Tuesday, September 12, 2017

தொழிலதிபர்கள், வி.ஐ.பி.களுக்காக துணை நடிகைகளை பணியில் அமர்த்திய சூதாட்ட கிளப் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது: 2 லட்சம் போதை பொருள் பறிமுதல்

2017-09-11@ 00:33:45




கீழ்ப்பாக்கம்: தொழிலதிபர்கள் மற்றும் வி.ஐ.பி.களுக்காக துணை நடிகைளை பணியில் அமர்த்தி சூதாட்ட கிளப் நடத்திய இரண்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் வார விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் மது போதை, விருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகளும் சூதாட்டமும் நடைபெற்றது. இதனால் குடியிருப்புக்கு ஏராளமான விஐபிக்கள் சொகுசு கார்களில் வந்து சென்றனர். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று முன் தினம் இரவு அக்குடியிருப்பில் உதவி கமிஷனர் ஹரிகுமார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டார்.

அப்போது அக்குடியிருப்பில் வெளிப்பக்கம் பூட்டியிருந்த ஒரு வீட்டின் மீது உதவி கமிஷனருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவ்வீட்டின் கதவை அவர் தொடர்ந்து தட்டியதும் அங்கிருந்த அறையில் இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்தார். பிறகு பூட்டை திறந்த போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஹான்ஸ், பான்பராக், உயர் ரக மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் இருந்தன. மேலும் அங்கே சூதாட்டம் நடந்ததற்கு அடையாளமாக சீட்டுக் கட்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலைய போலீசார் பிடிபட்ட யோகேஷ் ஜோஷி (22) என்ற வாலிபர் கொடுத்த தகவலின்படி சூதாட்ட கிளப் நடத்திய தண்டையார்பேட்டையை சேர்ந்த விக்ரமன் (38) என்பவரை கைது செய்தனர். அவர் போலீஸ் விசாரணையில், ‘‘நான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த சூதாட்ட கிளப்பை நடத்துகிறேன்.

ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் இந்த கிளப் நடைபெறும். ஏராளமான தொழிலதிபர்கள் மற்றும் விஐபிகள் இங்குவந்து சீட்டு விளையாடுவார்கள். அவர்களுக்கு தேவையான மது, குட்கா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களும் இங்கு ஏற்பாடு செய்யப்படும். சில சமயங்களில் இளம்பெண்களை வரவைத்து நடனம் ஆடி ரசிப்போம். சினிமா துணை நடிகைகள் வந்து ஆடியிருக்கிறார்கள். யோகேஷ் ஜோஷி என்னிடம் பல வருடங்களாக ஊழியராக வேலை பார்க்கிறான். நீங்கள் ரெய்டு நடத்திய தினத்தில் நான் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டதால் அன்றைய தினம் கிளப் நடக்கவில்லை’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக லண்டனில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் போராட்டம்
2017-09-11@ 17:17:22




லண்டன்: நீட் தேர்வுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் கடல் கடந்து பிரிட்டன் வரை பரவி உள்ளது. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் இந்திய தூதரம் முன்பு கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் வாழ் தமிழர்கள் நீட் தேர்வு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தப்படி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்தாகும். கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் திணிக்கக்கூடாது என்று இந்திய அரசை பிரிட்டன் வாழ் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றம் 18ல் விசாரணை

2017-09-12@ 00:21:29




புதுடெல்லி: தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20 சதவீதம், ஆதி திராவிட வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் என மொத்தம் 69 சதவீதம் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு உள்ளதால், அரசியல் சட்டப் பாதுகாப்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அதனால், தமிழகத்தின் இந்த ஒதுக்கீட்டு முறையை உடனடியாக ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என கடந்த வாரம் நாகர்கோவிலை சேர்ந்த திருமால்மங்கள் என்ற மாணவி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வீல்கர் மற்றும் சந்திராசூட் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், அது விசாரிக்கப்படவில்லை. எனவே, விசாரனையை 18ம் தேதி நடத்துவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
சிபிஎஸ்இ ஆசிரியர்கள் 33 பேருக்கு விருது

2017-09-12@ 00:23:44




புதுடெல்லி: நாடு முழுவதும் திறமையாக செயல்பட்ட 33 சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கல்வித்திறன் மற்றும் முன்னேற்றம், ஆர்வம், அவர்கள் சார்ந்த துறையில் அவர்களுக்கு இருக்கும் நன்மதிப்பு மற்றும் அர்ப்பணிப்புவு, விடாமுயற்சி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த விருதுக்கு ஆண்டுதோறும் சிபிஎஸ்இ ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா கலந்துக் கொண்டு 33 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசை வழங்கினார். சிபிஎஸ்இ-யின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனிதா கார்வாலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘புதிய தலைமுறைகளை நல்ல முறையில் உருவாக்குவதன் மூலம் நாட்டை வடிவமைக்கும் ஆசிரியர்களின் பணி ஈடு இணையில்லாதது. ஆசிரியர்களே நாட்டின் உண்மையான பெருமையாக உள்ளனர். மாணவர்கள் மீதும் அதன் மூலம் நாட்டின் மீதும் இவர்கள் நீண்ட காலமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்'’ என்றார்.
போராட்டம் எதிரொலி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை: தமிழக அரசு அவசர உத்தரவு
2017-09-12@ 00:39:40




நெல்லை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலியாக அவர்கள் விடுப்பு எடுக்க தடை விதித்து தமிழக அரசு நேற்று அவசர உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். அதை பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ேநற்று 5ம் நாளாக அரசு ஊழியர்களின் ேவலைநிறுத்தம் தொடர்ந்ததால் அத்யாவசிய பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. இந்நிலையில் தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வேலைநிறுத்தம் காரணமாக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கக் கூடாது. அவர்கள் பணிக்கு வராதது சட்ட விரோதமானது என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சாதாரண விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட எந்த விடுப்புகளும் அனுமதிக்கக் கூடாது. மருத்துவ விடுப்பு தவிர எந்த விடுப்பும் எடுக்க அனுமதி கிடையாது. அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பு கோரினால் அவர்களது மருத்துவ சான்றின் உண்மைத் தன்மையை அறிய உரிய மருத்துவ குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ சான்றின் உண்மையை அறிவதற்கு முன்பு மருத்துவ விடுப்பு வழங்கக் கூடாது. அரசு ஊழியர் மருத்துவ விடுப்பு கோரி அளித்த சான்று உண்மையிலேயே மருத்துவம் சார்ந்தது இல்லை என தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் குவியும் பக்தர்கள் இன்று முதல் காவிரி புஷ்கரம்
2017-09-12@ 01:05:53




திருச்சி: ஸ்ரீரங்கம், மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நம் நாட்டில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்திரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா ஆகிய 12 நதிகள் புனிதத்துவம் கொண்டவையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த நதிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் புஷ்கரம் என்னும் பெயரில் புனிதமடைவதாக ஐதீகம். குருபகவான் சஞ்சாரத்தின் அடிப்படையில் நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. புஷ்கர விழா நடைபெறும் நாட்களில் அந்த குறிப்பிட்ட நதியில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் பலமுறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக துலாம் ராசிக்கும் காவிரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே துலாம் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. இன்று குருபகவான் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். எனவே காவிரி மகாபுஷ்கரம் விழா இன்று(12ம் தேதி) தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.

விழா நடைபெறும் 12 நாட்களும் ஜீயர்கள் மற்றும் மகான்களின் ஆசியுரைகளும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய வைணவ மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொள்கின்றனர். மகா புஷ்கரத்தில் காவிரி ஆற்றில் புனித நீராட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ளனர். மயிலாடுதுறை துலாகட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு 12 ராசிகளுக்குரிய நதிகள் கடஸ்தாபனம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதன் பின் 8.25 மணிக்கு ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள், துறவிகள் காவிரி புஷ்கர விழாவை தொடங்கி வைத்து புனிதநீராடுவர். தொடர்ந்து துறவியர் மாநாடு நடக்கிறது.
திறந்தநிலை பல்கலை. பட்டம் வேலைக்கு தகுதியானது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

2017-09-12@ 01:09:17




மதுரை: திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெறும் பட்டங்களும் வேலை வாய்ப்புக்கு தகுதியானவை என்பதால், பதவி உயர்வும், பணப்பலன்களும் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 மதுரையை சேர்ந்த ரத்தினவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை ஐகோர்ட்டில் உதவியாளராக கடந்த 2000ம் ஆண்டில் நியமிக்கப்பட்டேன். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஏ முடித்தேன். ஐகோர்ட் கிளையில் பணியாற்றியபோது கடந்த 2009ல் உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வு வழங்கி ெசன்னைக்கு
மாற்றப்பட்டேன். ஆனால், எனக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருந்தபோது, கடந்த 13.7.2016ல் உதவி பிரிவு அலுவலராக வழங்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது.நான் முறையாக படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதாகவும், பிளஸ் 2 முடித்து திறந்தவெளியில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், ‘‘திறந்தநிலை பல்கலை.யில் பெறப்படும் இளநிலை பட்டங்கள், சென்னை பல்கலை.யால் வழங்கப்படும் இளங்கலை பட்டங்களுக்கு இணையானது அல்ல என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் திறந்தநிலை பல்கலை.யில் பெறும் பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியானதாக கருத வேண்டுமென யூஜிசி கூறுகிறது. மத்திய அரசும் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளது. இதில், மாநில அரசு மட்டும் எப்படி மாறுபட முடியும்? ஐகோர்ட் விதிகளின்படியும் திறந்தநிலையில் பெறும் இளநிலை பட்டங்கள் வேலை வாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் தகுதியானது. இதில், மனுதாரருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு வழங்கவில்லை. திறந்தநிலையில் பெறும் இளங்கலை பட்டம் பதவி உயர்வு பெற தகுதியானது. பதவி உயர்வை ரத்து செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே பதவி உயர்வு வழங்கிய நாளிலிருந்து உதவி பிரிவு அலுவலராக பதவி உயர்வும், அதற்குரிய பணப்பலன்களையும் வழங்க வேண்டும்,’’ என உத்தரவிட்டுள்ளனர்.
மும்பை மெயில் இன்று காலை புறப்படும்

2017-09-12@ 00:12:42

சென்னை: மகாராஷ்டிராவில் கடந்த வாரம் சரக்கு ரயில் தடம் புரண்டதால் மும்பை ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது தொடர்கிறது. அதனால் நேற்று மாலை 4.30 மணிக்கு வரவேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 12 மணி நேரம் தாமதமாக இன்று அதிகாலை சென்னை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் காரணமாக நேற்றிரவு திங்கட்கிழமை 10.30 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்ல வேண்டிய மும்பை மெயில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு புறப்படும்.
தாசில்தார்களும் ஸ்டிரைக்:தாலுகா அலுவலகத்திற்கு பூட்டு
பதிவு செய்த நாள்11செப்
2017
23:45

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் பேராட்டத்தால் தாலு<கா அலுவலகத்திற்கு பூட்டுபோட்டுவிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.நெல்லையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன.

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்கங்கள் கடந்த 7ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஏற்கனவே நடந்த போராட்டங்களில் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலுகா அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.அரசு பள்ளிகளில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகளும் செசயல்படவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் 15 தாலுகா அலுவலகங்கள், 3 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும்தாசில்தார்கள் மற்றும் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.இதனால் வருவாய்த்துறையில் எந்த பணிகளும் நடக்கவில்லை. குறிப்பாக நேற்று திங்கள்கிழமை மனுநீதிநாளில்மக்களிடம் பெறப்படும் மனுக்களை வகைப்படுத்துதல் அதற்கு பதில் சொல்வதற்கும் ஊழியர்கள்,அதிகாரிகள் இன்றி சிரமப்பட்டனர். இன்று 12ம் தேதி முதல் இதுவரை ஸ்டிரைக்கில் பங்கேற்காதஅரசு அலுவலர் ஒன்றியமும் பங்கேற்க இருப்பதால் போராட்டம் இன்னமும் தீவிரமடையும்எனவும் இதனால் மக்கள் மேலும் பாதிப்படையயும் வாய்ப்புள்ளது.
பணியில் சேர சென்றவருக்கு 'டிஸ்மிஸ்' ஆணை

பதிவு செய்த நாள்11செப்
2017
22:49




ஈரோடு: ஈரோட்டில், பணியில் சேர்வதற்காக சென்ற, அங்கன்வாடி உதவியாளருக்கு, பணி நீக்க ஆணை வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தார்.ஈரோடு, சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு
பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார்; துணி மடிக்கும் தொழிலாளி. இவர் மனைவி நாகரத்தினம், 26. சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் உள்ள, அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு, விண்ணப்பித்தார். தகுதி அடிப்படையில், பணி வழங்கப்பட்டது. ௮ம் தேதி பணியில்
சேர சென்றார். அப்போது, தகுதி அடிப்படையில், 24 நாட்கள் வயது குறைவாக உள்ளதாக கூறி, பணியில் சேர முடியாது என, பணி நீக்க ஆணை தரப்பட்டுள்ளது. இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார். ஈரோடு, டி.ஆர்.ஓ., கவிதாவிடம், நேற்று மனு வழங்கினார். 

அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'வயது குறைவாக உள்ளதால், பணியில் சேர்க்க முடியாது. உரிய வயது வந்ததும், அடுத்து ஆட்கள் எடுக்கும் போது, முன்னுரிமைப்படி பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என விளக்கம் அளித்தனர்.
1.25 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பதிவு செய்த நாள்11செப்
2017
22:28

உயர் நீதிமன்ற தடையை மீறி, 60 ஆயிரம் ஆசிரியர், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள், நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. தடையை மீறி, போராட்டம் தொடரும் என, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், செப்., 9ல் அறிவித்தனர். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் நேற்று, 60 ஆயிரம் ஆசிரியர்கள், 65 ஆயிரம் அரசு ஊழியர்கள் என, மொத்தம், 1.25 லட்சம் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீது, அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்காக, அரசு ஊழியர்கள், தற்காலிக விடுப்பு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பு கேட்போருக்கு, மருத்துவக் குழு ஆலோசனைக்கு பின், விடுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -
மதுரை, நெல்லை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 250ஆக அதிகரிப்பு
பதிவு செய்த நாள்11செப்
2017
23:39

மதுரை: மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்விரு கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், தலா 150 மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் முறையில் சேர்க்கப்பட்டனர். இவ்விரு
கல்லுாரிகளும் பழமையானது என்பதால், இங்கு மாணவர் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. 

கவுன்சில் விதிப்படி மருத்துவ கல்லுாரியில் 250 மாணவர்களுக்கான நவீன வசதியுடன் கூடிய வகுப்பறை, ஆடிட்டோரியம், மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி விடுதி, முதல்வர் அறை, கூட்ட அரங்கு, நுாலகம் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென மத்திய அரசு தனது பங்களிப்பு நிதி ரூ.60 கோடியை இரு கல்லுாரிகளுக்கும் ஒதுக்கியுள்ளது. மாநில ஒதுக்கீடு எங்கே: 2018 ல் 250 மாணவர்கள் சேர்க்கைக்கு, நவம்பருக்குள் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும். 2018 மே- மாதத்திற்குள் அதற்கான அங்கீகாரம் கிடைத்தாகவேண்டும். இதற்காக மாநில
அரசு தமது பங்களிப்பு நிதியை இரு மருத்துவ கல்லுாரிகளுக்கும் ஒதுக்கி, கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

மதுரை டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: இரு கல்லுாரிக்கும் மத்திய அரசு பங்களிப்பு தொகை ஒதுக்கிஉள்ளது. நவம்பருக்குள் இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வருவதாக கூறியுள்ளனர். அங்கீகாரத்திற்கு பின், 2018 முதல் 250 மாணவர்கள் சேர்க்கப்படுவர், என்றார்
தற்கொலை செய்த பெண் உடல் இந்தோனேஷியா செல்கிறது
பதிவு செய்த நாள்11செப்
2017
23:02


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில், கணவர் வீட்டில் இந்தோனேஷியா பெண் தற்கொலை செய்த வழக்கில், குடும்பத்தினர் புகார் செய்ய விரும்பாததால், உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 32. இந்தோனேஷியாவில் வேலை பார்த்த போது, அங்கு பெர்தாமியா வர்தானியா, 28, என்ற பெண்ணை
காதலித்தார். குலசேகரத்தில் இந்து முறைப்படி திருமணம் முடித்து, இந்தோனேஷியாவுக்கு சென்றனர். அங்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சுபாஷ், எந்த தகவலும் சொல்லாமல், குலசேகரம் வந்து விட்டார். அவரை தேடி பெர்தாமியாவும் வந்தார். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இதனால், விரக்தியடைந்த பெர்தாமியா, சுபாஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். 

அவரது உடலை, கணவன் வீட்டாரிடம் கொடுக்கவில்லை. 'பெண்ணின் உறவினர்கள் வந்த பின் முடிவு எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்திருந்தனர்.இந்தோனேஷியா துாதரகத்தில் இருந்து, இரண்டு அதிகாரிகள், குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
பெர்தாமியா மரணம் தொடர்பாக, அவரது குடும்பத்தாரிடம் இருந்து எந்த புகாரும் இல்லை எனவும், அவரது உடலை இந்தோனேஷியாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கடிதம் கொடுத்தனர். 

இதை தொடர்ந்து அவரது உடலை, விமானம் மூலம் அனுப்புவதற்கான பணி நடக்கிறது.
மயிலாடுதுறையில் மகா புஷ்கரம் இன்று துவக்கம்! : காவிரி தாய்க்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்
செப் 11,2017 22:59



மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், மகா புஷ்கரம் விழா இன்று துவங்குகிறது. காவிரி துலா கட்டத்தில் நேற்று, காவிரி தாய் சிலைக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வழிபட்டனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரியில், 144 ஆண்டுகளுக்குப் பின், மகா புஷ்கரம் விழா, இன்று கோலாகலமாக துவங்குகிறது. சங்கராச்சாரியார்கள், ஆதீன குருமகா சன்னிதானங்கள், துறவிகள், காவிரி ஆற்றில் புனித நீராட உள்ளனர். மாலை, வேதவியாசர், காவிரி தேவி படத்துடன், மயிலாடுதுறை துலா கட்டத்திலிருந்து ஊர்வலம் நடக்கிறது. இதில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் கலந்து கொள்கின்றனர். இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடக்கும் புஷ்கர விழாவின் அனைத்து நாட்களிலும், வேத பாராயணம், ருத்ர பாராயணம், திருமுறை முற்றோதல், லலிதா, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து, காவிரிக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது.

பொறுப்பாளர் மாதாஜி ஞானேஸ்வரி தலைமையில், அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, 24ம் தேதி வரை, தினமும் ஆரத்தி மற்றும் சகஸ்ரநாம பாராயணம் செய்ய உள்ளனர். ஆரத்தி குழுவினர், காவிரி துலா கட்டத்தின் தென் கரையில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாய் சிலைக்கு, நேற்று காப்பு கட்டி, சகஸ்ரநாம அர்ச்சனை, ஆரத்தி எடுத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில், பொறுப்பாளர்கள் மாதாஜி ஞானேஸ்வரி, புவனேஸ்வரி, பிரவீனா, புஷ்கரம் விழாக்குழு செயலர் முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன், இணைச் செயலர் அப்பர் சுந்தரம், பா.ஜ., தேசியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மயிலாடுதுறை நகரில், 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்திற்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புறநகர் பகுதியில், மூன்று தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

21 இடங்களில் நடக்கிறது : குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். 

இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. கர்நாடகாவில், கா விரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, குஷால்நகர், ஸ்ரீரங்கபட்டணம், டி.நரசிபுரா, சிவசமுத்திரா, தலக்காடு, பன்னுார், கனகபுரா, சங்கமம் ஆகிய இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, கொடுமுடி, பள்ளிபாளையம், பரமத்தி வேலுார், திருச்சி, சுவாமிமலை, திருவையாறு, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய இடங்களில் நடக்கிறது.
சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை
பதிவு செய்த நாள்11செப்
2017
22:12

வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலுாரில் உள்ள, சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.சி., நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு, அக்டோபரில் வெளியாக உள்ளது.

இதனால், 100 எம்.பி.பி.எஸ்., மற்றும், 60 எம்.டி., மருத்துவர் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. 

இந்நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், கேரள மாநிலம், திருவனந்த புரத்தை சேர்ந்த சித்தாந்த் நாயர், 18, என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று வகுப்பு துவங்கியது.

கல்லுாரி அதிகாரிகள் கூறியதாவது: சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு, ஆண்டுக்கு, ஒரு 'சீட்' வழங்கப்படும். தற்போது, சேர்க்கப்பட்டு உள்ள மாணவரின் தந்தை, ராணுவ வீரர்; 2,001ல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்து விட்டார். இந்த மாணவரை, மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
சேலம் - சென்னை விமானம் சேவை துவங்குவதில் தாமதம்

பதிவு செய்த நாள்11செப்
2017
21:58

சேலம்: சேலத்தில் இருந்து, சென்னைக்கு விமான சேவையை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு, தமிழக அரசியல் சூழலே காரணம் என, கூறப்படுகிறது.

சேலம், கமலாபுரத்தில், 1993ல், விமான நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு, 6,000 அடி மட்டுமே ரன்வே உள்ளதால், சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கக்கூடிய சூழல் உள்ளது. இரு முறை தனியார் நிறுவனங்கள் மூலம், சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை துவங்கப்பட்டும், வரவேற்பு இல்லாததால், ஒருசில மாதங்களில் நிறுத்தப்பட்டது.சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில், 'உதான்' திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு நகரங்களுக்கு இடையே, விமான போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் நஷ்டத்தை, மத்திய அரசு, 80 சதவீதம், மாநில அரசு, 20 சதவீதம் ஏற்க வழி செய்யப்பட்டது.இதன்படி, ஏர் ஒடிசா நிறுவனத்துக்கு, சென்னையில் இருந்து நெய்வேலிக்கும், சேலத்தில் இருந்து புதுச்சேரி வழியாக, சென்னைக்கும் விமானம் இயக்க, அனுமதி அளிக்கப்பட்டது. 

மாநில அரசுகளுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகள் முடிந்த பின், செப்., முதல் விமான சேவை துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.செப்., துவங்கி, இரு வாரங்களான நிலையில், விமான சேவை குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளிவரவில்லை. அதே சமயம், 'உதான்' திட்டத்தில் அனுமதி பெறப்பட்ட சேவைகள், வேறு மாநிலங்களில், செப்., 15 முதல் துவங்குகின்றன.ஏர் ஒடிசா நிறுவன அலுவலர் ஒருவர் கூறியதாவது:'உதான்' திட்டத்தில், அனுமதி பெறப்பட்ட ஏர் ஒடிசா நிறுவனம், தமிழகத்தில் விமான சேவை துவக்க தயாராகவே உள்ளது. ஆயினும், மாநில அரசின் அனுமதி உள்ளிட்ட, ஒருசில காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, அரசியல் சூழலும் இதற்கு காரணமாக இருக்கலாம். அக்., மாதத்தில், விமான சேவை துவங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் உதவி கமிஷனருக்கு ஜனாதிபதி விருது கிடைக்காததேன்?

பதிவு செய்த நாள்11செப்
2017
19:51

சேலம் : உதவி கமிஷனருக்கு அறிவிக்கப்பட்ட, மத்திய அரசின் ஜனாதிபதி விருது, வழக்கை காரணம் காட்டி ரத்தாக உள்ளது. வழக்கை மறைத்த, உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என, தெரிகிறது. சேலம், மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கண்ணன், 49. இவர், 2014ல், தீவட்டிப்பட்டி ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது, அங்கு பணிபுரிந்த, எஸ்.ஐ., ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., கோபால் இடையே மோதல் ஏற்பட்டது. இதை, சரியாக விசாரிக்கவில்லை என, உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி, கண்ணன் மீது, 2015ல், வழக்கு பதிவானது. இந்நிலையில், டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்ற கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். போலீசில், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான ஜனாதிபதி விருதை, கண்ணனுக்கு வழங்க, அப்போதைய கிருஷ்ணகிரி, எஸ்.பி., திருநாவுக்கரசு பரிந்துரைத்தார். கிருஷ்ணகிரி, சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், 'கண்ணன் மீது வழக்கு எதுவும் இல்லை' என, தெரிவித்து விட்டனர். கண்ணனுக்கு, 2016ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. அதை, ஆக., 15ல் பெற இருந்தார்.

கண்ணன் மீது வழக்கு உள்ள நிலையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., கோபால், முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதிக்கு புகார் அனுப்பினார். இதனால், விருது வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விருதை ரத்து செய்வது குறித்து, மத்திய உள்துறை பரிசீலிக்கிறது. வழக்கு விபரங்களை மறைத்த, அப்போதைய அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

உதவி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடரப்பட்டது. அது, குற்ற வழக்கு அல்ல. அதே நேரம், வழக்கை விசாரிக்க வேண்டிய கூடுதல், எஸ்.பி., பணியிடம் காலியாக இருந்தது. இதனால், விசாரணை முடிவில் தாமதம் ஏற்பட்டது. வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. விருது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், விசாரணைக்கு பின் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


இணையதள விளையாட்டுகள்: இலவச, 'லேப் - டாப்'களில் தடை?

பதிவு செய்த நாள்11செப்
2017
19:39


கணினி விளையாட்டுகளால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு, 'லேப் - டாப்'களில், விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், பிளஸ் ௨ முடித்ததும், அவர்களுக்கு, இலவச லேப் - டாப் வழங்கப்படுகிறது. அனைத்து வகை, 'சாப்ட்வேர்'களையும் உள்ளீடு செய்து, இதை உடனடியாக பயன்படுத்த முடியும். இந்நிலையில், லேப் - டாப் வாங்கும் மாணவர்கள் பலர், 'வீடியோ கேம்' விளையாடுவதும், இணைய தளங்களில் பொழுதை போக்குவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், 'ப்ளூ வேல்' இணையதள விளையாட்டால், சில மாணவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது, இலவச லேப் - டாப் பெறும் மாணவர்கள், இணையதள விளையாட்டில், நேரத்தை செலவிடுவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில், அரசால் வழங்கப்படும் லேப் - டாப்களில், 'கேம் அப்ளிகேஷனை' நீக்கவும், அது போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத அளவுக்கு, தொழில்நுட்ப தடை ஏற்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

- நமது நிருபர் -
நீங்க விரும்புற எல்லாமே இருக்கு: சிங்கப்பூர் சுற்றுலா துறை அழைப்பு

பதிவு செய்த நாள்11செப்
2017
19:41



சென்னை: 'நிச்சயம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நாடாக, சிங்கப்பூர் இருக்கும். இந்திய சுற்றுலா பயணியர் அதிகம் வர வேண்டும்' என, சிங்கப்பூர் சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

சிங்கப்பூர் சுற்றுலாத் துறையும், பொருளாதார மேம்பாட்டு வாரியமும் இணைந்து, சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ஆர்வம் நிறைவேறும்' என்ற தலைப்பில், இந்தியாவின் முக்கிய நகரங்களில், பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கான குழுவினர், நேற்று சென்னை வந்தனர்.

இது குறித்து, சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர், ஸ்ரீதர் கூறியதாவது:

சிங்கப்பூர், 50 ஆண்டுகளாக, உலக சுற்றுலா தலமாகவும், வர்த்தக மையமாகவும் அடையாளப் படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் சுற்றுலா, முதலீட்டை ஈர்ப்பதில் போட்டி அதிகரித்துஉள்ளது. சுற்றுலா, வர்த்தகம் தொடர்பாக, இந்தியர்கள், சிங்கப்பூருக்கு வர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி, 2016ல், 11 லட்சம் இந்தியர்கள், சிங்கப்பூருக்கு பயணித்து உள்ளனர். இது, 2015ஐ காட்டிலும், 8 சதவீதம் உயர்வு. இந்தாண்டு, ஜன., - ஜூன் வரை, 6.6 லட்சம் பேர் பயணித்து உள்ளனர். இது, 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இயற்கை அழகை ரசிப்போர், வித்தியாசமான பொருட்களை வாங்க விரும்புவோர், உணவு பிரியர்கள், கலை ஆர்வம் உள்ளோர், தொழில் துவங்குவோர் என, அனைத்து தரப்பினரையும், சிங்கப்பூர் நிச்சயம் திருப்திப்படுத்தும். இந்த பிரசாரத்தில், சிங்கப்பூரின் தனித்தன்மை குறித்து விவரிக்கிறோம். இதன் பயனாக, வரும் காலங்களில், இந்தியர்களின் வருகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வங்கியில், 'டிபாசிட்' அதிகரிப்பு  வருமான வரி துறை கண்காணிப்பு

வங்கியில், ஜூலைக்கு பின், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிரந்தர வைப்பு தொகை வைத்த வாடிக்கையாளர்களை, வருமான வரித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.





பண பரிமாற்ற அறிவிப்புக்கு பின், வரி வருவாயை பெருக்க, வங்கி மற்றும் வருமான வரித் துறை மூலம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.முதல் கட்டமாக, கறுப்பு பணத்தை வெளி கொண்டு வரும் நோக்கில், ஜூலைக்கு பின்,

வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களில், 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல், இருப்பு வைத்துள்ளோரின் வருமான விபரம் கண்காணிக்கப்படுகிறது.
வங்கிகளில், நிரந்தர வைப்பு தொகைக்கு, 6 முதல், 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால், வாடிக்கையாளர் வருமான வரி செலுத்த தேவையில்லை; அதற்கு மேல் இருந்தால், 'பான்' எண் உள்ளோர்,

வரித் துறையினர் குறி

10 சதவீதம்,இல்லாதோர், 20 சதவீத வரி செலுத்த வேண்டும்.வங்கி மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின், வங்கியில் நிரந்தர வைப்பு தொகை அதிகரித்துள்ளது. இந்த வாடிக்கையாளர் மீது வருமான வரித் துறையினர் குறி வைத்துள்ளனர்.

மேலும், வைப்பு தொகைக்கான வட்டிக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. வங்கி வாடிக்கையாளர் விபரம், ஆன்- - லைன் மூலம் வருமான வரித் துறைக்கு சென்றுவிடும். அதன்படி வருமான வரி வசூலிப்பர். இந்த நெருக்கடியால், வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --
ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு



ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

செப்டம்பர் 12, 2017, 04:00 AM
மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–


தமிழ்நாடு ஆசிரியர்–அரசு ஊழியர்கள் சங்கங்கள் (ஜாக்டோ, ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசுப்பள்ளிகளில் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இடைக்கால தடை

இந்த மனுவை, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் விசாரித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 14–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில், கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர்.


போராட்டம் தொடர்ந்து வருவது குறித்து நேற்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்துக்கு மனுதாரர் தரப்பினர் கொண்டு சென்றனர். போராடும் அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு வழக்கை கோர்ட்டு தானாக முன்வந்து (சூமோட்டோ) பதிவு செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அரசு ஊழியர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அனுமதி வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அவமதிப்பு வழக்கு

இதனையடுத்து மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடரக்கூடாது என்று கடந்த 7–ந்தேதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் ஏராளமானவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கோர்ட்டு உத்தரவை அவமதிப்பதாகும். இந்தநிலையில் போராட்டத்தை தொடர்ந்து வரும் 74,675 ஊழியர்களுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, தொடரக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது தெரிந்து இருந்தும், அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

னவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
தலையங்கம்
‘டுவிட்டர்’ அரசியல்




காலம் மாற மாற, அரசியல் நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், தி.மு.க.வும் எதிரெதிர் கருத்துக்களை சொல்லும்போது, ஒருவர் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்கள்.

செப்டம்பர் 12 2017, 03:00 AM

காலம் மாற மாற, அரசியல் நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், தி.மு.க.வும் எதிரெதிர் கருத்துக்களை சொல்லும்போது, ஒருவர் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் போடுவார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை, அடுத்த கட்சியும் ஒரு பொதுக்கூட்டம் போட்டு மறுப்பு தெரிவிக்கும். பிறகு பரஸ்பர அறிக்கை போர்கள் நடந்தன. அதேபோல, பத்திரிகை நிருபர்களை இரு தரப்பும் சந்தித்து தங்கள் கருத்துக்களை மாறி மாறி சொல்லி வந்தனர். இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி, தமிழக அரசியல் கட்சிகள், தமிழக அரசு எல்லோருமே சமூக வலைதளமான டுவிட்டரில் கணக்கு தொடங்கி, டுவிட்டரிலேயே அறிவிப்புகள், எதிர்மறை கருத்துகள் என எல்லாமே நான்கைந்து வரிகளில் கூறப்படுகின்றன. பத்திரிகை நிருபர்களுக்கு டுவிட்டரில் செய்திகளை பார்க்க வேண்டும் என்பது அவசர அவசியமாகிவிட்டது. குறிப்பாக தமிழக அரசியலில் இப்போது முதலில் அரசியலுக்கு வரத்துடிக்கும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், டுவிட்டரில் தங்கள் செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.

1972–வரையில் தமிழ்நாட்டில் காங்கிரசா, தி.மு.க.வா? என்ற நிலையிலேயே அரசியல் சுற்றி சுற்றி வந்தது. 1972–ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபிறகு இன்று வரை தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்ற நிலையில்தான் தமிழக அரசியல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. 1967–ல் தோல்வி அடைந்த காங்கிரஸ் மீண்டும் தனியாக ஆட்சி அமைக்க முடியாமல் தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சிகளை சார்ந்தே தங்கள் அரசியல் பாதையை வகுத்துக் கொண்டது. தற்போது நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டனர். 1996–ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது’ என்று சொல்லி அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அதன்பிறகு ‘இதோ வருகிறார்’, ‘அதோ வருகிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவர் இன்றுவரை அரசியலுக்குள் கால் எடுத்து வைக்கவில்லை. ஆனால், கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்த நேரத்தில் அரசியலுக்குள் வருவதை சூசகமாக தெரிவித்தார். கடந்த மாதம் திருச்சியில் நடந்த ‘காந்திய மக்கள் இயக்கம்’ சார்பில் நடந்த அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், ‘நான் அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். இது ஆண்டவன் எனக்கு இட்ட கட்டளை’ என்று ரஜினிகாந்த் சொன்னதாக தமிழருவி மணியன் பகிரங்கமாக அந்தக் கூட்டத்தில் அறிவித்தார். நான் ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் தென்னக நதிகளை இணைத்து, தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது, ஊழலற்ற ஆட்சியை தருவது, வெளிப்படையான ஆட்சியை தருவது என்பதே எனது மூன்று கனவுத்திட்டங்கள் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

கமல்ஹாசனை பொறுத்தமட்டில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் டுவிட்டரில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தெரிவித்துக் கொண்டே வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு திருமண விழாவில், ‘நான் அரசியலுக்கு நேரடியாக வந்துவிட்டேன். அந்த அரசியல் டுவிட்டரிலேயே தொடங்கி விட்டேன். எனது அரசியல் பிரவேசம் எப்போதோ தொடங்கிவிட்டது’ என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார். நேற்று முன்தினம் நதிநீர் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் டுவிட்டரில் செய்தி அனுப்பியுள்ளார். இருவருமே அறிக்கையோ?, பத்திரிகையாளர்கள் சந்திப்பையோ நடத்தாமல், டுவிட்டரிலேயே தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள நிலையில், தமிழக அரசியலில் உள்ள பெரிய எதிர்பார்ப்பு, டுவிட்டர் அரசியல் நடத்தும் ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?. இதில் யார் முதலில் அரசியல் அரங்கிற்குள் நுழையப்போகிறார்கள்?, அவர்கள் தொடங்கும் அரசியல் கட்சிகள் எந்த அணியோடும் சேருமா? அல்லது தனியாக நிற்கப்போகிறார்களா? என்பதும் பலத்த விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.

Monday, September 11, 2017

IndiGo

அனிதா குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சம் நிதியுதவி: திருநாவுக்கரசர் அறிவிப்பு

Published : 10 Sep 2017 16:10 IST

சென்னை




நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை மாநில அரசு தடுத்து நிறுத்தாத காரணத்தால் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்த தலித் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலைக்கு மத்திய அரசும், மாநில அரசும்தான் பொறுப்பாகும். அனிதாவின் தற்கொலையினால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
உயிர் வளர்த்தேனே 52: ஒவ்வொரு கவளத்தையும் உணர்ந்து சுவைப்போம்!

Published : 09 Sep 2017 09:57 IST






காய்கள், கிழங்குகள் பற்றி இன்னமும் நாம் பேசவில்லை. நடுத்தர வருமானமுள்ளவர்கள் சமைக்கும் உணவு வகைகளில் வெங்காயம், தக்காளி தவிர மேலும் ஒன்றிரண்டு காய்கள், கிழங்குகள் இடம்பெறுவது பெரும் கொடுப்பினை.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, சிக்கிம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தமிழகம் அளவுக்குப் பல்வேறு விதமான காய், கிழங்கு பயன்பாடு இல்லை என்றே கருதுகிறேன். மித வெப்பமண்டலப் பகுதியான நம் நிலத்தில் அத்தனை வகை காய் கிழங்குகள் பயிராகிக் கைக்கெட்டும் தொலைவிலேயே கிடைத்து விடுகின்றன.

ஆதி வேட்கை

வெங்காயம், தக்காளி, ஒரு காய் இருந்தால்போதும் இவற்றை மட்டுமே வைத்து துளி மசால் அல்லது மிளகாய் சேர்த்து அற்புதமான கூட்டு அல்லது பொரியல் அல்லது குழம்பு அல்லது பெயரிட முடியாத ஒரு பண்டத்தை நம் இல்லத்தரசிகள் படைத்தருளி விடுவார்கள்.

தக்காளி புளிப்பு, வெங்காயம் காரம். இரண்டுமே சதைப் பற்றானவை என்பதால் சொத சொதவென குழம்பு கிடைத்து விடுகிறது. அத்துடன் கூடவே ஒரு காய் அல்லது கிழங்கு கிடைத்தால் கடித்துண்ண ஒரு நிறைவு கிடைக்கிறது.

நம் உடலின் மரபணுவில் ஆதி வேட்டைக் கூறு மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. எனவே, நார்த்தன்மை மிகுந்த இறைச்சி போன்ற ஒன்றைக் கடித்து உண்டால்தான் நிறைவு கிடைக்கிறது. எதுவும் இல்லாமல் போனால் பொரித்த அப்பளம், வற்றலாவது இருக்க வேண்டும். இப்போது தொடங்கிவிட்ட கார்காலத்தில் மொறுமொறுப்பான ஒரு பண்டம் இருந்தால்தான் உண்பதற்கு வாய் ஒத்துழைக்கும்.

புலம்பெயர்ந்த கத்திரிக்காய்

'இங்கிலிஷ் காய்கள்' என்று பொதுவாக அறியப்படுகிற கேரட், பீன்ஸ், கோஸ், காலி பிளவர் மட்டுமல்ல, பெரும்பாலான மற்ற காய்களும் அயல் இறக்குமதிதான்.

நாம் மிக மலினமாகக் கருதும், வார்த்தைக்கு வார்த்தை 'இதென்ன கத்திரிக்காய் வியாபாரமா?' என்று சொல்லிக்கொள்கிற; விழுந்தால், புரண்டால், தடுக்கினால் நம்மை அணைத்துச் செல்கிற கத்திரிக்காய்கூட நம் காய் இல்லை. தென்னமெரிக்க நாடான பிரேசிலில் இருந்துவந்து, பூர்வகுடிபோல நம்முள் இரண்டறக் கலந்துவிட்டது.

மெலிதான காரல் சுவையும், வழுவழுப்பான சதைப்பற்றும் கொண்ட இந்தக் கத்திரிக்காயில் முழுவெள்ளை, முழுப்பச்சை, அப்பன் வாங்கித் தந்த ரிப்பன் கலரில் அடர்ஊதா, உருண்டை, நீலம், முட்டை வடிவம் எனப் பத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் காண முடியும். ஈரப் பதத்துடன் தளதளப்பாக மின்னும் கத்திரிக்காய்கள் காணக் கிடைத்தால் ஓரிரு நிமிடங்கள் நின்று அவற்றைக் காதலுடன் பார்க்காமல் கடக்க முடிவதில்லை என்னால்.

கோசுமல்லிக் கூட்டணி

நமது தாய்மார்களை விட்டால் கத்திரிக்காய்க்கு நூறு வகையான வேஷங்கட்டி விதவிதமாக ஜொலிப்பேற்றி அதன் அடையாளத்தையே மறக்கடித்து விடுவார்கள். வெண்ணெய் போன்ற சதைப்பற்றும் மினுமினுப்பும், அதை என்ன செய்தாலும் ஈடுகொடுக்கும்.

ஐந்தாறு இளம் முற்றல் கத்திரிக்காயை எடுத்து முழுதாக மண் சட்டியில் இட்டு, இளஞ்சூட்டில் கடலை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சிறிதளவு விட்டுப் புரட்டிப் புரட்டி விடவேண்டும். தோல் வற்றி, கருகல் புகைக் கிளம்பும் பக்குவத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

வெங்காயம், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயில் இரண்டு சேர்த்து தாளிப்பிட்டு வெங்காயம் சுருளுவதற்கு முன்பாக ஆறின கத்திரிக்காயை உடைத்துத் தாளிப்புடன் சேர்த்துச் சிறிதளவு நீர் விட்டுக் கொதிக்கவிட வேண்டும். மூன்று பல் பூண்டை உரித்துப் போட்டுவிட்டு கொஞ்சமாகப் புளிக் கரைசல் சேர்த்து வாசம் போகக் கொதித்த பின்னர், எடுத்துக் கடைந்தால் கலவை வெண்ணெய்போலத் திரண்டு வரும். நார்த்தன்மையும், இளங்கசப்பும், காரல் சுவையும் உடைய இந்தக் கடைசலை செட்டிநாட்டில் கோசுமல்லி என்பார்கள். இட்லி, தோசை, சோறு எதனுடனும் கூசாமல் கூட்டணி வைத்துக்கொள்ளும் இந்தக் கோசுமல்லி.

வாய்தா கேட்கும் வாயுத்தொல்லை

பத்து நாளைக்குக்கூட வாடாமல் சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்திருக்கும் உருளைக் கிழங்கு கிடைப்பதால், நம் பொழுது இந்த மட்டிலும் தொல்லை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

உருளைக் கிழங்கு… காய்க்குக் காய், கிழங்குக்குக் கிழங்கு, இறைச்சிக்கு இறைச்சி! கறிமசால் போட்டுத் தாராளமாக எண்ணெய்விட்டுப் புரட்டி எடுத்து உண்டால், இறைச்சி உண்ட திருப்தி தரும் கிழங்கு.

கைக்கும், மெய்க்கும், கட்டுப்படியான விலைக்கும் ஈடுகொடுக்கும் நமது நேசத்துக்குரிய உருளைக்கிழங்கு மீது வாயு என்று வாய்க்கு வாய் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள் நாற்பது வயதைக் கடந்தவர்கள். அப்படியே சுமத்தினாலும் அதை விட்டு வைக்கிறார்களா என்றால் இல்லை. தெரிந்து இரண்டு வாயும், தெரியாமல் நான்கு வாயும் உண்டுவிட்டு அதைக் கரித்துக் கொட்டுகிறார்கள்.

உருளைக் கிழங்கைத் தோலுடன் நன்றாக அவித்து ஆற வைத்து, தோல் நீக்கி உடைத்து மசிக்க வேண்டும். கனமான இரும்பு வாணலியில் தாராளமாக வெண்ணெய்விட்டு இளகியதும் சிறிதளவு இஞ்சி, பூண்டுத் தொக்குப் போட்டுப் புரட்டிவிட்டு, அரை தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி போட்டு மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும். இதை உண்டால் எந்த வயதினரும், அதைக் கொண்டா கொண்டா என்று கொண்டாடுவார்கள். அதன்மீது பழி சுமத்தியவர்கள்கூட குற்றவுணர்வில் வருத்தப்படுவார்கள். வாயுத் தொல்லை வாய்தா வாங்கிக்கொண்டு ஓடிப் போய்விடும்.

இதேபோல, அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லாத சேப்பங்கிழங்கு எனப்படும் வழுவழுப்பான கிழங்கும், நார்த்தன்மை மிகுந்த கருணைக் கிழங்கும் நமது உடல் நலனுக்குப் பெரிதும் நன்மை பயக்கக் கூடியவை.

சுவைத்து உண்கிறோமா?

நமது உணவின் நன்மை தீமை என்கிற குணங்கள் இரண்டுமே உணவில் இருந்து வருபவை அல்ல. உண்பவரின் உடலுக்குள் முன்னரே சேமிக்கப்பட்டக் கூறுகள்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றன. முன்னர் உண்ட உணவு செரித்ததா இல்லையா என்பதை உணராமல், பசியின் அளவறியாமல் கிடைக்கிற நேரத்துக்குக் கிடைக்கிற உணவை சுவைக்கு அடிமைப்பட்டு உண்டு வைப்பதே நோய்கள் அனைத்துக்கும் மூலகாரணம்.

அற்றான் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடி துய்க்குமாறு

- என்கிறார் நமது வள்ளுவப் பாட்டன். உங்கள் நாவுக்குப் பிடித்த உணவைப் போதும் போதும் என்று மறுத்தே உண்ணுங்கள் என்கிறார். நம்மில் பலர் இதுதான் கடைசிக் கவளம் என்று ஆவேசத்துடன் உண்கிற பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதால், மிகவும் பிடித்த உணவையும் தியாகம் செய்ய வேண்டிய உடல்நிலைக்கு ஒருநாள் வலிந்து தள்ளப்பட்டு விடுகிறோம்.

நாம் பிறந்த நிமிடத்தில் நமக்கான உணவை இயற்கை அன்னை எடுத்து வைத்துவிடுகிறாள். சிறிது சிறிதாக உண்டு நெடிய வாழ்நாள் முழுமைக்கும் அதை எடுத்துச் செல்வதையும், அவசர அவசரமாக அளவுக்கு அதிகமாக உண்டு வாழ்நாளை விரைவிலேயே முடித்துக்கொள்வதையும் நம் பொறுப்புக்கே அவள் விட்டுவிட்டாள்.

சுவையான உணவை உண்ண விரும்புகிறோம். ஆனால் சுவைத்து உண்கிறோமா என்றால் இல்லை. அடுத்த கவளத்தை உண்கிற ஆவேசத்தில் வாயில் உள்ள உணவைச் சுவைப்பதில்லை. கன்வேயரில் வைத்துத் தள்ளுவதுபோல தொண்டையில் வைத்து, இரைப்பையை நோக்கி உந்தி விடுகிறோம்.

இரைப்பையில் இல்லை பற்கள். பற்கள் உள்ள வாயில் உணவை அரைத்துவிட்டால் மென் உறுப்பான இரைப்பையின் வேலை எளிதாகி விடும். வாயில் மெல்லுகிற போதுதான் சுவையுணர்வு நாவில் நின்று நர்த்தனமாடும்.

சுவைக்கச் சுவைக்க உடலின் உயிர்த் தேவை முழுமையாக நிறைவடையும். தேவை நிறைவுற்றால் அளவு தானாகவே குறையும். உணவின் அளவு குறைந்தால் உடலின் செரிமான ஆற்றல் வீணாகாமல், நம் வாழ்நாளை அது நீடிக்கச் செய்யும். வாழ்கிற நாள் முழுமைக்கும் நலனை வழங்கும்.

நம் உயிர் வளரும்!

பெரு விருந்து களித்த நிறைவு

சமைத்துச் சுவைத்த சுவை உடலின் செல்தோறும் பரவும் அனுபவத்தையே 'உயிர் வளர்த்தேனே' தொடரில் கடந்த ஓராண்டாகப் பகிர்ந்துகொண்டேன். சுவைத்தலைப் போலவே, சுவைத்தலைப் பகிர்ந்துகொள்வதும்கூட ஒரு இன்ப அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. அதைத் துய்க்க வாய்ப்பளித்த வாசகர்களுக்கு நன்றிகளைப் பரிமாறுகிறேன்.

உடலியல் நுட்பத்தை அறியும் பொருட்டு உணவின் மீதான நுகர்வு ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் ஒவ்வொரு வாரமும் இத்தொடர் எழுதி முடித்த பிறகு பெரு விருந்து களித்த நிறைவெய்தினேன்.

இந்தத் தொடர்ஓட்டத்தைத் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் சென்றது வாசகர்களே. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கானோர் என்னுடன் மின்னஞ்சல்கள், தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். இத்தொடர் புதிய நட்புறவுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

- போப்பு

(நிறைந்தது)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

Blue Whale Challenge: teen denies knowledge of game

‘The boy’s case cannot be determined as addiction to the game as yet’



“Nothing has happened to me; I have no idea of any harmful game,” mutters sixteen-year-old Suresh (name changed), kept under observation for the last few days at the Intensive Care Medical Unit (ICMU) at the Mahatma Gandhi Memorial Government Hospital.
The boy had been spending hours on end with his mobile phone particularly during late night and early morning hours for many weeks, downloading and playing games. At one point, his father could not tolerate any further and smashed the phone.
But this act angered the son and he became abnormally aggressive and was taken to the Thuraiyur Government Hospital where he was examined by a visiting psychiatrist before being shifted to the Mahatma Gandhi Memorial Government Hospital under sedation.
At the ICMU, the boy is restive and wants to get back home immediately. “No body wants to listen to me. All keep saying that I am being treated for bringing down my stress. But, they suspect that I am stubborn and lying about not knowing a thing about the so-called ‘blue whale’ game. I am helpless,” he says.
A distraught father Nallendran (41) of Thuraiyur town who had known his son’s interest for car racing games said he had admitted the latter forcibly at the hospital for counselling support so as to rule out the boy’s attraction towards the ‘blue whale’ game.
A team of psychiatrists formed newly under instructions of the Health Ministry has kept him under observation at the ICMU.
The hospital Dean In-Charge Anitha is tight-lipped about the progress in the treatment. On the instructions of the DME, a team consisting of two chief doctors and three assistant doctors has been formed, the Dean said, adding: “The boy's case cannot be determined as addiction to ‘blue whale’ game as yet. There is no inscription of whale on him. But, the counselling is nevertheless eliciting desired results.”
The Thuraiyur police say there was no way to relate the boy’s aggression to the game as the phone had been destroyed.
“But, indications are that the boy was prone to anger due to mental stress, and this condition is being made out to be a symptom of addiction to the game,” an official attached to the station said.
Nallendran says overbearing media attention was only making matters worse. “I now understand that his aggression was an outcome of inadequacies on my part in handling his adolescence. I should have been flexible. He feels disgraced and is reluctant to face his friends and teachers again. I am in a quandary,” lamented Nallendran.

Mayiladuthurai ready for Cauvery Maha Pushkaram

The water tank that has been constructed at Thula Kattam in Mayiladuthurai for the Cauvery Maha Pushkaram festival.  

Tank filled with water awaits devotees at Thula Kattam

Arrangements are in place for the celebration of Cauvery Maha Pushkaram at Thula Kattam, the mouth of the river, in Mayiladuthurai from September 12 to 24.
Since the particular configuration of stars happens once in 144 years, the organisers have constructed a tank for the devotees to have a holy dip as it is believed that it not only cleanses the inner selves but washes away evil.
All through the grand celebration, there will be Veda Parayanam, Homam, Maha Yengam, cultural activities such as music, traditional dances, spiritual discourses, Cauvery Arthi, Thirumurai (Tamil Vedas) Parayanam, Annadanam, poor feeding, and pithru tharpanam.
A permanent tank with concrete flooring and one feet of sand has been constructed to hold water to a depth of two feet. Water has been filled into the tank from a borewell using a 10 hp motor.
The tank will be maintained permanently to address water scarcity in the area, as per the plan of the district administration.
Nevertheless, the organisers expect the Tamil Nadu Government to release water stored at Kallanai for the convenience of the several thousands of devotees converging in Kumbakonam and Thiruvaiyaru.
There is still time for the government to ensure that the devotees do not go back disappointed, Chairman of Cauvery Pushkaram Festival Commitee Swami Ramananda said.
The organising committee, he said, has been advising devotees anticipating water flow in the river to go to Mayanur in Karur district; Kodumudi and Bhavani Kooduthurai in Erode district; and Mettur in Salem district.
There is enough inflow into Tamil Nadu from Karnataka for release of water from the Mettur dam. Efforts were still on to prevail upon the government to ensure water flow into the river during the festival, Swami Ramananda said.
Parking points
For the convenience of devotees coming for a holy dip, the district administration has put up the map of the location at various points. Buses coming from Sirkazhi need to be parked at the temporary bus stand created opposite to Maruti showroom.
A parking lot has also been created close to TVS new showroom along the Poompuhar Road.
Vehicles coming from Manalmedu, Kumbakonam and Needur have to be parked at Mayiladuthurai old bus stand, and those coming from Senbanarkovil would have to be stationed at the grounds of Chinna Mariaman Kovil near Dhrumapuram Arch. For vehicles coming from Thiruvarur, a temporary shelter has been created at Rathinam Nagar near Seenivasapuram.
At Srirangam
Elaborate arrangements have been made for the Cauvery Maha Pushkaram that begins on Tuesday.
It will be celebrated for 12 days from September 12 to September 23.
It is estimated that at least 20,000 devotees across the country mainly from Andhra Pradesh and Telengana are expected to visit Srirangam daily.
The organisers have lined up various programmes including homams, special pujas and cultural events.
Though the festival is being viewed as a private one, the district administration conducted a review meeting a few days ago to discuss the steps to be taken for providing amenities to the devotees.
A senior official said that Tiruchi Corporation, Public Health, police, Public Works Department, Hindu Religious and Charitable Endowments and Tourism have been asked to provide necessary facilities to the devotees.
As of now there was no chance for opening Mettur dam for the festival.
If the dam level shot up to 90 feet, there might be chances for water flow in Cauvery particularly during the last leg of the 12 day-festival.
Water would be made available to the devotees at Amma mandapam bathing gate, sources said.

Paramedical courses at SRU

Sri Ramachandra University is starting four new undergraduate paramedical courses, a press release said.
The courses are in bio-informatics, health informatics, data sciences and environmental health sciences. The prospectus and application form can be downloaded fromwww.sriramachandra.edu.inThe last date for applications is September 20 and the interview for selection is on September 23.
CMC begins MBBS classes with one student

TNN | Updated: Sep 10, 2017, 23:44 IST

Vellore: It is Siddhant Nair's dream to pursue medicine at the prestigious Christian Medical College in Vellore. But, there's a catch. Siddhant is the lone first year student in the MBBS programme in the college where regular classes are to begin on Monday.

Being the only student in the UG course, Siddhant, son of a martyr, said the seniors and the faculty members were warm and friendly to him, but he was keenly looking forward to his classmates joining him soon. Siddhant's father Rajesh was attached to BN 4 Rashtriya Rifles Regiment. He was killed in a militant attack on November 15 in 2001 at Doda in Kashmir.

The CMC normally admits 100 students for MBBS course, 192 students for postgraduate (PG) and 62 super specialty courses in an academic year. But, the institution admitted only one candidate in UG this academic year under the defence ministry quota as it suspended admission for the remaining seats, citing common counselling.

The institution had filed a writ petition in the Supreme Court against common counselling under NEET, pleading for exemption, saying it curtailed its right to select suitable candidates for upholding its motto. The case would come for hearing in October.

Meanwhile, Siddhant underwent a week long orientation course on ethics, background of the health need of the people of the country, mission and vision of the institution and activities such as gardening and staying with doctors for a day or two in hospital.

Regular classes, including lectures on anatomy, physiology and biochemistry and practical, would start from 8 am and go until 5 pm on Monday. "The student (Siddhant) has joined the senior batch to take part in extra-curricular activities. He will also be taken care of by the staff in the hostel," Principal of the institution Dr Anna Pulimood told TOI.

LATEST COMMENTGood, Let CMC admit One Student Each year nd conduct the course for 5.5 yeas for the student. But what about 99 students who were alloted seats
through common counselling. Are they not going t... Read MoreGopalarathnam Krishna Prasad

Siddhant's mother Supriya Nair said her son was thrilled to pursue his dream in CMC. "We went through the history of the institution for three months and he decided to join it," said Supriya hoping that her son would soon get classmates.
சமூக வலைதளங்கள் கண்காணிப்பு: கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை
By DIN | Published on : 11th September 2017 03:59 AM |




தனிநபர்களின் வருமான விவரங்கள் குறித்து முழுமையாக அறிவதற்காக அவர்களது சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணிக்கும் பணிகளை வருமான வரித் துறை மேற்கொள்ள உள்ளது.

இதையடுத்து புதிதாக வாங்கிய சொகுசு கார்கள், ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள், இனி வருமான வரித்தாக்கலின்போது அவற்றை மூடி மறைத்து தப்பிக்க முடியாது.
வரி ஏய்ப்பையும், கருப்புப் பணப் பதுக்கலையும் தடுக்கவே இத்தகைய தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் முதல் அது நடைமுறைக்கு வரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வருமானத்தை மறைத்து தவறான விவரங்களைத் தெரிவிப்பவர்களுக்கு இந்நடவடிக்கை ஒரு கடிவாளமாக அமையும் என்று கூறப்படுகிறது.
கருப்புப் பணப் பதுக்கலைத் தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது அவற்றில் பிரதானமானது. இந்த அதிரடி அறிவிப்பானது உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன் தொடர்ச்சியாக, சந்தேகத்துக்குரிய பலரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அதில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வரி ஏய்ப்பு விவகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்புப் பணத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டது.
உள்நாட்டிலும் சரி; வெளிநாடுகளிலும் சரி, கருப்புப் பணப் பதுக்கலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வரும் மத்திய அரசு, அதன் ஒருபகுதியாக "பிராஜெக்ட் இன்சைட்' (வருமான விவரங்கள் தொடர்பான ஆழ்ந்த கண்காணிப்பு நடவடிக்கைகள்) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமாகியுள்ளது.

அதன்படி, தனிநபர்களின் வருமான விவரங்களானது தகவல் - தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேகரிக்கப்பட உள்ளது. பின்னர், வருமான வரித் தாக்கலின்போது தனிநபர்கள் தெரிவிக்கும் தகவல்களும், சேகரிக்கப்பட்ட விவரங்களும் ஒப்பீடு செய்யப்படும்.
அதில் முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரவும், நடவடிக்கை எடுக்கவும் வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவன நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வருமான வரித் தாக்கலின்போது, பெரும்பாலானோர் தங்களது வருவாய் தொடர்பான உண்மையான விவரங்களை அளிப்பதில்லை. அதேவேளையில், முகநூல், சுட்டுரை (டுவிட்டர்), இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புதிதாக வாங்கிய விலை உயர்ந்த பொருள்களை புகைப்படம் எடுத்து பதிவிடுகின்றனர்.

அந்தத் தகவல்களைக் கண்காணித்து அதுதொடர்பான விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பும் நோக்கிலேயே "பிராஜெக்ட் இன்சைட்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக "எல் அண்டு டி இன்ஃபோடெக்' நிறுவனத்துடன் வருமான வரித் துறை கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி,சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணித்து அதுதொடர்பான தகவல்களைத் திரட்டும் பணிகளை "எல் அண்டு டி நிறுவனம்' ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்.

அதிக மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகளை இதன் மூலம் கண்காணிக்க இயலும். இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்குள் சமூக வலைதளக் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றார் அவர்.
பள்ளி மாணவியர் போராட்டம்:காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்11செப்
2017
02:16

திருப்பூர் ;சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் "நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் நடந்தது. இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கல்வித்துறை அதிகாரிகள், மவுனமாகி விட்டனர்.திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் "நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடையில், வளாகத்தில் மாணவியர் போராட்டம் நடத்தினர்.
ஏழாயிரம் மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், பள்ளி நுழைவாயிலில், வாட்ச்மேன் இருந்தும், அத்துமீறி இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைந்தது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. வகுப்பறைகளில் ஆசிரியர் இருந்தும், மாணவியரை வெளியே அழைத்து வந்துள்ளனர்.மாநகராட்சி பள்ளி வளாகத்துக்குள், சுப்ரீம் கோர்ட் உத்தரவு மீறி ஒரு மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தியதும், அதற்கு பள்ளி மாணவியரை பகடை காய்களாக பயன்படுத்தியதை அறிந்தும், இன்னும் கல்வித்துறை அதிகாரிகளோ, பள்ளி நிர்வாகமோ அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல், மவுனம் சாதிக்கிறது.

நான்கு பிரிவில் வழக்கு

பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் கேட்ட போது, "பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். வாட்ச்மேன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது,' என்றார்.தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த விமல் என்பவர் மீது மிரட்டல், அத்துமீறி பள்ளிக்குள் நுழைதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹேண்ட் பேக்' சோதனை கோவை ஏர்போர்ட்டில் ரத்து
பதிவு செய்த நாள்11செப்
2017
00:04

கோவை உள்ளிட்ட மேலும், நான்கு விமான நிலையங்களில், பயணியரின், 'ஹேண்ட் பேக்'குகளை சோதனையிடும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியரின் பொருட்கள், விமான நிலையங்களில் சோதனையிடப்படும். பயணியர், கையில் எடுத்துச் செல்லும், 'ஹேண்ட் பேக்' உள்ளிட்டவற்றை, போலீசார் சோதனையிடுவர். பின், பயணியர் விபரங்களுடன் கூடிய, 'டேக்'குகளை கட்டி, முத்திரையிடுவர்.இதனால் சிரமம் ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்தனர். பாதுகாப்பு சோதனைக்கு, 'ஸ்கேனர்' மற்றும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, 'ஹேண்ட் பேக்' சோதனையிடும் நடைமுறையை, உள்நாட்டு பயணியருக்கு தளர்த்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்தது.முதற்கட்டமாக, ஏப்ரலில், டில்லி, மும்பை, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத்திலும், இரண்டாம் கட்டமாக, ஜூனில், ஜெய்ப்பூர், கவுகாத்தி, லக்னோ, திருவனந்தபுரம், பாட்னா மற்றும் சென்னை விமான நிலையங்களில், இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.மூன்றாம் கட்டமாக, கோயம்புத்துார், கோல்கட்டா, இந்துார் மற்றும் வதோதரா விமான நிலையங் களில், இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியரிடம், இந்த பாதுகாப்பு நடைமுறை தொடரும், என, பி.சி.ஏ.எஸ்., எனப்படும், விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. - நமது நிருபர் -
கோவில் விழாக்களை முன்பே அறிய இணையதளத்தில், 'திருவிழா' பிரிவு
பதிவு செய்த நாள்10செப்
2017
23:59

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் முக்கிய திருவிழாக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள, அறநிலையத்துறை இணைய தளத்தில், 'திருவிழா' என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அறநிலையத்துறை இணைய தளத்தில், தமிழக கோவில்களின் வரலாறு, துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், ஒப்பந்தம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 

சில மாதங்களுக்கு முன், 'விர்சுவல் டூர்' எனும் தலைப்பிலான புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களை, 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி, கோவில் வரலாறு, திருவிழா உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பக்தர்கள் அறிய முடியும். இந்நிலையில், 'திருவிழா' எனும் பிரிவு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அறிநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இதற்கு முன், கோவில் திருவிழா அழைப்பிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தோம். அது பக்தர்களுக்கு வசதியாக இல்லை என்பதால், 'திருவிழா' என்ற பிரிவு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 

இதில், கோவில்களின் திருவிழாக்கள் நடக்கும் மாதம், தேதி, அழைப்பிதழ் உள்ளிட்ட விபரங்கள், இடம் பெற்று உள்ளன.தற்போது, 110 கோவில்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், அனைத்து பிரதான கோவில்களின் விபரங்களும் இணைக்கப் படும். இதன்படி, பக்தர்கள் பயணத்திற்கு திட்டமிடுவது வசதியாகும். அடுத்ததாக, பக்தர்கள் வசதிக்காக, கோவில் திருவிழாக்களின் ஒலி, ஒளி தொகுப்பு, 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்

2017-09-11@ 00:07:31




நெல்லை: போஸ்ட் பேசிக் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. தமிழக அரசின் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை, ‘நீட்’ அடிப்படையில் நிறைவு பெற்று, முதலாமாண்டு வகுப்புகள் கடந்த வாரம் தொடங்கின. இதற்கிடையே சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவமுறை படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் நிறைவு பெற்றது. பிஎஸ்சி நர்சிங் விண்ணப்ப விநியோகமும் முடிந்த நிலையில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு முறையில் விரைவில் நடக்க உள்ளது.

இந்நிலையில் போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், லேட்டரல் என்ட்ரி மற்றும் டிப்ளமோ இன் பார்மசி ஆகிய படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பெற முடியும்.
மருத்துவக் கல்வித்துறை இணையதளங்களான www.tnhealth.org அல்லது www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு மருத்துவக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டமா? - பாய்கிறது நீதிமன்ற அவதிப்பு வழக்கு

பதிவு செய்த நாள்10செப்
2017
22:26


'நீட் தேர்வுக்கு எதிராக, மாணவர்களை துாண்டி விட்டு, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் முற்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் தள்ளப்படுவர்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.மருத்துவ கல்விக்கான, 'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சில அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர், பள்ளி, கல்லுாரி மாணவர்களை துாண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், 'நீட் தேர்வுக்கு எதிராக, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது' என, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், தடையை மீறி, போராட்டத்தை வலுப்படுத்த, சமூக வலைதளங்கள் வாயிலாக, சில அரசியல் கட்சியினர் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதனால், தமிழகம் முழுவதும், காவல் துறையினர், சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளனர். உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், அறவழியில் போராட தடை ஏதும் இல்லை; அதற்காக இடங்களும் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. காவல் துறையில், உரிய அனுமதி பெற்று, அந்த இடங்களில் போராட்டம் நடத்தலாம். ஆனால், மத்திய --- மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் என்பது போல, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வது தண்டனைக்குரிய குற்றம்.இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும், ஈடுபட தயாராகி வரும், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். 

அதற்காக, மாநிலம் முழுவதும், போலீஸ் அதிகாரிகளின் தலைமையில், சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இன்று பள்ளி, கல்லுாரிகள் திறக்கும் நாள் என்பதால், கல்வி நிறுவனங்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்துவோர், நீதிமன்ற அவதிப்பின் வழக்கில், சிறையில் தள்ளப்படுவர். காலையில் கைது, மாலையில் விடுதலை என்ற நிலை இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
இளநிலை டாக்டர்களுக்கு அறுவை சிகிச்சை பயிற்சி

பதிவு செய்த நாள்11செப்
2017
00:47

சென்னை: ''மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்களுக்கு, அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் திட்டம், சென்னை மருத்துவ கல்லுாரியில் விரைவில் துவங்கப்படும்,'' என, டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் கூறினார்.சென்னை மருத்துவ கல்லுாரியில், முட நீக்கியல் துறை நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. எட்டாவது ஆண்டு விழாவில், முட நீக்கியல் நிபுணரும் பேராசிரியருமான பாலைய்யா குட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதில், டாக்டர் தீன் முகமது இஸ்மாயில் பேசியதாவது:உடல்களை வைத்து அறுவை சிகிச்சை பயிற்சி பெறுவதற்கான ஆராய்ச்சி கூடம், சென்னை மருத்துவ கல்லுாரியில், 2015ல் நிறுவப்பட்டது. இந்த பயிற்சி கூடத்தில், 500 டாக்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளை தவிர்த்து, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் உள்ள இளநிலை டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள் ஆகியோருக்கு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த துறையின் சார்பில், எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட எலும்புகளை வைத்து, 300 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. பிற மருத்துவ கல்லுாரிகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும், எலும்பு வங்கியை துவங்குவதற்கான வழிமுறைகள் குறித்து, பயிற்சி அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...