Sunday, September 10, 2017

License of four KGMU teachers suspended by MCI

Yusra Husain| TNN | Sep 8, 2017, 22:43 IST

LUCKNOW: Medical license of four teachers at King George's Medical University(KGMU) was on Friday suspended by Medical Council of India (MCI) for the next six months. This means the doctors have also been refrained from dispelling clinical duties at KGMU or anywhere else for the same period.

Dr Shailendra Singh of the orthopaedic department, Dr Sanjeev Kumar of the general surgery department, Dr Shiuli of forensic medicine department and Dr Parul Verma of the dermatology venerology department were the ones pulled by the MCI, after the latter won the case in the high court.

"The four doctors had provided MCI wrong information on their declaration form during an MCI inspection at KGMU. They had previously appeared in other MCI inspections at private colleges which was hidden by them in the said form. Found out by MCI, the doctors were suspended but they instead took a stay from the high court against MCI's order. Now MCI has won the same case after which KGMU was through Uttar Pradesh MCI asked to carry out the suspension," informed KGMU spokesperson, Prof NS Verma.
Read more at Medical Dialogues:

 4 Medical Faculty of KGMU suspended by Medical Council Of India http://medicaldialogues.in/4-medical-faculty-of-kgmu-suspended-by-medical-council-of-india/

25 வருடங்களாகப் பணியாற்றிய தலைமைசிரியர், ஆசிரியைகள் திடீர் இடைநீக்கம்!


விருதுநகர் அல்லம்பட்டியில் தேவாங்கர் சமூகத்துக்குப் பாத்தியப்பட்ட அரசு உதவிபெறும் சௌடாம்பிகா ஆரம்பப் பள்ளியில் 25 வருடங்களாகப் பணியாற்றியத் தலைமையாசியர் தங்கமணியையும், உதவி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, நாகஜோதி  ஆகியோரையும் பள்ளி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ள சம்பவம், விருதுநகர் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தலைமைஆசிரியை தங்கமணி சார்பாகப் பேசியவர்கள், ''25 வருஷங்களாக இப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து, தற்போது தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார் தங்கமணி. இதுவரை இப்பள்ளியை நிர்வாகம் செய்தவர்கள் இவர்மீது எந்தப் புகாரும் தெரிவித்ததில்லை, அந்தளவுக்கு இப்பள்ளியைச் சிறப்பாக நடத்திவந்தார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பது பள்ளி நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பணம் வாங்கிக்கொண்டு வேறு ஒருவரை நியமிக்கத் திட்டமிடுகிறார்கள். அதனால், அவர்மீது தேவையற்ற புகார்களைக் கூறுகிறார்கள். சாதிரீதியாகவும் இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்கள்.

இதுபற்றி அதிகாரிகளுக்கு தங்கமணி அனுப்பிய புகாருக்கு, அங்கு பணிபுரியும் இரண்டு ஆசிரியைகள் சாட்சி கூறியதால், அவர்களையும் இப்போது இடைநீக்கம் செய்துள்ளனர். இதற்கு கல்வித்துறை அதிகாரிகளும் ஒத்துழைக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர்.

பள்ளிக்குள் செல்ல முடியாமல் தலைமையாசிரியருடன்  மற்ற இரண்டு ஆசிரியர்களும் வெளியில் நின்றது பார்ப்போரைக் கலங்க வைத்தது.

Notification for B.Sc., Post basic nursing


HC directs TN Government to pay compensation to medicos

HC wants MCI to take errant colleges to task

‘Penalise them for unaddressed issues’

Evolving a legal principle to ensure accountability of private medical colleges which do not rectify infrastructural or instructional deficiencies pointed out either by a Committee of Inspectors or Visitors of the Medical Council of India (MCI), the Madras High Court has suggested that compensatory costs should be imposed on those institutions at the rate of Rs. 2 lakh for every postgraduate student and Rs. 1 lakh for every undergraduate student passing out of them.
Stating that the MCI adopts a soft approach against such institutions and ends up punishing the students by refusing to register their degrees, the court said: “If the various measures adopted by the MCI are not producing desired results, perhaps time has come to evolve a legal principle and fasten accountability on the medical college concerned. The power to do so is clearly available both under Sections 17 and 19 of the [MCI] Act of 1956.”
A Division Bench of Justices Nooty Ramamohana Rao (since retired) and S.M. Subramaniam said that the State could recover the costs, imposed by the MCI, annually from the defaulting medical colleges through the Director of Medical Education and disburse the amount to the students concerned after deducting Rs. 10,000 with respect to every undergraduate student and Rs. 25,000 each from the postgraduate students.
“The money so withheld by the State shall not be appropriated by it for any other purpose but must be exclusively spent for upgrading the infrastructure in one or more than one medical college administered by it,” the judges said. The observations were made while dismissing a batch of writ appeals filed by the MCI against a single judge’s order to Tamil Nadu Medical Council to register the postgraduate degrees obtained by a group of doctors.
Victimising students
The council had refused to register their degrees on the ground that the colleges where they had studied had failed to rectify certain deficiencies. Holding this as not proper, the Division Bench said that the students could not be punished since they had pursued the courses in the colleges only after the MCI had accorded Letter of Permission (LoP) to the institutions.

விழாக்கால சலுகைகளை அறிவிக்க வரிசைகட்டும் வாகன உற்பத்தி நிறுவனங்கள்


By DIN  |   Published on : 09th September 2017 11:14 AM  |
Vehiclesales
Ads by Kiosked

சென்னை: இரு சக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ, பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புது வாகனம் வாங்க நினைத்திருந்தவர்களுக்கு இது நிச்சயம் விழாக்காலம்தான்.
ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவிருப்பதை முன்னிட்டு, புதிய வாகனங்களையும், சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
விழாக்கால சலுகையாக பல்வேறு வகைகளில் நுகர்வோரைக் கவர ரூ.71 ஆயிரம் வரை விலையில் சலுகை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2017 ஜிஎஸ்டி நடைமுறை, பிஎஸ் 3 பிரச்னை என பல்வேறு விஷயங்களில் இருந்து வெளியே வந்திருக்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், இந்த விழாக்கால சலுகைகளைப் பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
கடந்த ஆண்டு விலையை விட 5-10 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விலையை குறைத்து ஏற்கனவே வாகன விற்பனை நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டன.
மாருதி சுசூகி இந்தியா, தனது ஆல்டோ மற்றும் வேகன்ஆர் ரக வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. ஸ்விஃப்ட் மற்றும் செலாரியோ வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் டீலர்களும் இலவச காப்பீடு என பல்வேறு சலுகைகளை இணைத்துள்ளனர்.
நவராத்திரி மற்றும் ஆயுதபூஜை சலுகைகளை கார் உற்பத்தி நிறுவனங்களான ஹுண்டாய், ஹோண்டா, எம் அன்ட் எம் நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
ஹுண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 வாகனத்துக்கு ரூ.60 ஆயிரமும், EON ரக வாகனங்களுக்கு ரூ.55 ஆயிரமும் சலுகை அறிவித்துள்ளது.
மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனமும், தனது வாகனங்களுக்கு 20 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை விலைச் சலுகையும், நிஸ்ஸன் தனது வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.71 ஆயிரம் விலைச் சலுகையும், தங்க நாணயப் பரிசையும் அறிவித்துள்ளது.
இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும் வாடிக்கையாளர்களுக்கு பல்வறு வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

காஞ்சி ஜயேந்திரர் 83-ஆம் ஆண்டு ஜயந்தி: சிறந்த சேவை புரிந்தோருக்கு விருது

By DIN  |   Published on : 10th September 2017 04:44 AM  |
bday
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 83-ஆவது பிறந்த நாள் விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்து விருது பெற்றவர்களுடன் காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந
Ads by Kiosked
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 83-ஆம் ஆண்டு ஜயந்தி விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை டாக்டர் ராமமூர்த்தி (ஜனசேவா ரத்னா), சுவாமிநாதன் (குருகீர்த்தி ப்ரச்சாரமணி), எஸ். வரதராஜன் (சந்த் நாடக ப்ரச்சாரமணி), சர்மா சாஸ்திரிகள் (வைதீக மார்க்க ரக்ஷôமணி), டாக்டர் ராமநாதன் ஜெயராமன் (ஜனசேவா ரத்னா), டாக்டர் அருணகிரி (வித்யாதான ரத்னா), கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் (வேத அத்ய யன ரக்ஷôமணி), நாகராஜன் (ஜனசேவா ரத்னா) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

 

மேலும் 4 விமான நிலையங்களில் கைப்பைகளுக்கு "டேக்' இல்லை

By DIN  |   Published on : 10th September 2017 03:35 AM  
கோவை, மேற்கு வங்க மாநிலத்தின், கொல்கத்தா, குஜராத் மாநிலத்தின், வதோதரா, மத்தியப் பிரதேச மாநிலத்தின், இந்தூர் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டுப் பயணிகளின் கைப்பைகளில் "டேக்' இனி இணைக்கப்பட மாட்டாது என்று விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநர் குமார் ராஜேஷ் சந்திரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் திருப்தி ஏற்பட்டதை அடுத்து, கோவை, கொல்கத்தா, வதோதரா, இந்தூர் ஆகிய 4 நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டில் பயணிப்பவர்களின் கைப்பைகளில் இனி "டேக்' இணைக்கப்படமாட்டாது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று குமார் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 13 விமான நிலையங்களில் இந்த முறை கைவிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த முறையைக் கைவிட விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு திட்டமிட்டு வருகிறது. கைப்பைகளில் இணைக்கப்படும் "டேக்'கில் பயணிகள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் இருக்கும் பார்கோடுகளை ஸ்கேன் செய்யும்போது விவரங்கள் தெரியவரும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு "டேக்' இணைக்கப்பட்டு வருகிறது.
எனினும், வெளிநாடு செல்லும் பயணிகளின் கைப்பைகளுக்கு "டேக்' இணைப்பு முறை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட! சத்யம் திரையரங்கின் புதுமையான முயற்சி - டு நாட் டிஸ்டர்ப்!

By எழில்  |   Published on : 09th September 2017 01:01 PM  |  
sathyam1
Ads by Kiosked

ஒரு நல்ல படத்தைப் பார்க்க திரையரங்குக்குச் செல்கிறீர்கள்.
முதல் காட்சியிலிருந்தே படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அந்த நேரம் பார்த்து - சார் இது என்ன ரோ, உங்க சீட் என்ன எனத் தாமதாக வந்த ஒருவர் உங்களை நச்சரிக்கிறார். 
உங்கள் முன்வரிசையில் உள்ளவருக்குத் திரையரங்கு ஊழியர் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, ஸ்நாக்ஸ் கொண்டுவருகிறார். திரை சுத்தமாக மறைக்கிறது.
அழுவாச்சி படம். நீங்களும் சேர்த்து அழுதுகொண்டிருக்கும்போது பக்கத்து இருக்கையில் உள்ள குழந்தை உங்கள் தோளில் கை போடுகிறது. முன்வரிசையில் உள்ள குழந்தை இருக்கையிலிருந்து எழுந்து நின்று நடனமாடுகிறது.
படத்தின் பரபரப்பான காட்சி. பக்கத்து இருக்கையில் உள்ளவருக்கு போன் வருகிறது. ஆமா, நான் வர லேட் ஆகும். நாலு சப்பாத்தி சுட்டு வைச்சுடு என்று நாலு வரிசைகளுக்குக் கேட்பது போல லஜ்ஜையின்றி உரையாடும் நபர்.
இத்தனை இடைஞ்சல்களுக்கு மத்தியில் எப்படி நிம்மதியாகப் படம் காணமுடியும்?
முடியும் என்கிறது சத்யம் திரையரங்கம். திரையரங்கில் படத்தை ரசித்துப் பார்ப்பதற்காகப் பல்வேறு புதுமைகளைக் கொண்டுவந்துள்ள சத்யம் திரையரங்கம், டு நாட் டிஸ்டர்ப் என்கிற மற்றொரு புதுமையான நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி அதன் திரையரங்கில் ஒவ்வொரு புதன் அன்றும் டு நாட் டிஸ்டர்ப் என்றொரு பிரத்யேகக் காட்சி திரையிடப்படவுள்ளது. அதாவது இதற்கு நீங்கள் டிக்கெட் வாங்கினால் மேலே உள்ள எந்தவொரு தொந்தரவையும் நீங்கள் எதிர்கொள்ளமாட்டீர்கள். இதன்மூலம் நிம்மதியாகப் படம் பார்ப்பதற்கான உத்தரவாதத்தைத் தருகிறது சத்யம் திரையரங்கம். 
இந்தக் காட்சிக்கு வருபவர்கள், தாமதமாக வருகை தரக்கூடாது. காட்சி நேரத்துக்குப் பிறகு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் அனுமதி கிடையாது. இதனால் காட்சி ஆரம்பித்த பிறகு திரையரங்கின் கதவுகள் திறக்கப்படாது. அடுத்தவருக்கு எந்தவொரு தொந்தரவையும் தரக்கூடாது. திரையரங்கில் குப்பைகள் போடக்கூடாது. முன்வரிசை இருக்கை மீது கால் வைக்கக்கூடாது. தள்ளக்கூடாது. குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் போன்ற விதிமுறைகள் டு நாட் டிஸ்டர்ப் காட்சிகளில் அமல்படுத்தப்படவுள்ளன. 
செப்டம்பர் 20 அன்று இக்காட்சிகள் சத்யம் திரையரங்கில் தொடங்கப்படவுள்ளன.
சீனர்களின் பேய் திருவிழா

2017-09-10@ 01:12:14



பெய்ஜிங்: சீனர்களின் லூனர் காலண்டரின் 7வது மாதம் பேய் மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், நகரத்தின் வாசல் திறந்து பேய்கள் உலகிற்குள் உலா வருமாம். அவ்வாறு வரும் பேய்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மனிதர்களின் உடம்பில் புகுந்துவிடுவார்களாம். அதிலிருந்து தப்பிக்கத்தான் சீனர்கள் ‘பசி கொண்ட பேய் திருவிழா’ கொண்டாடுகிறார்கள். சீனா மட்டுமின்றி உலகில் சீனர்கள் வசிக்கும் அநேக நாடுகளில் திருவிழா களை கட்டுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சீனர்கள் சிலர் ‘பேய்களின் காக்கும் கடவுள்’ காகித உருவத்தை எரிக்கின்றனர். டிவி, பிரிட்ஜ், கார் போன்றவற்றை காகிதத்தில் செய்து, அதை பக்தியுடன் வழிபட்டு எரிப்பார்கள். இதன் மூலம் பேய்கள் மீண்டும் நரகத்திற்கு திரும்பும் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்த மாதத்தில் சீனர்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். கீழே கோடி ரூபாய் கிடந்தாலும் எடுக்க மாட்டார்கள். காரணம் பேய் வேலையாக இருக்கலாம் என்ற பயம் தானாம்.
Aadhaar-SIM linking will prevent misuse by criminals, govt assures all data safe

TIMESOFINDIA.COM | Updated: Sep 9, 2017, 23:14 IST

HIGHLIGHTS

SIMs not linked to Aadhaar to be deactivated after Feb 2018

The Supreme Court in Feb 2017 had set the govt a 1-year time frame for linking Aadhaar to all active 

SIMs

NEW DELHI: The government will move ahead with linking Aadhaar with all mobile SIM cards, as per the Supreme Court order of February 2017.

All SIM cards have to be verified with Aadhaar within a year from the date of judgement. All unlinked phones will be deactivated after the February 2018 deadline.

The move is to prevent obtaining mobile connections with fraudulent information. The government assured that biometrics are not stored by the mobile operators, nor they have access to any of the other personal data.

The court passed the February order acting on a PIL filed by NGO Lokniti Foundation, seeking 100% verification of cell phone subscribers with regard to their identity and address by linking their phone numbers to their Aadhaar cards.

Then attorney general had said that the government in principle agreed to the idea, but given the huge number, about 105 crores, of mobile phone users, the process wil take time. Besides, over 90% subscribers used pre-paid connections, making registration difficult.

TOP COMMENTThe court has made it mandatory to link aadhaar but what about the customers who have aadhaar of other state and sim of other state,i have airtel sim from maharashtra and my aadhaar is from rajasthan... Read Moresyadavy

To this, the bench had said, "The government has to devise a method. The person who comes for recharge of the phone should be given a form to give his details including Aadhaar number. He should submit the filled form the next time he goes for recharge. You can give him more time. May be three or four recharges before he furnishes the details. But make it mandatory that he must furnish details or else there would be no recharge of prepaid SIMs."

The apex court bench then set the government a one-year time frame to complete the Aadhaar linking process.
Doc detained for rape of minor

TNN | Sep 9, 2017, 23:59 IST

Chennai: The city police detained a doctor for sexually assaulting a 15-year-old girl, who was forced into flesh trade by a woman and her boyfriend who lured her promising to get her a job in Arani near Thiruvannmalai district.

Jayaprakasam and his assistant Pandian have been taken into custody and police are conducting interrogations to nab their associates. Jayaprakasam was employed in a government hospital in Arani.

A senior police officer said, "We have verified the veracity of the arrested Jayaprakasam. He has completed MBBS and was working at the government hospital."

During questioning, Jayaprakasam told the investigating officers that he was not aware that the girl is a juvenile and the woman Chitra and her boyfriend Suresh introduced the girl to him as a prostitute. Police are yet to arrest Chitra and her accomplices.

Chitra, a family friend of the victim, had promised to get her a job but instead forced her into flesh trade with the help of her boyfriend after detaining the victim at a house in Arani.
CBI books bank, 19 city firms for remittance of Rs421cr to foreign countries

TNN | Updated: Sep 10, 2017, 00:07 IST

Chennai: The anti-corruption branch of CBI, Chennai on Friday booked unknown officials of Punjab National Bank and 19 companies, mainly at Sowcarpet in north chennai, for suspected remittances of Rs 421 crore in foreign currency to UAE, Hong Kong and Taiwan through shell companies.

A case of criminal conspiracy, cheating and forgery and criminal misconduct by public servants has been made out, but case details indicate the Enforcement Directorate (ED) could step in to press other charges.

The modus operandi in the case registered by the CBI is similar to the one in the recent case registered by ED officials who arrested the son of former DMK minister Ko Si Mani.

The 19 companies named in the CBI FIR had opened accounts with PNB and were sending out foreign exchange without genuine business transactions. Money was flowing into the accounts through RTGS transactions from other banks, credit co-operative societies and accounts in Mumbai.

This money was sent out as outward remittances, a method of settlement of dues, through the PNB accounts. A request with a quotation issued by a foreign supplier for 100% advance remittance was made with the bank. The outward remittance was kept at less than $100,000 so that it did not violate regulatory requirements of Reserve Bank of India and hence escape the FEMA violations or ED requirements.

About 700 such remittances worth around Rs 420 crore were made for imports during the five month period. All these were routed through a Nostro account maintained by PNB with HSBC, New York.

When the bank verified the addresses of the account holders, it found none of them there. When it began to insist on the bill of entries as evidence of import, the account holders stopped coming to the bank for foreign remittances, CBI said in the FIR.

The PNB branch also earned Rs 17 lakh as commission and the CBI has alleged that the officials did not verify the genuineness of the transactions or ascertain if the customers had the financial wherewithal to receive such huge money through RTGS.

All the transactions together have caused a loss of Rs 421 crore in foreign exchange to the government of India, CBI said.

In the case handled by ED, the officials had discovered some import-export shell companies which had routed Rs 20 crore in foreign exchange to several south-east asian countries without producing genuine bill of entries.
அரசு பஸ் ஊழியர்கள் 24 முதல் 'ஸ்டிரைக்'
பதிவு செய்த நாள்09செப்
2017
22:26

சென்னை, அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள், 24ம் தேதிக்கு பின், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், 2.4 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் நிர்ண யிக்கப்படுகிறது. அதன்படி, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. இதுவரை, 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, பல்லவன் இல்லத்தில், அதிகாரிகள் அடங்கிய துணைக் குழுவினர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால், போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், வேலை நிறுத்தம் செய்யப் போவதாக, அரசுக்கு, 'ஸ்டிரைக் நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

அதில், கூறப்பட்டுஉள்ளதாவது:அரசு போக்குவரத்து கழகங்கள், நிதிப் பற்றாக்குறையில் உள்ளன. அதனால், காலாவதியான பஸ்கள் தான், அதிகளவில் இயக்கப்படுகின்றன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆயுள் காப்பீடு, அஞ்சல் காப்பீடு, கூட்டுறவு
சங்கங்களுக்கான பிடித்தம் உள்ளிட்ட, 5,500 கோடி ரூபாயை, நிர்வாகம் செலவு செய்து விட்டது; தற்போதும் செலவு செய்து வருகிறது.
செலவு செய்த தொகையை வழங்குவது,போக்குவரத்து கழகத்தின்
நஷ்டத்தை ஏற்பது, 13வது ஊதிய ஒப்பந்தத்தை நிறை
வேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசுக்கு பலமுறை
தெரிவித்துள்ளோம். அவற்றுக்கு தீர்வு காண, அரசு, இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மேலும், சிறிய தொழிற்சங்கங்களை இணைத்து, அரசுக்கு சாதக
மான வகையில், ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்ய, அரசு திட்டமிடுகிறது. அதுபோன்ற சங்க நிர்வாகிகளுக்கு, சலுகை காட்டுகிறது. அதனால், வரும், 24ம் தேதியிலோ, அதற்கு பின் வேறு தேதியிலோ, வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானித்துஉள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊட்டியில், 'செர்ரி' பழம் வாங்குவோர் உஷார்!
பதிவு செய்த நாள்09செப்
2017
20:16



ஊட்டி,:ஊட்டி சுற்றுலா மையங்களில், சாயம் கலந்த களாக்காயை, 'செர்ரி' பழம் எனக் கூறி, வியாபாரிகள் விற்பது, அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி - கூடலுார் சாலையில் உள்ள தலைக்குந்தா, பைக்காரா உட்பட சுற்றுலா பகுதிகளில் உள்ள கடைகளில், ஊட்டி உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். பெரும்பாலான கடைகளில், செர்ரி பழம் என்ற பெயரில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட களாக்காயை பறிமுதல் செய்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் கூறியதாவது:செர்ரி பழங்கள் விலை உயர்ந்தவை; சிறிய ஆப்பிள் வடிவில் இருக்கும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர், அவற்றை விரும்பி வாங்குகின்றனர். ஆனால், பெரும்பாலான கடைக்காரர்கள், விலை மலிவாக கிடைக்கும் களாக்காயை வாங்கி, அதனுள் இருக்கும் கொட்டையை அகற்றி விட்டு, சாயம் மற்றும் சர்க்கரை தண்ணீரில் ஊற வைத்து, பின், பாக்கெட்டில் அடைத்து, செர்ரி பழம் என விற்கின்றனர். எந்தவொரு சாயம் கலந்து பொருளை உண்டாலும், கொடிய நோய்கள் ஏற்படும்; குடல் பாதிப்பு வரும். எனவே, சுற்றுலா பயணியர் உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிறுமி பலாத்காரம்: அரசு டாக்டர் கைது சீரழித்த உறவு பெண்ணுக்கு போலீஸ் வலை
பதிவு செய்த நாள்10செப்
2017
01:54

திருவண்ணாமலை, 

மயக்க ஊசி போட்டு, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவமனை டாக்டரையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.

பழக்கம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராணி, 40. கணவர் இறந்ததால், இரு மகள்களுடன் சென்னையில் தங்கி, தனியார் வங்கியில் துப்புரவுஊழியராக வேலை செய்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு, மகள்களுடன், ராணி சென்றிருந்தார்.அங்கு, ஆரணியைச் சேர்ந்த உறவுக்கார பெண் சித்ரா, 36, என்பவருடன், ராணியின், 15 வயது மூத்த மகளுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின், சிறுமி சென்னைக்கு சென்றதும், அடிக்கடி மொபைல் போனில் பேசிய சித்ரா, ஆரணியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதற்கு, சிறுமி மறுத்துள்ளார். பின், சுரேஷ், 31, என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் உதவியுடன், சிறுமியை சித்ரா கடத்தினார். ஆரணியிலுள்ள தன் வீட்டில் வைத்து, சுரேசுடன் உல்லாசமாக இருக்க வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
இது குறித்து, சிறுமி தன் தாய் ராணிக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்தார். சுரேசும், சித்ராவும், சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று, பலருக்கு இரையாக்கி உள்ளனர்.

மயக்க ஊசி போட்டு, ஆரணியில் உள்ள அரசு மருத்துவனை டாக்டர் ஜெயப்பிரகாஷ், 56, என்பவருக்கு இரையாக்கினர். டாக்டருக்கு உடந்தையாக அவரது உதவியாளர் பாண்டியராஜ், 34, இருந்துள்ளார்.
இதற்கிடையில், ராணியின் உறவினர் குமார், 38, சிறுமியை மீட்டு, ராணியிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து, சிறுமியின் தாய் ராணி, இரண்டு நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வன்கொடுமை சட்டம்

சென்னை, திருமங்கலம் போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நேற்று ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியராஜை கைது செய்தனர். 

சிறுமியை சீரழித்த, சித்ரா மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேசை போலீசார் தேடி வருகின்றனர்.
மின் பயன்பாடு கணக்கு: நுகர்வோருக்கு கூடுதல் சுமை

பதிவு செய்த நாள்09செப்
2017
20:12


மின் பயன்பாடு கணக்கு எடுப்பதில், ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதால், நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடு, கடை உள்ளிட்ட தாழ்வழுத்த இணைப்புகளில், இரு மாதங்களுக்கு ஒருமுறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லையெனில், அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

பல ஊழியர்கள், மின் பயன்பாடு கணக்கு எடுக்க, முறையாக செல்வதில்லை. இதனால், நுகர்வோர், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது:மின் பயன்பாடு கணக்கு எடுக்க, குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, ஊழியர்கள் சரியாக வருவதில்லை. அந்த விபரம் தெரியாததால், பலர் மின் கட்டணம் செலுத்துவதில்லை.திடீரென வந்து, நான்கு மாத கட்டணத்தை செலுத்துமாறு, ஊழியர்கள் கூறுகின்றனர். கணக்கு எடுக்காதது, ஊழியரின் தவறு. ஆனால், தாமதமாக செலுத்துவதாகக் கருதி, மின் வாரியம், அபராதத் தொகை வசூலிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது:வீட்டு மின் இணைப்பு எண்ணிக்கை, இரண்டு கோடியை எட்டியுள்ளது. ஆனால், ஊழியர் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்கும் குறைவு. மின் பயன்பாடு கணக்கு எடுக்க செல்லும் போது, பலர் வீடுகளில் இருப்பதில்லை. இதற்கு தீர்வு காண, மின் மீட்டரில், 'சிப்' பொருத்தி, அலுவலக, 'சர்வர்' உடன் இணைக்க வேண்டும்.இதன் வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் தேதி வந்ததும், அந்த விபரத்தை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்க முடியும். இத்திட்டத்தை, விரைவாக துவக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி அலகாபாத் டாக்டர்கள் அசத்தல்

பதிவு செய்த நாள்09செப்
2017
20:46

அலகாபாத்,: உ.பி., மாநிலம், அலகா பாத்தைச் சேர்ந்த, பிரபல டாக்டர்கள் ஒன்றிணைந்து, '21 டாக்டர்கள்' என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படிக்கும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்

.21 மாணவர்கள்உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அலகாபாத்தைச் சேர்ந்த, நரம்பியல் நிபுணர், டாக்டர் பிரகாஷ் கேதான் என்பவர், இரு ஆண்டுகளுக்கு முன், '21 டாக்டர்கள்' என்ற திட்டத்தை துவக்கினார்.அருகில் உள்ள, அரசு பள்ளிகள் மற்றும் குடிசை வாழ் மாணவர்களில், படிப்பில் சிறந்த, 9 - 12ம் வகுப்பு வரை படிக்கும், 21 மாணவர்களை தேர்ந்தெடுத்தார்.

 அவர்களுக்காக, தன் வீட்டில், ஓர் அறையை வகுப்பறையாக மாற்றினார். ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களுடைய பள்ளி பாடங்களுடன், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றொரு பிரிவில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது, டாக்டர் பிரகாஷுடன், அலகாபாத் நகரில், பிரபலமான டாக்டர்கள் இணைந்து, இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

டாக்டர் பிரகாஷ் கேதான் கூறியதாவது:வறுமையால், தங்கள் கனவுகளை எட்ட முடியாத, நன்றாக படிக்கும், 21 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், நாங்கள் ஏற்றுஉள்ளோம். அவர்களுக்கு, பள்ளி பாடங்களுடன், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறோம். 4 மணி நேர பயிற்சிஇந்த வகுப்பில், கூலித்தொழிலாளிகள் மட்டுமல்லாமல், கூடை பின்னுபவர்களின் குழந்தைகளும் பயிற்சி பெறுகின்றனர். தினமும், நான்கு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.படிப்பதற்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில், டாக்டர்களின் உதவியால், தங்களுடைய கல்வித் தரம் உயர்ந்து உள்ளதாகவும், எதிர்காலத்தில், சிறந்த டாக்டர்களாக உருவாக வாய்ப்பு கிடைத்து உள்ளதாகவும், பயிற்சி பெறும் மாணவர்கள் கூறினர்.
புளோரிடாவில், 'இர்மா' பீதி: 50 லட்சம் பேர் வெளியேற்றம்
DINAMALAR

பதிவு செய்த நாள்09செப்
2017
19:51




வாஷிங்டன், : கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக, 'இர்மா' சூறாவளி, கியூபாவை கடந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியது. இதையடுத்து, புளோரி டாவில் வசிக்கும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட, ௫௦ லட்சம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை, கடந்த மாத இறுதியில், 'ஹார்வே' புயல் தாக்கியது. இதில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹூஸ்டன், சின்னாபின்னமானது.இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த சூறாவளி உருவானது. இதற்கு, 'இர்மா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'இர்மா' சூறாவளி, அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள, வட கிழக்கு கரீபியன் தீவுகளில், இரு நாட்களுக்கு முன் கரை கடந்தது. இதனால், கரீபியன் தீவு பெரும் நாசமடைந்துள்ளது.கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட இர்மா புயல், மேலும், வலிமை அதிகரித்து, கியூபாவின் வட கிழக்கு கரையை ஒட்டியுள்ள, கேமாகுவே தீவுக்கூட்டத்தில், கரையை கடந்துள்ளது. அமெரிக்காவை நெருங்கி வரும் இர்மா, புளோரிடா மாகாணத்தை, இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த மாகாணத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட, ௫௦ லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.''புளோரிடாவில் உள்ள அனைவருமே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்; அதற்குத் தயாராக இருக்க வேண்டும்,'' என, புளோரிடா மாகாண கவர்னர், ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அவசரகால முகமையின் தலைவர், பிராக் லாங் கூறுகையில், ''புளோரிடாவிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் சில நாட்களுக்கு, முழுமையாக மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ''நேரம் குறைந்துகொண்டே வருகிறது. வெளியேற வேண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாமதம் செய்யக்கூடாது. ''இர்மாவால் பாதிக்கப்பட்ட வீடுகளைத் திரும்பக் கட்டித் தர முடியும். ஆனால், வாழ்க்கையை திருப்பித் தர முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

ஐந்தாம் எண் சூறாவளி!

புவியின் மேற்குப் பகுதியில் வீசும் வெப்ப மண்டல புயல்கள், சூறாவளி என அழைக்கப்படுகின்றன. இத்தகைய சூறாவளிகள், அவற்றின் வேகத்தை வைத்து, ஒன்று முதல் ஐந்து வரையிலான எண்களால் குறிக்கப்படுகின்றன. அதிவேகம் உடைய சூறாவளிக்கு, ஐந்தாம் எண் வழங்கப்படுகிறது.ஐந்தாம் எண் வழங்கப்பட்டுள்ள, இர்மா தாக்கியதில், கரீபியன் தீவுகளில், ௨௦ பேர் உயிரிழந்தனர். பல ஆண்டுகளுக்கு பின், கியூபாவை, ஐந்தாம் எண் சூறாவளி தாக்கியுள்ளது.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்... இன்று தற்கொலை தடுப்பு தினம்

DINAMALAR
பதிவு செய்த நாள்  09செப்
2017
22:33




வாழ்க்கையில் துன்பங்களை கண்டு துவண்டு விடாமல், எதிர்த்து நின்று போராட வேண்டும். அதற்குப் பதிலாக தற்கொலை என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனமான செயல். பிரச்னைகள் இல்லாதவர்களே உலகில் இல்லை. ஒவ்வொரு பிரச்னைக்கும் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். பிரச்னைக்கு தீர்வு தற்கொலை தான் என எண்ணினால், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள்.
பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தற்கொலை என தவறாக சிந்திக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என அறிவதில்லை. தற்கொலை அறவே கூடாது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்., 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'சில நிமிடம் சிந்தியுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

சமீபத்தில் தனது எம்.பி.பி.எஸ்., கனவு நனவாகாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்தார். இதற்கு பதிலாக அவர் போராடி சாதித்திருக்கலாம். தற்கொலை முடிவை கைவிட்டவர்கள், சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்.

8 லட்சம்

உலகளவில் 2015 கணக்கின் படி, ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். 40 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார் என உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் 2015 கணக்கின் படி, ஆண்டுக்கு 1,33,623 பேர் தற்கொலை செய்கின்றனர். இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா (12.7%), 2வது இடத்தில் தமிழகம் (11.8%) 3வது இடத்தில் மேற்கு வங்கம் (10.9%) உள்ளது.

என்ன காரணம்

கல்வியில் சாதிக்க முடியாத விரக்தியில் மாணவர்கள், வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட கொடுமைகளால் பெண்களும், வறுமை, கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்களும்; வேலையில் தொந்தரவு, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக இளைஞர்களும் தற்கொலைக்கு முயல்கின்றனர். பிரச்னைகளை சந்திக்கும் பக்குவத்தை பெற்று விட்டால், தற்கொலை எண்ணம் தலை துாக்காது.
ராமச்சந்திரா பல்கலையில் புதிய படிப்புகள் துவக்கம்
பதிவு செய்த நாள்10செப்
2017
00:04

சென்னை:ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், நான்கு புதிய துணை மருத்துவ படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், பி.எஸ்சி., பயோ இன்பர்மேடிக்ஸ், பி.எஸ்சி., ஹெல்த் இன்பர்மேடிக்ஸ், பி.எஸ்சி., டேடா சயின்சஸ் மற்றும், பி.எஸ்சி., என்வயர்மென்டல் ஹெல்த் சயின்ஸ் ஆகிய, நான்கு புதிய துணை மருத்துவ படிப்புகள், இந்தாண்டு முதல் துவங்கப்பட்டு உள்ளன.

இதற்கு, ஆறு மாத பயிற்சியுடன், மூன்று ஆண்டுகள் வகுப்பு நடைபெறும். மேலும், ஹானர்ஸ் படிப்புகள், ஓராண்டு பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் வகுப்பு நடைபெறும்.இந்த படிப்புகளில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்கள், www.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள், ராமச்சந்திரா பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். செப்., 23ல் நேர்முக தேர்வு நடைபெறும்.
எம்.டி., யோகாவிண்ணப்பம் வரவேற்பு

பதிவு செய்த நாள்09செப்
2017
20:27

சென்னை, : சென்னை, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியில், மூன்றாண்டு, எம்.டி., படிப்புக்கு, தகுதியான மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை, சுகாதாரத் துறையின், www.tnhealth.org இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., 28க்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தேர்வு, அக்., 21ல் நடைபெறும். மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.





அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்09செப்
2017
20:15

நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம், 74 ஆயிரத்து, 675 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது.

 செப்., 5ல், அந்த அமைப்பினருடன், முதல்வர் பேச்சு நடத்தினார். வேலைநிறுத்தம்அவர் அளித்த உறுதியை ஏற்று, சில சங்கங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தன; சில சங்கங்கள், 'வேலைநிறுத்தம் நடைபெறும்' என அறிவித்தன.போராட்டத்தை கைவிடும்படி, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். அதையும் மீறி, நேற்று முன்தினம், வேலைநிறுத்தம் துவங்கியது.இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 

அதைத் தொடர்ந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என, அரசு தலைமைச் செயலர் கிரிஜா, அறிக்கை வெளியிட்டார்.நீதிமன்ற உத்தரவை மீறி, சில சங்கங்கள் சார்பில், நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. அதில், 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். 

நடவடிக்கை    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதை மீறி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது. 

நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலைக்கு வராதவர் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முறையாக, மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படாது. மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
சி.பி.ஐ., பிடியில் ஜெயந்தி நடராஜன்
சென்னை வீட்டில் பல மணி நேரம், 'ரெய்டு'

தனியார் நிறுவனத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் செய்த முறைகேடு தொடர்பாக, சென்னை யில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெயந்தி நடராஜன், ௬௩, வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். மேலும், டில்லி உட்பட நான்கு மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன். 28 மாதம் அமைச்சராக இருந்த அவர், 2013 டிசம்பரில், பதவியை ராஜினாமா செய்தார்.

வழக்குப் பதிவு

அப்போது, கட்சிப் பணிக்கு செல்வதால், ராஜினாமா செய்ததாக கூறினார்.ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், டில்லியில் நடந்த, தொழில் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய, காங்., துணைத் தலைவர், ராகுல், 'உங்களில் சிலர், சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, புகார் கூறினீர்கள்.'அத்தகைய

தாமதம் தவறு. அத்துறையில் உள்ள ஓட்டைகள், அடைக்கப்பட வேண்டியது அவசியம்' என்றார். அதன்பின், ஜெயந்தி பதவி விலகலுக்கு, இது தான் காரணம் என்பது தெரிய வந்தது.

ராகுல் மீது அதிருப்தியில் இருந்த ஜெயந்தி, கட்சியை விட்டு, 2015ல் வெளியேறினார். அப்போதே, ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜிண்டால் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட, சுரங்க அனுமதி
தொடர்பாக, அவர் விசாரிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.இந்நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து, அவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்திவீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனை, பல மணி நேரம் நீடித்தது; சில ஆவணங்களும் சிக்கின.

5 இடங்களில் சோதனை

இது குறித்து, சென்னையில் உள்ள, சி.பி.ஐ., அதிகாரிகளை கேட்டபோது, 'டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். எங்களுக்கு தகவல் இல்லை' என்றனர்.

டில்லி, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில், ஜெயந்தி நடராஜனின் வீடு, ஒடிசா மாநிலம், சுந்தர்கரில் உள்ள, 'எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்' நிறுவனத்தின் பதிவு அலுவலகம், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, அதன் பிராந்திய அலுவலகம் மற்றும் டில்லியில் உள்ள ஒரு வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடந்துள்ளது' என்றனர்.தற்போது, ஜெயந்தி நடராஜன் வெளிநாட்டில் உள்ளார். சி.பி.ஐ., பதிவு
செய்து உள்ள வழக்கில், ஜெயந்தி நடராஜன், எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்தின், முன்னாள் மேலாண் இயக்குனர் உமங் கேஜ்ரிவால் மற்றும் சிலர்குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். ஜெயந்தி மீது, குற்றச் சதி மற்றும் பதவியை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு என்ன?

ஜெயந்தி நடராஜனுக்கு முன், அத்துறைக்கு பொறுப்பேற்றிருந்த ஜெய்ராம் ரமேஷ், இந்த நிறுவனத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி தர மறுத்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு, ஜெயந்தி நடராஜன் முறைகேடாக ஒப்புதல் அளித்து உள்ளதாக, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தில், 136 ஏக்கர் வனப் பகுதியைக் கொடுக்க, சட்டத்தை மீறி,அந்த நிறுவனத்திற்கு, 2012ல், ஜெயந்தி நடராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். அது தொடர்பாக, வனத்துறை டைரக்டர் ஜெனரல் கருத்தை, அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, விரைவில், ஜெயந்தி நடராஜன், விசாரணைக்கு அழைக்கப்படுவார் என, சி.பி.ஐ., வட்டாரம் தெரிவித்தது.

ராகுலிடம் விசாரணை?

அமைச்சராக இருந்த ஜெயந்தி,சில தனியார் நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, தாமதம் செய்ததாக, பிரதமர் அலுவலகம் மற்றும் கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்ததால் தான், அவர் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அவரோ, தாம் ராகுல் சொன்னபடி தான் செயல் பட்டதாக கூறியிருந்தார்.அதனால் ராகுலிடமும் விசாரணை நடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு
பதிவு செய்த நாள்
செப் 09,2017 21:59



புதுடில்லி: ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள், 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டீ ஆக்டிவேட் செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண சலுகையால் மெட்ரோ பயணம் அதிகரிப்பு
பதிவு செய்த நாள்10செப்
2017
00:39




சென்னை: மெட்ரோ ரயிலில், கட்டண சலுகை வழங்கப்படுவதால், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கும்; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, அவ்வப்போது, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பண்டிகை காலத்தையொட்டி, ஆக., 25ல் இருந்து, அக்., 31 வரை, 20 சதவீதம், கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது.

மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:மெட்ரோ ரயிலில், தினமும், 22 ஆயிரம் பயணியர் வரை பயணம் செய்தனர். பண்டிகை காலத்தையொட்டி, பயணியருக்கு, அக்., 31 வரை, 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளதால், பயணியர் வரத்து அதிகரித்துள்ளது. மெட்ரோ ரயிலில், தினமும், 30 ஆயிரம் பேர் வரை பயணம் செய்கின்றனர். இதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த கட்டண சலுகையை, 2018 ஜன., வரை நீட்டிப்பது குறித்து, உயரதிகாரிகள் தரப்பில், ஆலோசிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மருத்துவகல்லூரிகளுக்கு அபராதம் வசூலித்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவு

பதிவு செய்த நாள்10செப்
2017
02:56




சென்னை,: மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை சரி செய்யாத, மருத்துவ கல்லுாரிகளிடம் இருந்து, இழப்பீடு தொகையை பெற்று, மாணவர்களுக்கு வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி, புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலை உள்ளிட்ட சில கல்லுாரிகளில், மருத்துவப் படிப்பு மற்றும் முதுகலை வகுப்புகளை முடித்த, மாணவர்களின் சான்றிதழ்களை, பதிவு செய்ய, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மறுத்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மாணவர்களின் சான்றிதழ்களை பதிவு செய்யும்படி, மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மருத்துவ கவுன்சில், மேல்முறையீடு செய்தது. மாணவர்கள் சார்பிலும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் நுாட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, மருத்துவ கல்லுாரிகள் சரி செய்யாததால், அதில் படித்தவர்களின் பட்டங்களை பதிவு செய்ய முடியாது' என, இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது. மருத்துவ கவுன்சில் அனுமதி கடிதம் வழங்கிய பின் தான், அந்த கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்திய தேர்விலும், தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்லுாரிகளில் குறைபாடுகள் சரி செய்யப்படவில்லை என்பதற்காக, மாணவர்கள் பெற்ற பட்டங்களை பதிவு செய்வதை, இந்திய மருத்துவ கவுன்சில் தடுக்க முடியாது.

பல்கலை வழங்கிய தேர்ச்சி சான்றிதழில், எந்த குறைபாடும் இல்லை. குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல், படிப்பை பூர்த்தி செய்ய மாணவர்களை அனுமதிக்கும் கல்லுாரிகளுக்கு, இழப்பீட்டு தொகை விதிக்கப்பட வேண்டும். அப்போது தான், பணம் போகிறதே என பயந்து, மருத்துவ கவுன்சிலின் நிபந்தனைகளை நிறைவேற்றுவர்.

எம்.பி.பி.எஸ்., மாணவர் ஒவ்வொருவருக்கும், தலா, ஒரு லட்சம் ரூபாய்; முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் என கணக்கிட்டு, கல்லுாரிகளுக்கு இழப்பீட்டு தொகை விதிக்கப்படுகிறது.

மருத்துவ கல்வி இயக்குனர், இழப்பீட்டு தொகையை வசூலித்து, ஒவ்வொரு மாணவருக்கும் வழங்க வேண்டும்.இழப்பீட்டு தொகையில், பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொகையில், ௧௦ ஆயிரம் ரூபாய்; முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தொகையில், ௨௫ ஆயிரம் ரூபாயை, பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்.

இதை, அரசு மருத்துவ கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிட வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
மாவட்ட செய்திகள்

சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டம்



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி நேற்று கொட்டுமழையில் போராட்டம் நடத்தினர்.

செப்டம்பர் 10, 2017, 04:45 AM

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவம், பல் மருத்துவத்தில் படிக்கும் மாணவர்கள் கடந்த 30-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த பல்கலைக்கழகம் மருத்துவ கல்லூரியில் இளநிலை பிரிவில் எம்.பி.பி.எஸ். படிக்கும் (முதலாம் ஆண்டு தவிர்த்து) மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து முதுநிலை பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் காலமுறையற்ற விடுமுறை விடப்பட்டது. மேலும் மாணவர்களை விடுதிகளில் இருந்து காலி செய்யும் படியும் வலியுறுத்தியது. ஆனால் மாணவ- மாணவிகள் விடுதிகளை காலி செய்யாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் நேற்று 11-வது நாளாக நீடித்தது. இதில் மருத்துவ கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களது விடுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மருத்துவ கல்லூரி வளாகத்துக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து , அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென மழை பெய்தது. இருப்பினும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் கொட்டும் மழையையும் பொருட்படுத் தாமல் கையில் குடைபிடித்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது


கும்பகோணம் பகுதியில் பலத்த மழை: கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

செப்டம்பர் 10, 2017, 04:00 AM

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்கெட் அருகே மல்லுக தெருவில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் குளத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மகாமக விழாவின் போது ரூ.21 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 50 மீட்டர் அளவில் சுவர் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து அறநிலையத்துறையினர் அந்த பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்தனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ‘இனிப்பு’ச் செய்தி!



தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

செப்டம்பர் 09, 2017, 12:43 PM

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்புச் செய்தி.

அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாளமில்லா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செலுத்திப் பார்த்ததில், உடல் பருமனையும் நீரிழிவையும் கட்டுப்படுத்தியதாம்.

மனிதர்களிடமும் இச்சோதனை வெற்றியடையும் என்றும், விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை ரத்தத்தில் செலுத்துவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும் என்றும் டானாபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி புரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளார்.
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்



தெற்கில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 10, 2017, 04:15 AM

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் தெற்கு கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்திருக்கிறது. சில இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 32 செ.மீ. வரை மழை அளவு பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்திருக்கிறது. கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று வரை சராசரியாக 24 செ.மீ. மழை பெய்யும். ஆனால் 35 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பைவிட 48 சதவீதம் அதிகமாகும். சென்னையில் இயல்பைவிட 13 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கும்பகோணத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பாம்பனில் 11 செ.மீ., கொடைக்கானலில் 10 செ.மீ., அவினாசி, மதுரையில் தலா 9 செ.மீ., அரவக்குறிச்சி, சின்னக்கல்லார், பொன்னேரியில் தலா 7 செ.மீ., திருமங்கலம், பெரியகுளம், மணியாச்சி, ஓசூர், பரமத்திவேலூர், திருப்பூரில் தலா 6 செ.மீ., கொடுமுடி, மேட்டுப்பாளையம், கோபிசெட்டிப்பாளையம், வால்பாறை, நாமக்கல், சூளகிரி, பெருந்துரை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் மற்றும் பல இடங்களில் லேசான மழையும் பதிவாகி இருக்கிறது.

Saturday, September 9, 2017

Posted Date : 18:23 (29/08/2017)

'இங்கே டாக்டர் சர்ட்டிஃபிகேட் விற்கப்படும்.!’ - கூவி விற்ற கும்பல்

சே.த.இளங்கோவன்

VIKATAN

பசுமை நிறைந்த அந்தக் கிராமத்துக்குள் நுழைகிறது நகர சகதியெல்லாம் கடந்து வந்த அந்தக் கார். தூரத்தில் தென்பட்ட ஒரு பாரம்பர்ய மருத்துவக் குடிலை நோக்கி நகர்ந்து சென்று நிற்கிறது. காருக்குள்ளிருந்து இறங்கும் இருவர், அந்தக் குடிலின் உள்ளே நுழைகிறார்கள். அங்கே, இயற்கை மருந்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கும் அப்பாவுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் மகனை தனியே அழைக்கின்றனர். "அப்பாகூட இருந்ததால தொழிலைக் கத்துகிட்ட, நல்லது. எவ்வளவு நாள்தான் இப்படி உதவி செஞ்சுக்கிட்டே இருப்ப. நீயும் டாக்டர் ஆக வேண்டாமா ?" என அவர்கள் கேட்க, "டாக்டர் ஆகணும்னா படிச்சு சர்டிபிகேட் வாங்கணுமே" என்கிறார் மகன். 'தூண்டிலில் சிக்கியது மீன்' என்ற துள்ளலோடு, ''கவலையை விடு. அதுக்குத்தானே நாங்க இருக்கோம். கொஞ்சம் செலவாகும். அவ்ளோதான். சர்டிபிகேட் நாங்க ரெடி பண்ணித் தரோம். பணத்தை நீ ரெடி பண்ணு தம்பி" என்றபடியே காருக்கு திரும்புகின்றனர் இருவரும். ஓரிரு நாளில் ஒரு குறிப்பிட்டத் தொகை இருவருக்கும் கைமாற, தற்போது அந்தக் கிராமத்தின் மருத்துவக் குடிலில் மாட்டப்பட்ட அடையாள பெயர்ப் பலகையில், மகனின் பெயரோடு, 'ஹோமியோபதி டாக்டர்' என்ற பட்டமும் இணைந்துள்ளது.



இப்படியாக தமிழ்நாடு முழுக்க, கிராமம் கிராமமாக காரில் பயணித்து, ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ்களை விற்று வந்த கும்பலைச் சுற்றி வளைத்துள்ளது சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் அமைத்த காக்கி டீம். போலி ஹோமியோ மருத்துவராக வலம் வந்த தஞ்சாவூர் பாலகிருஷ்ணன், கோவை ரவிக்குமார், கடலூர் வேல்முருகன், திருப்பூர் ஸ்ரீதரன், தேனி அனில்குமார், மதுரை குமரன் என 6 பேரை முதற்கட்டமாக கைதுசெய்துள்ளது காக்கி டீம். விசாரணையின்போது இவர்கள் கொட்டிய தகவல்கள் ஒவ்வொன்றும் பகீர் ரகம்...

"தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் என்பது 'homeopathy system of medicine and practioner of homeopathy act 1971' என்ற சட்டத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு பதிவு செய்யப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஹோமியோ மருத்துவர்களாக மருத்துவம் பார்க்க முடியும். இதில் பதிவுசெய்து முறையாக மருத்துவத் தொழில் செய்துவந்த மருத்துவர்களில், இறந்துபோனவர்களின் பதிவு எண்களை வேறொரு பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளது தரகு கும்பல். இந்த மோசடிக் கும்பலிடம் பணம் கொடுத்துப் பெற்ற இந்தப் பதிவு எண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் என்ற பெயரில், மக்களின் உயிரோடு விளையாடியுள்ளனர் பலர். தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளர் ராஜசேகரன் கொடுத்த புகாருக்குப் பிறகே இவர்களை வளைத்துப் பிடித்தோம். சில முக்கியமான தரகு கும்பலைத் தேடி வருகிறோம்" என்றது காக்கி விசாரணை டீம்.

ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ் பின்னுள்ள சட்ட விரோதங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் முன்னாள் பதிவாளர் டாக்டர் ஞானசம்பந்தமிடம் பேசினோம்.

"ஹோமியோபதி மருத்துவர்களுக்கான பதிவு, 3 க்ளாஸாக பிரிக்கப்பட்டுள்ளன. நேரடியாக கல்லூரி முடித்துவிட்டு பதிவு செய்பவர்கள் 'ஏ' க்ளாஸ். 10 ஆண்டுகள் பயிற்சிசெய்து, கலெக்டரிடம் ஒப்புதல் பெறுபவர்கள் 'பி ' க்ளாஸ். இதுதவிர, 4 ஆண்டுகள் ஹோமியோ மருத்துவ அனுபவம் உள்ளவர்கள் அதன்பின் இதற்கென தனியாக ஒரு கோர்ஸ் படித்துமுடிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்காகவே நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டரிடம் ஒப்புதல் பெறவேண்டும். இவர்கள் 'சி' க்ளாஸ் பிரிவில் 
வருவார்கள். இவ்வாறு பதிவு செய்தவர்களில் 'பி' மற்றும் 'சி' க்ளாஸில் மட்டும் 15,176 மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 4-5-1976-க்குப் பிறகு இப்பதிவு தொடரவில்லை. இவர்கள் உயிருடன் உள்ளார்களா? மருத்துவம் பார்க்கிறார்களா? என்று சரிபார்ப்பது கவுன்சில் மற்றும் கலெக்டரின் பணியாகும். தொடக்கத்தில் முறையாக நடந்த இவைகள் காலப்போக்கில் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது. அதனால்தான் தற்போது இத்துறை முறைகேடுகளின் மொத்த உருவமாக மாறிவிட்டது. ஏற்கெனவே முறைப்படி பதிவுசெய்திருந்த ஹோமியோபதி மருத்துவர்கள் பலர் காலமாகிவிட்டனர். அவர்களைப் பட்டியல் எடுத்து, ஓரளவுக்குப் பெயர் இணைந்து போகிறவர்களுக்கு போலிச் சான்றிதழ்களை விற்றுள்ளனர்.

உதாரணமாக கே.சி ஸ்ரீதரன் என்பவரின் பதிவு எண்ணை, எஸ்.ஸ்ரீதரன் என்பவருக்கு மாற்றி விற்றுள்ளனர். இப்படி மாற்றிக் கொடுப்பதற்கு மட்டும் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை விலை பேசியுள்ளனர். எங்கள் கண்டுபிடிப்பில், இப்படிப் பதிவு எண் மாற்றிக்கொடுக்கப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 40 ஆகும். இந்த சட்டவிரோத செயல்களில் மேலிடம் வரை தொடர்பு இருக்கிறது. முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், தலைவர் ஹானிமன், உறுப்பினர்கள் ரங்கசாமி, பரமேஸ்வரன் நம்பியார் ஆகியோருக்கு இந்தத் தவறில் தொடர்பிருக்கிறது. அவர்களை விசாரிக்க வேண்டும்." என்றார் ஆக்ரோஷமாக.

இவர் கொடுத்த புகாரின் பேரில், போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாம் ஹானிமன், சவுந்தரராஜன் தரப்பில் பேச முயற்சித்தோம். இயலவில்லை. (எப்போது பேசினாலும் அவர்கள் கருத்தைப் பதிவு செய்ய தயாராக உள்ளோம்.) அதேநேரம் அவர்களுக்கு ஆதரவாக, ஞானசம்பந்தம் மீது குற்றம்சாட்டி துண்டறிக்கை ஒன்று ஹோமியோபதி மருத்துவர்களிடம் சுற்றுகிறது. அதில், "ஹோமியோபதியை வளர்ப்பதாகக் கூறி, ஊடகத்தில், கலர் கலராய் பொய்கள் சொல்லி தனக்கு சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார் ஞானசம்பந்தம். 'பி ' க்ளாஸ் பதிவுபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களில் குறிப்பிட்ட 40 பேர் மட்டுமே போலிகள் என்பதை அடையாளம் காட்ட முடிகிறது என்றால், இதில் களவுத்தனம் செய்தவர் யார் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள். உண்மையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர் ஞானசம்பந்தம்தான். ஆனால், தற்போது புகாருக்கு உள்ளானவர்கள் மற்றும் ஹானிமன் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகள் எதிலும் சம்பந்தமில்லாதவர்கள்" என்கிற ரீதியில் செல்கிறது துண்டறிக்கைத் தகவல்கள்.

"விரைவில் தேர்தல் வரப்போகிறது. அதில் வெற்றிபெற வாக்குகள் அவசியம். தமக்கான வாக்குகளை உறுதிப்படுத்துவதற்கு போலியான பதிவு எண் பெற்றவர்களை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த முறைகேட்டை கவுன்சில்தான் தடுக்க வேண்டும். ஒரு தேர்தலுக்காக இப்படியெல்லாம் முறைகேடுகளில் ஈடுபடுவார்களா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஹோமியோபதி மருத்துவத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியைக் கையாளும் அதிகாரம் என்பது தேர்தலில் வெற்றிபெறுபவருக்கே கிடைக்கிறது. அதனால்தான் இப்படியொரு தில்லுமுல்லு செய்கிறார்கள்" என பின்னணியைப் போட்டுடைக்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத சில ஹோமியோபதி மருத்துவர்கள்!

மருத்துவத்தின் குரல் வளையை நெரிப்பது மருத்துவ அறமாகுமா?

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...