Friday, June 16, 2017

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா : அறிவித்த அரசு டாக்டருக்கு சிக்கல்
பதிவு செய்த நாள்15ஜூன்2017 23:13

சென்னை: 'கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்த, அரசு டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உதவி பேராசிரியர், டாக்டர் தண்டபாணி. இவர், தான் நடத்தி வரும் ஸ்கேன் மையத்தில், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை, சட்ட விதிகளை மீறி தெரிவித்து, கூடுதல் பணம் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பான புகாரை அடுத்து, காளையார்கோவிலில் உள்ள, அவரது ஸ்கேன் மையத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரக அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.

இது குறித்து, ஊரக நலப்பணிகள் இயக்க அதிகாரிகள் கூறியதாவது: டாக்டர் தண்டபாணி நீண்ட விடுப்பில் உள்ளார். அவரது ஸ்கேன் மையத்தில், கூடுதல் பணம் பெற்று, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கூறியது, நிரூபணமாகி உள்ளது. 

இதையடுத்து, மையத்தில் இருந்த பரிசோதனை கருவிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர் மீது, பாலின தேர்வு தடை செய்தல் சட்டத்தின் படி, குற்றப்பத்திரிகை தயாராகி வருகிறது.

ஓரிரு நாட்களில், சிவகங்கை மாஜிஸ்திரேட் முன், தாக்கல் செய்யப்படும். பின், அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கவுன்சில் பதிவில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்படும் என்பதால், மருத்துவம் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Abandoned in forest, two-year-old walks for 20 hours, survives

Abandoned in forest, two-year-old walks for 20 hours, survives Amarjeet.Singh1@timesofindia.com 04.05.2026 Bhopal : A two-year-old boy, unc...