Monday, June 26, 2017

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் வரி கணக்கு தாக்கல் கட்டாயம்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்

2017-06-24@ 02:36:50




புதுடெல்லி, :ஆமாதபாத்தில் வருமான வரி தொடர்பான கருத்தரங்கில், முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் பி.சி. மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது : வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்படும் கணக்கு விவரங்களில் சந்தேகம் எழும் நிலையில், அது குறித்து விளக்கம் மட்டுமே கேட்கப்படும். ரிடர்ன் தாக்கல் செய்பவர்கள் மீது அரசு முழு நம்பிக்கை வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வருமான வரி நிபுணரும், ஈஸ்வர் குழு உறுப்பினருமான முகேஷ் படேல் கூறியதாவது: வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது 2.5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

ஆனால், இந்தாண்டு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு மொத்த வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீண்ட கால ஆதாய பலன்களையும் இதில் சேர்க்க வேண்டும். வருமான வரி கட்டாவிட்டாலும் ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இதை அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது சரியான முடிவுதான். சிலர் பல பான் எண்களை பெற்று கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எளிதாக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...