Showing posts with label KAVITHAIGAL. Show all posts
Showing posts with label KAVITHAIGAL. Show all posts

Wednesday, October 29, 2014

இரங்கல் கவிதை!

இரங்கல் கவிதை!

கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !

படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !

கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை)

  • கவிஞர் : கவிஞர் வாலி

Saturday, October 18, 2014

மனிதா கடவுளர் வாகனம் கவனித்தாயா?

மனிதா

கடவுளர் வாகனம்

கவனித்தாயா?

ஒரு கடவுள் - காளை கொண்டான்

ஒரு கடவுள் - மயில் கொண்டான்

ஒரு கடவுள் - எலி கொண்டான்

ஒரு கடவுள் - கருடன் கொண்டான்

எந்தக் கடவுளையும்

விலங்கு சுமந்ததன்றி

மனிதன் சுமந்ததில்லை

மனிதனைச் சுமக்கச் சொன்னால்

கடத்திவிடுவானென்று

கடவுளுக்குத் தெரியாதா?


  • கவிஞர் : வைரமுத்து

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...