Friday, August 25, 2017

Alert nurse saves baby on train

Quick responseGomathi, second from right, was quick to use CPR to revive the child.Special Arrangement  

1-year-old suffered epileptic attack

Timely intervention by a nurse saved the life of an infant, who suffered an epileptic attack while travelling on a suburban train on Wednesday.
Around 7.30 a.m, G. Gomathi, a nurse at a private hospital in Ennore, boarded the suburban train from Gummidipoondi on her way to work. When the train reached Ponneri, Jayachitra and her one-year-old son Yuvanesh boarded the women’s compartment. According to Southern Railway employee Rajasekhar, an eye-witness, between Ponneri and Minjur, the child suddenly suffered an epileptic attack.
Terrified mother
“In a few minutes, the child’s eyeballs had rolled back and he turned cold. His mother began crying loudly, thinking her child was dead,” said Mr. Rajasekhar. Gomathi rushed to Jayachitra’s help and then asked a co-passenger, Sharmila, to hold the child upside down. “Then, I patted the back of the child few times and using the airway breathing circulation technique, blew into his mouth. In a few seconds, the child’s condition returned to normal. I pinched the baby and he started crying,” Gomathi told The Hindu .
Jayachitra and others in the compartment applauded the nurse for her life-saving intervention.
“I completed my nursing course four years ago and joined the private hospital in Ennore. They give us monthly training on first aid techniques, including airway breathing circulation,” said Ms. Gomathi.

29,000 engineering seats remain vacant

The trend of engineering seats remaining vacant has continued this year too. Over 29,000 engineering seats, of the total 77,500, are vacant. In other words, 37% of the engineering seats in private, government and aided colleges, bagged by students through the CET or COMEDK route have gone unfilled.

Seven AIIMS students suspended for ragging

Seven B.Sc students of optometry and nuclear medicine at AIIMS here have been suspended for three months for allegedly ragging their juniors.

Privacy is a fundamental right, declares SC

While saying it is intrinsic to life and liberty, the court also said that it is not an absolute right

In a unanimous verdict, a nine-judge Constitution Bench of the Supreme Court on Thursday declared that privacy is intrinsic to life and liberty and an inherent part of the fundamental rights enshrined in the Constitution.
The court held that privacy is a natural right that inheres in human beings because they are human. The state does not bestow natural rights on citizens. Natural rights like privacy exist equally in all individuals, irrespective of class, strata, gender or orientation.
‘Core of human dignity’
“Privacy is the constitutional core of human dignity. Privacy ensures the fulfilment of dignity,” Justice D.Y. Chandrachud wrote.
The Centre had argued against the recognition of privacy as a fundamental right. It had assured the court that privacy would be protected through parliamentary statutes.
But the court retorted that statutory laws “can be made and also unmade by a simple parliamentary majority.”
“The ruling party can, at will, do away with any or all of the protections contained in the statutes. Fundamental rights are rights citizens may enjoy despite the governments they elect,” Justice Rohinton F. Nariman explained in his separate judgment.
The court chided the Centre for describing right to privacy as an “elitist construct.” Attorney-General K.K. Venugopal had argued that privacy was the concern of a few, while schemes like Aadhaar, which require citizens to part with their biometric details to the state, reduce corruption and benefit millions of poor.
Essential provision
“The refrain that the poor need no civil and political rights and are concerned only with economic well-being has been utilised through history to wreak the most egregious violations of human rights. It is privacy, as an intrinsic and core feature of life and personal liberty, which enables individuals to stand up against a programme of forced sterilisation. It is the right to question, scrutinise, dissent which enables an informed citizenry to scrutinise the actions of government,” Justice Chandrachud said, addressing Mr. Venugopal's arguments.
However, the court held that privacy is not an absolute right. The government can introduce a law which “intrudes” into privacy for public and legitimate state reasons. But a person can challenge this law in any of the constitutional courts of the land — the Supreme Court or the State High Courts — for violation of his fundamental right to privacy.
HC dismisses anticipatory bail to a man who was arrested by ED for money laundering

Siddharth Prabhakar| TNN | Aug 24, 2017, 20:29 IST




CHENNAI: Contending that the petitioner was a 'dubious character' who assumed multiple identities and against whom there were serious complaints, Madras High Court dismissed the bail petition moved by a man who was arrested by Enforcement Directorate recently for money laundering.

Apart from assuming several names, the petitioner had submitted forged documents to a bank on the strength of which huge foreign exchange had left the country, Justice PN Prakash said. " If granted bail, he would not be available for trial," he said, while rejecting the bail.

ED had registered a case against Liakath Ali, proprietor of Galaxy Impex, after the Central Crime Branch (CCB) of Chennai police had registered an FIR for filing forged bill of entries to support their claim of physical imports and park funds outside the country. This was based on an alert from Customs and Indian Bank.

During the investigation, ED found that Rs 21.27 crores came into an Indian Bank account started by Ali, of which Rs 19.52 crores left the country. Import documents were allegedly forged and Ali had not imported any goods.

Ali's counsel argued that the Rs 19.52 crore that left India were not 'proceeds of crime' and as regards the forged import bills submitted to the bank, he could be prosecuted only under IPC or Customs Act, but not under PMLA.

He also stated that the sum of Rs 21.27 crore was not acquired as a result of forgery of import bills and the forged documents were used only to authorise it out of the country. He also contended that there was no loss to Indian Bank.

Justice Prakash said that a closer scrutiny of the facts in the case showed that petitioner was part of a larger group which was siphoning out foreign exchange out of the country. He had also taken ED officials on a wild goose chase during questioning and had not yet told them how such a huge amount of money came into the account and where it went.

"As regards non-applicability of PMLA to the facts of the case, same cannot be decided in a bail application and matter should be left open to the trial court to decide," Justice Prakash said, dismissing the bail petition.
Chennai Metro offers festival discount

U Tejonmayam| TNN | Aug 24, 2017, 21:54 IST



CHENNAI: Chennai Metro Rail Limited (CMRL) is offering a 20% discount on Metro rail tickets starting from Friday to October 31 on account of festival season. The discount is applicable to both tokens and travel cards, which has been made mandatory for commuting across underground stretch.

CMRL had earlier offered similar discounts when the city's first underground line between Nehru Park and Thirumangalam was thrown open on May 14, 2017 in an attempt to encourage commuters to use metro rail facility.

Post the launch of the underground stretch, patronage for metro trains went up by at least 10,000. About 12,000 to 14,000 passengers used the service on an average a day before the underground stretch was thrown open for public.

Now, about 22,000 to 25,000 passengers commute through metro trains a day. CMRL's daily revenue has also doubled since the increase in patronage. The daily average revenue has gone up to Rs 10 lakh from Rs 4.2 lakh.

RPF employment notice being circulated on social media is fake: Southern Railway

Siddharth Prabhakar| TNN | Aug 24, 2017, 20:01 IST




CHENNAI: Southern Railwayon Thursday said that an employment notice which is circulating on social media for vacancies in Railway Protection Force (RPF) is fake. The notice is going viral on instant messaging groups and social media.

The seven-page employment notice for recruitment of RPF constables contains the number of vacancies (reservation of SC/ST/OBC), eligibility criteria, recruitment process, nodal officers (4 CSCs), etc. The last date for receipt of application form has been given as October 14.

"The notification found under circulation is fake and has not been issued by security directorate, railway board or any of the chief security commissioners mentioned therein, as clarified by chief security commissioner, Southern Railway. Circulation of such fake employment notices will misguide the public and gullible candidates," said Southern Railway.

General public has been advised to not respond to the notice or circulate it, said a statement.
Confusion over NEET hands high scorers raw deal

TNN | Updated: Aug 24, 2017, 12:27 AM IST

Chennai: Mustansir Aziz Kitabi smiled when he saw officials waving the toppers list with his photograph. With 607 marks in NEET, he was ranked 17 - a score that would have fetched him a seat in the state's premier Madras Medical College.

But the smile faded when he was told that he would not be eligible to attend the counselling as he had taken admission in the Government Medical College in Omandurar, Chennai under the all-India quota. Like other years, the state had surrendered 455 of the 2,900 seats in the 22 government medical colleges to the Directorate General of Health Services for all-India counselling. "I took the seat because it wasn't clear to me whether the state would admit students based on scores of NEET or boards. As I didn't score high in Class XII, I was scared I won't get admission based on those marks," he said.

For almost two months the state has been uncertain about the NEET policy. Finally on Tuesday, the Supreme Court directed Tamil Nadu to begin medical counselling based on NEET scores.

But for students like Kitabi, the decision to be safe with Omandurar, stymied his chances for admission in the Madras Medical College. State selection committee secretary A Selvaraju said students who have joined medical colleges based on the all-India quota will not be allowed to vacate their seats. "The DGHS has said students who have joined colleges can't vacate their seats. This is based on a SC order," he said.

This despite the fact that the DGHS returned 102 government seats, including 18 in the Madras Medical College. Kitabi's friend Manas Das, who was rank 28 is facing a similar crisis. "It's a sad irony. We have the scores and there are seats but we can't join the college," he said.

Several students among the top 100 have been allotted seats in the all-India quota. But some students were happy they joined colleges ahead of others. Coimbatore-based Mukesh Kanna, Chennai-based Aiswariya Srinivasan and Syed Hafiz Z from Trichy, who are among the top five, said they were happy to been placed in colleges in their own cities. Kanna, who stood second with a NEET score of 655, was admitted to Coimbatore Medical College and Srinivasan and Hafiz were admitted to the Madras Medical College. "I decided to take the seat under the all-India quota because of the confusion," Srinivasan said. ranked third in the state rank list of NEET this year.

Woman IPO official gets 1 year rigorous imprisonment for graft

PTI | Aug 24, 2017, 19:47 IST

Representative image. Representative image.
CHENNAI: A senior woman official of the Intellectual Property Office here was today sentenced to one year's rigorous imprisonment by a CBI court in a disproportionate assets case.

Special Judge S Natarajan convicted N D Kasturi, Deputy Registrar, Trade Mark, Intellectual Property Office, Chennai, of the charge that she possessed disproportionate assets of Rs 2.22 crore between April, 2000 and March, 2010.

TOP COMMENT  Hello Mr judge. Give me 2 crore... and put me behind bars for 1 year and take 25000 fine.. I am happy with the deal. What happened to the asset... Did u freeze.Murugadas Kannan

She could not give any satisfactory explanation for the assets during the investigation, the judge held.
A charge sheet was filed by the Central Bureau of Investigation (CBI) and on completion of the trial, Kasturi was sentenced to undergo rigorous imprisonment of one year, and slapped with a fine of Rs 25,000, a CBI release said.
மெட்ரோ ரயில் பயணம் 20% கட்டண சலுகை
பதிவு செய்த நாள்25ஆக
2017
01:04

சென்னை: மெட்ரோ ரயில் பயணத்திற்கு, 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்கா; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் போக்குவரத்தில், தினசரி, 22 ஆயிரத்தில் இருந்து, 24 ஆயிரம் பயணியர் வரை பயணம் செய்கின்றனர்.
பண்டிகை நாட்களையொட்டி, மெட்ரோ ரயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இன்று முதல், அக்., 31ம் தேதி வரை, 20 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால், விமான நிலையத்தில் இருந்து, நேரு பூங்காவிற்கு, 48 ரூபாய்; பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கு, 40 ரூபாய்; கோயம்பேட்டில் இருந்து, நேரு பூங்காவிற்கு, 32 ரூபாய்; விமான நிலையத்தில் இருந்து சின்னமலைக்கு, 32 ரூபாய் கட்டணத்தில், சென்று வரலாம்.
'க்யூரேட்டிவ்' மனு: சசிகலாவின் கடைசி ஆயுதம்

'மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடைசியாக, 'க்யூரேட்டிவ்' மனு தாக்கல் செய்ய, சசிகலாவுக்கு வாய்ப்பு உள் ளது. அதிலும், அவருக்கு நிவாரணம் கிடைக் குமா என்பது சந்தேகமே' என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.




சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் விதித்தது. ஜெ., மரணத்தை தொடர்ந்து, ஜெ., மீதான மேல் முறையீட்டு வழக்கை கைவிட்டு, மற்றவர் களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, சசி கலா உள்ளிட்ட மூவரும், உச்ச நீதிமன்றத்தில்

மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான, பி.சி.கோஷ் ஓய்வு பெற்று விட்டார். அதனால், வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி அமித்வ ராய் உடன், நீதிபதி பாப்டே அமர்ந்து, மறு ஆய்வு மனுவை விசாரித்தார்.

'உச்ச நீதிமன்ற உத்தரவில், எந்த தவறும்இருப்பதாக தெரியவில்லை; மறு ஆய்வு கோரிய மனு, தள்ளு படி செய்யப்படுகிறது' என, உச்ச நீதி மன்றம், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்ததாக, கடைசி வாய்ப்பாக, இறுதி நிவாரண மனுவாக கருதப்படும், க்யூரேட்டிவ் மனுவை தாக்கல் செய்ய முடியும். க்யூரேட்டிவ் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றம் விதித் துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

தேவையான விபரங்கள், மனுவில் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது என்பதை, மூத்த வழக்கறிஞர் ஒருவர் உறுதி செய்ய வேண்டும். மனு, விசாரணைக்கு ஏற்பு உடையதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு அனுப்பும் படி, தலைமை நீதிபதி உத்தரவிடுவார். அதன்பின், மூத்த நீதிபதிகள் மூவர் மற்றும் ஏற்கனவே வழக் கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு, க்யூரேட்டிவ் மனு அனுப்பப்படும்.

மனுவை விசாரிக்க வேண்டிய தேவை இருப் பதை, பெரும்பான்மை நீதிபதிகள் ஒப்புக் கொண்டால்,பின், ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி களுக்கு, க்யூரேட்டிவ் மனு அனுப்பப்படும். வழக்கில் தகுதியில்லை என, நீதிபதிகள் கருதி னால், மனுதாரருக்கு, அபராதமும் விதிக்க முடியும்.

இது குறித்து, மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, 'மறு ஆய்வு மனுவே, பெரும் பாலும் நிலைக்காது; தள்ளுபடி தான் ஆகும். க்யூரேட்டிவ் மனுவை தாக்கல் செய்யலாம். 'அது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.மறு ஆய்வு மனுவை போலவே, க்யூரேட்டிவ் மனுவிலும், நிவாரணம் கிடைப்பது என்பது மிக மிக அரிது' என்றார். 

- நமது நிருபர் -
'நீட்' தேர்வுக்கு சிறப்பு ஆசிரியர்கள், கூடுதல் பயிற்சி: மாணவர்களை தயார்படுத்த ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்24ஆக
2017
23:53

சென்னை;'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் மற்றும் கூடுதல் பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, விண்ணப்பம் அளிக்க உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்ற மாணவி மனு தாக்கல் செய்தார். 

மனுவை தள்ளுபடி செய்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற, மாநில அரசு எடுத்த முயற்சிகளில் குற்றம் காண முடியாது என்றாலும், கல்வியாண்டு துவக்கத்திலேயே, நீட் தேர்வை எதிர்கொள்ள, மாணவர்களை தயார்படுத்தி இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில், தகுந்த பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளை நடத்தியிருக்க வேண்டும்.தமிழகம் மட்டுமே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரியது. மற்ற மாநிலங்கள் எதுவும், விலக்கு கோரவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் படிப்பறிவு உள்ளவர்கள் அதிகம் உள்ளனர்; அதிக எண்ணிக்கையில், கல்வி நிறுவனங்களும் உள்ளன.

பொருளாதார, கல்வி ரீதியாக பின்தங்கிய மாநிலங்களான, ஜார்க்கண்ட், ஒடிசா, பீஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கூட, நீட் தேர்வுக்கு விலக்கு கோரவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு பெற, தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்ததால், இந்த ஆண்டுக்கு விலக்கு கிடைத்து விடும் என, மாணவர்களும், பெற்றோரும் கருதியிருக்கலாம். அதனால், தேர்வுக்கு தயாராகாமல் இருந்திருக்கலாம். விலக்கு கோரும் அதே நேரத்தில், மாணவர்களையும், அரசு தயார்படுத்தியிருக்க வேண்டும். அதை, அரசு செய்யவில்லை.துவக்கத்திலேயே, மாநில அரசின் கோரிக்கையை, மத்திய அரசும் நிராகரிக்கவில்லை. நீட் தேர்வு விலக்கு குறித்து, சாதகமான நிலையை மத்தியஅரசு எடுத்ததாக, பத்திரிகைகளில் செய்தி வந்தன. 

பின், உச்ச நீதிமன்றத்தில் எதிர்மறையான நிலையை, மத்திய அரசு எடுத்தது. அதுவரை, நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என, மாணவர்கள் கருதினர். மத்திய அரசு நடந்து கொண்ட விதமும், இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்.மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் தான் பொறுப்பு என, முதலில் இந்த நீதிமன்றம் கருதினாலும், பிரச்னையை ஆழமாக பரிசீலிக்கும்போது, மாநில அரசின் தவறுகளும் வெளிப்படுகிறது.தற்போதைய சூழ்நிலைக்கு, கீழ்கண்டவை காரணங்கள்:l பிளஸ் 1 பாடத்திட்டத்தை பயிற்றுவிக்காததால், அதில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியவில்லை. பிளஸ் 2 பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன; அதிகாரிகளும், இதை கவனிக்க தவறி விட்டனர்l நீட் தேர்வுக்காக, இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாடத்திட்டத்தை, கற்பிக்க தவறியதுl அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை, மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த, அரசு மற்றும்தனியார் பள்ளிகள் தவறியதுl 10 ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, மாநில அரசு தவறியது.மருத்துவப் படிப்பில் கூடுதல் இடங்களை உருவாக்க, வழக்கறிஞர்கள் நீலகண்டன், வேல்முருகன், சூரியபிரகாசம் ஆகியோர் கோரினர். அப்படி ஒரு உத்தரவை, இந்த நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மாநில அரசு தான் பரிசீலனை செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கூடுதலாக, பயிற்சி வகுப்புகளை, அரசு துவங்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பெற்றோரின் மனநிலையில், இந்த நீதிமன்றம் அக்கறை கொள்கிறது. அவர்கள், மன உறுதியைஇழக்கக் கூடாது. உண்மை நிலையை புரிந்து, முன்னேற வேண்டும்.மாணவர்களும், பெற்றோரும், தவறான முடிவுகளை எடுக்க கூடாது. அவர்களுக்கு, அரசு ஆலோசனைகள் வழங்க வேண்டும். கல்வியாளர்களும், சினிமா பிரமுகர்களும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், அறிவுரைகளை வழங்க வேண்டும். நவீன பாடத்திட்டத்தின்படி, தகுந்த கல்வியை வழங்க, மாநில அரசு, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நீட் தேர்வில் அரசுக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, குறிப்பாக பள்ளி கல்விக்கு, அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என, இந்த நீதிமன்றம் நம்புகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையே '
ஆதார்' வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி: 'ஆதார்' தொடர்பான வழக்கில், 'தனி மனித சுதந்திரம் என்பது, அரசி யலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமையே' என, உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.





பல்வேறு அரசு நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும்,மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அந்த மனுக்களில் கூறப்பட்டதாவது:

ஒருவரது தனிப்பட்ட விபரங்கள் என்பது, தனி மனித சுதந்திரம்; அது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. ஆதார் பதிவுக்காக, மக்கள் அளித்துள்ள தங்களின் தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை, தனியார் பயன்படுத்த, மத்திய அரசு அனுமதி அளிப்பது, தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல். அதனால், தனியாருக்கு தகவல்கள் அளிக்க தடை விதிக்க வேண்டும்.

தனி மனித சுதந்திரத்தை மீறும் செயல் என்பதால், ஆதாரை கட்டாயமாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவற்றில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது; பின், ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து, 'தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையா' என்ற வழக்கு, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.இது தொடர்பாக நடந்த விசாரணைகளுக்கு பின், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான, ஒன்பது நீதிபதிகள் அரசியலமைப்பு சட்ட அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே,

ஆர்.கே.அகர்வால், ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.சப்ரே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அமர்வு, ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளது. 'தனி மனித சுதந்திரம் என்பது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. 'அரசியலமைப்பு சட்டத்தின், 21வது பிரிவு மற்றும் பாகம் - 3 ஆகியவை அளிக் கும், வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றுடன் உள் ளார்ந்த ஒரு பிரிவே, தனி மனித சுதந்திரம்' என, உச்ச நீதிமன்ற அமர்வு, தன் தீர்ப்பில் கூறிஉள்ளது.

தனி மனித சுதந்திரம் தொடர்பாக, எம்.பி., சர்மா வழக்கில், எட்டு நீதிபதிகள் அமர்வு, 1950லும், கரக்சிங் வழக்கில், ஆறு நீதிபதிகள் அமர்வு, 1960லும் அளித்த, 'தனிமனித சுதந்திரம் என்பது, அடிப்படை உரிமை இல்லை' என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை, தற்போதைய தீர்ப்பு ரத்து செய்கிறது.இந்த தீர்ப்பை அடுத்து, 'ஆதார் தனி மனித உரிமையை மீறுகிறதா' என்ற முக்கிய வழக்கின் விசாரணை, ஐந்து நீதிபதி கள் அமர்வில் தனியாக நடக்கும்.

அவசர ஆலோசனை

உச்ச நீதிமன்ற தீர்ப்பு, 'ஆதார்' அடையாள அட்டை யில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து, மத் திய அரசு ஆலோசனை நடத்தியது.தீர்ப்பு வெளி யான உடனேயே, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, பிரதமரின் முதன்மை செயலர் நிரிபேந்திர மிஸ்ரா சந்தித்து பேசினார். அதன்பின், இருவரும், நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அரசு வரவேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:'ஆதார்' மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்த போது, அரசு கூறியவற்றை, இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது. தனி மனித சுதந்திரம் என்பது, உரிமையாக இருந்தாலும், அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை என்ற அரசின் நிலைப்பாட்டையே, இந்த தீர்ப்பும் கூறுகிறது.

கண்காணிப்பின் மூலம் நசுக்க பார்க்கும் கொள்கை யை, பா.ஜ., கொண்டுள்ளதாக, காங்., கூறுவது வேடிக்கையாக உள்ளது. 'எமர்ஜென்சி' காலத்தின் போது, தனி மனித சுதந்திரம் எப்படி காக்கப்பட்டது
என்பது, அனைவருக்கும் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

புது யுகத்தின் துவக்கம்!

தனி மனித சுதந்திரம், அடிப்படை உரிமையே என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பின் மூலம், சாமானியர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது; இது, தனி மனித சுதந்திரத்திற்கான,புது யுகத்தின் துவக்க மாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சோனியா, தலைவர், காங்.,

மத்திய அரசுக்கு பின்னடைவு!

உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு களில், இதுவும் ஒன்று. 'ஆதார்' அட்டை விவகாரத்தில், மத்திய,பா.ஜ., அரசு கையாளும் நடைமுறைகள் தவறானவை என்பது. நிரூபணமாகி உள்ளது.

ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,

நீதி துறையினர் வரவேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மூத்த வழக் கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலு மான, சோலி சொராப்ஜி கூறியதாவது:இது, மிகவும் முற்போக்கான, மக்களின் உரிமையை பாதுகாக்கும் தீர்ப்பு. ஒருமித்த தீர்ப்பு அளித் துள்ளதன் மூலம், மிகச் சிறந்த உதாரணத்தை, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. மக்கள் வேவு பார்க்கப்படுவது தடுக்கப்படும்; இது, கொண்டா டப்பட வேண்டிய நாள்.

இந்த தீர்ப்பால், 'ஆதார்' ரத்தாகுமா என்பதை, தற்போதைக்கு கூற முடியாது. முழு தீர்ப்பை யும் படித்தால் தான் கூற முடியும். அதே நேரத் தில், ஆதாரை முழுமையாக ரத்து செய்ய முடி யாது. எந்த ஒரு உரிமையும், முழுமையான உரிமையல்ல;சில கட்டுப்பாடுகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.'

'இந்த தீர்ப்பை வர வேற்கிறோம். மத்திய அரசின் நிலைப்பாட்டையே, இது உறுதி செய்கிறது. மற்ற அடிப்படை உரிமைகளை போலவே, தனி மனித சுதந்திரமும், முழுமை யான உரிமையல்ல. அதற்கு, சில கட்டுப்பாடு கள் உள்ளன,'' என, பா.ஜ., செய்தித் தொடர்பாள ரும், வழக்கறிஞருமான, அமன் சின்ஹா கூறினார்.
ரயில்வே வேலை போலி அறிவிப்பு

பதிவு செய்த நாள்25ஆக
2017
04:14

மதுரை: 'ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி காலியாக இருப்பதாக வெளியான அறிவிப்பு போலியானது' என ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிக்கை: வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்பு பொதுமக்களை தவறான திசையில் இட்டு செல்கிறது. இந்த அறிவிப்பு போலியானது என அதில் தெரிவித்துள்ளது.
தங்கத்தை கூழாக்கி நூதனமாக கடத்தல்
பதிவு செய்த நாள்25ஆக
2017
01:05


சென்னை: மலேஷியாவில் இருந்து, நுாதன முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டவரிடம், சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவான, ஏ.ஐ.யு., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேஷியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில்இருந்து, 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 10:30 மணிக்கு, சென்னை வந்தது. இதில் வந்த அப்சல்கான் என்பவரை, சந்தேகத்தில், ஏ.ஐ.யு., அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரிடம், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்திலான ரசாயன கலவை இருந்தது. அதை சோதனை செய்தபோது, நைட்ரிக் அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில், தங்கக் கட்டிகளை கூழாக்கி, திரவ நிலையில், கலந்திருப்பது தெரிய வந்தது. இந்த கலவையில் இருந்து, 10 மணி நேரம் போராடி, 177 கிராம் தங்க பொடி மற்றும் கைப்பையில் இருந்த, 217 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு, 6.31 லட்சம் ரூபாய்.

இதுகுறித்து, ஏ.ஐ.யு., அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில், இதுபோன்று திரவ நிலையில் தங்கத்தை கடத்தி வந்து, சிக்குவது இதுவே முதல் முறை. 

அவரிடமிருந்து, 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆறு, லேப் - டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிக்கிய, அப்சல்கானிடம், விசாரணை தொடர்கிறது' என்றனர்.
கருவூலத்தில் ரூ.1.50 கோடி மோசடி - அதிகாரி மரணம்; விசாரணை சிக்கல்

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:10

திண்டுக்கல்: அரசு கருவூலத்தில், வறட்சி நிவாரண நிதி, 1.5 கோடியை மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய அலுவலர் இறந்ததால், விசாரணையில் சிக்கல் நீடிக்கிறது.

கொடைக்கானல் சார்நிலை கருவூல இளநிலை உதவியாளர் அருண்குமார், 34. இவரும் கூடுதல் சார்நிலை கருவூலர் விஜயகுமாரும் கருவூல கணக்கில் இருந்த, அரசின் வறட்சி நிவாரண நிதி, 1.5 கோடியை, 11 பேரின் வங்கி கணக்கில் வரவு வைத்து மோசடி செய்தது, சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள அருண்குமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அவரது மனைவி, கனிமொழி பெயரில், 3 ஏக்கர் நிலம் இருப்பது தெரிந்தது. மேலும், 28 சவரன் நகை, 2.40 லட்ச ரூபாயை கைப்பற்றினர்.

இதையடுத்து, அருண்குமார் - கனிமொழியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த, விஜயகுமார், மதுரையில் இரு நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இவர் இறந்ததால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், யாரிடம் விசாரணை நடத்துவது என தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
'வீட்டுக்கு போகணும்!'

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:15

புதுச்சேரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்களில் எட்டு பேர், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, வீட்டிற்கு செல்ல வேண்டும் என, அடம் பிடித்தும், அவர்களை வெளியே அனுப்ப, தினகரன் ஆட்கள் மறுத்து விட்டனர்.

புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள, நட்சத்திர சொகுசு விடுதியில், தினகரன் ஆதரவு, 19 எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 'ஒரு நாள் பொழுதுபோக்கி விட்டு வரலாம்' எனச் சொல்லி, அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு வாரக்கணக்கில் தங்க ஏற்பாடுகள்செய்யப்பட்டிருப்பதை அறிந்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களில், ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு பெண், எம்.எல்.ஏ., உட்பட, எட்டு பேர், தினகரன் நடவடிக்கை பிடிக்காததால், மனம் மாறியுள்ளனர். 'எங்களை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்' என, கேட்டுள்ளனர். ஆனால், அனுப்ப மறுத்து விட்டதாக தெரிகிறது.

அதனால், கோபமடைந்த, பெண், எம்.எல்.ஏ., தன் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வேண்டும் என, தகராறு செய்துள்ளார். குடும்பத்தினரை அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறி, அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.
மொத்தத்தில், பெண், எம்.எல்.ஏ., உட்பட, எட்டு பேர், 'விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, வீட்டுக்கு செல்ல வேண்டும்' என, வற்புறுத்தியும், அதற்கு, தினகரன் ஆட்கள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையில், நேற்று காலை, புதுச்சேரி சென்று, அங்கு, எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து பேச, தினகரன் திட்டமிட்டிருந்தார்.
அவரிடம், தங்கள் விருப்பத்தை சொல்லி, அவரது அனுமதியுடன் வீட்டிற்கு செல்ல, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இருந்தனர். 

இந்த தகவல் தெரிய வந்ததும், புதுச்சேரி செல்லும் முடிவை, தினகரன் கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
70 கிலோ, 'முக்குறுணி' கொழுக்கட்டை : மதுரையில் 36 மணி நேர பக்தி படையல்

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:07


மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, 70 கிலோ, 'முக்குறுணி கொழுக்கட்டை' தயாரிக்கப்பட்டு வருகிறது.

மதுரை ரயில்வே காலனி, சித்தி விநாயக செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலின், சடகோப ராமானுஜ அய்யப்ப பக்த சபை குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து, கோவில் குருநாதர் பாலாஜி கூறியதாவது:
மதுரை மீனாட்சி கோவில், பிள்ளையார்பட்டி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடி இங்குதான், 'மெகா முக்குறுணி கொழுக்கட்டை' தயாரிக்கிறோம். 

இது எங்களுக்கு, 11வது ஆண்டு. 18 படி அரிசி, வெல்லம், தேங்காய், நெய், ஏலக்காய் கலந்து தயாராகும் இந்த கொழுக்கட்டையின் எடை, 70 கிலோ.
அரிசியின் அளவை, 'குறுணி' என்ற அளவையில் அளப்பதால் இதற்கு, 'முக்குறுணி கொழுக்கட்டை' என, பெயர் வந்தது. ஒரு குறுணி, 6 படி.
'மெகா' உருண்டையாக உருட்டிய மாவை, பனை துணிப்பைக்குள் வைத்து, பனை ஓலை சுற்றி, நீர் நிரப்பிய பெரிய பாத்திரத்தில் வைத்து விறகு அடுப்பில் வேக வைக்கிறோம். 

கொழுக்கட்டை நேற்று காலை, 6:00 மணி முதல், இன்று மாலை, 6:00 மணி வரை வேகும்.

இதை, 10 பேர் அடங்கிய பக்தர்கள் குழு, 36 மணி நேரமும் கண்காணித்து, பக்குவமாக கொழுக்கட்டையை வெளியே எடுப்பர். வெந்த ழுக்கட்டையை கம்பில் கட்டி சுமந்து வந்து விநாயகருக்கு படையல் வைத்து, பக்தர்களுக்கு வழங்குவோம்.

இதைத் தொடர்ந்து, ஆக., 27 காலை, 10:30 மணிக்கு சித்திதேவிக்கும், விநாயகருக்கும் திருக்கல்யாண விழாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி கல்வி துறைக்கு முதன்மை செயலர் நியமனம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
00:18



சென்னை: பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தற்காலிக முதன்மை செயலராக நியமனம் செய்து தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்., மாற்றப்படவில்லை. முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




A
அசல் சான்றிதழ் இல்லாவிட்டாலும் பங்கேற்கலாம் : மருத்துவ படிப்புக்கு இன்று பொது கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:03

சென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங்கில், அசல் சான்றிதழ்கள் இல்லையென்றாலும், மாணவர்கள் பங்கேற்கலாம்,'' என, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கை துவக்கி வைத்த, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்தியுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், கவுன்சிலிங்கில் பங்கேற்க, 500 ரூபாய்க்கும், கல்வி கட்டணத்துக்காகவும், வங்கியில், 'டிடி' எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்; அதற்காக கவலைப்பட வேண்டாம். கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில், நேரடியாக பணத்தை செலுத்தி ரசீதை பெற்று கொள்ளலாம்; இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'நீட்' தேர்வு அடிப்படையில், முதன் முதலாக கவுன்சிலிங் நடைபெறுகிறது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு, கவுன்சிலிங் அரங்கில் உள்ள, ஆலோசனை மையத்தில், தெளிவு பெறலாம். கவுன்சிலிங் பங்கேற்போர், அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவம் அல்லாத பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளில் சேர்ந்தோர், தங்கள் கல்லுாரிகளில் இருந்து, உண்மையறிதல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் பெற முடியாதோர், அசல் சான்றிதழ்களை பின் சமர்ப்பிப்பதாக ஒப்புதல் கடிதம் எழுதி கொடுத்து விட்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இடங்கள் ஒதுக்கீடு எவ்வளவு?

சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 122; விளையாட்டு பிரிவினருக்கு மூன்று; முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஆறு என, மொத்தம், 131 இடங்கள் உள்ளன. கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 20 பேர்; விளையாட்டு பிரிவில், ஆறு பேர்; முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில், 60 பேர் பங்கேற்றனர்.
கவுன்சிலிங் முடிவில், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள் பிரிவில், அனைத்து இடங்களும் நிரம்பின. 

மாற்றுத்திறனாளிகளுக்கான, 122 இடங்களில், ஐந்து இடங்கள் நிரம்பின; மீதம், 117 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. இதில், தரவரிசை பட்டியலில், ஒன்று முதல், 1,209 வரையிலான இடங்களை பெற்றவர்கள் பங்கேற்கலாம். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலாதோர், தங்கள் தரவரிசை அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'எய்ம்ஸ் கிளை அமைவிடத்தை மத்திய அரசு முடிவு செய்யும்'

பதிவு செய்த நாள்25ஆக
2017
00:15

சென்னை: ''தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு முடிவு செய்யும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

'தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, அறிவித்த மத்திய அரசு, அதற்கான இடங்களை பரிந்துரைக்கும்படி, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதன்படி, மதுரை மாவட்டம், தோப்பூர்; தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி; புதுக்கோட்டை; ஈரோடு மாவட்டம், பெருந்துறை; காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு என, ஐந்து இடங்களை, தமிழக அரசு பரிந்துரைத்தது. இதில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியை தேர்வு செய்யும்படி, தமிழக அரசு பரிந்துரைத்ததாக கூறப்பட்டது. மேலும், 'ஐந்து இடங்களில் உள்ள, அடிப்படை வசதிகள் குறித்து, தமிழக அரசு அளித்த தகவல்கள் போதவில்லை' என, கூடுதல் தகவல்களை, மத்திய அரசு கேட்டது. இதற்கு, இரு மாதங்களுக்கு பின், தமிழக அரசு பதிலளித்தது. தமிழக அரசு தகவல் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு முடிவு செய்யவில்லை. 

இதனால், 2017 இறுதிக்குள், எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, சென்னை யில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழக அரசு பரிந்துரைத்த, ஐந்து இடங்களில் உள்ள வசதிகள் குறித்த அறிக்கை, மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ''எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு தான் முடிவு செய்யும்,'' என்றார்.
'பிளாக்'கில் டிக்கெட் விற்பனை : ஆளுங்கட்சியினர், 'விவேகம்'
பதிவு செய்த நாள்25ஆக
2017
00:10


அஜித் நடித்த, விவேகம் படம் வெளியான தியேட்டர்களில், அ.தி.மு.க., பிரமுகர்கள், மொத்தமாக டிக்கெட் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றனர். இதனால், அஜித் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகர் அஜித் நடித்த, விவேகம் திரைப்படம், நேற்று வெளியானது. தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் அணுகி, டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, பிளாக்கில் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது உண்மை தான் என நிரூபிக்கும் வகையில், சேலம் மாவட்டம், ஆத்துாரில் ஆளுங்கட்சியினர் களத்தில் இறங்கியது தெரியவந்தது. ஆத்துாரில், இரு தியேட்டர்களில் படம் வெளியானது. ஆத்துாரில், அ.தி.மு.க., வைச் சேர்ந்த, நகர செயலர், முன்னாள் துணை சேர்மன், ஒரு தியேட்டரில் நான்கு காட்சிகளுக்கும், மற்ற இரண்டு தியேட்டர்களில் காலை, மதியம் என, இரண்டு காட்சிகளுக்கும், டிக்கெட் வாங்கியதாக கூறப்படுகிறது. அதை, கட்சியினர் சிலருக்கு விற்றுள்ளார். அவர்கள், 150 முதல், 300 ரூபாய்க்கு மேல், முதல் காட்சிக்கான டிக்கெட்டை விற்றுள்ளனர். ரசிகர்கள், தியேட்டரில் டிக்கெட் கேட்டபோது, 'ஆளுங்கட்சியினர் மொத்தமாக டிக்கெட் வாங்கிவிட்டனர்; அவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள்' எனக் கூறினர். சில ஆண்டுகளுக்கு முன், அஜித் ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டதால், ரசிகர்களுக்கு மொத்தமாக டிக்கெட் கொடுக்க தியேட்டர் நிர்வாகம் முன் வரவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகள், கோவில் திருப்பணிக்கு நன்கொடை வசூலிப்பதாக கூறி, தியேட்டரில் குறைந்த விலைக்கு டிக்கெட் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். நான்கு காட்சிகளுக்கும், தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஆத்துார், அ.தி.மு.க., நகர செயலர், மோகன் கூறுகையில், ''கோவையில் உள்ளேன். அஜித் பட டிக்கெட்டுகளை, நான் வாங்கவில்லை. டிக்கெட் வாங்கியவர்கள், என் பெயரை கூறுவதில் உண்மையில்லை,'' என்றார்.

- நமது நிருபர் -
வேலைவாய்ப்புக்கு புதுப்பித்தல் சலுகை

பதிவு செய்த நாள்24ஆக
2017
23:59


சென்னை: பல்வேறு காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 - 2015 வரை, பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது. 

ஆக., 22 முதல் நடைமுறைக்கு வந்துள்ள, இதை பெற விரும்புவோர், மூன்று மாதங்களுக்குள், தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல முடியாதோர், http://tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்திலும் புதுப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.
பொற்சலங்கை குலுங்க வரும் பாலகணபதி பொங்கும் இன்பம் தந்திடுவாய் எந்த நாளுமே!

பதிவு செய்த நாள்24ஆக
2017
22:27



பாடுங்க! பாட்டு பாடுங்க!

அந்த காலத்தில் தாத்தா, பாட்டிகள் பேரக் குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பிள்ளையார் பெருமையை எடுத்து சொல்வர். பெரியவர்கள் பாட சிறுவர்கள் அதைக் கேட்டு பாடுவர்.
'குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்து வரும்.
அந்தக்கால குழந்தைகளிடம் பக்தியை வளர்ப்பதில்
இது போன்ற பாடல்கள் உதவியாக இருந்தன.
நாமும் இதை பாடலாமே

கொண்டாட்டம் ஏன்?

விநாயகரின் அவதாரம் குறித்த செய்தி மத்ஸ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.சிவனின் மனைவி பார்வதி தன் தோழிகளுடன் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது தோழிகள், “தேவி! சிவனுக்குரிய பிருங்கி, நந்தி முதலிய கணங்களே நமக்கும் காவலர்களாக உள்ளனர். நமக்கென தனிக்காவலரை ஏன் நியமிக்க கூடாது?” எனக் கேட்டனர்.

உடனே பார்வதி, தன் மேனியில் பூசிய மஞ்சளை எடுத்து, சிறிது தைலத்தில் தோய்த்து குழைத்தாள். அந்த உருவத்தின் மீது கங்கை தீர்த்தம் தெளித்து உயிரூட்டினாள். அவரை தன் அந்தப்புர காவலராக நியமித்தாள். அவருக்கு 'கணபதி' என பெயரிட்டாள். அப்போது, அவர் மனித முகம் கொண்டவராகவே இருந்தார்.

இந்தநேரத்தில், பார்வதியைக் காண சிவன் அங்கு வந்தார். புதுக்காவலரான கணபதி அவரைத் தடுத்ததோடு, பார்வதியின் உத்தரவு இல்லாமல் அனுமதிக்க முடியாது என மறுத்தார். கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை வெட்டினார். பார்வதி இதைக் கண்டிக்கவே, யானைத் தலையைப் பொருத்தி உயிர்கொடுத்தார். இந்த ஆனைமுகனுக்கு முதல் பூஜை செய்த பிறகே, அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை நடக்க வேண்டுமென ஆணையிட்டார். விநாயகர் யானைமுகனாக அவதரித்த நாளை 'விநாயகர் சதுர்த்தி' விழாவாக கொண்டாடுகிறோம்.

பூஜை செய்வது எப்படி

காலையில் நீராடி, பூஜையறையில் மாக்கோலம் இட்டு மாவிலையால் அலங்கரிக்க வேண்டும். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் பலகையிட்டு விநாயகர் களிமண் சிலை வைக்க வேண்டும். விநாயகர் படமும் வைக்கலாம். அருகம்புல், எருக்கம் பூ மாலையை அணிவித்து அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, பழங்கள் படைத்து துாப, தீபம் காட்ட வேண்டும். அப்போது அவ்வையாரின் விநாயகர் அகவலைப் படிக்க வேண்டும். இரவு விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பூஜை முடித்த மூன்றாம் நாளில் களிமண் விநாயகரை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். மதியம் ஒருவேளை உணவு சாப்பிட்டு, இரவில் பால், பழம் சாப்பிட வேண்டும்.

அறுபடை வீடு கொண்ட ஆனைமுகா!

ஆறுமுகன் முருகனைப் போல ஆனைமுகனான விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன.
* முதல் படைவீடு திருவண்ணாமலைகார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு அல்லல் போக்கும் விநாயகராக வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் துன்பம் போக்குவதில் நிகரற்றவராக இவர் திகழ்கிறார்.
* இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். காசிக்குச் சமமாகத் திகழும் இங்கு 'ஆழத்துப்பிள்ளையார்' என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி தரிசனம் செய்ய வேண்டும். தனி கொடிமரம் இவருக்கு இருப்பது சிறப்பு. இவரை வழிபட்டபின் படியேறி மேலேறுவது போல நம் வாழ்வில் மேன்மை அளிப்பவராக இருக்கிறார்.
* மூன்றாம் படைவீடு திருக்கடையூர் அபிராமி கோயில். இங்கு 'கள்ளவாரணப் பிள்ளையார்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுள், ஆரோக்கியம்
பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.
* நான்காம் படைவீடான மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்தி விநாயகராக வீற்றிருக்கிறார். தன்னை நாடி வருவோரின் வாழ்வில் வெற்றியை அருளும் வள்ளலாக திகழ்கிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் சன்னதி உள்ளது. 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பது போல அளவில் சிறியவரான இவர் சக்தி வாய்ந்தவராக உள்ளார்.
* ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் உள்ளது. கற்பக மரம் போல பக்தர் விரும்பும் வரங்களை அளித்து அற்புதம் நிகழ்த்தும் இவர் பெயரால் இத்தலம் விளங்குகிறது.
* ஆறாம் படைவீடான கடலுார் மாவட்டத்திலுள்ள திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக இருக்கிறார். பொள்ளுதல் என்பதற்கு 'செதுக்குதல்' என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தி இவர். காலப்போக்கில் பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என மாறி விட்டது.

வெள்ளியை மறக்காதீங்க!

விநாயகரை வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வழிபட வேண்டும். இன்று வெள்ளியும், சதுர்த்தியும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. வணங்கும்போது நினைவிற்கு வரவேண்டியது அவ்வையாரின் 'சீதக்களப செந்தாமரைப்பூம்' என்று துவங்கும் 'விநாயகர் அகவல்' பாடல். இதை பாடினால், இரட்டிப்பாக பலன் உண்டாகும். காஞ்சிப்பெரியவர், “நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை ஏற்பட அவ்வையார் மூலம் பிள்ளையாரை பிடிப்பதே வழி” என்கிறார்.

ரகசியத்தை தெரிஞ்சுக்கங்க!

விநாயகருக்கு மோதகம், அவல், பொரி ஆகியவற்றைப் பிரசாதமாகப் படைக்கிறோம். பெரும் தத்துவம் இதில் அடங்கிக் கிடக்கிறது. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.மோதகம்: வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை அடையலாம் என்பதன் அடிப்படையில் படைக்கப்படுகிறது.அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக்
காட்டுகிறது.

'ஆன் தி வே' ஆண்டவன்

நம் வழிபாட்டில் எத்தனையோ தெய்வங்கள் இருப்பினும், குழந்தை முதல் பெரியவர் வரை முதலில் வழிபாடு செய்வது விநாயகரைத் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பரீட்சை என்று வந்து விட்டால், “பிள்ளையாரப்பா! எனக்கு அருள் செய்வாய்,” என்று இவரிடம் போய் நிற்பர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லும் வழியெல்லாம் 'ஆன் தி வே ஆண்டவனாக' இருந்து நம்மை காப்பவர் இவரே. ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, ஊர்ப்பொது இடம் என்று எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி தான் நடக்கிறது. பல நாடுகளிலும் இவரது வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. ஆறுஆதாரங்களில் மூலாதார மூர்த்தியாக இருந்து நம்மை கரைசேர்ப்பவர் இந்த ஆனைமுகப் பெருமான் தான்.

காஞ்சிப்பெரியவர்சொல்றதைக் கேளுங்க!

தமிழ் முருகன், தமிழ் தெய்வம் என்றெல்லாம் முருகனை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆனால், அவரின் அண்ணனான விநாயகரும் தமிழ் தெய்வம் என்கிறார் காஞ்சிப்பெரியவர்.
தமிழகத்தைப் போல, இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் விநாயகருக்கு அதிக கோயில்கள் இல்லை. சொல்லப் போனால், விநாயகரின் சாம்ராஜ்யமான மகாராஷ்டிராவில் கூட விநாயகர் கோயில்கள் குறைவாகவே உள்ளன. ஆற்றங்கரை, அரசமரம், தெருக்கோடி, முட்டுச்சந்து, வெட்டவெளி, சாலைக்கரை என்று எங்கு சென்றாலும் விநாயகருக்கு வழிபாடு நடப்பது இங்குதான். தமிழகம் 'தெய்வத்தமிழ் நாடு' என பக்தி மயமாக திகழ்வதற்கு, முருகனின் அண்ணனான விநாயகரே முதல் காரணமாக இருக்கிறார்.
சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 00:11

சென்னை: சேலம், கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாக்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தொழில் வர்த்தக துறையின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய கலெக்டராக பிரசாந்த்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி மாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தின் புதிய கலெக்டராக ஜி.லதா நியமனம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை:

சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி கல்வி துறைக்கு...

பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தற்காலிக முதன்மை செயலராக நியமனம் செய்து தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்., மாற்றப்படவில்லை. முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்

பதிவு செய்த நாள்
ஆக 24,2017 18:59



சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடு விக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து இன்று இரவு பரோலில்விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்க பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது, பேரறிவாளன் தாயார் கோரிக்கை மனுவை ஏற்று அவரை பரோலில்விட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணை கிடைத்தவுடன் அவர் பரோலில் விடுவிக்கப்படுவார் என்றார்.

இதையடுத்து இன்று இரவு 8: 55 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுதலையானார்.

பரோல் குறித்து தகவலறிந்த வட்டார்ஙகள் கூறுகையில்,, இரவு நேரத்தில் யாரும் பரோலில் விடுவிக்கப்படுவதில்லை. எனினும் பரோலை எதிர்த்து யாரும் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுவிடாது என்பதற்காகவே இரவில் பரோலில் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு அநத் வட்டாரங்கள் கூறுகின்றன.

விடுதலையான பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் மூன்று போலீஸ் வாகனங்கள் பாதுகாப்புக்கு சென்றன

பேரறிவாளனுக்கு பரோல் நிபந்தைனைகள்

சிறையில் அளிக்கப்பட்ட முகவரியில் தான் தங்கி இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது. பொதுக்கூட்டங்களில் பங்கேற்க கூடாது என்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் நாள் தோறும் கையெழுத்து இட வேண்டும் . பேரறிவாளனை தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது ரூ.200 நோட்டு
பதிவு செய்த நாள்24ஆக
2017
13:21



புதுடில்லி: புதிய ரூ. 200 நோட்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான மாதிரி தாள்களையும் வெளியிட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த நோட்டில், ஒரு புறத்தில் மகாத்மா காந்தி படமும் அதன் அருகில் தேவநாகிரி எழுத்தில் ரூ.200 என பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் சாஞ்சி ஸ்தூபி இடம்பெற்றுள்ளது. பார்வையற்றோர் இந்த நோட்டை தொட்டு, மதிப்பை உணரும் வகையில் ரூ.200 நோட்டு அச்சிடப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால், சில்லரை பிரச்னை தீர்க்கும் வகையில் இந்த நோட்டுகள் வெளியிடப்படுகின்றன. இந்த நோட்டு வெளியிடுவதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.
உப்புக்கு ஒரு ரூபாய் வசூலித்த ஓட்டல்

பதிவு செய்த நாள்24ஆக
2017
14:48




ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில், உப்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடந்தது என்ன?

ஐதராபாத்தில், ராஜ்பவன் சாலையில் சோமாஜிகுடா என்ற இடத்தில், பார் வசதியுடன் கூடிய ஓட்டல் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை, அவினாஷ் சேதி என்பவர் தன் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது தான் சாப்பிட இருந்த எலுமிச்சை கலந்த சோடாவில் சேர்க்க, கூடுதலாக சிறிய அளவிலான உப்பு தரும்படி கேட்டுள்ளார். ஆனால், பில்லில் அதற்கான கட்டணம் சேர்க்கப்படும் என அவருக்கு தெரியாது. அனைத்தும் முடிந்து பில் வந்த போது சேதி அசந்து விட்டார். உப்புவுக்கு ஒரு ரூபாய் கட்டணம் என அந்த பில்லில் போடப்பட்டு இருந்தது. இந்த தகவல் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டல் நிர்வாகம் விளக்கம்

இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், ' இது தவறாக நடந்து விட்ட சம்பவம். நாங்கள் புதிய சாப்ட்வேரை பயன்படுத்த துவங்கி உள்ளோம். அதைஊழியர்கள் தற்போது தான் பயன்படுத்த துவங்கி உள்ளனர். சேதி என்பவர் பில்லுக்கு பணம் கட்டும் போது, இரவு, 11 மணியாகி இருந்தது. ஊழியர்கள் பணியை முடிக்கும் அவசரத்தில் இருந்தனர். எனவே, பில்லை கவனிக்க முடியவில்லை' என்றனர்.சேதி சாப்பிட்ட எலுமிச்சை கலந்த சோடாவின் கட்டணமான, 150 ரூபாயை திரும்ப தர ஓட்டல் நிர்வாகம் முன் வந்தது. ஆனால், சேதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
சென்னையில் மீண்டும் பெரு வெள்ளம்..?

பதிவு செய்த நாள்25ஆக
2017
04:58




'சென்னையில், நவம்பரில் வெள்ளம் வரும்' என, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது.

ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை, இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது. செப்., இறுதி வரை, இந்த மழை நீடிக்கும்; அக்டோபரில், வட கிழக்கு பருவமழை துவங்கும். 'தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும், இயல்பான அளவு பெய்யும்' என, இந்திய வானிலை ஆய்வு மையமும், சர்வதேச வானிலை ஆய்வு மையமும், ஏற்கனவே அறிவித்துள்ளன.

அதே போல், 2015ல், சென்னைக்கு வெள்ளத்தை ஏற்படுத்திய, 'எல் நினோ' மற்றும் 2016ல், சென்னையை புயல் தாக்க காரணமான, 'லா நினா' ஆகிய, இரு பருவ நிலைகளும், தற்போது இல்லை என்றும், வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், 'நவம்பரில், சென்னையை புயல், வெள்ளம் தாக்கி அழிக்கும்' என, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' தெரிவித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. இது போன்ற தகவல்களை, நாசா தெரிவிக்கவில்லை.

இது குறித்து, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: நவ., மாதம், தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும், வட கிழக்கு பருவமழை காலம். அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயலோ உருவாகி, மழையை கொடுக்கும். கடந்த, 2015 மற்றும் 2016ல், பசிபிக் கடலில் ஏற்பட்ட மாற்றத்தால், இயற்கை சீற்றங்கள் உருவாகின. இதை, ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிகழ்வுகளை காட்டி, சிலர் ஆண்டுதோறும், மக்களிடம் பீதியை ஏற்படுத்துகின்றனர்.

புயல், மழை, வெள்ளம் குறித்து, செயற்கைக்கோள்கள் வாயிலாக கணித்து, வானிலை ஆய்வு மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கும். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து தாக்கும் புயல், தற்போதே உருவாகிக் கொண்டிருப்பதாக வதந்தி பரப்புவது, மூடநம்பிக்கையை காட்டுகிறது. எனவே, அடிப்படை அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'இது போன்று பீதி ஏற்படுத்துவோர் மற்றும் வலைதளங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

Thursday, August 24, 2017

தமிழகத்தில் அதிகமாகும் திரையரங்குகள்: உலக அளவில் மலைக்க வைக்கும் 'விவேகம்' வியாபாரம்

‘விவேகம்’ படத்தில் அஜித்
தமிழகத்தில் 700-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது 'விவேகம்'. அதே போன்று உலக அளவில் படத்தின் வியாபாரம் மலைக்க வைப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் நாளை (ஆகஸ்ட் 24) வெளியாகும் படம் 'விவேகம்'. இப்படத்துக்கு திரையரங்குகள் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு, முதல் வாரத்துக்கான டிக்கெட்களில் சுமார் 80% வரை விற்றுத் தீர்ந்துவிட்டன.
சென்னையில் முக்கியமான திரையரங்கமான மாயாஜால் திரையரங்கில் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 330 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்காக டிக்கெட் முன்பதிவில் 75% முடிந்துவிட்டதாகவும், விரைவில் அனைத்துக் காட்சிகளின் டிக்கெட் விற்பனையும் முடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையின் முக்கியமான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் 2 முதல் 3 திரையரங்குகள் வரை 'விவேகம்' திரையிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் முதலில் 700 வரை திரையரங்குகள் ஒப்பந்தமிருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது. தற்போது 720 திரையரங்குகளைத் தாண்டி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித் நடிப்பில் தயாரான படங்களில், பெரும் பொருட்செலவில் 'விவேகம்' தயாராகி இருப்பதால் திரையரங்குகள் ஒப்பந்தம் மற்றும் டிக்கெட் முன்பதிவால் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது.
உலக அளவில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அனைத்தையும் சேர்ந்து சுமார் 2,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான படங்களில் உலகளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் 'விவேகம்' என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது.
மேலும், படத்தின் பொருட்செலவிற்கு தகுந்தாற் போன்று தயாரிப்பு நிறுவனமும் வியாரம் செய்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி உரிமை, இசை உரிமை, தமிழக விநியோக உரிமை, கேரள உரிமை, கர்நாடக உரிமை, தெலுங்கு உரிமை மற்றும் உலக நாடுகளின் உரிமை ஆகியவற்றின் மூலம் சுமார் 120 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக திரையுலகினர் தெரிவித்தார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்தின் குடும்பத்தினர், தயாரிப்பாளர் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் மட்டும் சென்னையில் உள்ள NFDC திரையரங்கில் 'விவேகம்' படத்தை பார்த்துள்ளனர். படம் முடிந்தவுடன் இயக்குநர் சிவாவை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

'விவேகம்' படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம் என்ன?

‘விவேகம்’ படத்தில் அஜித்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதற்கான காரணங்களைத் தெரிவித்தார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விவேகம்'. வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். நாளை(ஆகஸ்ட் 24) வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கான காரணம் என்ன என்று திரையுலகில் விசாரித்த போது:
* 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணி மீண்டும் 'விவேகம்' படத்தில் இணைந்துள்ளது. அஜித்தை எப்படி காட்டினால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை இயக்குநர் சிவா தெரிவித்து வைத்துள்ளார்.
* எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அஜித் கலந்து கொள்ளவில்லை. விமான நிலையம், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு வரும் போது மட்டுமே அஜித்தை பார்க்கும் சூழல் உள்ளது. ஆகவே, நீங்கள் அஜித்தைக் காண வேண்டுமானால் அவருடைய படத்தை மட்டுமே பார்க்க முடியும்.
* 'விவேகம்' படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றின் காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் சமூகவலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'Never Ever Give Up', 'You will see my Rage' உள்ளிட்ட வசனங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
* அனிருத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தையுமே மொத்தமாக வெளியிடாமல், ஒவ்வொரு பாடலாக வெளியிட்டார்கள். அனைத்துமே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
* ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் உள்ளிட்ட அனைத்தையுமே கலைத்துவிட்ட அஜித், சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் நிலவும் சர்ச்சைக்குமே தனது சட்ட ஆலோசகரின் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அஜித் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம்: பால் முகவர்கள் சங்கம்

'விவேகம்' திரைப்படம் வெளியாகும் போது அஜித் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என்று பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் 'விவேகம்' திரைப்படம் வெளியாகும் போது அவரது கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யக் கூடாது என அறிவுறுத்துவதோடு, கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்ற கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, அதற்குப் பதிலாக 'விவேகம்' திரைப்படம் வெளியாகும் திரையரங்க வளாகங்களில் முதல் 10நாட்களுக்கு ரத்ததான முகாம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் மற்றும் மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடத்திடவும் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை நடிகர் அஜித்தின் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொண்டோம்.
ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அஜித்தின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்றுகிற லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் எங்களது சங்கத்தின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய 3பக்க கடிதத்தை கடந்த 04.08.2017 அன்று பதிவு தபால் வாயிலாக நடிகர் அஜித்துக்கு அனுப்பினோம்.
தமிழர்கள் இனியாவது நடிகர்களுக்கு ரசிகர்களாக இருந்து விட்டில் பூச்சிகளாக மாறி தங்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் வீணாக்க வேண்டாம். சமூக பொருளாதாற அக்கறையோடு செயல்பட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...