Monday, June 26, 2017

வளைகுடா நாடுகளில் இன்று ஈகை திருநாளையோட்டி லட்சகணக்கானோர் பெருநாள் தொழுகையில் பங்கேற்பு

2017-06-25@ 15:35:58




துபாய்: முஸ்லிம்கள் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலம் நிறைவு பெற்ற பிறகு ஈகை திருநாளான‌ ரமலான் பெருநாள் கொண்டாடப்படும். வளைகுடா நாடுகளில் இன்று ஈகைப் பெருநாள் இன்று கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

சவூதி அரேபியா,கத்தார்,அமீரகம்,குவைத், உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. துபாய் தேராவிலுள்ள ஈத்கா மைதானத்தில் அதிகா காலை ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகையில் பங்கெடுத்து ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025