Saturday, June 10, 2017

துவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை
பதிவு செய்த நாள்10ஜூன்2017 01:48


திண்டுக்கல்: 'தமிழக துவக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஜாதி விபரம் கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரம் பதிவு செய்யலாம்' என, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி விபரங்கள் கேட்டு பதிவு செய்யப்பட்டன. சமீபகாலமாக பள்ளி கல்வித் துறையில் பல வகையான மாறுதல்கள் நடந்து வருகின்றன. 

பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை மாற்றம், இறைவழிபாட்டு முறையில் மாற்றம், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் மாற்றம், டிஜிட்டல் வருகை பதிவேடு பராமரிப்பு என தினமும் ஒரு மாற்றம் நடந்து வருகிறது.
இந்நிலையில் துவக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வரும் பெற்றோரிடம், பள்ளி நிர்வாகம் ஜாதி விபரங்களை கேட்கக் கூடாது. அதேநேரம் பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரங்களை பதிவு செய்யலாம் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி கல்வித் துறையின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதே.இதன் மூலம் சமதர்ம சமுதாயம் உருவாகும். சமச்சீர் கல்வி சாத்தியமாகும் என்றார்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...