Saturday, June 10, 2017

சொந்த ஊர் முகவரியில் அரசு ஊழியருக்கு பாஸ்போர்ட் : மண்டல அலுவலர் தகவல்
பதிவு செய்த நாள்10ஜூன்2017 01:02

மதுரை: அரசு, பொது துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரது சொந்த ஊர் முகவரியில் பாஸ்போர்ட் பெறலாம் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வரராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இம்மண்டலத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மதுரை கோச்சடை, திருநெல்வேலியில் செயல்படுகின்றன. திண்டுக்கல் முதல் குமரி வரை ஒன்பது மாவட்ட மக்கள் பாஸ்போர்ட் சேவை பெறுகின்றனர். வாரந்தோறும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் அரசு மற்றும் பொது துறை நிறுவன ஊழியர்கள் அங்குள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

முதியவர்கள், குழந்தைகள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது இதுவரை கட்டணத்தை பாஸ்போர்ட் சேவை மையத்தில் பணமாக செலுத்தி வந்தனர். ஜூன் 12 முதல் இவர்கள் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தி முன்தேதி பெறாமல் பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் குழந்தைகள் விண்ணப்பிக்கும் போது 'ஸ்டெப் பாதர்/மாதர்' தொடர்பாக சில விதிகளை தளர்த்தியுள்ளது. பொதுமக்கள் பாஸ்போர்ட் நிலையின் விபரங்களை அறிய 1800 258 1800ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...