher secondary studies with the focus of marks alone."
Nevertheless, Mr. Zakir Hussain is today a relieved lot as he did not admit his son in a private medical college at Bengaluru last year for a fee of Rs. 5 lakh per annum, based on last year's NEET score.
Syed Hafiz had attempted NEET last year also, but was not lucky since the Tamil Nadu Government had secured exemption from the exam for 'State Quota' seats in government medical colleges and private institutions. He was out of reckoning for admission under State Quota based on plus two marks since his overall score was 1120 out of 1200.
Syed Hafiz who was enamoured by the profession due to his zeal for societal service was particular that he would join MBBS only on merit and took the gamble of devoting a year to prepare for the entrance examination.
The strenuous preparation at home for a year did serve the desired purpose. By virtue of his score of 651 out of 720, Syed Hafiz got admitted in Madras Medical College, even before the State-ranking was announced.
"I focussed my preparation on the CBSE content at higher secondary during my year-long preparation for NEET entrance. State Board students will continue to be at a disadvantage if the teaching-learning system is not revamped. Building capability to understand concepts rather than memorising skill is key to cracking NEET successfully," Syed Hafiz said.
State Board students will continue to be at a disadvantage if the teaching-learning system is not revamped. Building capability to understand concepts rather than memorising skill is key to cracking NEET
Syed Hafiz
State third in NEET

Health Dept. issues notices to 868 persons

The Health Department has served warning notice on as many as 868 persons for their failure to destroy mosquito breeding sources following the outbreak of dengue in the district.
The department in association with all the government departments had launched anti-dengue operations in all the 20 blocks, four municipalities, 33 town panchayats by deploying a large number of medical teams. The staff of the department along with the local bodies has been destroying the mosquito breeding sources.
According to K. Poongodi, Deputy Director of Health Services, dengue warning notice was served on 868 people for their failure to check the breeding of mosquitoes in their households, shops, schools and colleges, workshops, industrial houses etc. Sanitary certificates of five private schools have been cancelled.
Surprise checks will be conducted regularly and action will be initiated against the erring people, Dr. Poongodi said.

Special buses to Velankanni

The Tamil Nadu State Transport Corporation Limited will operate special buses to Velankanni from Dindigul between August 28 and September 9 for St. Arokiaya Madha festival scheduled to commence on August 28, according to Corporation Managing Director C.V. Ilangovan.
He said 60 buses would be operated round the clock between Velankanni and Dindigul. Two special teams would be deputed to the bus stands in Dindigul and Velankanni to guide the pilgrims.

Ola, Uber to have pick up points at airport

In what may come as relief for commuters, private cab aggregators Ola and Uber will be able to pick them up at Chennai airport.
In a tie-up with the Airports Authority of India, these cab operators will have designated spots in the airport, where passengers can take the cab. Passengers who don’t have mobile apps of Ola and Uber on their phones will also be able to make a booking through their staff and take a ride. This facility is likely to start in a few weeks, sources said.
Kolkata and Lucknow airports too will have this facility at their airports.

Five disabled candidates allotted MBBS seats

UPDATED: AUGUST 25, 2017 03:42 IST
SHARE ARTICLE

As many as 117 seats allotted for persons with disabilities remained vacant on Thursday, the first day of single-window counselling for government quota seats in MBBS and BDS this academic year.

Although 58 applications had been received, only 20 were found eligible with NEET marks. Only five candidates were allotted seats, because they satisfied the disability norms prescribed. Officials said the rest of them did not qualify under the norms set for disability.

Similarly, 31 candidates who appeared under the ex-servicemen category for counselling, opted out. Officials said they had ascertained that their chances were better in general counselling that begins on Friday.

Karthikeyan G. of Coimbatore, with congenital club foot, was allotted the Madras Medical College. Ramanathapuram resident V. Sathyapriya, who had scored 134 in NEET and was certified as suffering from 55% deformity, was admitted to MMC. Her father runs a grocery shop.

S. Yukesh said “I skipped engineering counselling because I was sure to get a seat in medicine.” In class 12, he has scored 1087 and secured 149 in NEET. Yukesh has haemophilia and wants to pursue research in genetics. “But it is a faraway goal and I could change my mind,” said the candidate from Oddanchathiram in Dindigul district.

Vivegam hits screens with fanfare

The much hyped spy thriller is Ajith’s 57th film

With fans flocking to theatres as early as 4 a.m. on Thursday, actor Ajith’s Vivegam opened big across the State. The much hyped spy thriller, directed by Siva, is the actor’s 57th film.
Many theatres across Chennai had early morning shows, where members of the several fan clubs of the actor made a beeline. With advance booking having started earlier this week, the movie is expected to have packed shows through the long weekend with Friday being a holiday for Vinayaka Chaturthi. While the movie released in over 700 screens across the State, tickets were sold at exorbitant prices in a few theatres, which did not have a computerised or online ticketing system in place, cashing in on the rush to see the movie on the first day of release.
R. Krishna, a marketing professional in the city, who caught the 5 a.m. show at the Kolathur Ganga theatre, said that many fans performed milk ‘abhishekams’ to large cut-outs of the actor kept there. The movie had enjoyed considerable hype and buzz among fans which reached a peak after the release of the trailer and the soundtrack composed by Anirudh Ravichander.
“In most theatres, the early morning and morning shows were like a celebration for the fans. Most of them burst crackers and had put up banners a week ahead of the release, ” said T. Esakkimuthu, a private taxi driver and fan of the actor.
Members of the Samayal Kalai Thozhilalar Munnetra Sangam created a 57 kg idly with Ajith’s face carved in it to celebrate the release of the movie, and kept it at Bharath theatre.
Fans performed milk ‘abhishekams’ to large cut-outs of the actor at a theatre in Kolathur
R. Krishna
Marketing professional

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...