Sunday, December 30, 2018



Rs 3 lakh fine on 12 officials for delaying RTI replies


TNN | Dec 25, 2018, 08.33 AM IST


 

BIJNOR: The state information commissioner on Monday imposed a cumulative fine of Rs 3 lakh on 12 officials from Bijnor, Moradabad and Amroha for causing delay in replying to Right to Information requests filed in their respective departments.

State information commissioner Hafiz Usman, who was in Bijnor to attend a hearing on complaints related to RTIs, imposed a fine on 12 officials for delaying replies, while letting off 10 others with a warning.

The officials who were asked to pay a fine of Rs 25,000 each are district magistrate of Sambhal, district education and training institutes of Kanth in Moradabad, registrar of Vilaspur in Rampur district, basic shiksha adhikaris of Sambhal and Rampur, district inspector of schools in Sambhal, block development officer of Haldaur, supply inspector of Kundarki in Moradabad, executive officer of Milak civic body in Rampur, child development project officer of Najibabad, accounts officer of basic education department in Sambhal and block education officer of Junaavai in Sambhal.

The commissioner heard a total of 55 cases pertaining to RTI requests.
Several law graduates ‘missing’ from MU’s convocation list


TNN | Dec 29, 2018, 02.17 AM IST


 

MUMBAI: Several law graduates from Mumbai University’s colleges have claimed their names are missing from the convocation list issued by the university last week. These students had failed some exams, but have cleared the papers following revaluation. 

The convocation ceremony for the graduates from the 2018 batch is scheduled on January 11, but these students were allegedly told their names will be updated in next year’s list, to be issued in May.

The university had sent out a list of all graduating students to their respective colleges this year to get errors, if any, rectified. This was the first time the university had taken such a step as, most times, errors get detected after the convocation certificates are printed and distributed. However, some of the law students were shocked to see their names missing.

One of the students from the Government Law College said he had cleared his ninth semester after seeking revaluation of a paper. “University officials said since I had cleared my papers later, I would get the convocation certificate in May. I have already started working and my office has asked me to submit my degree certificate soon,” said a student,

Sachin Pawar, president of Law Students’ Council, who has written to the vice-chancellor regarding the issue, said, “The university told the students that they have ATKTs (allowed to keep term) and, therefore, their names are not on the convocation list. Students who have already got their ‘sanads’ from the Bar Council of Maharashtra will have to waste a lot of time and energy to get their certificates. Degree certificate copies must be mandatorily attached to validate the sanad.”
Five Applications Pending With UGC For Deemed University Tag: HRD Minister

Five applications are pending with UGC for grant of deemed to be university status, the Rajya Sabha was told. 


Education | Press Trust of India | Updated: December 28, 2018 21:05 IST


At present, 125 educational institutions are functioning as deemed to be universities in the country


New Delhi:

Five applications are pending with the central government for grant of deemed to be university status, the Rajya Sabha was told. In a question on whether the government is considering to redraw norms for deemed to be universities, Minister of State for HRD Dr Satya Pal Singh said Thursday the University Grants Commission (UGC) has framed the draft UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2018 for replacing the existing regulations, which has not been notified so far.

There is no timeline prescribed by the UGC for notifying the draft regulations, which have been framed after consulting all the stakeholders, he added.

At present, 125 educational institutions are functioning as deemed to be universities in the country, the minister said, adding five applications received for grant of deemed to be varsity status are pending with the central government/UGC.
சத்துணவா (அ) வெத்துணவா?

Published : 29 Dec 2018 07:14 IST

கே.சந்துரு




கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)


மாணவர் சேர்க்கை குறைவினால் சில பள்ளிகளில் சத்துணவுக் கூடங்களை மூடிவிட்டு அந்தப் பள்ளி மாணவர்களுக்கான உணவை அருகிலுள்ள சத்துணவுக் கூடங்களில் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது கண்டனக் கணைகளை எழுப்பியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தை முதலில் எம்.ஜி.ஆர். தொடங்கியபோது எழுந்த விமர்சனங்கள் ஓரங்கட்டப்பட்டு இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்ற உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது. ஊட்டச்சத்தை அதிகரித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெருக்க வேண்டுமென்பது அரசின் கடமை என்று அரசமைப்பு சட்டம் கூறுகிறது (பிரிவு 47).

எனது தீர்ப்பின்படி சத்துணவுக் கூடங்களிலுள்ள வேலைகளுக்கு பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு உத்தரவிட்ட பின் சுமார் 25,000 பட்டியலினப் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்களாகவும், சமையலர்களாகவும், சமையல் உதவியாளர்களாகவும் வேலை பெற்றுள்ளனர். ஓரிரு இடங்களில் தலித் பணியாளர்களை வேலைக்கு வைப்பதை எதிர்த்து குரல்கள் எழும்பியிருந்தாலும், தமிழகத்தில் இத்திட்டம் வெற்றிகரமாகவே நடைபெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு திடீரென்று தங்களது சைவப் பிரச்சாரத்தினால் பள்ளி மாணவர்களுக்கு முட்டையை நிறுத்திவிட்டது. கர்நாடகாவில் அட்சய பாத்திர திட்டத்தின் மூலம் மதிய உணவு அளித்துவரும் தன்னார்வ நிறுவனமான ஹரே கிருஷ்ணா இயக்கம் சைவ உணவைத் தவிர வேறு உணவை அளிக்க மாட்டோம் என்று கூறுவதால் அங்குள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவில் போதுமான ஊட்டச்சத்து இருக்கிறதா என்ற கேள்வியை பல சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். எனவே அத்திட்டத்தை நிறுத்தும் முடிவில் கர்நாடக அரசு உள்ளது.

நலிவுற்ற பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சுவையுள்ள ஊட்டச்சத்து உணவை அளிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் புரிதல் ஒப்பந்தம் செய்து வாகனங்கள் மூலம் மாணவர் விடுதிகளுக்கு நேரடியாக உணவை அனுப்பி வைக்கிறது. இந்த திட்டம் மாணவர்களிடம் பரந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு தரத்துடன் கூடிய இலவச மதிய உணவு, முடிந்தால் காலை உணவு அளிப்பது ஒன்றே நமது முடிவாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போதாதென்றும் காலை உணவுக்கும் அரசுத் திட்டம் வகுக்கும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அது தவிர உயர்நிலைப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு அளிக்க வேண்டுமென்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதிய உணவுத் திட்டம் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் கிட்டும் நலன்கள் பற்றி பல அறிக்கைகள் வந்துவிட்டன. தமிழகத்தில் பள்ளி சேர்க்கை விகிதம் கேரள விகிதத்தைவிட தாண்டிச் செல்லும் நிலைமையை எட்டி விட்டதாக கூறுகின்றனர்.

ஒரு பக்கத்தில் தமிழகக் குழந்தைகளில் 42% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி படித்து வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுவதைப் பார்க்கும்போது அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை என்னவென்பதும், அதில் சத்துணவு எடுத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றியும் தகவல் இல்லை.

உதாரணமாக நான் தலைவராக இருக்கும் தென் சென்னை பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 300 மாணவர்களில் 60 மாணவர்களே இலவச மதிய உணவைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்புகளில் (9 முதல் 12 வரை) பயிலும் 350 மாணவர்களுக்கு அரசின் திட்டத்தில் பங்கில்லை. அதில் நலிவுற்ற நிலையிலிருந்து வரும் பல மாணவர்கள் மதிய உணவின்றி வாடுவதைக் கண்டு நண்பர்களின் உதவியுடன் ‘‘அன்னபூரணி திட்டத்தை” ஏற்படுத்தி சுமார் 100 மாணவர்களுக்கு இலவச மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

எமது பள்ளியில் அரசு திட்டத்தில் பயனாளிகளாக உள்ள பல மாணவர்களும் தினசரி கொடுக்கப்படும் உணவை தவிர்த்து அன்னபூரணி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உணவைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும் போது லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவின் தரம், மாணவர்களின் விருப்பு மற்றும் அரசு செலவழிக்கும் தொகை, பதுக்கப்படும் உணவுப் பொருட்கள், முட்டை வாங்குவதில் ஊழல், உணவுப் பொருள் வழங்குத் துறையின் தரக்கட்டுப்பாடற்ற கொள்முதல், தினசரி வீணாகும் சமைத்த உணவு இவற்றையெல்லாம் பற்றி ஒரு தெளிவான பார்வை அரசுக்கு ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

தற்போது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒரு சமையற்கூடம் ஏற்படுத்தி அதில் மூன்று பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சமையலுக்கான பாத்திரம், உணவுப் பொருட்கள் பராமரிப்பு மற்றும் தினசரி சமையல், அதற்கான காய்கறி கொள்முதல் இவற்றிற்கு அப்பெண்களே பொறுப்பு. எரிவாயு, முட்டை மற்றும் உணவு தயாரிக்கும் பொருட்கள் வழங்குவதற்கு அரசு பொறுப்பாகிறது. அரசு அளிக்கக்கூடிய உதவி, ஒரு மாணவனுக்கு மதிய உணவுக்காக ரூபாய் மூன்றுக்கு மேல் வழங்குவதில்லை. இந்த சொற்ப மானியத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்குவது இயலாது. ஒவ்வொரு கூடத்தில் பணியாற்றும் பெண்களின் சமையல் திறன் சோதிக்கப்படாத ஒன்று. உணவில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை சோதிப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் நியமிக்கப்படுவதில்லை. சமையலில் சுவை சேர்ப்பதைப் பற்றிக் கூறுவதற்கு சமையல் நிபுணர்களின் ஆலோசனை கிடையாது. தரமான காய்கறிகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்வதைப் பற்றி அரசுக்குப் பொறுப்பில்லை. இதைப் பற்றி இன்று சத்துணவுக் கூடங்கள் மூடப்படுவதை எதிர்த்து குரலெழுப்புவர்களும் யோசிப்பதில்லை.

மாணவர்களுக்கு தரமான உணவு, நேரந்தவறாமல் கிடைக்கச் செய்வதுடன், அதில் ஊட்டச்சத்தை பெருக்கி சரியான விகிதத்தில் சத்துணவு அளிப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை வைத்து சத்துணவுக் கூடங்களை உருவாக்காமல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கல்வி பயின்று வரும் மாணவர்களின் தேவைக்கேற்ப காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான அறிவியல்பூர்வமான திட்டமொன்றைத் தயாரித்து (2016) அன்றைய முதல்வரிடம் நான் ஒப்படைத்தேன். மதிய உணவுத் திட்டத்தில் தற்போதுள்ள குறைபாடுகளை களைவது பற்றியும், திட்டத்தை சிக்கனமாக்குவதுடன் மாணவர்களுக்கு தரமான உணவு (பள்ளிச் சேர்க்கை பற்றி தொடர்பில்லாமல்) அளிப்பது எப்படி என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

எனது ஆலோசனையின்படி ஊராட்சி ஒன்றியங்களிலும், நகராட்சிகளிலும், பெருநகராட்சிகளிலும் நவீன சமையல் சாதனங்கள் பொருத்திய மையப்படுத்தப்பட்ட சத்துணவுக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படும் சுமார் 400 கூடங்களில் ஒவ்வொரு சத்துணவுக் கூடத்திலும் 20 பணியாளர்கள் பணிபுரிவார்கள். அதில் குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், ஒரு சமையல் நிபுணர், உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் போதுமான சமையலர்களும், உதவியாளர்களும் பணிபுரிவார்கள்.

தற்போது அரிசியைப் பிரதானமாக்கிய உணவைத் தவிர்த்து இதர தானிய மற்றும் தினை வகைகளை உள்ளடக்கி விதவிதமான காய்கறிகளை சந்தையில் பெற்று சுவையான உணவைத் தயாரிக்க முடியும். தயாரித்த உணவை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று அனைத்து பள்ளிகளிலும் சூடாக விநியோகிக்க முடியும். ஒன்றியத்தில் சத்துணவுக் கூடங்கள் இருப்பதனால் எந்த கிராமமாக இருந்தாலும் அரை மணி நேரத்தில் வாகனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துச் செல்ல முடியும். காலை உணவு, மதிய உணவு இரண்டையும் விரைவாக தயார் செய்ய முடியும்.

காலையில் பள்ளி தொடங்கியவுடன் தலைமை ஆசிரியர் அலைபேசியில் மையத்தை தொடர்பு கொண்டு மாணவர் வருகை எண்ணிக்கையை தெரிவித்தால் அதன்படி உணவின் அளவு தயார் செய்யப்படும். தரமான உணவுப் பொருட்களை சந்தையில் நேரடியாகப் பெற்று அதை பராமரித்து சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் சந்தையில் நேரடியாக காய்கறிகளை பெற்று விதவிதமாக சமைக்க முடியும். தற்போது தமிழகம் முழுவதும் வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் கிட்டத்தட்ட 1,25,000 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். அதற்கு மாற்றாக அனுபவமுள்ள 8000 பணியாளர்கள், நிபுணர்களுடன் சேர்ந்து பணியாற்றினால் மாணவர்களுக்கு சூடான, சுவையான, சத்தான உணவு மாலை, மதியம் இரு வேளைகளிலும் அரசால் தற்போதுள்ள நிதிநிலை ஒதுக்கீட்டில் செய்து காட்ட முடியும். தற்போது ஒவ்வொரு சத்துணவுக் கூடத்திலும் பணியாற்றும் மூன்று பெண் ஊழியர்களை மற்ற உள்ளாட்சிகளில் மாற்று வேலைகளுக்கு அனுப்பிவிட்டால் அவர்களது வேலையும் பாதிக்காது. சமைத்த உணவும் வீணாகாது. எலி மற்றும் பூச்சித் தொல்லையால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது.

ஒன்றியம்தோறும் உருவாக்கப்படும் மையப்படுத்தப் பட்ட சத்துணவுக் கூடங்கள், அதனுடன் இணைக்கப்பட்ட வாகனங்கள், அதை ஓட்டிச் செல்லும் ஊழியர்கள் உள்ளடக் கிய ஏற்பாட்டை இயற்கைப் பேரிடரின் போதும் அந்தந்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டு தோறும் மாணவர்களுடைய ஊட்டச்சத்து முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதும், சத்துணவில் சுவை கூடிய தானிய வகை கலப்பை உறுதிப்படுத்துவதுடன் வளர்ச்சிப் பருவத்திலேயே சர்க்கரை வியாதி போன்றவற்றை தடுப்பதையும் உறுதிப்படுத்த முடியும்.

இப்படிச் செய்தால் சத்துணவுக் கூடங்களை மூடக்கூடாது என்ற கண்டனக் கணைகளிலிருந்து அரசு தப்புவதோடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. அரசு கேட்குமா?

கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு)

சென்னை உயர் நீதிமன்றம்

MGR University new VC dinamani



பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்துக்கு.. சிறப்புப் பேருந்துகளும், டிக்கெட் முன்பதிவும்

By DIN | Published on : 29th December 2018 05:56 PM 



சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் தமிழக மக்களுக்காக சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

என்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்? எத்தனை பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்பது குறித்த அனைத்து விவரங்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது, 

2019-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறை மூலம் செயல்படுத்த இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அன்று (27.12.2018) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2018 முதல் 13.01.2018 வரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் ( சானிடோரியம் ஆநுஞஷ்), அண்ணாநகர் மேற்கு மாநகரப் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்துநிலையம் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் 4826 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இவற்றின் மூலம் சென்னையிலிருந்து 4,92,220 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். இந்த ஆண்டும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் மாநகரப்போக்குவரத்துக் கழக கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்தும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2019 முதல் 14.01.2019 வரையில் மேற்கூறிய இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5163 பேருந்துகள் என நான்கு நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக சென்னையிலிருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும்.

பிற ஊர்களிலிருந்து மேற்படி நான்கு நாட்களில் ஒட்டு மொத்தமாக 10445 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17.01.2019 முதல் 20.01.2019 வரை மொத்தமாக 3776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7841 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில்-26 சிறப்பு முன்பதிவு மைய்யங்கள், ஆநுஞஷ் (தாம்பரம் சானிடோரியத்தில்) 2 சிறப்பு முன்பதிவு மைய்யங்கள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம், ஆக மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும், இந்த சிறப்பு முன்பதிவு மையங்கள் வரும் 09.01.2109 முதல் 14.01.2019 வரை செயல்பாட்டில் இருக்கும்.

வழித்தட மாற்றம்

1. 11/01/2019 முதல் 14/01/2019 வரை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2. இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கார் மற்றும் இதர வாகனங்கள்
11/01/2019 முதல் 14/01/2019 வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து , திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு வழியாக சென்றால். போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கனரக வாகனங்களின் இயக்கம் 11/01/2019 முதல் 14/01/2019 வரை மதியம் 2.00 முதல் அதிகாலை 2.00 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடங்களை தவிர்த்து வழித்தட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த நடவடிக்கைகளால் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

குறிப்பாக, தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திருவண்ணாமலை, திண்டிவனத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுவது பொது மக்களிடைய நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பொது மக்கள் மின்சார ரயிலில் பயணம் செய்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன், திருவண்ணாமலைக்கு சென்றிட பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதால், இது பயணம் செய்திட பொது மக்களுக்கு மிக எளிதாக உள்ளது.

மேலும் முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இனையதள வசதியான www.tnstc.in உடன்
www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன் பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இணைப்பு – 1
பொங்கல் 2019 பண்டிகையை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் விபரம் மற்றும் பேருந்து இயக்க விபரம்.


இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, கடலூர், காரைக்குடி, புதுக்கோட்டை , திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு , ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்) இயக்கப்படும்.

சென்னையில் இருந்து பேருந்து இயக்க விபரம்

16 மாடிக் கட்டடமாக மாறும் அபிராமி மெகா மால்! அடுக்குமாடிக் குடியிருப்பில் சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு முன்னுரிமை!

By எழில் | Published on : 29th December 2018 02:46 PM 



சென்னையைச் சேர்ந்த அபிராமி மெகா மால் வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டு, ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


1976 முதல் இயங்கி வரும் அபிராமி திரையரங்கம் முதலில் இரு திரையரங்குகள் கொண்ட வளாகமாக இருந்தது. அதன்பிறகு 1982-ல் அன்னை அபிராமி, சக்தி அபிராமி என கூடுதலாக இரு திரையரங்குகள் புதிதாகக் கட்டப்பட்டன. இதன்பிறகு 2002-ல் முற்றிலும் புதிய வடிவமாக மாறியது. அபுராமி மெகா மால் உருவானது. 7 ஸ்டார், ரோபோ பால அபிராமி, ஸ்ரீ அன்னை அபிராமி, ஸ்வர்ண சக்தி அபிராமி என்கிற பெயர்களுடன் நவீன வசதிகளுடன் திரையரங்குகள் மாற்றப்பட்டன.

இந்நிலையில் 1000 இருக்கைகள் கொண்ட திரையரங்குகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி அபிராமி மெகா மால் பிப்ரவரி 1 முதல் இயங்காது. பொங்கல் படங்களுக்குப் பிறகு புதிய வெளியீடுகள் இத்திரையரங்கில் திரையிடப்படாது. முழு வளாகமும் புனரமைப்பு செய்யப்பட்டு - ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது. முதல் 3 மாடிகள் (தரைத்தளம் + 2 மாடிகள்) திரையரங்குகள், ஷாப்பிங் மால் கொண்ட வணிக வளாகமும் அதற்கு மேல் 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பும் கட்டப்படவுள்ளன. இக்கட்டடத்தில் சைவ உணவு உண்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வருடங்களில் இந்தக் கட்டடம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : ரூ.4.60 லட்சம் பறிமுதல்

Added : டிச 29, 2018 23:14

சென்னை: தமிழகத்தில், வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத, 4.60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆங்கில புத்தாண்டை ஒட்டி, அரசு அலுவலகங்களில், வெகுமதி பெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, நேற்று முன்தினம், வெவ்வேறு இடங்களில், திடீர் சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத, 4.60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதன் விபரம்:● சென்னை, ராயபுரம், சார் - பதிவாளர் அலுவலகத்தில், மாலை, 6:00 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 74 ஆயிரத்து, 330 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● திருவண்ணாமலை மாவட்டம், சார் -பதிவாளர் - 2 அலுவலகத்தில், கணக்கில் காட்டப்படாத, 1.84 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் நீலகண்டன், சட்ட விரோதமாக, பார் நடத்துபவர்களிடம் இருந்து, பணம் வசூல் செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சோதனை நடத்தப்பட்டதில், அவரிடம், 1.18 லட்சம் ரூபாய், அவரது வாகன ஓட்டுனர் சுரேஷ் என்பவரிடம், 8,590 என, மொத்தம், 1.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● கிருஷ்ணகிரி, கட்டிநாயனப்பள்ளி கிராமத்தில், 25 வீட்டுமனை பிரிவிற்கு ஒப்புதல் பெறும் பொருட்டு, தர்மபுரி மண்டல நகர ஊரமைப்பு அலுவலகத்தில், கோவிந்தராஜ் என்பவர் விண்ணப்பித்தார். அதற்கு, தர்மபுரி மண்டல துணை இயக்குனர் வசந்தி, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்; மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவர், 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.அந்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, துணை இயக்குனர் வசந்தி, மேற்பார்வையாளர் மணிகண்டன், இடைத்தரகர்கள் அரிக்குமார் மற்றும் வடிவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில், இடைத்தரகர்களிடம் இருந்து, 75 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மாணவரை, 'ராகிங்' செய்த 5 பேர் கைது

Added : டிச 29, 2018 23:53

பெங்களூரு: பெங்களூரு மருத்துவ கல்லுாரியில், தலித் மாணவரை, 'ராகிங்' செய்த, ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.தலைநகர், பெங்களூரில் உள்ள, இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரியில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, ௧௯ வயது தலித் மாணவர், முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில், அவர் தங்கியுள்ளார்.அதே விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்கள், சமீபத்தில், தலித் மாணவரின் அறைக்குச் சென்று, அவரை, 'ராகிங்' செய்துள்ளனர்.தலித் மாணவரை தாக்கியும், ஜாதிப் பெயரை சொல்லியும் இழிவுபடுத்திய சீனியர் மாணவர்கள், அந்த மாணவரின் தலை முடியை வெட்டிஉள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின்படி, ஐந்து சீனியர் மாணவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு மற்றும் கர்நாடக மாநில கல்வி சட்டத்தில் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலை தரிசன டிக்கெட் ஜன., 4ல் ஏப்., முன்பதிவு

Added : டிச 30, 2018 00:12

ஈரோடு: திருமலை திருப்பதி சேவா டிக்கெட்களுக்கான, ஏப்ரல் மாத முன்பதிவு, ஜன., 4ல் துவங்குகிறது.திருமலை திருப்பதியில், தினமும் ஊஞ்சல் சேவா, கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சேவா நடக்கிறது. இதில் சுவாமி தரிசினம் செய்ய, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும், 2019 ஏப்ரல் மாதத்துக்கான சேவா டிக்கெட் முன்பதிவு, வரும், 4ம் தேதி செய்யப்படுகிறது.தேர்வு நேரம் என்பதால், ஏப்ரல் மாதம் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். எனவே இந்த வாய்ப்பை, பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷையன்

Added : டிச 29, 2018 23:36



சென்னை: தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக, டாக்டர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலை துணை வேந்தராக இருந்த கீதாலட்சுமி, இரு தினங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். துணை வேந்தர் பதவிக்கு, 48 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், டாக்டர்சுதா சேஷையனை, துணை வேந்தராக தேர்வு செய்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவர், இப்பதவியில், மூன்று ஆண்டுகள் இருப்பார்.சுதா சேஷையன், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில், முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உடையவர். சென்னை மருத்துவ கல்லுாரியில், உடற்கூறு இயல் துறை இயக்குனராகவும், பேராசிரியையாகவும் பணியாற்றி உள்ளார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். நிர்வாகத் துறையிலும், அனுபவம் மிகுந்தவர். மருத்துவம், ஆன்மிகம் தொடர்பாக, பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார்; சிறந்த பேச்சாளர்.முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, தொகுத்து வழங்குவதில், சிறப்பு பெற்றவர். லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட, ஆன்மிக இசையிலும் சிறந்து விளங்குபவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும், அவரது உடலுக்கு, 'எம்பாமிங்' செய்தவர்.

ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது நவபிருந்தாவன யாத்திரை ரயில்

Added : டிச 29, 2018 23:17

சென்னை: மார்கழியில், நவபிருந்தாவன கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., நவபிருந்தாவன யாத்திரை சிறப்பு ரயிலை இயக்குகிறது.இந்த சிறப்பு ரயில், மதுரையில் இருந்து, வரும், 10ல் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும். இப்பயணத்தில், கர்நாடகா மாநிலம், நவபிருந்தாவனத்தில், ராகவேந்திரரின் குருநாதரான சுதீந்திர தீர்த்தர் மற்றும் எட்டு குருக்களின் ஜீவ சமாதிகளையும் தரிசிக்கலாம். ஆந்திராவில், மந்த்ராலயம் மற்றும் அகோபிலம் நரசிம்மர் கோவில்களுக்கும் சென்று வரலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய, ஒருவருக்கு, 6,160 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., உதவி மையத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.irctctourism.com என்ற, இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

அதிக கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து : கற்பித்தல் தரம் உயர்த்த யு.ஜி.சி., திட்டம்

Added : டிச 29, 2018 23:58

புதுடில்லி: உயர் கல்வியில் கற்பித்தல் தரத்தை உயர்த்தும் வகையிலும், மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும், கல்லுா ரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதை அதிகரிக்க, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு திட்டமிட்டுள்ளது.உயர் கல்வி வழங்கும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளை கண்காணிக்கும் அமைப்பான, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, அவ்வப்போது புதிய கொள்கைகளை அறிவித்து வருகிறது.உயர் கல்வியில் கற்பித்தல் தரத்தை உயர்த்தும் வகையிலும், மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும், கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிப்பதை அதிகரிக்க, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.தன்னாட்சி அந்தஸ்து பெறும் கல்லுாரிகள், ஏற்கனவே உள்ள பாடத் திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்யலாம். மேலும், மாணவர்களின் திறனை சோதிக்கும் திட்டங்களையும் வகுப்பதுடன், தேர்வுகளையும் தானாகவே நடத்திக் கொள்ளலாம்.அதேசமயம், அவை இடம் பெற்ற பல்கலைகளே, பட்டச் சான்றிதழ்களை அளிக்கும். அதில், கல்லுாரியின் பெயரும் இடம்பெறும்.தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கு, கல்லுாரிகளில் குறிப்பிட்ட வசதிகள் இருக்க வேண்டும்; திறமையுள்ள ஆசிரியர்களும் இருக்க வேண்டும். தன்னாட்சி பெறுவதற்கான கொள்கையில், யு.ஜி.சி., இந்தாண்டு துவக்கத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளது.இதன் மூலம், அதிக அளவிலான, கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில், இந்த நடைமுறையை, 'ஆன்லைன்' மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மட்டும், 37 கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளின் எண்ணிக்கை, 106 பல்கலைகளில், 672 கல்லுாரிகளாக உயர்ந்துள்ளது.கடந்த, 2007 - 08 முதல் 2017 - 18 கல்வியாண்டு வரை, தரம் உயர்த்தப்பட்ட கல்லுாரிகளின் எண்ணிக்கை, 55 பல்கலைகளில், 281 கல்லூரிகள் என்பதில் இருந்து, 105 பல்கலைகளில், 635 கல்லுாரிகள் ஆக அதிகரித்துள்ளன.தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளில், தென் மாநிலங்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. மொத்தம், 183 தன்னாட்சி கல்லுாரிகளுடன், இந்தப் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திராவில், 97 கல்லுாரிகளும், கர்நாடகாவில், 70 கல்லுாரிகளும், தெலுங்கானாவில், 59 கல்லுாரிகளும் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளன.அதேசமயம், மிகப் பெரிய மாநிலங்களான, உ.பி.,யில், 11 மற்றும் ராஜஸ்தானில், ஐந்து கல்லுாரிகள் மட்டுமே இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்த மாநிலங்களில் இருந்து அதிக கல்லுாரிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும் என, யு.ஜி.சி., எதிர்பார்க்கிறது.
நெருக்கடி!
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு...
ராஜினாமா செய்ய உத்தரவு?
மறுத்தால் பதவி நீக்க முடிவு

dinamalar 30.12.2018
தமிழக அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரரை கழற்றி விடும்படி , முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.



விஜயபாஸ்கர் ராஜி னாமா செய்யாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து, முதல்வர் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அமைச்சர்களில், அதிக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவராக, விஜயபாஸ்கர் உள்ளார். எதிர்க்கட்சிகளை, சட்டசபையில் கடுமையாக விமர்சனம் செய்ததற்காக, அவருக்குஅமைச்சர் பதவியை, ஜெயலலிதா வழங்கினார்.அதன்பின், சசிகலா தயவில், அசைக்க முடியாதவராக மாறி விட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா முதல்வர் பதவி ஏற்பதற்காக, அனைத்து பணிகளையும் செய்தார்.எம்.எல்.ஏ., க்களை, கூவத்துாரில் தங்க வைத்த போது, அவர்களுக் கான செலவுகளை யும் ஏற்றார். பன்னீர்செல்வத்தை, கடுமையாக எதிர்த்தார். சென்னை, ஆர்.கே. நகரில், தினகரன் போட்டியிட்ட போது, அவருக்காக, பணம் பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஏற்றார். அவர்

வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, பணம் பட்டுவாடா ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

விஜயபாஸ்கரை ராஜினாமா செய்யும்படி, எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின;ஆனால், அவர் கண்டு கொள்ளவே இல்லை.அவர் வீட்டில் நடந்த சோதனை காரணமாக தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், அவர் பெயர் சேர்க்கப் படாதது குறித்து, நீதிமன்றமே ஆச்சரியப் பட்டது. அதன்பின், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள், தடையின்றி விற்பனை செய்ய, லஞ்சம்பெற்றதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும், எதிர்க்கட்சிகள், அவரை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தின; அவர் மசியவில்லை.

குட்கா வழக்கு, நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அமைச்சரின் உதவியாளர்களிடம்,சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டது. அதன்பின், அமைச்சரை நேரில் அழைத்தும், சி.பி.ஐ., தரப்பில் விசாரிக்கப்பட்டது. அதன் பிறகும், தார்மீக பொறுப் பேற்று, பதவி விலக அவர்முன்வரவில்லை. முதல்வரே, அவரை ராஜினாமா செய்யும்படி கூறிய போது,'என்னை ராஜினாமா செய்ய சொன்னால், உங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி விடுவேன்' என, மிரட்டியதாக கூறப்படுகிறது.

பல்வேறு நெருக்கடி ஏற்பட்டபோதும், அவர் பதவி   விலக முன்வரவில்லை.'இவரால், ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்ப டுகிறது; அவரை நீக்குங்கள்' என, மற்ற அமைச்சர்கள் வலியுறுத்தியும், முடிவெடுக்க முடியாமல், முதல்வர் திணறி வந்தார்.

இந்நிலையில், கூட்டணி குறித்து பேசுவ தற்காக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், இரு தினங்களுக்கு முன், டில்லி சென்றனர். மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினர்.அப்போதும், விஜயபாஸ்கர் விவகாரம் தான் கிளப்பப்பட்டு உள்ளது. 'விஜயபாஸ்கரை நீக்குங்கள். அப்போது தான், அரசுக்கு ஓரள வாவது நல்ல பெயர் கிடைக்கும்' என, மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.அதை, முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜய பாஸ் கருக்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது. அவராக பதவியை ராஜினாமா செய்யா விட்டால், அவரை,'கழற்றி'விடுவது குறித்து, முதல்வர் ஆலோசித்து வருவதாக,தகவல் வெளியாகி உள்ளது.
Sudha Seshayyan is VC of Tamil Nadu MGR medical varsity

DECCAN CHRONICLE. | SHWETA TRIPATHI

PublishedDec 30, 2018, 1:49 am IST

She has been appointed for a period of three years beginning from the date of her assumption of office.



Governor Banwarilal Purohit appoints Dr Sudha Seshayyan as VC of the Tamil Nadu Dr MGR Medical University on Saturday at Raj Bhavan. R. Rajagopal, additional chief secretary to Governor, also present. (Photo: DC)

Chennai: Governor of Tamil Nadu and chancellor of the Tamil Nadu MGR Medical University, Banwarilal Purohit appointed Dr Sudha Seshayyan as the vice-chancellor of the Tamil Nadu MGR Medical University, Chennai on Saturday. She has been appointed for a period of three years beginning from the date of her assumption of office.

An excellent Tamil orator and currently the vice-principal and director and professor of Institute of Anatomy at Madras Medical College, Dr Sudha has an outstanding academic record with a teaching experience of more than 30 years.

After pursuing undergraduation in public administration from Osmania University and hospital administration from Annamalai University, Dr Sudha turned a civil surgeon at 30.

Dr Sudha is currently a member of Medical Council of India, member of board of medical education at Annamalai University and also a member of board of postgraduate studies at Chettinad University.

She was the co-ordinator for the Tamil Nadu Dr. MGR Medical University and has also been the registrar of the university from January 2009 to November 2011 and was presented with the best administrator award by the university.

Dr Sudha Seshayyan also served as the director and professor, Institute of Anatomy, Madurai Medical College, head of Department of Anatomy at Stanley Medical College and inspector to medical Institutions on behalf of Medical Council of India and various other universities.

Her academic excellence got her recognized as the international advisory member of 'Gray's Anatomy' and 'Atlas of Clinical Gross Anatomy'. She edited the Text Book of Anatomy, 'Brittanica Thagaval Kalanjiyam' (Tamil version of Brittanica Encyclopaedia) and a medical encyclopaedia titled "Maruthuva Kalanjiyam". She has also contributed endowment lectures and orations for various international conferences. Her write-ups on various spiritually oriented topics have been published in various Tamil magazines.

Dr Sudha has many awards to her name including the best performance award of appreciation by state health department, Kalaimamani award by the government of Tamil Nadu, Pravachana Chooodamani by Krishna Gana Sabha, Asthika Pravachana Rathna by Asthika Samaj and Sollin Selvar award by Government of Tamil Nadu to name a few.
Corporation office or corruption office, asks HC

CHENNAI, DECEMBER 30, 2018 00:00 IST



Slams officials for encroachments, illegal construction

“Encroachments and illegal constructions are spreading like cancer and no doubt, they cannot take place without the collusion of Greater Chennai Corporation officials and staff,” the Madras High Court said and doubted whether it was a “corporation office or a corruption office.”

A Division Bench of Justices S. Vaidyanathan and Krishnan Ramasamy made the observations when an old case in which they had ordered demolition of the unauthorised portion of a residential building at Mannady, was listed again for reporting compliance.

‘Expedite hearing’

The Bench expressed dissatisfaction over official action despite several orders that were passed by the court to immediately disconnect electricity and water connections to unauthorised portions of the buildings pending inquiry and to demolish the illegal constructions after completing the inquiry.

Since most of the times the action was delayed by citing statutory appeals pending before the Housing and Urban Development secretary under Section 80 of the Tamil Nadu Town and Country Planning Act of 1971, the judges directed the Housing secretary to expedite the hearing in all those appeals.

Suggesting that the government could appoint a team of honest officials to hear those appeals, the judges said that such officials should not be given any other administrative work and details of their properties should be uploaded on the government website and updated periodically.

On appeals related to buildings under the Chennai Metropolitan Development Authority (CMDA), the Housing secretary should hear the appeals personally by devoting afternoon sessions on two days a week, including every Saturday, the Division Bench said.

These meetings should be organised in such a way that no litigant suffered on account of his absence. If he is absent, the cost of travel incurred by the litigant should be borne by the concerned authority, payable from his personal funds, the Bench ordered.

Suppressing facts

When Additional Advocate General P.H. Arvindh Pandian brought it to the notice of the Bench that some violators obtain stay orders from other judges of the High Court by suppressing factual information, the Division Bench said: “Courts shall not come to the rescue of violators.”

The Bench also reiterated its earlier direction to dismiss from service the corporation staff who failed to inspect unauthorised constructions in the city.

It said that those officials should also be denied their terminal benefits by recording their dereliction of duty in service registers.
New V-C for medical university

CHENNAI, DECEMBER 30, 2018 00:00 IST



Sudha Seshayyan

Governor Banwarilal Purohit on Saturday appointed Sudha Seshayyan as the Vice-Chancellor of the Tamil Nadu Dr. M.G.R. Medical University for a period of three years.

Dr. Seshayyan, presently the Director, Institute of Anatomy, Madras Medical College, takes over from S. Geethalakshmi.

A press release from the Raj Bhavan said she has over 30 years of teaching experience. Having functioned as a Registrar, Dr. Seshayyan is familiar with university administration. She has also served as vice-principal of Madras Medical College.

Dr. Seshayyan received the best administrator award from the Tamil Nadu Dr. M.G.R. Medical University and has served on the editorial review board for Gray’s Anatomy , the textbook, and continues to be a member of the International Advisory Board for reviewing the publication.
Dr Sudha Seshayyan new VC of MGR varsity

TIMES NEWS NETWORK

Chennai:30.12.2018

Dr Sudha Seshayyan has been appointed vicechancellor of the Tamil Nadu Dr MGR Medical University by Governor Banwarilal Purohit who is chancellor of the university. She is expected to join duty on Monday and will serve for three years.

Dr Seshayyan, who is now director of the institute of anatomy and vice-principal of Madras Medical College, will succeed Dr S Geethalakshmi as the tenth VC and the third woman holding the post since its inception. “I am honoured to have been selected. It is a huge responsibility and I will work hard to ensure that I help the university grow from strength to strength,” she said.

A topper in her post-graduate medical education, Dr Seshayyan was among 41 senior aspirants. She was short listed by the search committee as one among the three candidates recommended for the post. On Saturday, a day after a 30-minute interview by Purohit, Dr Seshayyan was appointed . She has served the university as its registrar, has rich administrative experience and an outstanding background, according to a release from the Raj Bhavan.

She has served on the editorial review board of Gray’s Anatomy – considered the bible for anatomy in medical schools – and continues to serve the international advisory board for reviewing the publication.In December 2016, she was called by the government to embalm former chief minister J Jayalalaithaa’s body.

Dr Seshayyan will be the third woman to hold the position; She has served the university as its registrar, has rich administrative experience and an outstanding background

Saturday, December 29, 2018

Seeking Information Under RTI Act Can’t Put Question Mark On One’s Integrity, Says P&H HC [Read Order] | Live Law

Seeking Information Under RTI Act Can’t Put Question Mark On One’s Integrity, Says P&H HC [Read Order] | Live Law: The administration of Union Territory of Chandigarh has come in for severe criticism from the Punjab and Haryana High Court for being vindictive towards one of its employee of the Department of Food & Supplies and Consumer Affairs who had sought information from under the RTI Act as it said that the staffer “has absolute …


400 பயணிகளுடன் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் திடீர் தரையிறக்கம்!
உலகின் மிகப்பெரிய விமானங்களின் ஒன்றான A-360 ரக விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக  தரையிறங்கியுள்ளது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானம் , டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துள்ள நிலையில் , விமான பணிப்பெண்ணொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10.25 மணியளவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் 400 க்கும் அதிகமான பயணிகள் மற்றும் 11 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
சுகயீனமுற்ற பணியாளர் ஒருவர் நீர்க்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் , பிற்பகல் 12.15 மணியளவில் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதன்போது , விமானத்திற்கு 65 ஆயிரம் லீட்டர் எரிபொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிரப்பப்பட்டுள்ள நிலையில் , அதன் பெறுமதி 72 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.


Jayalalithaa Death

Apollo says Jaya death probe unable to understand medical terms, calls for experts

 
A petition by Apollo Hospitals to the Arumugasamy Commission says that the deposition documents of over 50 doctors are riddled with errors due to the inability of the probe panel to comprehend medical terminology. 


TNM Staff 

 
Friday, December 28, 2018 - 18:43
 
File image/ PTI

Apollo Hospitals, where former Chief Minister J Jayalalithaa was admitted for medical treatment over two months until her death in December 2016, has critiqued the one-man probe panel constituted to enquire into her death, calling for the setting up a medical board.

In a petition submitted before the Arumugasamy Commission of Inquiry which is investigating the hospitalisation and subsequent death of Jayalalithaa, Apollo Hospitals has stated that the inability of the commission to comprehend medical terminology is proving fatal to “its understanding of the facts and circumstances surrounding the late Chief Minister's treatment.”

“It is submitted that doctors from [Apollo] hospital who have deposed before the Hon'ble Commission have found it a challenge to explain the complexity of medical scientific facts, protocol, procedures to the Hon'ble Commission, which does not have a medical professional assisting it during the proceedings. It is clear from the depositions recorded that there are several serious errors that have crept in because of the inability of the typist himself to comprehend and type the correct medical terminology. This is in spite of doctors trying to explain and spell out terms over and over again," states the petition.

Providing examples of these errors, the petition states that words such as 'intubation' and 'enterococcus' bacteria have been recorded as 'incubation' and 'endocarditis'.

The Hospital has asked the commission to set up a medical board “to examine facts and circumstances of the late Chief Minister's medical condition during her hospitalisation in [Apollo Hospital] and the appropriateness of the treatment that was provided to her by [Apollo Hospital].”

The one-man probe panel headed by (Retired) Justice Arumugasamy was set up by the Tamil Nadu government in September last year. It has received flak for the slow pace of its investigation, having sought three extensions already to submit its report.

Interestingly, the Apollo Hospital petition also points out that while the Arumugasamy Commission did try to include medical experts, little was done about it.

“In May 2018, the Hon'ble Commission Justice Arumughaswamy had sought the State Government's approval to the form a medical expert team to examine the treatment and medical documents relating to the late Chief Minister's treatment. The Hon'ble Commission intended to pick 4 medical experts of its own choice and to simplify the details of the medical treatment provided to the late Chief Minister. It is submitted that accordingly the State Government granted permission to the [Commission] to appoint doctors as requested on 01.05.2018,” the petition points out.

Despite receiving the go-ahead from the Tamil Nadu government in May 2018 to help understand close to 10,000 pages of medical documents provided by Apollo Hospital, the petition states that there are no doctors or medical professional till date to assist during medical proceedings.

The Hospital has also said that an analysis of the medical documents must be done by medical professionals with a "global perspective on treatment options, protocols, evolving medical care, state of the art technology, valuable experience and expertise."

Even as the probe panel’s report is now due on February 24, 2019, Apollo Hospital requested that the medical board consist of critical care specialists, cardiothoracic surgeon with experience in ECMOPR, interventionist specializing in ARDS, among other specialists.
ரூ.399 ரீசார்ஜுக்கு 100% கேஷ்பேக்: புத்தாண்டை முன்னிட்டு ஜியோ அதிரடி

Published : 28 Dec 2018 17:50 IST




புத்தாண்டு சலுகையாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 ரீசார்ஜுக்கு 100 சதவீத கேஷ்பேக்கை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும்.

இந்த புதிய ஆஃபர் டிசம்பர் 28, 2018-ல் இருந்து ஜனவரி 31, 2019 வரை அமலில் இருக்கும். இந்த கேஷ்பேக், ஜியோவின் ஃபேஷன் இணையதளமான 'ஏஜியோ' கூப்பனாகக் கிடைக்கும். இந்தக் கூப்பனை ஏஜியோ ஆஃபர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தக் கூப்பன், 'மைஜியோ' செயலியின் 'மைகூப்பன்ஸ்' பகுதியில் இருக்கும். இதைக் கொண்டு 'ஏஜியோ' செயலி அல்லது இணையதளத்தில் குறைந்தபட்சம் ரூ.1000க்குப் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.



ஏஜியோ கூப்பனை மார்ச் 15-ம் தேதிக்கு முன்னாள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாகவோ ஜியோ விற்பனையாளர்கள் மூலமாகவோ இந்த புத்தாண்டு ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜியோ நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 21.50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஜியோ அறிவித்துள்ள ரூ.399 கேஷ்பேக், தொலைத்தொடர்பு நிறுவன வரலாற்றில் அதிகபட்சத் தொகையாகக் கருதப்படுகிறது.

கடும் குளிரின் தாக்கத்திலும் 5 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Published : 29 Dec 2018 07:26 IST

சென்னை



ஊதிய முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் 5-வது நாளாக நேற்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள். படங்கள்: ம.பிரபு

கடும் குளிரின் தாக்கத்திலும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 5-வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 200-க்கும் அதிகமான வர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங் களுடன் இரவு, பகலாக தண்ணீர் மட்டும் குடித்து போராடி வருகின் றனர்.

இதுவரை உடல்நலக் குறை வால் 200-க்கும் அதிகமான ஆசிரியர் கள் ராயப்பேட்டை மருத்துவமனை யில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக் கான ஆசிரியர்கள் உடல் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.



சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குளிரைப் பொருட்படுத்தாமல் கைக்குழந்தையுடன் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியை.

இரவு நேரங்களில் கொசுத் தொல்லையுடன், குளிரும் வாட்டும் நிலையில் வெறும் தரையில் படுத்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத் துக்கு திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், ஒரு நபர் குழு அறிக்கை தரும் வரை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என பள்ளிக்கல்வித் துறை உறுதியாக தெரிவித்துவிட்டது.

போராட்டம் தீவிரமானதால் சம்பவ இடத்தில் போலீஸாரும், மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனர். உடல் நலம் பாதிக்கப் பட்டு மயக்கமடைபவர்களுக்கு அங்குள்ள முகாமில் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் களுக்கு தேவையான கழிவறை வசதிகள் செய்து தரப்பட வில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


மருத்துவமனை செல்ல மறுத்த ஆசிரியைக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் பாட்டிலை பிடித்திருக்கும் கணவர். அருகில் மகள்.

இதற்கிடையே துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தையே அரசு தங்களுக்கு வழங்குவதை சித்தரிக்கும் விதமாக இடைநிலை ஆசிரியர்கள் நேற்று டிபிஐ வளாகத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும்போது, ‘‘ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யதாவ் கூறியுள்ளார். ஒருநபர் குழு அறிக்கை பெறாமல் ஊராட்சி செயலர்களுக்கு மட்டும் 3 மடங்கு ஊதியத்தை அரசு உயர்த்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். பல அரசுத் துறைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பது உண்மைதான்.



தொடர் போராட்டத்தால் மயக்கம் அடைந்த ஆசிரியைக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்யும் சூழலில் பேப்பரை கொண்டு விசிறி விடும் பெண் காவலர்.

ஆனால், எந்த துறையிலும் ஒருநாள் இடைவெளியில் பணியில் சேர்ந்ததற்கு ரூ.15 ஆயிரம் அளவுக்கு சம்பள வேறுபாடு இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும்’’ என்றார்.

தேமுதிக ஆதரவு

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 2-வது மகன் விஜய பிரபாகரன் ஆசிரியர் களை நேற்று நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவளித் தார். தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘முதல்வர் பழனிசாமி இந்த வி‌ஷயத் தில் தலையிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெறுவார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவரது உடல்நிலை சரியாகி விடும்’’என்றார்.
சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை: சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By DIN | Published on : 29th December 2018 03:28 AM |




சிறார்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
18 வயதுக்குக் குறைவான சிறுமிகள், சிறார்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக பல்வேறு பிரிவுகளில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
அந்தத் திருத்தங்களை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சிறார்கள் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். போக்சோ சட்டத்தின் 4, 5, 6, 9, 14, 15, 42 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை உள்பட கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு போக்சோ சட்டத்தின் பிரிவு 4, 5, 6 ஆகியவற்றில் கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
பாலின நடுநிலையுடன் 18 வயதுக்குக் கீழுள்ளவர்களை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது.

இயற்கைப் பேரிடர்களின்போது சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதிலிருந்து தடுப்பதற்கும், சிறுமிகள் விரைவில் பூப்பெய்துவதற்காக மருந்துகளை கொடுப்பதைத் தடுப்பதற்கும் போக்சோ சட்டத்தின் 9ஆவது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இச்சட்டத்தின் 14, 15 ஆகிய பிரிவுகள், சிறார்கள் ஆபாசப் படங்களைத் தடுப்பதற்கு வகை செய்கிறது.

சிறார்களின் ஆபாசப் படங்களை அழிக்காமல் இருந்தால் சிறை தண்டனையுடன், அதிக அபராதமும் அல்லது இரண்டில் ஒன்றோ விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை: புதிய திட்டத்தில் ஹோட்டல் நிர்வாகங்கள்

By DIN | Published on : 28th December 2018 02:49 PM |



பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட பிளாஸ்டிக் பொருட்களை நிச்சயம் மனிதர்களால் அவ்வளவு எளிதில் விட்டொழிக்க முடியாது. படிப்படியாகவே அதன் நாசவலையில் இருந்து விடுபட வேண்டும்.


ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப் பை, மண் குவளைகள் போன்றவற்றை கொண்டு வந்தாலும், அவை சில இடங்களில் அதிக செலவையும், கிடைப்பதில் சிரமத்தையும் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, பிளாஸ்டிக் மெழுகு சேர்க்கப்பட்ட காகித டம்ளர்களுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அதே போல, தங்களது உணவுப் பொருட்களையும் கட்டிக் கொடுக்கும் பிளாஸ்டிக் கவர்களுக்கும் மாற்றுப் பொருட்களை ஹோட்டல் நிர்வாகங்கள் நிச்சயம் இதற்குள் கண்டுபிடித்திருப்பார்கள் என்றே நினைத்திருப்போம்.

ஆனால், அவர்கள் சொல்வது என்னவென்றால், காகித கப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டது போல எங்கள் உணவுப் பொருட்களை குறிப்பாக திரவ உணவுப் பொருட்களைக் கட்டிக் கொடுக்கவும் விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

மேலும், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பாக கோரிக்கை வைக்கவும், 6 மாத கால அவகாசம் அளித்தால் மாற்று வழியை கண்டுபிடித்து விடுவதாகவும் உறுதி அளிக்கிறார்கள்.

இதுவரை எங்களுக்கு குறைந்த விலையில் மாற்று வழி கிடைக்கப்பெறவில்லை. வெறும் 6 மாத காலத்தில் பல்வேறு பயன்பாடுகளில் இருக்கும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்து விட முடியாது. சற்று கால அவகாசம் வேண்டும்என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

இனிமை தருமா தனிமை?

By கிருங்கை சேதுபதி | Published on : 29th December 2018 01:19 AM


முடியுமா முடியாதா என்பது ஒருபுறம் இருக்க, எது தனிமை? என்கிற கேள்வி எழுகிறது. இன்னொருவர் என்று எவருமிலா நிலையில் இருப்பது தனிமை. இது பெரும்பாலும் தனியறையில், ஓய்வறையில் கிடைப்பது. இது தனித்தனிமை. இன்னொன்று பொதுத்தனிமை.

ரயிலிலோ, பேருந்திலோ பயணித்துக் கொண்டிருக்கும்போது, யாருடனும் ஒட்டாமல் அந்நியப்பட்டிருக்கும் தனிமை. முன்னது இயற்கை, பின்னது செயற்கை. பணியிடங்களிலும் பொது இடங்களிலும் பலரது இல்லங்களிலும்கூட, இத்தகு தனிமை இப்போது அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஒரு காலத்தில் முதியோர்கள்தாம் பேச்சுத் துணைக்கு ஆட்கள் இன்றி இத்தகு அவஸ்தைக்கு உள்ளாவர். பொழுதுபோக்குக் கருவிகள் வந்த பிறகும்கூட, அவர்களை அந்தத் தனிமை விடாது வருத்தியது. ஆனால், தற்போது இத்தகு தனிமைக்குள் தாமே விரும்பி, இளைஞர்கள் பலரும் சிக்கியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இளம் பெண்களின் எண்ணிக்கைக் கூடுதல்.

இது ஒருவகையில் நோய் என்கிறார்கள். யாருடனும் கலந்து பழகவோ, பேசவோ, விருப்பமில்லாமல் போகிற மனநிலை இதனால் வாய்த்துவிடுகிறது. தொடக்கத்துத் தயக்கம் பின்னர் சுபாவமாக மாறி, இதனை இயல்பாக்கிவிடுகிறது. இதில் ஒருவித சுதந்திரவுணர்வும் சுகமும் இருப்பதுபோல் தோன்றினாலும், இதுவும் ஒருவித அடிமை மனோபாவம்தான். தன்னையுமறியாமல் ஆட்பட்டுப்போன ஆணோ, பெண்ணோ இணைந்து வாழத்தொடங்குகிற இல்லறத்தில் தடுமாறி, தடம் மாறிப்போகிறார்கள். பணியிடத்தில் இப்போக்கு ஏற்படுத்தும் விளைவோ இன்னும் விபரீதம். இதில் உறவோடு நட்பும் பலி கொள்ளப்படுகிறது; அது பழிவாங்கலுக்கு வித்திடுகிறது. இயல்பான மனித குணம் சிதைவுற்றுத் தேய்கிறது; வன்மம் தலைதூக்குகிறது.

இன்றைய உலகில், ஒருவரோடு பேசாமல், பழகாமல் வாழ்தல் இயலாத காரியம். தனிநிலையில் தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்கென்று வாய்த்ததே இந்த மனிதப்பிறவி. அதற்குப் பெற்றோரும் உற்றாரும் உதவி செய்யக் கூடியவர்கள். பிறப்பாலும், சூழலாலும் வருகிற பிழைபாடுகளைக் கண்டறிந்து களைகிறவர் ஆசிரியராகக் கொள்ளத்தக்கவர். அவர்கள் பத்திரிகையாசிரியராகவும், படைப்பாசிரியராகவும் இருக்கலாம்; குருநாதராகவும் இருக்கலாம். ஏன், அவர் கணவராகவும், காதலராகவும், நண்பராகவும், பெற்ற பிள்ளைகளாகவும் கூட இருக்கலாம்; ஆண்களுக்குச் சகோதரியாகவும், மனைவியாகவும், தோழியாகவும், இன்னபிற உறவினர்களாகவும் இருக்கலாம்; திருநாவுக்கரசருக்கு ஒரு திலகவதியார் போல, மணிவாசகருக்குக் குருந்தமரத்தடியில் கிடைத்த ஒரு குருநாதர்போல, பட்டினத்தாருக்கு அவர் வளர்த்த பிள்ளையைப் போல, காரைக்காலம்மையாருக்கு இறைவனே போல, யாருக்கும் யாரும் வாய்க்கலாம். இந்நிலை அறிவுரையாலும் கிட்டலாம்; அனுபவத்தாலும் வாய்க்கலாம்.

அறிவிலிருந்து அனுபவத்திற்கும், அனுபவத்தில் இருந்து அறிவுக்கும் கொண்டுசெலுத்தித் தன்னைத் தகவுடையவராய் உயர்த்திக்கொள்ள உதவும் ஒரு சந்தர்ப்பமே தனிமை. அது ஒரு நோயல்ல, தவம்; தவங்களைத் தன் வசமாக்கிக் கொள்ள இயற்கை கொடுத்த இனிய வரம்.
தனிமை என்று ஒன்றுமே இல்லை. துணையாய் யாரும் இல்லாத நிலையில், ஒருவருக்கு மனமே துணை; அதனைச் சரிவர பயன்கொள்ள முடியாதவர்களுக்கு, அதுவே பகை. வாழ்க்கைத் துணையாகவும், வழித்துணையாகவும், அறிவுத்துணையாகவும் சிலர் அமைந்துவிடுகிறபோது வாழ்க்கை சிறக்கிறது. 

மனம் உடையவர்கள்தானே மனிதர்கள். அந்த மனதை தன் வசமாக்கிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு, தனிமை மாதிரி இனிமை தருகிற வேறொன்று இல்லவே இல்லை. அதனால்தான், தனிமை கண்டதுண்டு அதிலே சாரம் இருக்குதம்மா என்று மகாகவி பாரதியார் பாடினார்.
81 ஆண்டுகள் தனித்திருந்து வாழ்ந்த அப்பர் பெருமான், என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை என்கிறார். எத்தனையோ அல்லல்களைத் தன் வாழ்வில் அவரும் அனுபவித்தவர்தான். ஆனால், அவர் மனத்தொடு முறைப்பட வாழத்தொடங்கிய பிறகு, இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று உறுதிப்பாட்டு நிலையை எய்துகிறார். இது எல்லாச் சமயப் பெரியோர்களுக்கும், சமுதாய வழிகாட்டிகளுக்கும் வாய்த்தது என்றால், நமக்கு மட்டும் வசப்படாமலா போகும்? துன்பத்தை இன்பமாக்கும் நுட்பத்தை இவர்களது வாழ்க்கை கற்றுத் தருகிறது.
இந்த வாழ்வில், இன்பத்தைப் பெறுகிற நல்வாயிலாக, இல்லறம் இருக்கிறது; பின்னர் அது நல்லறமும் ஆகிறது. தனித்திருந்து தவம் செய்கிற ஒருவரின் வாழ்வு துறவறம் ஆகிறது. அவருக்கு உற்ற துணையாய்ப் பரம்பொருள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் இனிய துணையாக இருக்கிற பொதுப்பொருள், இப்பரம்பொருள். இது அவரவர்க்குரிய இறையாக, இறை நம்பிக்கையற்றோருக்கு இயற்கையாக இருந்து ஆற்றல் தருகிறது.

அதனால்தான், தனிமையில் இனிமை காண்போர், இயற்கை எழில் நிறைந்த இடத்திற்குப் போகிறார்கள். பலர் இறைவன் இருக்கும் திருக்கோயில்களுக்குச் செல்கிறார்கள். சிலர் ஏதுமற்ற அமைதி நிலையில் தியானம் புரிகிறார்கள். பலர் பொதுச்சேவையில் ஈடுபடுகிறார்கள். எதையோ, எப்படியோ அறப்பணியாய்ச் செய்கிறார்கள். தன்னிலை மறந்து தனிநிலை எய்தும் இத்தனிமைத் தவத்தின்வழி, சும்மா இருக்கக் கற்றவர்கள்தான் சுகமாய் இருக்கும் வழி அறிகிறார்கள். அப்போது அவர்களுக்குப் புரிகிறது, தனிமை என்பது தனிமை இல்லை என்பதும், அது வெளியில் இல்லை, உள்ளேதான் என்பதும்.

இப்போது தனிமை இனிமையாகி விடுகிறது. இந்தத் தனிமை, எல்லாருக்கும் மேலே இருக்கிற வானத்தை, அவரவர்க்குமான வானமாக்கிக் கொள்வதைப்போல, எங்கும் உலவி வருகிற காற்றில் இருந்து தனக்கான சுவாசத்திற்கு ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதுபோல, பொதுவெளியில் தனக்கான தனிவெளியை உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கிறது. பல நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவும், தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. இதுதான் ஒவ்வொருவரது தனித்தன்மையையும் சிதையாமல் காப்பாற்றிக் கொள்ளவும் துணைபுரிகிறது.

அதனால்தான், ஒளவையார், இனிமையில் இனிமை தனிமை என்றும், இனிது இனிது ஏகாந்தம் இனிது என்றும், அதனினும் இனிது, ஆதியைத் தொழுதல் என்றும், அதனினும் இனிது, அறிவினரைச் சேர்வது என்றும் கூறிய அவர், அதனினும் இனிது, அறிவுள்ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது என்று அவர் முடிக்கிற இடம்தான் மிகவும் இன்றியமையாதது.
அத்தகு அறிவுள்ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பதை விட்டுவிட்டு, கருதுவதை விட்டுவிட்டு, அறிவியல் கருவிகளுக்கு அடிமையாகிப் போனதுதான் தற்காலத் தலைமுறைக்கு நேர்ந்திருக்கிற நெருக்கடி.
இன்றைக்கு அந்த இடத்தைச் செல்லிடப்பேசி பிடித்திருக்கிறது. தனிமைக்குப் பயந்த காலம்போய் தனிமைக்குத் துணைதேடியவர்கள், தத்தம் கைப்பேசிகளுக்குள் முகம் புதைப்பதும் செவி சாய்ப்பதும் இப்போது பெரிதும் அதிகரித்து வருகிறது. கத்தி பிடித்தவன் கை சும்மா இருக்காது என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. அப்போது கத்தி; இப்போது கைப்பேசி. பல இடங்களில் பலரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், அருகில் இருக்கும் சகமனிதர்களுடன் அல்ல, எங்கோ இருப்பவர்களுடன். நேருக்குநேர் முகம் பார்த்துப் பேசுகிற சந்தர்ப்பம் வருகிறபோதும், செல்லிடப்பேசியில், முகநூலில் முகம் புதைத்துக்கொண்டு வார்த்தையாடுகிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

முன்பெல்லாம் ரயிலிலோ, பேருந்திலோ, ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் ஏற்படுகிற ஆனந்தத்தைச் சொல்லி மாளாது. அது இல்லாவிட்டால் இதழ்களும், நூல்களும் இனிய துணையாகும். அதையும் கடந்து, அகநக நட்புக்குத் துணைசெய்யும் ரயில் சிநேகிதம், இப்போது சொந்த உறவுகளுடன் கூடப் பேசிப்பழக வாய்ப்பில்லாதபடிக்கு அத்தனையையும் வாரிச்சுருட்டி எடுத்துத் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது செல்லிடப்பேசி. பெயருக்குத்தான் அவரவர்களின் கைகளில் அவை; உண்மையில் அவற்றின் கைகளில்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்; பல சமயங்களில் இருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல்.
அறிவியல் யுகத்தில் இது தவிர்க்கவியலாத வளர்ச்சி என்று கருதுவதில் பிழையில்லை.

ஆனால், அது அறிவையும் பொதுவுணர்வையும் அபகரித்துக் கொள்வதோடு, இனிமையாய்க் கழிக்க வேண்டிய தனிமைப் பொழுதைப் பல்வேறு வக்கிரமான எண்ணங்களுக்குள் ஆழ்த்தி, அக்கிரமச் செயல்கள் புரியத் தூண்டும் கிரியா ஊக்கியாகி விடுகிறதே? பழக்கத்தில் தொடங்கி, வழக்கத்திற்கு வந்து, இப்போது புதிய புதிய சிக்கல்களை உண்டுபண்ணி, வழக்குக்குக் கொண்டுபோய் நிறுத்தி வருகிறதே?

இதற்கெல்லாம் கவலைப்படாமல், இந்த வாழ்வை இன்பமாக்கிக்கொள்ள ஏது வழியென்று, தனிமையில் இருந்து சிந்திக்கலாம் என்று நினைத்தபோது, செல்லிடப்பேசி ஒலிக்கிறது...
 ஜெ., மரண விசாரணை,விஜயபாஸ்கருக்கு,சிக்கல்

dinamalar 29.12.2018

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்த விசாரணையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'சம்மன்' அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத அவருக்கு, நீதிபதி ஆறுமுக சாமி கமிஷன், மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான, மருத்துவ வார்த்தைகள், தவறாக பதிவு செய்யப்படுவதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், புதிய குற்றச்சாட்டை கிளப்பி உள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. ஏழு மனுதாரர்கள் உட்பட, 140க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இதுவரை நடந்த விசாரணையில், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் தரப்பட்ட சிகிச்சை மற்றும் அவர் சாப்பிட்ட உணவு தொடர்பாக, சிகிச்சை அளித்த டாக்டர்கள், முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.இன்னும் ஒரு சிலரிடம் மட்டுமே, விசாரணை நடத்த வேண்டி உள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜெ., பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி மற்றும் ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரிடமும், விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை, கண்காணிக்க



வேண்டிய பொறுப்பில் இருந்தவர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். எனவே, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, டிச., 18ல், விசாரணைக்கு ஆஜராகும்படி, சம்மன் அனுப்பப்பட்டது; ஆனால், அவர் ஆஜராகவில்லை.

எனவே, ஜன., 7ல் ஆஜராகும்படி, அவருக்கு மீண்டும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவ மனையில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கண்காணிப்பதற்காக, அரசு தரப்பில், தனி மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்றிருந்த பலர், 'ஜெயலலிதாவை பார்த்ததில்லை' என, கூறி உள்ளனர். அவர்களை, ஏன் பார்க்க அனுமதிக்க வில்லை என்பதற்கும், அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்காக, தனி அறை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அவர், அங்கேயே தங்கி இருந்துள்ளார். எனவே, ஜெயலலிதாவை யாரெல்லாம் பார்த்தனர்; எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற

விபரங்கள் அனைத்தும், அவருக்கு மட்டுமே தெரியும் என, விசாரணை கமிஷன் நம்புகிறது. மேலும், மருத்துவ மனையில் பொருத்தப்பட்டிருந்த, கண்காணிப்பு கேமராக்களை, ஜெ., சிகிச்சை பெற்ற காலத்தில், அகற்ற உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு, இதுவரை, நீதிபதி ஆறுமுகசாமிக்கு பதில் கிடைக்கவில்லை.

அப்பல்லோ மருத்துவர்கள், நிர்வாகத்தினர் தரப்பில் நடத்திய விசாரணையிலும், இக்கேள்விக்கு சரியான விடை கிடைக்க வில்லை.எனவே, ஜெ., மரணத்தில் புதைந்துள்ள மர்மங்கள் பற்றிய பல கேள்விகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில், விஜயபாஸ்கர் இருக்கிறார். அந்த சிக்கலில் இருந்து தப்பிக்கவே, விசாரணை கமிஷன் தொடர்ந்து சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் அவர் தவிர்த்து வருகிறார் என, கமிஷன் வட்டாரம் புகார் தெரிவிக்கிறது.  இருந்தாலும், விஜயபாஸ்கரை விடக் கூடாது; விசாரணைக்கு இழுத்தே தீருவது   என்பதில், கமிஷன் வட்டாரம் உறுதியாக உள்ளது.இதற்கிடையில், சென்னை, அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம் சார்பில், விசாரணை கமிஷனில், புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப் பட்டு உள்ளது.

அதில், 'மருத்துவமனை சார்பில் முன்வைக்கப்படும், மருத்துவம் சார்ந்த சொற்கள், தவறாக பதிவு செய்யப்படுகின்றன; அவை, பொது வெளியில், தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. 'எனவே, இவற்றை ஆராய்ந்து வெளியிட, தனி மருத்துவர்கள் குழுவை அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மே, 1ல், மருத்துவக் குழு அமைக்க, விசாரணை கமிஷனுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், இதுவரை, மருத்துவக் குழு அமைக்கப்படவில்லை. இதையும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், கமிஷன் விசாரணையில் சுட்டிக் காட்டியுள்ளது.

பன்னீருக்கு, 'சம்மன்'

துணை முதல்வர் பன்னீர்செல்வம், டிசம்பர், 20ல் ஆஜராக, ஏற்கனவே, 'சம்மன்' அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், 18ம் தேதி ஆஜராக வேண்டிய, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக வில்லை. எனவே, துணை முதல்வரின் தேதியை, கமிஷன் மாற்றம் செய்து, ஜன., 8ல் ஆஜராகும் படி, சம்மன் அனுப்பியுள்ளது. லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜன., 11ல் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம், ஜன., 9ல், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, விசாரணை நடத்தப்பட உள்ளது.

- நமது நிருபர் -

விடுதிகளில் சோதனை யு.ஜி.சி., உத்தரவு

Added : டிச 28, 2018 22:38

சென்னை, மாணவர் விடுதிகளில், திடீர் சோதனை நடத்த, கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:உயர் கல்வி நிறுவனங்களில், 'ராகிங்'கை தடுக்க, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.'வளாகங்களில், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்; ராகிங் தடுப்பு குழு ஏற்படுத்த வேண்டும்' என, பல உத்தரவுகள்பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இவற்றை செயல்படுத்தாத கல்லுாரிகள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதேபோல், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளும், வகுப்பறை, வளாகம், மாணவ - மாணவியர் விடுதிகள், கேன்டீன், பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில், திடீர் சோதனை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடும் சரிவு ரெயில் சேவைகளுக்கு மாறினர்



கட்டண உயர்வு காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.82 கோடியில் இருந்து 1.60 கோடியாக சரிந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் ரெயில் சேவைகளுக்கு மாறியுள்ளனர்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:00 AM
சென்னை,

வருவாயை பெருக்கும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த ஜனவரி மாதம் 60 சதவீத பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை தவிர்த்துவிட்டனர்.

பஸ் போக்குவரத்துக்கு மாற்றாக பிற பொதுத்துறை போக்குவரத்துக்களை அவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த மாத நிலவரப்படி மாநகர பஸ்களை பயன்படுத்தி வந்த சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பிற பொதுத்துறை போக்குவரத்துக்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப்போல பஸ் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 1.82 கோடி பேர் தினந்தோறும் அரசு பஸ் சேவைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது தற்போது 1.60 கோடியாக சரிந்துள்ளது.

இதனால் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டண உயர்வு காரணமாக ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை கடந்த 2017-18-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.90 கோடி பயணிகள் அதிகரித்துள்ளனர். இதில் புறநகர் மின்சார ரெயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 கோடி ஆகும்.

இவற்றில் 70 சதவீத பயணிகள் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை வாங்கி ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இது அவர்கள் மின்சார ரெயில் சேவைகளை நீண்ட கால போக்குவரத்தாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதையே காட்டுகிறது. எனவே பஸ் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போக்குவரத்து துறையின் இழப்புகளை தடுக்க முடியும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடும் சரிவு ரெயில் சேவைகளுக்கு மாறினர்



கட்டண உயர்வு காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.82 கோடியில் இருந்து 1.60 கோடியாக சரிந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் ரெயில் சேவைகளுக்கு மாறியுள்ளனர்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:00 AM
சென்னை,

வருவாயை பெருக்கும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த ஜனவரி மாதம் 60 சதவீத பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை தவிர்த்துவிட்டனர்.

பஸ் போக்குவரத்துக்கு மாற்றாக பிற பொதுத்துறை போக்குவரத்துக்களை அவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த மாத நிலவரப்படி மாநகர பஸ்களை பயன்படுத்தி வந்த சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பிற பொதுத்துறை போக்குவரத்துக்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப்போல பஸ் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 1.82 கோடி பேர் தினந்தோறும் அரசு பஸ் சேவைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது தற்போது 1.60 கோடியாக சரிந்துள்ளது.

இதனால் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டண உயர்வு காரணமாக ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை கடந்த 2017-18-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.90 கோடி பயணிகள் அதிகரித்துள்ளனர். இதில் புறநகர் மின்சார ரெயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 கோடி ஆகும்.

இவற்றில் 70 சதவீத பயணிகள் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை வாங்கி ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இது அவர்கள் மின்சார ரெயில் சேவைகளை நீண்ட கால போக்குவரத்தாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதையே காட்டுகிறது. எனவே பஸ் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போக்குவரத்து துறையின் இழப்புகளை தடுக்க முடியும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடும் சரிவு ரெயில் சேவைகளுக்கு மாறினர்



கட்டண உயர்வு காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்யும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.82 கோடியில் இருந்து 1.60 கோடியாக சரிந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் ரெயில் சேவைகளுக்கு மாறியுள்ளனர்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:00 AM
சென்னை,

வருவாயை பெருக்கும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த ஜனவரி மாதம் 60 சதவீத பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டண உயர்வு காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை தவிர்த்துவிட்டனர்.

பஸ் போக்குவரத்துக்கு மாற்றாக பிற பொதுத்துறை போக்குவரத்துக்களை அவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த மாத நிலவரப்படி மாநகர பஸ்களை பயன்படுத்தி வந்த சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பிற பொதுத்துறை போக்குவரத்துக்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

இதைப்போல பஸ் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 1.82 கோடி பேர் தினந்தோறும் அரசு பஸ் சேவைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது தற்போது 1.60 கோடியாக சரிந்துள்ளது.

இதனால் பஸ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சராசரியாக ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டண உயர்வு காரணமாக ரெயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரை கடந்த 2017-18-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1.90 கோடி பயணிகள் அதிகரித்துள்ளனர். இதில் புறநகர் மின்சார ரெயில்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 கோடி ஆகும்.

இவற்றில் 70 சதவீத பயணிகள் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளை வாங்கி ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இது அவர்கள் மின்சார ரெயில் சேவைகளை நீண்ட கால போக்குவரத்தாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதையே காட்டுகிறது. எனவே பஸ் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே போக்குவரத்து துறையின் இழப்புகளை தடுக்க முடியும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு டாக்டரின் கழுத்தை அறுத்த காற்றாடி மாஞ்சா கயிறு



இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு மருத்துவமனை டாக்டரின் கழுத்தை காற்றாடி மாஞ்சா கயிறு அறுத்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பதிவு: டிசம்பர் 29, 2018 04:15 AM
அம்பத்தூர்,

சென்னை கொளத்தூர் வெங்கடேசன் நகர், அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 36). டாக்டரான இவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை இவர், பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் அயனாவரம் வழியாக கொளத்தூர் சென்று கொண்டிருந்தார். பெரம்பூர் லோகோ பாலம் மீது சென்றபோது, எங்கிருந்தோ பறந்துவந்த காற்றாடி மாஞ்சா கயிறு டாக்டர் சரவணனின் கழுத்தை அறுத்தது.

இதில் நிலைதடுமாறிய அவர், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். மாஞ்சா கயிறு அறுத்ததால் ரத்தம் கொட்டியது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக டாக்டர் சர வணனை மீட்டு ஐ.சி.எப். ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 6 தையல் போடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவருடைய மனைவி இதயலேகா(32) அளித்த புகாரின்பேரில் ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் சரவணனின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் காற்றாடி எங்கிருந்து பறந்து வந்தது? அதை பறக்க விட்டவர்கள் யார்? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
தலையங்கம்

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு


உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் சீர்கேடு தொடர்பாக பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது.

டிசம்பர் 29 2018, 04:00

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் சீர்கேடு தொடர்பாக பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. இதனால்தான் 2014–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சி.எஸ்.சிங்வி, எஸ்.ஜெ.முகோபாத்தியா ஆகியோர் கொண்ட பெஞ்ச், பிளாஸ்டிக் பைகளின் கேடு ஒரு அணுகுண்டை விட அபாயகரமானது என்று கூறினர். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய வல்லுனர் குழுவை அமைத்தார். அந்த வல்லுனர் குழு ஆலோசனைபடி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5–6–2018 அன்று சட்டசபையில் விதி 110–ன் கீழ் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும்வகையில், 2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேனீர் கோப்பைகள், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் ஸ்டிரா மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் அரசு தடை செய்கிறது என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து 25–6–2018 அன்று அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதில் சில பொருட்களின் பயன்பாட்டிற்கு விதி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 1–ந்தேதி பிளாஸ்டிக் பயன்பாடு தடையை அமலுக்கு கொண்டுவரும் நேரத்தில், மாநிலம் முழுவதிலும், மண்டல ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

பி.அமுதா, டாக்டர் சந்தோஷ்பாபு, ராஜேந்திர ரத்னு ஆகியோரை அரசு நியமித்து இருக்கிறது. இதுமட்டு மல்லாமல் இந்த தடை முழுமையாக கடைப்பிடிக்கப் படுகிறதா? என்பதை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் 9 கூடுதல் தலைமை செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோரை கொண்ட வழிகாட்டு குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்தநிலையில், அரசின் இந்த உத்தரவை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அரசின் இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது என்றுகூறி, சில பொருட்களுக்கு அரசு விலக்கு அளித்ததை ஏற்றுக்கொள்ளாமல் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எந்த நோக்கத்திற்காக பிளாஸ்டிக் தடை முடிவு மேற்கொள்ளப்பட்டதோ? அந்த நோக்கத்தை இதுபோன்ற விலக்குகள் அடைய முடியாமல் செய்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.

ஆக, அரசும் உத்தரவிட்டுவிட்டது, நீதிமன்றமும் பச்சை விளக்கை காட்டிவிட்டது. இனி முழுமையான தடை நடைமுறைப்படுத்த வேண்டியது தான் பாக்கி. எந்த ஒரு முயற்சியையும் அரசு அறிவிப்பதும், உத்தர விடுவதும் நிச்சயமாக நல்லது தான். ஆனால் அதன் செயல்பாட்டின் வெற்றி அதை நடைமுறைப்படுத்து வதில் தான் இருக்கிறது. எனவே அரசு அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தால் தான் முழுமை யான தடையை கொண்டு வரமுடியும். அதே நேரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய பொருட்களை வீட்டில் இருந்தே செய்யும் குடிசை தொழிலாகவும், சிறு தொழிலாகவும் கனரக தொழிலா கவும் செய்வதற்குரிய அனைத்து ஊக்கத்தையும் அரசு அளிக்க வேண்டும். ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து இந்த தடையால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற் சாலைகளுக்கு மாற்று பொருட்களை தயாரிப்பதற்கான உதவிகளையும் அரசு வழங்க வேண்டும்.
Madras University: K Ramanujam panel indicts 13 non-teaching staff

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

PublishedDec 29, 2018, 1:42 am IST

The syndicate of the Madras University before which the inquiry report was placed on Friday.


Madras University

CHENNAI: Unraveling one of the biggest thefts in the history of Madras University, a three-member committee headed by former DGP K.Ramanujam has indicted 13 non-teaching staff as responsible for missing 30,000 answer scripts from the university premises.

To erase the evidence of exam scam at Institute of Distance Education in Madras University, the scamsters looted totally 116 boxes each containing nearly 300 answer scripts in a truck in February this year.

Unable to distinguish the disputed answer scripts, the scamsters have allegedly removed entire boxes kept in the strong room at the university's centenary auditorium.

The syndicate of the Madras University before which the inquiry report was placed on Friday, has accepted the report and authorised Vice-Chancellor P. Duraisamy to take action against the erring staff members.

The committee also consists of Professor A.David Ambrose, head, department of legal studies of the university and T.P. Radhakrishnan, principal, Madras Sanskrit College, as members

In the inquiry report running into two volumes, the committee has named 13 staff members for the negligence of duty and for possible involvement in the theft.
"The report consists two major volumes. We will study the report and propose the punishment in the next syndicate meeting for approval," P.Duraisamy, vice-chancellor of Madras University.

After conducting the inquiry with 130 persons during the course of four months, the report indicated that 13 members should be held accountable for their negligence in discharging their duty.

The report arrives at two conclusions - First, they could have cleared answer sheets weighing two-tonnes by disposing of it as scrap in exchange for money and another possibility, answer sheets could have been removed to erase the evidence for ongoing inquiry against three study centres for involving in the exam scam.

The committee has also suggested various measures including installing more CCTV cameras and tightening up the security to prevent such incidents in future.
"The committee has pointed out the lapses on the part of the university. We will take the measures suggested by the committee seriously and create the system so such things will not happen in future," Professor Duraisamy said.

Besides the inquiry, the university has also lodged a complaint with the Central Crime Branch of city police.

"The police inquiry should reveal where the looted answer scripts were gone and if there were any conspiracy angle was involved in the theft," university officials said.
Jio Happy New Year Offer returns with 100 pc cashback on Rs 399 recharge

PTI

Published Dec 28, 2018, 4:47 pm IST

The coupon credited can be redeemed on AJIO app and website on a minimum cart value of Rs 1,000.



The offer is applicable for both existing and new Jio users for recharges done between December 28, 2018, to January 31, 2019.

New Delhi: Reliance Jio on Friday announced a New Year offer under which it offers 100 per cent cashback on a recharge of Rs 399 in the form of coupons that can be availed on e-commerce portal AJIO.

"Jio in partnership with AJIO has introduced its Jio Happy New Year Offer. The offer provides 100 per cent cashback in form of AJIO coupon. Customers performing recharge of Rs 399 will get 100 per cent cashback in form of AJIO coupon. AIO coupon worth Rs 399 will be credited in 'MyCoupons' section of MyJio," Jio said in a statement.

The coupon credited can be redeemed on AJIO app and website on a minimum cart value of Rs 1,000.

"AJIO coupon worth Rs 399 can be redeemed over and above the existing AJIO discounts," the statement said.

The offer is applicable for both existing and new Jio users for recharges done between December 28, 2018, to January 31, 2019. The coupons received during this period can be redeemed on or before March 15, 2019, the statement said.

Reliance Jio has been coming up with New Year offers since the commencement of its business in 2016. Under the scheme, it has been offering services at effectively free rates.

NEWS TODAY 27.03.2024