Tuesday, June 30, 2015

மொட்டையம்மாள் சைக்கிள் கடை!



வீட்டில் நிம்மதியாக உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சைக்கிள் கடை நடத்திவருகிறார் 85 வயது மொட்டையம்மாள். திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இவர், தள்ளாத வயதிலும் தளராத நிர்வாகத்தால் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

உடல் தளர்ந்துபோனாலும் உள்ளத்தில் உறுதி இருந்தால் எந்த வயதிலும் எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியும் என்பதை மொட்டையம்மாள் நிரூபித்துவருகிறார். தடி ஊன்றி நடந்தாலும், அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல் சுயமாகச் சம்பாதித்துத் தன் சொந்தக் காலில் வைராக்கியத்துடன் வாழ்கிறார். வேலை வேலை எனத் தேடி வெறுப்படைந்து மூலையில் உட்காரும் இளைஞர்கள், மொட்டையம்மாள் பாட்டியிடம் வாழ்க்கைப் பாடம் படிக்கலாம்.

மொட்டையம்மாளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் வேலம்மாள். ஆனால் மொட்டையம்மாள் என்றால்தான் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிகிறது. பொழுது புலர்ந்ததும் காகம் கரைகிறதோ இல்லையோ, மொட்டையம்மாள் கண்விழித்துவிடுகிறார். சுறுசுறுப்பாகச் சைக்கிள் கடையைத் திறந்து உட்கார்கிறார். கால் வண்டி, அரை வண்டி, முக்கால் வண்டி, முழு வண்டி சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார். கூலிக்கு ஆள் வைத்து சைக்கிள்களைப் பழுது பார்க்கிறார். பஞ்சர் பார்க்கிறார். இதன் மூலம் கிடைத்த வருவாயில் இந்தக் காலத்துக் குழந்தைகளை மகிழ்விப்பதற்காகக் குட்டி சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்கிறார். பேரக்குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

எதிர்பாராத திருப்பம்

“எனக்கு 17 வயசுல கல்யாணம் நடந்தது. கல்யாணமாகி 35 வருஷமா குழந்தையில்லை. நாங்க வேண்டாத தெய்வமில்லை. எங்க மனக்குறை ஒரு பக்கம்னா கேள்வி கேட்குறவங்களுக்குப் பதில் சொல்லி மாளாது. கடைசில என் மனக்குமுறலைத் தீர்த்துவைக்கிற மாதிரி என் மகன் பிறந்தான்” என்று கடந்த காலத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். மொட்டையம்மாளின் மகனுக்கு 15 வயதாகும்போது அவருடைய கணவன் இறந்துவிட, நட்டாற்றில் நிற்பதுபோலத் தவித்திருக்கிறார். வருமானம் இல்லாத நிலையில் மகனை வளர்த்து ஆளாக்கத் தனியாளாகப் போராடியிருக்கிறார்.

கரை சேர்த்த கடை

என்ன செய்வது என்று தலையில் கைவத்து அழுவதைவிட எதைச் செய்தால் வண்டியோடும் என்று மொட்டையம்மாள் யோசித்தார். நேர்மையாகச் செய்யும் எந்தத் தொழிலும் தாழ்ந்ததில்லை என்று நினைத்த அவர், ஆரம்பத்தில் விறகுக் கடை வைத்து நடத்தினார். சமையல் எரிவாயு வந்த பிறகு, விறகுக் கடையில் வியாபாரம் முடங்கியது. அப்போதும் மொட்டையம்மாள் சோர்ந்துபோகவில்லை. வைக்கோல் கடை வைத்து நடத்தினார். அதில் வந்த வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியாக இருந்தது.

“என் குடும்ப நிலையைப் பார்த்துட்டு சொந்தக்காரர் ஒருத்தர் அவர் நடத்துன சைக்கிள் கடையை என்கிட்டே கொடுத்தார். அப்போ கடையில நாலு சைக்கிள் மட்டும் இருந்துச்சு. அதை வாடகைக்கு விட்டு, வந்த வருமானத்துல குடும்பம் ஓரளவு கஷ்டமில்லாம நகர்ந்துச்சு. சாப்பாட்டுக்குப் போக மிச்சமான பணத்துல சின்ன சைக்கிளை வாங்கி வாடகைக்கு விட்டேன். கொஞ்ச நாள்ல பஞ்சர் ஒட்டவும் கத்துக்கிட்டேன். சைக்கிள் ரிப்பேர் பார்ப்பேன்” என்கிறார் மொட்டையம்மாள்.

தற்போது மூப்பின் காரணமாக இவரால் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அதனால் ஆள் வைத்து சைக்கிள் ரிப்பேர் பார்க்கிறார்.

இவரது சைக்கிள் கடைக்குப் பக்கத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் தண்டபானி, “நாமளே கடை திறக்கக் காலையில லேட்டா வருவோம். ஆனா இந்தம்மா காலைல ஆறு மணிக்கெல்லாம் கடை திறந்துடுவாங்க. ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் கடையை அடைப்பாங்க. வரவு, செலவுல கறாரா இருப்பாங்க. ஒரு பைசாகூட விட்டுக் கொடுக்க மாட்டாங்க. ஆனா கஷ்டம்னு யாராவது வந்துட்டா உதவி செய்வாங்க. இந்த வயசுலயும் பாட்டிக்கு நல்ல ஞாபகச் சக்தி, கண் பார்வை தெளிவாக இருக்கு” என்று மொட்டையம்மாள் பாட்டியின் புகழ் பாடுகிறார்.

நினைவுச் சின்னம்

ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அவரை பஞ்சம், துவரை பஞ்சம் ஏற்பட்டபோதும் மொட்டையம்மாளின் குடும்பம் வசதியாக இருந்திருக்கிறது. ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக வறுமைக்கு ஆட்பட்டபோது இந்த சைக்கிள் கடைதான் மொட்டையம்மாளுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அந்த நினைவால்தான் இன்றும் இந்தக் கடையை விடாமல் நடத்தி வருகிறார்.

“வீட்ல சும்மா இருக்கப் பிடிக்கலை. அதுவும் இல்லாம கையில நாலு காசு சம்பாதிக்க இந்த வயசுல வேறு பொழப்பும் தெரியலை. அதான் பழக்கப்பட்ட இந்தச் சைக்கிள் கடையை நடத்துறேன். முன்னால, ஒரு நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம்னு வருமானம் வரும். அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இன்னைக்கு, கூலி ஆளுக்குப் போக ஒரு நாளைக்கு 300 ரூபாய் கையில நிக்கறதே பெருசு. சில நாள் ஒண்ணுமே கிடைக்காது. அந்தக் காலத்துல பழநிக்கு சைக்கிள்லதான் யாத்திரை வருவாங்க. அப்பல்லாம் நிறைய பேர் பஞ்சர் ஒட்ட, ரிப்பேர் பார்க்க வருவாங்க.

நிறைய காசு கிடைக்கும். இன்னைக்கு யாரு சைக்கிள்ல வர்றாங்க? கார், பஸ்ஸுல வந்துட்டு போறாங்க. முன்னாடிலாம் ஒரு சைக்கிள்கூட கடையில சும்மா நிக்காது. இன்னைக்கு, வாடகைக்குப் போவாம சும்மாவே எல்லா சைக்கிளும் நிக்குது. வருமானமே இல்லை” என்று தற்போது தான் சந்திக்கும் சவால்களை அடுக்குகிறார் மொட்டையம்மாள். இருந்தாலும் இந்தக் கடையைத் தன் அடையாளமாகவே கருதுகிறார்.

“நானும் தினமும் ஆபீஸ் போறா மாதிரி வெள்ளென கிளம்பிடுவேன். சில நேரம் மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவேன். முடியலைன்னா கையில சாப்பாட்டை எடுத்துக்கிட்டு வந்துடுவேன். சொல்லிக்கிற மாதிரி வருமானம் இல்லாட்டியும் கடை நடத்துறது சந்தோசமா இருக்கு. இந்தக் கடை மூலமா பெரிய அளவுல வருமானம் இல்லைன்னாலும், என் நிம்மதிக்காக என் மகன் ஒண்ணும் சொல்ல மாட்டான். எனக்கு ஒரே ஒரு ஆசைதான். ஆயுசு முழுக்க இந்த சைக்கிள் கடை நடத்தணும்” என்று சொல்கிறார் மொட்டையம்மாள்.

திவாலாவதில் இருந்து தப்புமா கிரீஸ்?

Return to frontpage

இன்று உலகம் முழுவதும் கொண்டாடும் ஒலிம்பிக் போட்டியை உலக நாடுகளுக்கு வழங்கிய கிரேக்கம் எனப்படும் கிரீஸ் மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்த ஆண்டுக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு 970 கோடி யூரோவை செலுத்தியாக வேண்டும். குறிப்பாக வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு (ஐஎம்எப்) 173 கோடி டாலர் (150 கோடி யூரோ) கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதைச் செலுத்தாவிட்டால் கிரேக்கம் திவாலாகிவிடும்.

இவ்வாறு கிரேக்கம் திவாலாவதைத் தடுப்பதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அந்நாட்டுக்கு கடன் அளித்து அதை நெருக்கடியிலிருந்து மீட்க திட்டமிட்டுள்ளன.

இதற்காக கடந்த ஒரு வாரமாக பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.

இதனி டையே கடன் வழங்கும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகள் குறித்து கருத் தொற்றுமை எட்டுவதற்காக ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளார் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸ்.

கிரீஸ் நிதி நெருக்கடியில் சிக்கியது எப்படி?

வீட்டைப் போலத்தான். வரவு எவ்வளவு என்று தெரியாமலேயே கடன் வாங்கி செலவு செய்தால் என்னவாகுமோ அதே பிரச்சினைதான் கிரீஸுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. மன்னராட்சி யிலிருந்து மாறி ராணுவப் புரட்சிக்கு உள்ளாகி 1970-களில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய கிரீஸ், தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

டாலருக்கு மாற்றாக ஒரு வலுவான கரன்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் யூரோ. 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பில் 19 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் சிறிய நாடான கிரிஸும் ஒன்றாகும். இந்த நாடுகள் அனைத்தும் யூரோவை பயன்படுத்துகின்றன.

டாலருக்கு நிகரான யூரோவின் மாற்று மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக சரியத் தொடங்கியது. இதனால் 2010-ம் ஆண்டிலிருந்தே நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது கிரீஸ்.

கிரீஸுக்கு 2,400 கோடி யூரோவை கடனாக வழங்குவது குறித்துதான் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தொகையை விடுவிக்க வேண்டுமென்றால், சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று கடன் வழங்க முன்வரும் நாடுகள் வலியுறுத்துகின்றன.

அரசு செலவுகளைக் குறைக்க வேண்டும், ஓய்வூதிய வயதை அதிகரிக்க வேண்டும் (தற்போது கிரிஸீல் ஓய்வு பெறுவோர் வயது 57 ஆகும்), ஓய்வூதியத் தொகையைக் குறைக்க வேண்டும், வரி விதிப்பு அளவை அதிகரிக்க வேண்டும் என்பன முக்கியமான நிபந்தனைகளாகும்.

இந்த நிபந்தனைகளை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து விவாதிப் பதற்குத்தான் ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளார் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிபிராஸ்.

ஒருவேளை கடன் வழங்கும் நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளை கிரீஸ் ஏற்காமல் போனால் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும்.

இதனால் ஐஎம்எப்-க்கு வழங்க வேண்டிய கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாமல் போகும். நாடு திவாலாகிப் போகும். இந்த ஆண்டுக்குள் சர்வதேச செலாவணி நிதியத்துக்கு 970 கோடி யூரோவை செலுத்தியாக வேண்டும். அதில் ஒரு பகுதி தவணையான 150 கோடி யூரோவை இம்மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்தியாக வேண்டும். ஒருவேளை நிதி வழங்கும் நாடுகள் அளிக்கும் நிபந்தனையை கிரீஸ் ஏற்றுக் கொண்டால் இத்தவணையை திரும்பச் செலுத்த ஒரு மாதம் அவகாசம் அளிக்கக்கூடும்.

ஒருவேளை நிபந்தனையை கிரீஸ் ஏற்கவில்லையென்றால், கூட்டமைப் பிலிருந்து கிரீஸ் வெளியேறுவதைத் தடுக்க வேண்டாம் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்விதம் வெளியேறினால்தான், உண்மை நிலையை கிரீஸ் உணரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம், கிரீஸ் வெளியேற அனுமதித்தால் அது தங்கள் கூட்ட மைப்புக்கு பலவீனமாக அமைந்துவிடும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.

உலக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கிரீஸின் பங்களிப்பு வெறும் 0.3 சதவீதம்தான். ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சினை ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்ல பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஒருவேளை கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேறினால், அதைத் தொடர்ந்து இதேபோன்ற நிதி நெருக் கடியில் இருக்கும் இத்தாலி, போர்ச் சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் வெளியேறும் நிர்பந்தம் உருவாகும். அது ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பை மேலும் பலவீனமடையச் செய்யும்.

ஐரோப்பிய வங்கிகள் வழங்கிய கடன் அளவில் கிரீஸ் நிறுவனங்களுக்கு அளித்த தொகை ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும். இருந்தாலும் கிரீஸ் வெளியேறும் பட்சத்தில் அது சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேறினால் அங்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி உருவாகும். ஏற்கெனவே வங்கிகளிலிருந்து ரொக்கத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருத்து எடுத்துச் செல்கின்றனர். ஏடிஎம்கள் பலவும் வறண்டு போய்விட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் 28 சதவீத அளவுக்கு அங்கு அதிகமாக உள்ளது. இதனால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

மெட்ரோ ரயில்: சிறப்பு அம்சங்கள் என்ன?




* மெட்ரோ ரயில் உயர்நிலைப் பாதை மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல்வதால் ரயில் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

* தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதால், நடைமேடையை அடைந்தபின் ரயில் முழுவதும் நின்ற பிறகே கதவு திறக்கும், மூடும். எனவே, ரயில்களில் படியில் நின்று பயணம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும்.

* பயணத்தின்போது ஏதேனும் சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால், ரயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

* பொருட்களை வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்களூர் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில்களில் இல்லை.

* ஒவ்வொரு பெட்டியிலும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* அவசர காலத்தின்போது ஓட்டுநர்களுக்கு தகவல் தர சிறப்பு பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவிகள், தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ரயிலின் செயல்பாட்டை தமது அறையில் இருந்தபடியே ஓட்டுநர் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

* ரயில்கள் தடம் புரளாமல் இருக்க ரயில் பாதைகளில் தரமான சிறிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 90 சதவீதம் மெட்ரோ ரயில்கள் தடம்புரள வாய்ப்புகளே இல்லை.

பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி

* மெட்ரோ ரயில் பெட்டிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் அதிநவீன பாதுகாப்பு மற்றும் வசதிகள் அளிக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் செல்லும் வழித்தடங்களின் வரைபடம் அனைத்து பெட்டியிலும் இருக்கும்.

* ஒரு மெட்ரோ ரயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 350 பேர் வீதம் ஒரு ரயிலில் 1,400 பேர் பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக சராசரியாக 35 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்படும்.

* கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பயணம் நேரம் 19 நிமிடங்களாக இருக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பின்னர், மக்கள் தேவைக்கு ஏற்றவாறு 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

* அதிகபட்சமாக 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க முடியும்.

கட்டண விவரம்:

மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.

*ஆலந்தூர் - ஈக்காட்டுதாங்கல்: ரூ10

*ஆலந்தூர் - அசோக்நகர்: ரூ.20

*ஆலந்தூர் - வடபழநி: ரூ.30

*ஆலந்தூர் - அரும்பாக்கம்: ரூ.40

*ஆலந்தூர் - சிஎம்பிடி புறநகர் பேருந்து நிலையம்: ரூ.40

*ஆலந்தூர் - கோயம்பேடு: ரூ.40

ரயில் பயண கால அட்டவணை:

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6 மணிக்கு புறப்படும்.

*கோயம்பேடு - ஆலந்தூர் இடையே கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.40 மணிக்கு இயக்கப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான முதல் மெட்ரோ ரயில் தினசரி காலை 6.03 மணிக்கு புறப்படும்.

*ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான கடைசி மெட்ரோ ரயில் தினசரி இரவு 10.03 மணிக்கு இயக்கப்படும்.

எத்தனை ரயில்கள்?

*தினசரி கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 95 ரயில்கள் இயக்கப்படும்.

*அதேபோல் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 97 ரயில்கள் இயக்கப்படும்.

*நாளொன்றுக்கு மொத்தம் 192 ரயில்கள் இயக்கப்படும்.

*ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும்.

*அதிகபட்சமாக மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இருமார்க்கத்திலும் இலக்கை 19 நிமிடங்களில் சென்றடையும்.

*ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 35 விநாடிகள் ரயில் நின்று செல்லும்.

இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டிவனம்- - தி.மலை சாலையில் 3ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை : செஞ்சி கோர்ட் அதிரடி உத்தரவு


செஞ்சி: 'திண்டிவனம்- - திருவண்ணாமலை இடையேயான சாலை, தேசிய நெடுஞ்சாலை அல்ல; மரண சாலை' என வேதனை தெரிவித்த, செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி, இச்சாலை வழியாக, வரும், 3ம் தேதி வரை, உள்ளூர் வாகனங்கள் தவிர, வெளியூர் வாகனங்கள் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.

புதுச்சேரி - -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை யில் (எண்- 66) திண்டிவனம் முதல், கிருஷ்ணகிரி வரை உள்ள, 178 கி.மீ., சாலையை, 7 மீட்டர் அகலத்திலிருந்து, 10 மீட்டராக மாற்றும் பணி, கடந்த, 2012ம் ஆண்டு, மே மாதம் துவங்கியது. 24 மாதங்களில் முடிய வேண்டிய பணி, நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், பாதி பணி கூட முடியவில்லை.

தினமும் விபத்துகள்

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கான்ட்ராக்ட் எடுத்த, 'டிரான்ஸ்ட்ராய்' நிறுவனம் பணிகளை நிறுத்தியுள்ளது. இந்த சாலையை அகலப்படுத்துவதற்காக வெட்டிய பள்ளங்களும், வெட்டி எடுத்த தார் சாலையையும் அப்படியே உள்ளது. இதனால், தினமும் விபத்துக்கள் நடக்கின்றன. இதை கண்டித்து, ஆங்காங்கே, பொது மக்கள் மறியல் செய்தனர். செஞ்சியில், மூன்று மாதம் முன், வழக்கறிஞர்கள், சாலை மறியலும், நீதிமன்ற புறக்கணிப்பும் செய்தனர்; ஒரு நடவடிக்கையும் இல்லை!

தடை கோரி மனு

இதையடுத்து, செஞ்சியை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில், செஞ்சி பார் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர், செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், 'பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படுத்தும் வகையில், தினமும் விபத்துகள் நடக்கும் இந்த சாலை, போக்குவரத்திற்கு தகுதி இல்லாமல் இருப்பதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.

மறந்த இறையாண்மை

இந்த மனுவை விசாரித்து, நீதிபதி வெங்கடேசன் பிறப்பித்த இடைக்காத உத்தரவு:

ஒவ்வொரு மனிதனை காப்பாற்றுவதும், அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதும், மனித உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதும் அரசின் இறையாண்மை பணியாகும்.

இந்த இறையாண்மை பணியை செய்ய, மாவட்ட நிர்வாகம் தவறியுள்ளது. தினமும், முதியோர், பள்ளி மாணவர்கள், நோயாளிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல், கஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகின்றனர் என்பது, இம்மனு மூலம் தெரிகிறது.

26 பேர் உயிரிழப்பு

இந்த சாலையை பயன்படுத்தியதால், செஞ்சி, சத்தியமங்கலம், காவல் எல்லையில் மட்டும், 26 பேர் இறந்துள்ளனர்; 95 பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். திருவண்ணாமலைக்கு, பவுர்ணமியன்று வரும் பக்தர்கள், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல், இச்சாலையை பயன்படுத்துகின்றனர். மூன்றாம் தேதி வரை தடைதிண்டிவனம் - தி.மலை இடையேயான சாலை, தேசிய நெடுஞ்சாலையல்ல; மரண சாலை என்றே குறிப்பிடலாம்.

எனவே, திண்டிவனம், தீவனுார், வல்லம், செஞ்சி, ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், கீழ்பெண்ணாத்துார், சோமாசிபாடி, திருவண்ணாமலை வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், உள்ளுர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அவசர கால வாகனங்கள் தவிர, வேறு வெளியூர் செல்லும் வாகனங்கள், வரும், 3ம் தேதி வரை செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு, நீதிபதி தெரிவித்துள்ளார்.







இன்று பவுர்ணமி: பக்தர்கள் திண்டாட்டம்!

பவுர்ணமி தினமான இன்று, சென்னையில் இருந்து பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. வேலுார், காஞ்சிபுரம், விழுப்புரம் வழியாக, தி.மலைக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்!

சென்னை மாநகரத்தின் சரித்திரத்தில் அதிமுக்கியத்துவம் பெறும் இரண்டு நாள்களாக 1931 ஏப்ரல் 2-ஆம் தேதியும், 2015 ஜூன் 29-ஆம் தேதியும் திகழும். முந்தையது, அன்றைய சென்னை ராஜதானியின் ஆளுநர் சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லியால், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே மின்சார ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நாள்

. அடுத்தது, தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் நாள்.

மின்சார ரயில் சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்காத நிலையில், அதிவேகமாக அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்துக்குப் போக்குவரத்து வசதிகள் ஈடுகொடுக்க முடியாத நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை சற்று ஆறுதலளிக்கும் என்று நம்பலாம்.
முதல் கட்டமாக ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு வரையிலுமான மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடத்திலும் அடுத்தகட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்க இருக்கிறது. இதுவரை ரூ.10,751.94 கோடி செலவில் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை, சென்னை மாநகரத்தின் கட்டமைப்பு வசதிக்குப் புதிய பரிமாணத்தையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
1931-இல் தொடங்கப்பட்ட மின்சார ரயில் சேவையின் பயனால் சென்னை மாநகரம் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பரந்து விரிந்து வளர்ந்தது என்றால், 2015-இல் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை மின்சார ரயில் இல்லாத பகுதிகளை இணைப்பதுடன் கணிசமாகச் சாலை நெரிசலைக் குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்ல, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுக்கு மெட்ரோ ரயில், மின்சார ரயில், பெட்ரோலிய எரிவாயு பயன்பாடு ஆகியவை மட்டுமே விடையாக இருக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. அரசுப் பேருந்துகளும், சிற்றுந்துகளும், ஷேர் ஆட்டோக்களும் இருந்தும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ற அளவுக்கு பொதுப் போக்குவரத்தின் எண்ணிக்கையும், தரமும் அதிகரிக்காமல் இருப்பதும் மிகப்பெரிய காரணம்.
73 லட்சம் மோட்டார் வாகனங்கள் உள்ள தலைநகர் தில்லியைவிட, 37 லட்சம் வாகனங்கள் உள்ள சென்னைதான் பரப்பளவு சார்ந்த விகிதப்படி, சாலையில் அதிக வாகனங்கள் காணப்படும் நகரமாகத் திகழ்கிறது. தில்லியில் 30,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் கி.மீட்டருக்கு 245 வாகனங்கள் என்றால், வெறும் 1,800 கி.மீ. நீளமேயுள்ள சென்னை நகரத்தின் சாலைகளில் கி.மீட்டருக்கு 2,093 வாகனங்கள் காணப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சென்னையைப் பொருத்தவரை வாகனங்கள் வாங்குவதில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாள்தோறும் தமிழகத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் 25% வாகனங்கள் சென்னையின் சாலைகளில்தான் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல, மோட்டார் வாகனங்களில் கணிசமானவை இரண்டு சக்கர வாகனங்கள் என்றாலும்கூட, அதிநவீனமான பெரிய கார்கள், பேருந்துகள் போன்றவை அதிக அளவில் செல்வதற்கு ஏற்ப சாலைகள் சென்னை மாநகரில் விரிவுபடுத்தப்படவில்லை, விரிவுபடுத்துவது சாத்தியமும் இல்லை.
தனியார் மோட்டார் வாகனங்கள் போதாதென்று, சென்னையைச் சுற்றிலும் செங்கல்பட்டு, அரக்கோணம் வரையில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் வாகனங்கள் வேறு சென்னை நகரின் வீதிகளில் நூற்றுக்கணக்கில் வளைய வருகின்றன. வங்கிகள் வரைமுறையே இல்லாமல் மோட்டார் கார்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும் கடன் அளிப்பதன் விளைவாக, சொந்தமாகக் காரோ, இரு சக்கர மோட்டார் வாகனமோ வைத்திருப்பது என்பது நடுத்தர மக்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும்கூட ஒரு கெüரவப் பிரச்னையாகி விட்டிருக்கும் நிலைமை.
உலகில் மிக அதிகமாக வாயு மாசுவால் பாதிக்கப்பட்டிருக்கும் 20 நகரங்களில், இந்தியாவில்தான் 13 நகரங்கள் இருக்கின்றன. அதில் சென்னையும் அடங்கும். அதற்குக் காரணம், மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் பெட்ரோலியப் புகை. நகர்ப்புறத்திலுள்ள 40% குழந்தைகளின் நுரையீரல்கள் பலவீனமாக இருப்பதாக சுகாதாரப் புள்ளிவிவரம் கூறுகிறது.
போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் வாயுமாசு, வாகனங்கள் வாங்கியதால் ஏற்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் கடன் சுமை இவற்றுக்கு எல்லாம் ஒரே தீர்வு பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதுதான். அதிநவீன வசதிகளுடன்கூடிய, மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம், மேலைநாடுகளில் காணப்படுவது போல பணக்காரர்களும்கூட சொந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் நிலைமை ஏற்படும்.
அடுத்த கட்டமாக தில்லியில் உள்ளதுபோல, ஆட்டோ, வாடகைக் கார், பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள், குறிப்பாகத் தனியார் கல்லூரிப் பேருந்துகள் கட்டாயமாக சி.என்.ஜி. எரிவாயுவில்தான் இயக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியாகச் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை இருக்கட்டும்!

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு "நாக்' உயர் தரம் அளிப்பு

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்குத் தேசிய தர அங்கீகாரக் குழு (நாக்) உயர்த்தப்பட்ட தர மதிப்பீட்டை வழங்கியது.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்ற தேசிய தர அங்கீகாரக் குழு புதிய தரமாக 3.54 புள்ளிகளை வழங்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வந்த தேசிய தர அங்கீகாரக் குழு மூன்றாவது சுற்று தரம் வழங்கலில் 3.3 புள்ளிகள் அடிப்படையில் "ஏ' தகுதியை வழங்கியது. அந்தக் குழு வழங்கிய தரப்புள்ளிகள், தகவல்கள் குறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்தது. அதன்படி, மேல்முறையீட்டுக் குழு நான்கு அடிப்படைகளில் தன்னுடைய மதிப்பீட்டைத் திருத்தி அமைத்தது.
பாடம் தொடர்பான கூறுகள், ஆய்வு உரையாடல்கள், விரிவாக்கம், பயிற்றுவித்தல் கற்றல், புதியன படைத்தல், சிறந்த நடைமுறைகள் போன்றவற்றை அக்குழு கருத்தில் கொண்டது.

மேல்முறையீட்டுக் குழுத் தன்னுடைய மதிப்பீட்டை 3.54 என்பதைத் திருத்தி அமைத்தது. மேலும், நிகழாண்டு மே 11ஆம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு இறுதியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் புதிய மதிப்பீடான 3.54, "ஏ' தரம் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசுப் பல்கலைக்கழகங்கள், அனைத்து தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களையும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் விஞ்சி முன்னிலையில் உள்ளது.

கணவரின் பெற்றோர் இறந்ததாகக் கூறி வாரிசுச் சான்று பெற்ற மருமகள்!

உயிரோடு இருக்கும் தங்களை இறந்துவிட்டதாகக் கூறி மருமகள் பெற்ற வாரிசுச் சான்றிதழை மாற்றித் தரக்கோரி மாமனார், மாமியார் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அவர்களுக்கு உடனடியாக வாரிசுச் சான்றிதழ் மாற்றித்தரப்பட்டது.
மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான்(57). இவரது மனைவி சாரா பானு(51). இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் கடைசி மகனான அப்துல் ரஹ்மான்(26) கடந்தாண்டு டிசம்பர் 13-இல் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
இதையடுத்து வாரிசுச் சான்றிதழ் கோரி அப்துல் ரஹ்மானின் தந்தை ஷாஜகான் மதுரை வடக்கு வட்டாட்சியரை அணுகியுள்ளார். ஆனால், அதற்கு முன்பே அப்துல் ரஹ்மானின் மனைவி மும்தாஜ் பேகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசுச் சான்றிதழ் பெற்றுவிட்டதாகவும், அதில் தனது மாமனார் ஷாஜகான், மாமியார் சாரா பானு இறந்துவிட்டதாகத் தவறான தகவல்களையும் அவர் தெரிவித்து இருப்பதும் தெரியவந்தது.
இதையறிந்த ஷாஜகான், சாரா பானு ஆகியோர் சான்றிதழை மாற்றித்தரக் கோரி கடந்த 15 நாள்களாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அலைந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க திங்கள்கிழமை வந்தனர்.
இந்நிலையில் உயிரோடு இருப்பவர்கள், இறந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் பரவியது.
தகவலறிந்த வடக்கு வட்டாட்சியர் ராமன், இருவரையும் அழைத்து விசாரித்தார். பின்னர், உடனடியாக திருத்தம் செய்யப்பட்ட வாரிசுச் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து மதுரை வடக்கு வட்டாட்சியர் ராமன் கூறியது: வாரிசுச் சான்றிதழ் வழங்கும் பிரிவு ஊழியரின் கவனக்குறைவு காரணமாக சான்றிதழ் பதியும்போது மாமனார், மாமியார் இறந்துவிட்டதாக வாரிசுச் சான்றிதழில் எழுதப்பட்டுவிட்டது. அதை திருத்தி உடனடியாகப் புதிய வாரிசு சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.

Madurai's senior most citizen dies aged 105

MADURAI: Having lived a long and fruitful life, Madurai's senior most citizen, Arul Navam David, 105, breathed her last in the wee hours of Monday.

She lived a hale and hearty life without any ailments, except that she was on a liquid diet for the last 10 days.

She appeared in district collector office in May to renew her pension by producing life certificate, much to the surprise of treasury officials. They told her that she had attained the ripe age to claim double pension.

During last parliamentary elections in April 2014, Arul Navam gingerly came down to a polling booth being carried by her great grandson, David Franco.

As she approached the booth, she jumped down and went around franchising her vote. She promptly came out giving a warm smile to media persons and her relatives informed that she followed up all election developments promptly.

To her age, she had amazing vision to read Bible and newspapers and most of her teeth were intact till her death. She had no age-related ailments like diabetes, blood pressure or heart ailments.

"She lived a disease-free life and took care of her own needs. She was absolutely no trouble to family for her age," said Sampath Pandian, her relative.

Her life was full of tragedies, and she faced them with grit. Born in 1911, she worked as a midwife in Ramnathapuram and later at Madurai Government Rajaji Hospital, before retiring as midwifery superintendent in 1966.

She was widowed at the age of 26 with eight children and she did not have any professional training.

She studied midwifery after her husband's demise to support her children. She worked in Ramanathapuram district - most of the times in remote villages - helping out poor families.

She had also seen her children dying one by one due to age, the most painful part of her long life, said P David Manickam, her grandson.

Having faced all the struggles with exceptional courage, she celebrated her 105th birthday along with her neighbours in a gated community near Vilangudi on January 4, 2015.

On Monday morning, around 1.40am, she suffered wheezing trouble and passed away, her relatives informed.

"She lived her life full and passed away peacefully. She will be laid to rest after the requiem service at Christ Church, Karimedu", Manickam added.

Applications for Indian medicine courses being issued

Distribution of applications to the five-and-half-year undergraduate courses for academic year 2015-2016 offered under the Indian systems of medicine began on Monday at various government colleges in the State.

Forms will be issued till July 24 at all the government Indian medical system colleges on the Indian Medicine Campus in Arumbakkam besides government colleges in Palayamkottai, Madurai and Nagarcoil. Applications can also be downloaded from www.tnhealth.org.

Applicants must provide a request letter along with a DD for Rs. 500 drawn in favour of ‘The Director of Indian Medicine and homoeopathy, Chennai 106’ from any nationalised bank on or after June 29 payable at Chennai.

No application fee will be charged for SC, SCA and ST candidates provided they submit a written request along with self-attested photostat copies of the community certificate and Plus-Two mark sheet.

Applications can also be downloaded from www.tnhealth.org

MBBS counselling at Annamalai varsity from tomorrow

Counselling for admission to the MBBS course at Annamalai University will be held from July 1, while counselling for admission to the BDS will be held from July 2 onwards. A total of 5,940 applications have been received for MBBS course and 1,438 applications have been received for BDS course, said a press release from the university.

Admission will be made on the basis of merit by following rule of reservation of the Government of Tamil Nadu, it said.

Three per cent of the total seats available are reserved for differently-abled persons as per norms laid down by the government, it said.

Candidates can check their random number for counselling on the university website, www.annamalai university.ac.in. For further information, candidates can contact the helpline at 04144-238348/ 238349 or email auadmission2015@gmail.com

B.E. counselling

Meanwhile, a total of 1,965 candidates were called for counselling held on June 27 and 28 for admission to various Bachelor of Engineering courses at the university. A. Ravikaran from Gingee was selected under the differently-abled category.

Candidates can check their random number for counselling on the university website, www. annamalai university. ac.in

இதை பொதுமக்கள் வரவேற்பார்கள்

கடந்தவாரம் வெள்ளிக்கிழமையன்று, இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள், 40 ஆண்டுகளுக்கு முன்பு அதேநாளில் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையின் சோக நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தின. 1975–ம் ஆண்டு ஜூன் 12–ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு, இந்திரா காந்திக்கு எதிராக, அவர் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று வழங்கிய ஒரு தீர்ப்புதான், இந்த நெருக்கடிநிலை பிரகடனத்துக்கு மூலகாரணமாக அமைந்தது. அனைத்து அரசியல் தலைவர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் திருமணம் முடிந்து புதுமாப்பிள்ளை என்ற பெயர் மாறுவதற்கு முன்பே கைது செய்யப்பட்டு சொல்லொணாத் துயரங்களை சிறையில் பட்டார். அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டன. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்பட அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் இடமில்லாத நிலை. ‘இம்’ என்றால் சிறைவாசம்தான், ‘ஏனென்றால்’ வனவாசம்தான். பத்திரிகைகளுக்கு கடுமையான ‘சென்சார்’. ஜனநாயகத்தின் இருண்டகாலமாக கருதப்பட்டது.

இவ்வளவு கொடுமைகள் இழைக்கப்பட்டாலும், சாதாரண பொதுமக்களின் வாழ்வில் சில நன்மைகளும் இருந்தன. விலைவாசிகளெல்லாம் கட்டுக்குள் இருந்தன. கலப்படம், கள்ளக்கடத்தல், பதுக்கல் எல்லாம் போயே போயிற்று. ஓட்டல்களில் ஜனதா சாப்பாடு என்ற அருமையான சாப்பாடு ஒரு ரூபாய்க்கு எங்கும் கிடைத்தது. அரசு ஊழியர்களிடம் லஞ்சம் என்பதே இல்லை. அனைத்து அரசு ஊழியர்களும் ‘டாண்’ என்று 10 மணிக்கு இருக்கையில் அமர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றினர். ரெயில்களெல்லாம் சரியான நேரத்தில் புறப்பட்டன, போய் சேர்ந்தன. போலீஸ்காரர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் வேலைசெய்தனர். இந்தநாளில் அதையும் நினைத்துப்பார்த்த பொதுமக்கள், அந்த வகையில் மட்டும் அந்த நாட்கள் மீண்டும் வராதா என்று ஏங்குகிறார்கள்.

ஆனால், அதுபோன்ற ஒரு நிலையை மத்திய அரசாங்க அலுவலகங்களில் உருவாக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்கள் தாமதமாக வருவதைத்தடுக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஒவ்வொரு அரசு ஊழியரும் கண்டிப்பாக வாரத்துக்கு 40 மணி நேரம் அதாவது, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்க்கவேண்டும், ஒரு மாதத்துக்கு இருமுறை மட்டும் 30 நிமிடங்கள்வரை தாமதமாக வரலாம், அதற்குமேல் தாமதமாக வரும் அரசு ஊழியர்களுக்கு ½ நாள் லீவு எடுத்ததாக பதிவு செய்யவேண்டும், அவர்கள் பணி பதிவேட்டில் அதிகாரிகள் எதிர்மறை குறிப்புகளை எழுதலாம். அவர்கள் பணியாற்றும் நேரம் உள்பட அனைத்து விவரங்களையும் அதிகாரிகள் இணையதளம் மூலமாக கண்காணிக்கவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. இந்த ஊதியக்குழு, அவர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகை உயர்வுகளை பரிந்துரை செய்யும். 7–வது ஊதியக்குழு தன் பரிந்துரையை வருகிற ஆகஸ்டு மாதம் 28–ந்தேதி அளிக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசிலும் சம்பள உயர்வு அளிக்கப்படும். அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் அதேநேரத்தில், அவர்கள் பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளையும் மத்திய–மாநில அரசுகள் உறுதிப்படுத்தவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நெருக்கடி நிலைபோல, லஞ்சத்துக்கு அரசு அலுவலகங்களில் இடமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும். தெலுங்கானா போல, பொதுமக்களின் கோரிக்கைகள் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் நிறைவேற்றப்படவேண்டும் என்பது அவர்களுக்குள்ள உரிமை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும்.

Monday, June 29, 2015

Doctors with Fake Degrees on the Prowl

The New Indian Express

NEW DELHI: Even as the fake degree involving former Delhi Law Minister Jitender Singh Tomar is yet to die down, another major fraudulence has come to light.

The Medical Council of India (MCI), the country’s medical education regulator, has found that fake certificates were submitted by medical faculties while submitting applications for establishing new medical colleges.

The MCI observed that five faculty members had submitted fake experience certificates in the application for setting up a new medical college by Rajiv Memorial Academic Welfare Society at Akbarpur in Mathura .

Similarly, it was found that nine faculty members had submitted fake certificates with the application for establishment of a new medical college by Puran Chand Dharmarth Trust at Kaithal in Haryana.

The MCI also found that in some of these cases, many staff members were unable to recognise their colleagues and resident doctors. On verification, it was found that no work output data of individual faculty and residents was available. No past attendance record was available either. Most of the faculty and residents did not possess an ID card. The MCI also observed that faculty members of clinical departments appear to be present in name only as they did not know the names of their superiors or juniors in the department. Interestingly, some faculty members have submitted fake telephone bills as proof of residence.

In one of the cases, while giving legal opinion, the Additional Solicitor General had said, “Indulging in malpractice of forgery and fabrication is a serious offence in law and the same cannot be taken lightly. Especially in the case of medical education as the same will affect the quality of medical education provided by an institution.

The institution which indulges in forgery and fabrication should be penalised as contemplated by statutory provisions as their actions affect the career of students pursuing MBBS education and may eventually affect the citizens.”

Concerned with the submission of fake or forged certificates by the faculty members,the MCI decided to apply Clause 8(3)(1)(d) of Establishment of Medical College Regulation Amendment, 2010 (part II), April, 16, 2010 while considering the applications for new medical colleges.

As per the clause (d), if any institute is found to have employed a teacher with fake/forged documents and submitted the declaration form of such a teacher, such an institute will not be considered for renewal of permission/recognition for award of MBBS degree/processing the applications for post-graduate courses for two years-- the current academic year and the following one.

As far as application for the Medical College at Akbarpur in Mathura is concerned, the MCI found that fake experience certificates were produced by Dr Neety Singh, SR, Department of Radio-Diagnosis, Dr Vikas Chand Dubey, SR, Department of General Medicine, Dr Vivek Asthana, SR, Department of Anaesthesia, Dr Pankaj Kumar, SR, Department of ENT and Dr Mukesh Bharti, SR, Department of Orthopaedics.

The Executive Committee of the MCI decided to refer the matter to the Ethics Committee to take action against the faculty as well as the Dean of the college.

As far as application for establishment of new medical college at Kaithal in Haryana is concerned, it was observed that fake experience certificates had been submitted by Dr Anil Patel, Associate Professor, Physiology, Dr Suresh Kumar Jain, SR, Orthopaedics, Dr Supriya, SR, Pediatrics, Dr H S Chattwal, SR, Pediatrics, Dr Ghansham Dass Goyal, SR, Paediatrics, Dr Stuti Modi, SR, OBG, Dr Rakesh Kumar Grover, SR, Anesthesia, Dr Romesh Chand Mittal, SR, Anesthesia and Dr Pankaj Kumar Srivastava, SR, Ophthalmology. The MCI referred the matter to the Ethics Committee to take action.

In the case of renewal of permission for MBBS course of third batch (150 seats) of Malla Reddy Medical College for Women, Jeedimetla, Hyderabad, for the 2015-2016 academic year, it was found that most of the Residents of all clinical departments were absent in their respective department/ward and were not doing administering treatment in OPD/OT.

They did not know the names of the head of the unit and other Residents. No senior/junior Resident had bank account details and also no hostel possession letter on faculty verification/head count. So many staff members were unable to recognise their fellow staff members and their Residents.

On verification, no work output data of individual faculty and Residents was available. No past attendance record was available. The MCI has decided not to renew the permission for admission to third batch.

In case of Sri Aurobindo Institute of Medical Sciences, Indore, MP, which applied for renewal of permission for admission of fifth batch of MBBS students, eight faculty members have not been considered as teachers, five senior Residents have not been considered as they are not staying on the campus.

Seven faculty persons have been found doing private practice, with timings overlaping with the institute’s timings. The MCI, has not only refused permission for admission, but has also referred the matter to the Ethics Committee.

Send Staff on Deputation Back, Government tells RGUHS

BENGALURU: The Department of Medical Education has directed the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) to send the staff on deputation from other institutions back to their parent institutions.

Following allegations of not following norms while regularising several staff, Principal Secretary to the Medical Education Department M Lakshmi Narayana sent an official communication to the university in this regard.

The copy of the letter available with Express, reads: “As it is discussed and decided in the meeting held on May 8, we are directing the Rajiv Gandhi University of Health Sciences to send staff on deputation back to their parent institutes and also to submit a report on regularisation of 73 staff and 116 staff working on contract basis.”

The department also insisted that the Vice-Chancellor act immediately and send two deputy registrars and an assistant registrar back to their parent institutions. The instruction reads, “Vasanth Shetty and Dr Pranesh Gudur working as deputy registrars and who are from private institutions, and Ravindra Prasad from Kannada University Hampi should be sent back immediately.”

The Principal Secretary has also directed the university to cancel the decision to regularise the services of some Group D and Group C employees, whose services were outsourced. “There are some Group D and C employees who were taken on outsource basis and regularised without following statutes. Even the direction given by the High Court in a particular case was misunderstood. Typist Jyoti, driver Chennakeshava and electrician Vasanth Kumar, whose services were regularised, need to be considered as outsourced employees as earlier,” the letter said.

Reacting to this, RGUHS Vice-Chancellor Dr K S Ravindranath said, “The issue was placed before the Syndicate at a meeting on Friday. It was decided to send the details of all such employees who are in the university on deputation. The Principal Secretary, who is also the member of the Syndicate, was present at the meeting.”

Meanwhile, the three officials on deputation have approached the court, even before the university could initiate any action. The court has also issued a notice to the university in this regard.

PG Answer Script Scam

According to sources from the department, the decision to send back deputed staff was taken following the PG medical answer script scam that was unearthed in May/June 2014.

“Some university staff were suspected to be involved in the scam and following the allegations, the department has taken the decision and sent this communication,” said a source.

இருக்கு, ஆனாலும் இல்லை...!

வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்த காலம் போய், வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் தனித்தனியே செல்லிடப்பேசி (செல்போன்) என்ற சூழல்.
மேலும், அது கைக்கு ஒரு செல்லிடப்பேசி என ஆகிவிட்டது. நிறையப் பேர் ஒரு ஸ்மார்ட் போனும், ஒரு சாதா போனும் வைத்திருப்பது இயல்பாகி வருகிறது.
கொரியன் தயாரிப்பு, சீனத் தயாரிப்பு என பல நாடுகளின் செல்லிடப்பேசிகள் விலை மலிவாகக் கிடைத்துவந்த நிலையில், முன்னணி நிறுவனங்களும் நிறைய புதிய மாடல் செல்லிடப்பேசிகளை அனைவரும் வாங்கியே தீர வேண்டும் என சந்தையில் கொட்டி வருகின்றன. இன்று செல்லிடப்பேசி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்.
பயணங்களின் போது நம் கண்ணில் படுவோரில் பலரும், இசை, விளையாட்டு, விடியோ என ஏதேனும் ஒன்றில் லயித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. செல்லிடப்பேசியிலேயே பத்திரிகை, புத்தகம் படிப்பதையும் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் மேய்வோரையும் காண்கிறோம்.
இந்த "ஸ்மார்ட் போன்' உலகில் எத்தனையோ பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரண்டு சிப், ஆடியோ, விடியோ, ரெக்கார்டிங், கால்குலேட்டர், அலாரம் என ஒரு குட்டி கணினியாகவே இன்றைய ஸ்மார்ட் போன் திகழ்கிறது.
"நமக்கு எதுவுமே புரியலப்பா, ஆனா இந்த சின்னப் பசங்க செல்லிடப்பேசியில் பூந்து விளையாடுறாங்கப்பா' என்னும் பேச்சை அடிக்கடி கேட்கிறோம். இளைஞர்கள் செல்லிடப்பேசியில் வேகமாக "டைப்' செய்யும் நேர்த்தியே அலாதிதான்.
கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (பேஸ்புக்), இத்யாதி இத்யாதி என அதற்குள்ளேயே தன்னைச் சிக்கவைத்துக்கொண்டு ஏறக்குறைய செல்லிடப்பேசி அடிமைகளாகத் திகழ்வோரையும் காண்கிறோம்.
இவற்றுக்கு மத்தியில் செல்லிடப்பேசியை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு, அதை அடுத்தவருடன் பேசும் வெறும் கருவியாக மட்டுமே பயன்படுத்துவோரையும் காண்கிறோம். அவர்கள் தங்களுக்குத் தெரிந்த சில விஷயங்களுக்கு மேல் செல்லிடப்பேசியில் வேறு எதையும் பயன்படுத்துவது இல்லை.
இங்கேதான் ஒரு கேள்வி எழுகிறது. செல்லிடப்பேசிகளை முழுமையாக நாம் பயன்படுத்துகிறோமா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பெரும்பாலோர் அதில் குறைந்தபட்ச செயல்பாடுகளையே பயன்படுத்துகிறோம். நாம் வைத்திருக்கும் செல்லிடப்பேசியில் என்னென்ன வசதி இருக்கிறது என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை என்பதே மிக முக்கியமான காரணமாகப்படுகிறது.
ஒரு பொருளை வாங்கும்போது, அதனுடன் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று ஒரு விளக்கப் புத்தகம் கொடுக்கப்படும். இன்று நாம் வாங்கும் செல்லிடப்பேசிகளுடன் ஒப்புக்கு ஒரு வழிகாட்டி (மேனுவல்) புத்தகம் அளிக்கப்படுகிறது. அதில் உலக மொழிகள் பலவற்றுடன் ஆங்கிலமும் இருக்கும். அதனைப் படித்துப் புரிந்துகொண்டால் ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழிலும் சில செல்லிடப்பேசித் தயாரிப்பு நிறுவனங்கள் இப்படிப்பட்ட புத்தகத்தைக் கொடுக்கின்றன. அதிலுள்ள எழுத்துகள் பூதக்கண்ணாடி கொண்டு படிக்கும்படி இருக்கும்.
சரி, அந்த நிறுவனங்களின் இணையதள முகவரியிலாவது சென்று தமிழில் அறிந்து கொள்ளலாம் என்றால், அப்படி தமிழில் தகவல் இருப்பதாகத் தெரியவில்லை.
பெரும்பாலானோர் சுய பரிசோதனையின் அடிப்படையிலேயே செல்லிடப்பேசியை நோண்டி, நோண்டிக் கற்றுக் கொள்கின்றனர். எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சுற்றத்தாரிடம் கேட்டே பலரும் பயன்படுத்துகிறார்கள்.
செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிவதற்கே இவ்வளவு பிரச்னை. அதிலும் அவரவர் தாய்மொழியைப் பயன்படுத்துவதில் மேலும் பிரச்னை உள்ளது.
உதாரணமாக, தமிழ் மொழிப் பயன்பாடும் பல்வேறு சிக்கல்களில் உள்ளது. தமிழ் மொழி செல்லிடப்பேசியிலேயே இணைக்கப்பட்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை; தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த முடிகிறது. சில செல்லிடப்பேசிகளில் அதற்கான "ஆப்ஸ்' எனப்படும் செயலிகளை நிறுவிப் பயன்படுத்தலாம். மேலும் சில செல்லிடப்பேசியில் தமிழில் படிக்க மட்டும் முடியும்; எழுத முடியாது.
செல்லிடப்பேசி மூலம், வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், பயணச் சீட்டு பெறலாம் என எத்தனையோ வசதிகள் உள்ளன.
ஆனால், செல்லிடப்பேசியின் சாதாரணப் பயன்பாடுகளையே முழுமையாக அறியாதவர்கள், இப்படிப்பட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் தயங்கவே செய்வர். தயக்கம், அச்சம் இல்லாமல் அனைவரும் தைரியமாக செல்லிடப்பேசியைப் பயன்படுத்த, அதில் என்னென்ன வசதிகள் உள்ளன. அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்திருப்பது அத்தியாவசியமாகும்.
சில யோசனைகள்: செல்லிடப்பேசியை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை விளக்கும் கையேடு எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படியும், தமிழில் பயன்படும் வகையில் அனைத்து செல்லிடப்பேசிகளும் அமைந்திருக்க வேண்டும்.
செல்லிடப்பேசியை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் செல்லிடப்பேசி பயன்படுத்துவதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வும், விளக்கமும் அளிக்கும் வகையில் தமிழில் ஒரு பகுதியை அமைத்திருக்க வேண்டும். சந்தேகங்களுக்கு தமிழில் தகவல் தரும் இலவச சேவை மைய (கால் சென்டர்) ஏற்பாடும் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத் துறையில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இதுகுறித்து மேலும் சிந்தித்துச் செயல்பட்டு, கைக்குக் கிடைத்த செல்லிடப்பேசியை அறைகுறையாக அல்லாமல் முழுதாக அனைவரும் பயன்படுத்த வழிவகை காண வேண்டும்.

University brings ordinance to ensure greater accountability in examination work

MANGALURU: Examiners and examination staff appointed by Mangalore University or from an institution affiliated to the university and anyone who has accepted an offer from the university to be in this role will have to henceforth tread carefully.

An ordinance governing disciplinary control over examiners and staff involved in university' exam work will entail they discharge their duty in the utmost professional manner of face severe action including fines.

Ratified by the academic council of the university, the ordinance will come in to effect from the date of approval of the Syndicate. If examiners are persons appointed under section 74 of the Karnataka State Universities Act; examination staff includes persons appointed as moderators, chief superintendents, deputy chief superintendents, invigilators, flying squad, superintendents, tabulators, co-tabulators, head clerks, clerks, typists/data entry operators or peons.

Any lapse or malpractice on the part of the examiners or examination staff will mean that they will have to Malpractices and Lapses Enquiry Committee that the vice-chancellor is empowered to appoint to go in to such specific instances. The penalties include withholding payment of part of full remuneration or recovery in part or full of such remuneration specified for doing the work of examiner or examination staff, and a fine not exceeding Rs 5,000.

The penalty also includes recovery in full or in part, of the loss caused to the university on account of the lapse or malpractice committee by the examiners or staff. The examination staff could also be debarred from examination work, either permanently or for a specified period. An examiner in turn could be disqualified from being included in the panel of examiners under sub-section (2) of section 74 of the above mentioned act, either permanent or for a specified period.

Vice chancellor K Byrappa said the ordinance is important in that the university will now have to ensure that rights of the students, who are the major stakeholders in the higher education system is protected.

"We do not the future of the students to be in jeopardy due to the mistakes - knowing or otherwise - on part of the examiners of examination staff," he said, adding such a move will make those connected with the examination job to be more diligent in what they do.

Medical colleges in MP get nod to start PhD courses

INDORE: Medical colleges of state, including Mahatma Gandhi Memorial Medical College (MGM) will be able to start PhD course in clinical branches of medicine from this academic year.

Coordination committee of higher education departrment -- apex regulatory body -- has given nod to recommendations forwarded by Devi Ahilya Vishwavidyalaya (DAVV). Following the approval, rules will come into effect for all medical colleges of state.

Varsity executive council, standing committee, Bhopal, has also approved regulation of PhD course in different clinical faculties and it was decided to follow Medical Council of India (MCI) regulations clearingordinanceconstraints. So far, in MGM PhD in community medicine is being offered as it had only one PhD holder who met mandatory guidelines for the course as per University Grants Commission (UGC). DAVV had permitted the college to conduct PhD course three years ago as it fit the criteria.

"Changes were made in the ordinance, which were approved by coordination committee.

The changes will be applicable for all state universities, now. With this, medical colleges will be able to start PhD course in clinical branches. MCI regulations will come into effect instead of UGC. However, PhD candidates will have to undergo screening test and also do course work as per UGC guidelines," said an official.

Amendment will also pave way for state universities to hold entrance test for PhD aspirants in medical sciences. "We will hold two-hour entrance examination for entry to PhD aspirants. It will comprise 100 questions and 50% will be passing marks," said Prof Ganesh Kawadia, who was one of the members of the committee to decide on MGM application to run a PhD course. Earlier, DAVV had turned down request of MGM when it submitted a letter issued by MCI which permits it to run doctoral courses. Varsity had constituted a committee to inspect facilities and infrastructure to run PhD courses but it found that its ordinance does not allow the college to run PhD course.

Ruckus at NET exam as late candidates are kept out in Nagpur


NAGPUR: The National Eligibility Test (NET), a mandatory requirement for those seeking employment in colleges as lecturers, was held on Sunday. This important test is conducted by the Central Board of Secondary Education (CBSE) on behalf of University Grants Commission (UGC). Nagpur was one of the 89 cities across the country where NET was conducted.

Not all who registered for the exam in Nagpur were able to appear though, which caused some ruckus at a centre. A few candidates told TOI that they were not allowed inside the exam hall even though they were "just a bit late". One female candidate from Wardha said, "The exam was to start at 9.30am and I reached at 9.35am. The auto driver took a lot of time to reach the centre and also my train from Wardha was a bit late. They should have let us in rather than waste our entire year." As per the NET website and a notification issued just a week ago, students have to report well in advance for the exam.

There were three papers with different marks and time duration. The first exam was of 100 marks in which 60 questions (50 mandatory) were to be solved in 45 minutes. In the second session/exam there were 50 questions which were to be solved in the same time frame and carried 100 marks. The third paper was the longest and had 75 questions worth 150 marks to be solved in 2.5 hours.

NET is held to determine eligibility for college and university level lectureship and for award of Junior Research Fellowship (JRF) for Indian nationals in order to ensure minimum standards for entrants in the teaching profession and research. The candidates who qualify are eligible to pursue research in subject of their specialization in a related subject and are also eligible for post of assistant professor. The JRF awardees have the opportunity to pursue whole time research work in government universities, institutions, IITs and other national organizations.

நுழைவுத்தேர்வு ‘ஹால் டிக்கெட்’டில் குளறுபடி: மாணவர் படத்துக்கு பதிலாக ‘நாய்’ படம் இடம்பெற்றதால் பரபரப்பு


கொல்கத்தா

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் இடம்பெறும் குளறுபடிகளுக்கு அளவே இல்லை. ஆணின் படத்தை போட்டு பெண்ணின் பெயர் இடம்பெறும். சில நேரங்களில் படமே மாறி விடும்.

ஆனால் இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், மாணவரின் படத்திற்கு பதிலாக ஒரு நாயின் படத்தை போட்டு நுழைவுச்சீட்டு வழங்கிய சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்து உள்ளது.

அங்குள்ள மிட்னாபூரைச் சேர்ந்தவர் சோமியாதிப் மகாதோ (வயது 18). பிளஸ்–2 படித்துள்ள இவர், ஐ.டி.ஐ. படிக்க விரும்பினார். மேற்குவங்காள மாநிலத்தில் ஐ.டி.ஐ. படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்காக சோமியாதிப் மகாதோ விண்ணப்பித்து இருந்தார்.

தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’டை இணையதளம் மூலமாக அவர் பதிவிறக்கம் செய்தார். அப்போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது படம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு நாயின் படம் இருந்தது. ஆனால் சோமியாதிப் மகாதோவின் முகவரி மற்றும் மற்ற விவரங்கள் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் செய்தார். இதனையடுத்து உடனடியாக நாயின் படம் அகற்றப்பட்டு, மாணவரின் படம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குளறுபடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மெட்ரோ ரெயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் ஏ.சி. ரெயிலில் ஓசி பயணம் முடியாது



மெட்ரோ ரெயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். இந்த ஏ.சி. ரெயிலில் ஓசி பயணம் முடியாது.

படியில் பயணம் இனி இல்லை

மின்சார ரெயில்களில் பயணம் செய்து பழக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு இன்று அறிமுகப்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் பயணம் புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறது. முதல் மெட்ரோ ரெயில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி தனது பயணத்தை இன்று தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில், ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையம் (சி.எம்.பி.டி.) ஆகிய ரெயில் நிலையங்கள் வருகின்றன.

மின்சார ரெயில்களில் இஷ்டம்போல் ஏறி, இறங்கி படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது போல் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க முடியாது. மெட்ரோ ரெயில்களில் பயணிக்க வேண்டும் என்றால், 3 நிலைகளை கடந்து செல்ல வேண்டும்.

அதாவது, ரெயில் நிலைய தரைத்தளத்திற்கு யார் வேண்டுமானாலும் சாதாரணமாக செல்ல முடியும். அடுத்ததாக உள்ள முதல் தளத்தில் டிக்கெட் கவுண்டர் உள்ளது. அங்கு சென்று எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதை கூறி, அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். விசிட்டிங் கார்டு அளவிலான அட்டையில் டிக்கெட் வழங்கப்படும்.

தானியங்கி கதவு

இந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரெயில் ஏறும் பிளாட்பாரத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வாயிலில் உள்ள எந்திரத்தின் முன்பு டிக்கெட்டை காண்பித்தால் தானியங்கி கதவு திறக்கும். அதன் பிறகு பிளாட்பாரத்திற்கு செல்ல முடியும்.

ரெயில் வந்து நின்றதும் 4 பெட்டிகளில் உள்ள கதவுகள் ஒரே நேரத்தில் திறக்கும். அதன் பிறகுதான் பயணிகள் இறங்கவோ, ஏறவோ முடியும். ரெயில் புறப்படும் தறுவாயில் அதில் உள்ள கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். இதனால், ரெயிலில் தொங்கியபடி யாரும் பயணம் செய்ய முடியாது. கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் காத்திருந்து அடுத்த ரெயிலில் தான் செல்ல முடியும்.

ஓசி பயணம் முடியாது

ரெயில் பயணத்தின்போது டிக்கெட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், இறங்க வேண்டிய இடத்தில் ரெயிலை விட்டு இறங்கியதும், வெளியேறும் வாயில் அருகே உள்ள பெட்டியில் பயணம் செய்த டிக்கெட்டை போட்டால் தான் தானியங்கி கதவு திறக்கும். அதன் பிறகுதான் வெளியேற முடியும். அதனால், டிக்கெட் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் ஓசி பயணம் செய்ய முடியாது.

அதேபோல், டிக்கெட் எடுத்த இடத்தை தாண்டியும் பயணம் செய்ய முடியாது. அவ்வாறு பயணம் மேற்கொண்டால் இறங்கும் ரெயில் நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது மாட்டிக்கொள்வோம். அங்குள்ள ரெயில்வே அதிகாரியிடம் அபராதம் கட்டிய பிறகுதான் ரசீது வாங்கிக்கொண்டு வெளியே செல்ல முடியும்.

ரீ சார்ஜ் செய்யும் வசதி

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய 3 விதமான டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதாவது, தினசரி பயணம் செய்வதற்கு தனியாக டிக்கெட் வழங்கப்படும். இதேபோல், நிரந்தர டிக்கெட் அட்டை முறையும் உள்ளது. ரூ.50 முதல் ரூ.300 வரை பணம் செலுத்தி நிரந்தர டிக்கெட்டை பெற முடியும்.

ஒவ்வொரு முறையும் இந்த நிரந்தர டிக்கெட்டை நுழைவு வாயிலில் காண்பித்து ரெயிலில் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் கழிக்கப்படும். நிரந்தர டிக்கெட் அட்டையில் உள்ள பணம் தீர்ந்ததும், மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். அதற்கான ரீசார்ஜ் எந்திரங்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது ஏ.டி.எம். கார்ட்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய முடியும்.

10 நிமிடத்திற்கு ஒன்று..

மேலும், சுற்றுலா குரூப் டிக்கெட் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த டிக்கெட்டில் 20 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஏறும் இடத்தில் டிக்கெட்டை காட்டியவுடன் கதவுகள் திறக்கும். அங்குள்ள ரெயில்வே ஊழியர் டிக்கெட்டில் உள்ள எண்ணிக்கையின்படி பயணிகளை உள்ளே அனுமதிப்பார். இறங்கும் இடத்திலும் இதே முறை பின்பற்றப்படும்.

மெட்ரோ ரெயிலுக்கான பயண கட்டணம் விவரம் இன்று தான் அதிகாரபூர்வமாக தெரியவரும். தினமும் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். முதலில், 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரெயில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Sunday, June 28, 2015

சொல்லத் தோணுது 40 - மாயமான்!.. தங்கர் பச்சான்



விளம்பரபற்ற மனிதர்களை கவனிக்க எப்படி ஆட்கள் இல்லையோ, அப்படித்தான் விளம்பரமற்றப் பொருட்களும். ஆனால், தகுதி இல்லாத ஒன்றை கூவிக் கூவி விளம்பரப்படுத்தினால், ஒன்றுக்கும் உதவாத உயிரைக் கொல்கிற பொருட்களையும் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வைத்துவிட முடிவும். பணம் இருந்தால் யாரையும், எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். எந்தப் பொருளையும் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வாங்கும் அளவுக்கு பித்து பிடிக்க வைத்துவிடலாம். பணம் இருந்தால் எந்த விளையாட்டையும் விளம்பரப்படுத்தி அனைவரையும் ஈர்த்துவிடலாம் என்பதெல்லாம் நடைமுறையில் நாளுக்கு நாள் நாம் காணும் காட்சிகள்.

உணவும், நீரும் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வாறு முக்கியமானதுதான் விளையாட்டும். ஆனால், இளரும் தலைமுறைகள் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு, மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.

கிரிக்கெட் எனும் மட்டைப் பந்து விளையாட்டு எனக்கு அறிமுகமானபோது என்னை அது ஈர்க்கவே இல்லை. அதற்கு தரப்படுகிற முக்கியத்துவத்துக்குரிய தகுதி அந்த விளையாட்டுக்கு இல்லை என்பதும், அதற்கான அதிரடி விளம்பரங்களும், பணத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை கண்ணி வைத்துப் பிடிக்கும் அதன் மாய வலையில் ஒளிந்திருக்கும் அரசியலைப் புரிந்து கொண்டதாலும், இன்று வரை அந்த மட்டையை நான் தொட்டதுகூட இல்லை. என் மகன்களுக்கும் இதில் ஈடுபாடு இல்லாமல் போனதும் எனக்கு வியப்புதான்.

இந்திய சாலைகளில் நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் எல்லா இடங்களிலும் காணக்கூடியது, திறந்த வெளிகளில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதையும், ரியல் எஸ்டேட் எனும் பெயரில் விளைநிலங்களை முடக்கி, நிலங்களில் வேலியமைத்து, பல வண்ணங்களைத் தீட்டி வைத்திருப்பதையும் காணலாம்.

ஆங்கில மொழியையும், அவனது கலாச்சாரத்தையும், அவனது விளையாட்டையும் நம்மேல் திணித்து, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக நம் தேசிய இனங்கள் பேசி வந்த மொழியையும், நமது உணவு மற்றும் கலாச்சாரத்தையும், நமது அடையாளத்தையும் இன்று மதிப்பிழக்கச் செய்துவருவது குறித்த சிந்தனையோ, கவலையோ எவருக்கும் இல்லை.

தொடக்கத்தில் வானொலி மூலமும், பின்னர் தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தக் கிரிக்கெட், நான்காயிரம் ஆண்டுகளுகு முன்பிருந்தே விளையாடி வந்த நம் விளையாட்டுகளை நாற்பதே ஆண்டுகாலத்தில் நம்மிடம் இருந்து விரட்டியடித்துவிட்டது.

கிரிக்கெட் என்பது எல்லாவற்றையும் போல் அதுவும் ஒரு விளையாட்டு, அதனை விளையாடுபவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை மறக்கடித்து, 'அதுதான் சிறந்த விளையாட்டு' என்பதுபோலவும், அவர்கள்தான் சிறந்த விளையாட்டு வீரர்கள் எனவும், தெய்வங்களுக்கு இணையாக போற்றும்படியான மனநிலையை விதைத்துவிட்டனர். இந்த விளையாட்டின் மூலம் பணம் குவிக்கும் அந்த வீரர்களுக்கோ, அவர்களை இயக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கோ மட்டுமில்லை; இந்த ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.

எல்லா நாடுகளிலும் ஏன் கிரிக்கெட் இல்லை? எல்லா நாடுகளிலும் ஏன் இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தவில்லை. ஏனெனில், சில பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் முதலாளிகளும், தரகர்களும் தங்களின் பொருட்களை மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில்தான் விற்க முயற்சிப்பார்கள். அந்த வகையில் அனைத்து பன்னாட்டு முதலாளிகளின் பார்வையில் இந்தியா முதல் வரிசையில் நிற்கிறது. அவர்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு கிரிக்கெட் மூலமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்.

கிரிக்கெட் முதலில் அந்த வீரர்களுக்கு விளம்பரம் தேடித் தரும். அதன்பின், அவர்கள் பலபொருட்களுக்கு விளம்பரம் தேடித் தருவார்கள். இது இரண்டையும் இணைத்து முதலாளிகள் தங்களின் தொழிலுக்கு மூலதனமாக்கி நம்மை முட்டாளாக மாற்றுவார்கள்.

கிரிக்கெட் இந்திய மக்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விளையாட்டாகவே இன்று மாறிவிட்டது. இந்திய அணியின் தோல்வியினால் பாதிக்கப்படாதவன் நாட்டுப்பற்று இல்லாதவனாக கருதப்படுகிறான்.

கிரிக்கெட் வீரர்களாகும் கனவில் காட்டிலும் மேட்டிலும் சாலைகளிலும் விளையாடி வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வஞ்சிக்கப்பட்டு, படிப்பு கெட்டு வாழ்க்கையை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் நிலை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கிரிக்கெட் மாயை, மற்றவர்களை ஏமாற்ற நடத்தப்படும் கண்ணாமூச்சி என எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இது ஒரு நவீன சூதாட்டம். பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வியாபாரச் சந்தை. அவர்களுக்கு மட்டுமே பயன்படும் விளம்பரக் கொண்டாட்டம். ஆரவாரத்துடனேயே அதனைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் போடப்படும் விளம்பர விஷ ஊசி என்பதெல்லாம் இன்னும் புரியாமல் இருப்பதுதான் கொடுமை.

கிரிக்கெட் வீரர்கள் குடிக்கிற குளிர்பானத்தை எல்லாம் ரசிகர்களும் பொதுமக்களும் ஏன் விழுந்து விழுந்து குடிக்கிறார்கள். அதில் பூச்சிக் கொல்லி இருந்தால் என்ன? பாம்பு விஷம் இருந்தால் என்ன? அதனைக் குடிப்பதைப் பெருமையாக நினைப்பதையும், கிரிக்கெட்தான் உயர்ந்த விளையாட்டு என நினைப்பதையும் எப்போது மாற்றிக் கொள்வார்கள்?

'விளையாட்டு என்பது உடலுக்கு உறுதி; உள்ளத்துக்கு பலம்' என்பதை மாற்றி, விளையாட வேண்டியவர்களை எல்லாம் விளையாடுபவர்களைப் பார்த்தால் போதும் என்று மாற்றியிருக்கிறார்களே, இதுவொன்று போதாதா கிரிக்கெட்டின் தரத்தை உணர்ந்து கொள்ள.

வெற்றி, தோல்விகளை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு விளையாடும் விளையாட்டு இதைத் தவிர உலகத்தில் வேறெதுவும் இல்லை. 'நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு' என்பது நாடகம், சினிமாக்களில் மட்டும்தான் நிகழும். அதை முதன்முறையாக விளையாட்டில் நுழைத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஐந்து நாட்கள் வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்களுக்குப் பொறுமையில்லை. எப்போதாவது விழும் விக்கெட்டுகளையும்; ஒன்றிரண்டு முறை மட்டுமே விழும் சிக்ஸர்களையும் பார்த்து ரசிகர்கள் சோர்ந்து போனார்கள். இதன் காரணமாக - கிரிக்கெட்டின் புகழ் சரிவதை மீட்க, உடனே அதை ஒருநாள் போட்டியாக மாற்றி புத்துயிருட்டினார்கள். ஒவ்வொரு நாட்டு அணிக்கும் தனித் தனி வண்ண ஆடைகள், நிமிடந்தோறும் பரபரப்பு என திட்டமிட்டு புகுத்தப்பட்டது. அதனாலலேயே கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து, ஒரு வியாபாரமாக பரிணாமம் அடைந்துள்ளது.

பணம் கொழிக்கும் எந்தத் துறையிலும் அரசியலும், ஊழலும், முறைகேடுகளும் நுழைவததைப் போல் கிரிக்கெட் வாரியமும் விளையாட்டுக்குத் தொடர்பே இல்லாத அரசியல்வாதிகளும் பெரு முதலாளிகளும் கூட்டணி அமைத்து வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.

ஒரு முக்கியப் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் போதும் நடுவண் அரசும், மாநில அரசுகளும் அந்த வீரர்களிடத்தில் பாசமழை பொழிந்து மக்களின் வரிப் பணித்தில் இருந்து லட்சக்கணக்கான பணத்தையும் சொகுசு பங்களாக்களையும், உயர்ந்த விருதுகளையும் பரிசளிக்கிறார்கள். இப்படியான புகழைக் கொண்டு கோடி கோடியாக பணத்தை அந்த வீரர்கள் சேர்த்துவிடுவதைக் காணும் ரசிகர்கள், தாங்களும் அவர்களைப் போல மாறும் கனவின் மாயவலையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

எப்போதுமே உடல் உழைப்பு செய்து வாசிக்கும் தவில், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை விட்டுவிட்டு வெறும் விரல்களால் இயக்கும் இசைக் கருவிகளை மட்டுமே இசைப்பவர்களும், ஒரு சில இசுலாமியர்களையும் தவிர்த்து வேறு எவரும் இந்த அணியில் எளிதில் இடம்பெற்றுவிட முடியாது. இது புரியாத இந்த இளைஞர் கூட்டம் இன்னும் ஏமாந்து கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒருநாள் போட்டியும் சலித்துப் போய், இப்போது 20:20 எனப்படும் 20 ஓவர் போட்டிகளைக் கொண்டு வந்துள்ளனர். இந்த 20 ஓவர் போட்டிகள் இன்னும் மிகப்பெரிய சூதாட்டத்தின் ஆடுகளமாக உருவெடுத்துள்ளது. ஊழல் புரையோடிப் போன இந்த கிரிக்கெட்டுக்கு இந்த அரசாங்கங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்தும் கொடுக்கின்றன?

40 ஆண்டுகளுக்கு முன் நாம் விளையாடிக்கொண்டு இருந்த விளையாட்டுக்கள் எல்லாம் விளையாட்டுக்கள் இலையா? இப்படியேத்தான் அடுத்தடுத்து தலைமுறைகளும் இதனைத் தொடரப்போகிறதா?

ஒரு குற்றத்தை தனியாகச் செய்தால் அது தவறு; அதையே கூட்டமாக முறைப்படுத்தி செய்தால் அது வியாபாரம். விளையாட்டு எனும் போர்வையில் வியாபாரம் நடத்தி, நம் மக்களையும் சோம்பேறிகளாக மாற்றும் இந்த 'சூதாட்ட' விளையாட்டு ஒரு 'மாயமான்' என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்?

- சொல்லத் தோணுது...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

விளையாட்டாக ஆங்கிலம் கற்க உதவும் இணையதளம்!

ங்கள் ஆங்கில அறிவை கொஞ்சம் சோதித்துப்பார்த்துக்கொள்ள நினைத்தாலும் சரி, அல்லது ஆங்கில் அறிவை மேலும் பட்டைத்தீட்டிக்கொள்ள விரும்பினாலும் சரி, நோவேர்ட் (knoword ) இணையதளம் ஏற்றதாக இருக்கும். இந்த இரண்டையுமே விளையாட்டாக செய்ய வைக்கிறது இந்த தளம். 

உண்மையில் இந்த இணையதளமே ஒரு விளையாட்டுதான். பிரவுசரில் ஆடக்கூடிய ஆங்கிலச் சொல் விளையாட்டு! ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளுக்கான பொருளை, எந்த அளவுக்கு ஒருவர் அறிந்திருக் கிறார் என சோதிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டை கொஞ்சம் சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கிறது நோவேர்ட் இணையதளம். முகப்பு பக்கத்தில் எப்படி விளையாட வேண்டும் எனும் வழிமுறை எளிதாக விளக்கப்பட்டுள்ளது. ஆட்டத்திற்கு தயார் என்றதும், ஒரு காலி கட்டம் திரையில் தோன்றும். 

அந்த கட்டத்தில் இடம்பெறும் வார்த்தைக்கான அகராதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு அந்த வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கான சிறு குறிப்பாக வார்த்தையின் முதல் எழுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அகராதி பொருளை கொண்டு வார்த்தையை கட்டத்தில் சரியாக டைப் செய்தால் அடுத்த வார்த்தைக்கு முன்னேறலாம். தவறாக டைப் செய்தாலும் தொடர்ந்து ஆடலாம். என்ன சரியாக சொன்னால் 10 புள்ளிகள். தவறு எனில் 10 புள்ளிகள் மைனஸ். அகராதி விளக்கத்தை கொண்டு வார்த்தையை கணிப்பதே சுவாரஸ்யமானதுதான் என்றால், ஒரு நிமிட அவகாசத்திற்குள் இதை செய்ய வேண்டும் என்பது இன்னும் சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் எளிய வார்த்தைகள் போல இருக்கும், ஆனால் போகப்போக வார்த்தைகள் கடினமாகி கொண்டே இருக்கும்.  முதலில் இதென்ன பெரிய விளையாட்டா என்று தோன்றினாலும், திரையில் தோன்றும் ஆங்கில வார்த்தைகளுக்கான விளக்கம், உங்களை அது என்ன சொல் என்று அல்லாட வைக்கும். 

ஆங்கில சொல் வங்கியை வளப்படுத்திக்கொள்வதற்காக அகராதியை வைத்துக்கொண்டு அர்த்தம் புரிந்து கொள்வதை விட, இப்படி சவாலான முறையில் வார்த்தைகளை கண்டுபிடிக்க முயல்வது ஆர்வத்தை அதிகமாக்கும். மாணவர்கள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை பலரும் முயன்று பார்க்கலாம். உங்கள் ஆங்கில திறமைக்கு ஏற்ப முதலிலேயே ஆட்டத்தின் கடினத்தன்மையை தேர்வு செய்து கொள்ளலாம்.

எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு)

டிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.  

அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் -  சாண்டோ சின்னப்ப தேவர். 

கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்த சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று. மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர். 

ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்த தேவர், வறுமையான குடும்ப சூழலால் கோவையில் தனியார் மில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளி மற்றும் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என அடுத்தடுத்து பல வேலைகளில் ஈடுபட்டும், போதிய வருமானமில்லாத நிலையில் சோடா கம்பெனி ஒன்றையும்  கொஞ்ச காலம் நடத்தினார். 

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடைய சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். சின்னப்பா தேவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த உடற்பயிற்சிக் கூடம்தான். அங்கு ஓய்வு நேரத்தில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் தேர்ந்தவரானார்.
நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. இதனால் திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். 

பிரபலமான ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தன. பிரபலமான கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
நடிப்புத்தொழில் கொஞ்சம் பிசிறடிக்கவும் நடிப்புத் தொழிலோடு,  சி.வி.ராமன் என்ற இயக்குநரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் குறைந்த காலம் பணியாற்றினார். அங்கு சினிமாத் தயாரிப்பு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து படத்தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டார். 

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதுபோல, தம்பி திருமுகம் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றியது, தனது சினிமா தயாரிப்பு அனுபவம், மனதில் படுவதை செயல்படுத்திக்காட்டும் இயல்பான துணிச்சல் இவை திரைத்துறையை விட்டு விலகியிருந்தாலும், தேவரை கோவையில் சும்மா இருக்கவிட வில்லை. சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார். 

முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான். 

திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 

மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங் கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார் தேவர். 

தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். விளைவு, பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்! 

தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை,  'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர். 

1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது. 

அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.
“சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.

தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள், படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாளில் முடியும் என்ற அறிவிப்போடு துவங்கும். இது அன்றைய திரையுலகில் ஆச்சரியமான விஷயம். 

காரணம், திரைத்துறை நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு துறை. ஆரவாரமாக துவங்கப்படும் எந்தப் படமும் வழக்கமான பல பிரச்னைகளை தாண்டி வெளியாகுமா? என்பதே நிச்சயமில்லாத விஷயம். அதில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டி வெளியீடு தேதி அறிவிப்பது என்பது, பெரிய நிறுவனங்களே சொல்லத் தயங்கு கிற விஷயம். தேவர் இந்த விஷயத்தில் பெரிய முதலாளிகளை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்தார். அறிவித்த தேதியில் படம் நிச்சயம் வெளியாகும்.

குறைந்த பட்ஜெட், குறுகிய கால தயாரிப்பு என்பதையும் தாண்டி தேவரிடம் திரையுலகம் வியந்த விஷயம் அவர் கலைஞர்களை மதித்த குணம். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்துவிடுவார்.  மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது.  படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவிக்க இதுவும் ஒரு காரணம். 

திரையுலகில் சிரமப்படும் கலைஞர்களுக்கு உதவி செய்தால், அவர்களிடம் அதை திரும்ப பெறமாட்டார். தன் கதையில் அவருக்கு ஒரு வேடம் அளித்து அதை சரிப்படுத்திக்கொள்வார். கடனை அடைத்தது போலவும் ஆகிவிட்டது, அவர்களுக்கு வேலை கொடுத்ததுபோலவும் ஆகிவிட்டது என திருப்தியடைவார். இப்படி ஒரு மனிதாபிமானியாகவும் விளங்கினார். 

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபின் 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் துவங்கி படங்கள் தயாரித்தார் தேவர். முருக பக்தரான தேவர், பக்தி கலந்த சமூகப்படங்களை தயாரித்து அவற்றை வெற்றிப்படமாக்கினார். திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார். 

முருக பக்தரான தேவர், தன் படங்களில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகன் கோவில் திருப்பணி களுக்கு வழங்கினார். காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கி விட்டுத்தான் வேலையை துவக்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார். திறமையானவர் களை எப்படியாவது தம் படங்களில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார். 

கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்கு களை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் அவற்றை நடத்துவார். படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறிவிட்டிருக் கும். 
'ஆட்டுக்கார அலமேலு' படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு  ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம். தம் வீட்டில் சில விலங்குகளையும் வளர்த்து வந்தார் அவர்.

நாள் முழுவதும் அவர் நாவில் 'முருகா..!' என்ற வார்த்தை எத்தனை ஆயிரம் முறை வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. பணியாளர்களையும், தெரிந்தவர்களையும் 'முருகா' என்றே அழைப்பார். வார்த்தைக்கு வார்த்தை 'முருகா... முருகா!' என உருகிப்போகும் பக்தனான அவர், அதே முருகனை வசைபாடும்போது அந்த வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க முடியாது. 

புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.


ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே மறுநாள் 7 -9-1978 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். 

தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது. தேவருக்கு மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடித்து பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர். 

சின்னப்பா தேவர் காலத்திற்குப்பின் சில ஆண்டுகள் வரை படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம்,  கால மாற்றத்தினால் திரையுலகில் தொடர்ந்து செயல்படுவதில் சுணங்கியது. தொடர் தோல்விகளால் சின்னப்பா தேவர் என்ற தனி மனிதரால் உருவான அந்நிறுவனம், படத்தொழிலிலிருந்து முற்றாக விலகி தம் திரைப்படங்களை மட்டும் ஆவணங்களாக்கி ஒதுங்கிக்கொண்டது. 

விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!   

- எஸ்.கிருபாகரன்

அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்.,இனி 'ஆன்லைனில்' மட்டுமே!


சென்னை:'அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான - ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு ஊழியர்களின், 2014 - 15க்கான, ஜி.பி.எப்., ஆண்டு அறிக்கை, தமிழக முதன்மை கணக்காயரின் நிர்வாக இணையதளத்தில், ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.கணக்கு இருப்பு போன்ற விவரங்களை, சந்தாதாரர்கள் இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆண்டு கணக்கு அறிக்கையை, பதிவிறக்கமும் செய்யலாம். அதற்கு, சந்தாதாரர்கள் தங்களின் மொபைல் எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஜி.பி.எப்., ஆண்டு அறிக்கை, இனிமேல் அளிக்கப்படாது. கணக்கில் வித்தியாசம்; சந்தா தொகை விடுபட்டது; கடன்தொகை உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலமே அறிய முடியும்.

இதற்கு தொடர்பு கொள்ள, 044 - 2431 4477, 2434 2812 என்ற தொலைபேசி எண்கள், www.agae.tn.nic.in என்ற இணையதள முகவரி, aggpt@tn.nic.in என்ற இ - மெயில் முகவரி போன்றவற்றில் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு துறையின் ஊதியம் வழங்கும் அலுவலர்கள் அனைவரும், அவர்களின் தொலைபேசி, மொபைல் எண், இ - மெயில் முகவரி, அஞ்சல் முகவரி ஆகியவற்றை, 'துணை மாநில கணக்காயர் (நிதி 1), தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு - பண வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 0018' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த முகவரியில், சந்தாதாரர்களும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ரயிலில் 'இ - டிக்கெட்' எடுக்கஇனி ஆதார் எண் அவசியம்


முராதாபாத்:'ரயில் பயணத்திற்கான இ - டிக்கெட்டு களை, ஆன் - லைனில் பதிவு செய்வதற்கு அடையாளமாக, ஆதார் அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லையெனில், டிக்கெட் பதிவு செய்ய முடியாது' என்று ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.ஆன் - லைன் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும்படி, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு, ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 'ஆதார் எண் இல்லை என்றால், ஆன் - லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது' என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.இ - டிக்கெட் பதிவு செய்ய விரும்பும் பயணி, ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில், தன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவை பரிசீலித்த பின், நுகர்வோருக்கு 'பாஸ்வேர்டு'வழங்கப்படும். இதை பயன்படுத்தி,
டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.

"மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்குத் தடையில்லை' By சென்னை First Published : 28 June 2015 03:06 AM IST

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைக்க எந்தத் தடையும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வரும் திங்கள்கிழமை தொடக்கிவைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை ஜூன 30-இல் நடைபெறவுள்ள நிலையில், புதிய திட்டத்தை முதல்வராகவும், தொகுதியின் வேட்பாளராகவும் உள்ள ஜெயலலிதா தொடங்கி வைக்கலாமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, சனிக்கிழமை விளக்கமளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, "மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரப்பட்டது. அந்தச் சேவையை தொடங்கி வைப்பதில் எந்தத் தடையும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதனிடையே, மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தமிழக அரசிடமிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sack government servants indulging in malpractice, says High Court

Directs a woman employee to pay Rs. 25,000 as costs to an orphanage

Government servants found to have indulged in grave malpractice during departmental examinations, conducted for promotion to higher posts, should be sacked from service, the Madras High Court Bench here has observed.

Disposing of two writ petitions filed by a woman employee whose annual increment was stopped for lifting key answers from the computer of her superior officer, Justice S. Vaidyanathan said: “The punishment imposed is very meagre. The petitioner should have been sent out of employment.”

The judge said that the petitioner was appointed temporarily as a Junior Assistant at the Sub-Treasury in Theni district in 2003. She cleared Group-IV services examination conducted by Tamil Nadu Public Service Commission in 2009 and got appointed as permanent Junior Assistant in 2010.

In December 2010, she sat for an Account Test for Subordinate Officers to get promoted to the post of Accountant and scored centum. This raised a suspicion leading to multiple enquiries which revealed that her answer script contained all key answers prepared by her superior officer.

Even as the enquiries were under way, she sat for the examination conducted in 2011 and cleared it. Subsequently, on November 29, 2012, the Finance Secretary issued a Government Order withholding her annual increment for one year for the malpractice committed in 2010.

The G.O. was followed by an order issued by the TNPSC on January 29, 2013 debarring her from appearing in any examinations conducted by it for five years with effect from August 24, 2012 when the commission took the decision.

The petitioner had challenged the G.O. and TNPSC’s order on the ground that they amounted to double jeopardy. However, the judge held that the punishment imposed by her department had nothing to do with an independent decision taken by the commission. Mr. Justice Vaidyanathan, nevertheless, ordered that the petitioner should be promoted as Accountant since she had cleared the examination in 2011 and the TNPSC had “wrongly worded” its order stating that she was being debarred only from August 24, 2012.

“The wrong wording of the respondent commission reminds me of a Latin maxim Qui non prohibet quod prohibere potest, assentire videtur meaning he who does not prohibit when he is able to prohibit is in fault. It should have been worded that the debarment starts with effect from 2010,” he said.

Holding that the petitioner could not be allowed to go scot-free due to the mistake committed by the commission, the judge directed her to pay Rs. 25,000 to Muslim Orphanage Committee in Tirunelveli and ordered that she should not be posted in sensitive posts as there was every possibility of her tampering with official records.

HC Bench issues notice to two deemed universities for not offering seats to candidates from HK

The Gulbarga Bench of the Karnataka High Court has issued notices to two deemed universities asking them why had have not offered seats to candidates from Hyderabad Karnataka.

Justice H. Billappa issued emergent notice to Nitte University and KLE University asking them to be present in court in five days from the date of receiving the notice. Hand summons were issued to Nitte University on June 25 and KLE on June 26, petitioner Rajrajeshwari Shankareppa Patil told The Hindu.She hails from Atiwal in Bidar taluk.

Ashok Kumar, advocate for the petitioner, said all institutions, be they government, semi-government, aided or private, including deemed universities and those run by NGOs and cooperatives, had to provide regional reservation under Article 371(J) of the Constitution.

Rajrajeshwari got 2277th rank in the test conducted by Nitte University and 2715th rank in KLE University’s examinations.

However, she found that the two deemed universities had not included HK quota in their seat matrix.

Her father Shankareppa Patil, a farmer, had brought this to the notice of Minister of State for Medical Education Sharanprakash Patil.

“Before going to the Minister, we requested the college authorities and they said they were waiting for clarity on the issue, as some people had approached the courts against HK quota, Mr. Shankareppa said. Our lawyer told them the quota was mandatory, but they did not heed to our demands. That is why we had to file a writ petition in the High Court,” he said. The order was issued on June 22.

Authorities of Nitte University and KLE University told to be present in the court in five days from the date of receiving
the notice

UGC panel probing plagiarism charge against Pondy VC

PUDUCHERRY: A three-member committee set up by the University Grants Commission is probing allegation of plagiarism against Pondicherry University vice-chancellor Chandra Krishnamurthy following a direction from the Union human resource ministry.

While former vice-chancellor of Central University of Punjab Jai Rup Singh is the chairman of the committee, former director of Indian Law Institute K N Chandersekharan Pillai and former secretary (home ministry) Nita Chowdhary are the members.

According to an RTI reply, the HRD ministry in its note (a copy of which is available with TOI) to the UGC said the Pondicherry University Teachers' Association (Puta) had charged that Chandra plagiarized her book 'Legal Education in India'. The ministry sent a copy of the book with results of a check by Turnitin (a software used for "originality check" of books, PhD and MPhil thesis).

The ministry also said there were charges that Chandra plagiarized her PhD thesis titled, 'Conceptual and interpretative analysis of educational rights in minority in the constitution', submitted to University of Mumbai University.

When contacted, Jai Rup Singh said the committee has begun the probe and has not submitted its final report. "There is a specific issue raised in the complaint. The committee will probe into the issue as per the terms and conditions set by the UGC," Singh said. Chandra was not available for comments despite repeated attempts.

Nursing scam: PoE suspended


KOCHI: Protector of Emigrants (PoE), Kochi, L Adolphus — the first accused in nursing recruitment scam involving four agencies — has been suspended from service. An official order to this effect has been issued by the protector general of emigrants, Delhi, said CBI sources.

Adolphus was arrested by the Central Bureau of Investigation for his role in the multi-crore recruitment scam on June 15. He is currently in judicial custody. "The official was disqualified as PoE after his arrest. He will be in custody for three more days," said CBI sources.

If a government servant is detained in custody for a period exceeding 48 hours, he is deemed to have been placed under suspension by an order of the appointing authority with effect from the date of detention.

After his arrest, a senior official with the Kochi office is handling the post. Officials at the PoE office said they have not received any order regarding the appointment of a new person to head the post. Adolphus' role in the scam was revealed after income tax department raided the office of Al Zarafa Travel and Manpower Consultants run by a Kottayam native M V Varghese alias Uthup.

Income tax officials had seized unaccounted money to the tune of Rs 4.88 core from Al Zarafa's office. The agency had collected Rs 20 lakh each from job aspirants though the permitted service charge was Rs19,000.

A CBI inquiry proved that the firm had illegally collected money from nurses with the knowledge of Adolphus. CBI later arraigned him as the first accused in connection with similar illegal recruitments conducted by three more agencies — Pan Asian Tours and Travels, Mathew International and J K International. Though CBI had found Adolphus guilty, he was allowed to continue in his post. Emigration initiated action to suspend the official only after his arrest.

Protector of Emigrants (PoE), Kochi, L Adolphus — the first accused in nursing recruitment scam involving four agencies — has been suspended from his post. An official order with this effect has been issued by the protector general of emigrants, Delhi, said CBI sources.

Adolphus was arrested by the Central Bureau of Investigation for his role in the multi-crore recruitment scam on June 15. He is currently in judicial custody.

"The official was disqualified to discharge his duties as POE with the arrest and further custody of three days. However, an official order from the emigration department has been issued in the wake of the arrest," said CBI sources.

If a government servant is detained in custody for a period exceeding 48 hours, he will be deemed to have been placed under suspension by an order of the appointing authority with effect from the date of detention.

After his arrest, a senior official with Kochi office is handling the post. Officials with the POE office said they have not received any order regarding the appointment of a new person to head the post.

Adolphus' role in the scam came out after income tax department raided the office of Al Zarafa Travel and Manpower Consultants run by a Kottayam native M V Varghese alias Uthup.

Income tax had seized unaccounted money to the tune of Rs 4.88 core from Al Zarafa's office. The agency had collected Rs 20 lakh each from job aspirants though the permitted service charge was Rs19,000. A CBI inquiry proved that the firm had illegally collected money from nurses with the knowledge of Adolphus. CBI later arraigned him as the first accused in connection with similar illegal recruitments conducted by three more agencies -- Pan Asian Tours and Travels, Mathew International and J K International.

Though CBI had found Adolphus guilty when Al Zarafa's recruitments were identified illegal, he was allowed to continue the post. Emigration initiated action to suspend the official only after his arrest.

NEWS TODAY 22.04.2024