Wednesday, August 31, 2016

MCI's unique 'ID'ea to curb faculty duplication


NEW INDIAN EXPRESS 

COIMBATORE: In a bid to prevent doctors from appearing as faculty in multiple medical institutions, the Medical Council of India (MCI) has decided to assign unique IDs for doctors across the country. The move is part of the MCI’s e-governance initiative.

The council has written to the deans of medical colleges across the country in this regard.

While unique IDs will be provided to all doctors, its primary use is to prevent doctors appearing as faculty in multiple medical colleges, sometimes in different states, to meet the council mandate on the number of faculty.

“This will help rein in duplication of faculty members. Currently, doctors register themselves under their respective State Medical Councils. Their registration number would be accompanied by a State code. If a doctor decides to permanently move to another State, they would have to remove their name from the existing list and register themselves with the medical council of the state to which they are relocating,” said Edwin Joe, dean of the Coimbatore Medical College Hospital.

Besides, the MCI has also decided to monitor the attendance of faculty members of medical colleges across the country through its e-governance initiative.

The menace of multiple affiliations of faculty members is not confined to MCI alone. Recently, the All India Council for Technical Education (AICTE) had found out that more than 50,000 duplicate faculty were enlisted with it.

Following this, it had allotted unique ID numbers to nearly three lakh faculty across the country so that engineering colleges couldn’t ‘share’ faculty members to meet official norms.

Unique IDs prepared based on Aadhaar card details of faculty members were used to monitor their progress.

The council will also roll out an online platform that offers application tracking feature and a repository of certificates, to reduce the cost incurred by applicants to avail the services by offering e-payment options and reducing the need to travel.

The MCI’s e-governance initiative would also provide for a unified database and improved grievance redressal system, work flow-based processing as well as enhanced and user-friendly document management.

காலையில் தூய்மைப் பணி; மாலையில் கலைப் பணி- தவில் இசையில் அசத்தும் துப்புரவுத் தொழிலாளர்




ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Return to frontpage

ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். அதைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தவர்கள் அத்துறைகளில் பிரகாசிக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அவற்றை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். சிலர் விரும்பிய துறை கிடைக்காவிட்டாலும் கிடைத்த பணியை ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

அப்படி ஒரு அற்புதமான கலைஞர்தான் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரியும் இளங்கோவன் (45). மதுரை வடபழஞ்சி யைச் சேர்ந்த இவர் சிறந்த தவில் வித்வானாகவும் இருக்கிறார். காலை நேரங்களில் மதுரை வீதி களில் குவியும் குப்பை, தேங்கும் சாக்கடை நீரை அப்புறப்படுத்தும் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் இளங்கோவன், மாலையில் நெற்றி யில் சந்தனப் பொட்டு, பட்டு வேட்டி, சட்டை சகிதமாக தவில் வித்வானாக மாறிவிடுகிறார். கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் இவரது தவில் வாசிப்புக்கு ரசிகர்கள் அதிகம்.

விடுமுறை நாட்களில் மும்பை, கேரளம், திருச்செந்தூர், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடை பெறும் இசைக் கச்சேரிகள், திருமணம், கோயில் விழாக்களுக்கு இவர் சென்று வருகிறார். தவில் வாசிப்பில் ஒரு துப்புரவுத் தொழிலாளி சாதித்து வருவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து இளங்கோவன் கூறியது: எனது தந்தையும், அவரது தந்தையும தவில் வித்வான்தான். நான் 4-வது தலைமுறையாக தவில் வாசிக்கிறேன். என்னைப்போல எனது தந்தையும் துப்புரவுத் தொழி லாளியாக இருந்தே காலமாகி விட்டார். என்னுடன் பிறந்த தம்பி கள் இருவரும் அப்போது சிறியவர் கள். குடும்ப பாரம் காரணமாக எனது தவில் வித்வான் ஆசையை மூட்டை கட்டிவிட்டு குடும்ப கஷ்டத்துக்காக வும், அப்பா இறந்ததால் அரசு வேலை கைவிட்டு போய்விடக் கூடாது என்பதற்காகவும் வாரிசு அடிப்படையில் துப்புரவு வேலையில் சேர்ந்தேன்.

தவில் வித்வானாக ஆசைப்பட்ட என்னால் ஆரம்ப காலத்தில் துப்புரவுப் பணியில் முழு ஈடுபாட்டு டன் பணிபுரிய முடியவில்லை. தவில் வாசிப்பதையும் விட முடிய வில்லை. இதனால், மன அமைதிக் காக மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தவில் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் எனக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. துப்புரவு பணியிலும் மரியாதை, பிடிப்பு ஏற்படத் தொடங்கியது. தற்போது வேலை நாட்களில் வேலைக்கு சரியாக போயிடுவேன். விடுமுறை நாட்களில் கச்சேரிக்கு செல்கிறேன்.

ஒருமுறை சென்றால் 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். துப்புரவு வேலைக்கு செல்கிறபோது தவில் வித்வான் என்பதை மறந்துவிடுவேன்.

அந்த வேலைக்கு தகுந்தாற்போல் செல்வேன். கச்சேரிகளுக்கு செல்லும்போது அதற்கு தகுந்தாற்போல் மாறி விடுவேன் என்றார்.

கூடுதல் பொறுப்பு இருக்கிறது

இளங்கோவன் மேலும் கூறும்போது, "நான் தவில் வித்வான் என்பது ஆரம்பத்தில் என்னுடன் பணிபுரிகிறவர்களுக்கு தெரியாது. ஒருமுறை என்னுடைய துப்புரவு ஆய்வாளர், எனது தவில் கச்சேரியை உள்ளூர் கேபிள் டிவியில் பார்த்துள்ளார். சக ஊழியர்களிடம் என்னைப் பற்றி விசாரித்ததாக கேள்விப்பட்டேன். அவர் திட்டுவாரோ என்ற பயத்துடன் மறுநாள் வேலைக்குச் சென்றேன். ஆனால், அவரோ என்னைப் பார்த்து பிரமித்து, உனக்குள்ளே இவ்வளவு திறமையா, எங்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டாயே என உரிமையோடு கண்டித்தார். சக தொழிலாளர்கள் முன்னிலையில் என்னை அழைத்துப் பாராட்டினார்.

அன்று முதல் துப்புரவு தொழில் மீது கூடுதல் மதிப்பும், பொறுப்பும் ஏற்படத் தொடங்கியது. இந்த தவில் வாசிப்பு தொழிலில் 6 மாதம் வேலை கிடைக்கும், மற்ற 6 மாதங்கள் சும்மா இருக்க வேண்டும். எனக்கு அரசு வேலை இருப்பதால் பிரச்சினை இல்லை. மற்ற கலைஞர்கள் நிலையோ பரிதாபம்.

குடும்ப கஷ்டத்துக்காக மோதிரம், சங்கிலி, தோடு, தவில், நாதஸ்வரம் உள்ளிட்டவற்றை அடகு வைப்பார்கள். மீண்டும் வருமானம் வந்ததும் திருப்புவார்கள். மனைவி, குழந்தை என நான் ஒரு குறுகிய குடும்ப வட்டத்துக்குள் இருப்பதால் என்னால் துப்புரவு வேலையை உதறிவிட்டு முழு நேரமும் தவில் வாசிப்பில் இறங்க தயக்கமாக உள்ளது" என்றார்.

நாயைக் காயப்படுத்திய மாணவர்களுக்கு லட்சங்களில் அபராதம்!

vikatan.com

சென்னை: மாடியில் இருந்து நாயைத் தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய மருத்துவ மாணவர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம்,நான்காவது மாடியில் இருந்து நாயைத் தூக்கி வீசும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த அனைவரும் அந்தச் சம்பவத்தைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவிட்டு இருந்தனர். அதனையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் நாயைத் தூக்கி எறிந்து அதனை செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய தண்டனைக் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி, விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளமெண்ட் ரூபன் சென்னை குன்றத்தூர் போலீசில் புகார் செய்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர்கள் யார்? சம்பவம் நடந்த இடம் எது? என்பது குறித்து உடனடியாக விசாரணை செய்தனர்.

அதில்,மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம் சுதர்சன், என்றும், அந்தக்காட்சியை செல்போனில் வீடியோ எடுத்தவர் அவரின் நண்பர் ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது. இருவரும் குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வருபவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மருத்துவ மாணவர்களைக் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோரே போலீஸில் ஒப்படைத்தனர்.பின்னர் மருத்துவ மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீன் பெற்றனர். இதற்கிடையே அவர்கள் படித்த கல்லூரியில் இருந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ மாணவர்கள் இருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

வீழ்த்தியது... கனிமவள கணக்கு! விசுவாசத்தால் பலிகடா ஆன ஐ.ஏ.எஸ்.!


vikatan.com

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் ‘டிட்கோ’ தலைவர் - நிர்வாக இயக்குநருமான ஞானதேசிகன் மற்றும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சுரங்கம் - கனிமவளத் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் ஆகியோரின் திடீர் சஸ்பெண்ட் ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக இருந்த இவர்களின் சஸ்பெண்ட் குறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, பிரமிப்பாக அடுக்குகிறார்கள். “இரண்டு ஐ.ஏ.எஸ்-கள் சஸ்பெண்ட் என்பதோடு நின்றுபோகிற விஷயமாக இது தெரியவில்லை. அடுத்தடுத்து சில அதிரடி நடவடிக்கைகளும் இனி இருக்கலாம்” என்றனர்.

“அரசியல் சிக்கலில் இருக்கும் ஒரு தொழிலதிபரின் கனிமவளங்கள் குறித்த ‘முக்கிய’ ஆவணங்களை அரசின் விஜிலென்ஸ் விங் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியது. சுரங்கம் மற்றும் கனிமவளங்கள் துறை ஆணையரான அதுல் ஆனந்திடம், அதே விவரங்கள், ஆவணங்கள் குறித்து கடந்த ஒரு மாதகாலமாக விவரம் கேட்டு அரசு நெருக்கியும் அவரிடமிருந்து இதுபற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதுல் ஆனந்த், அரசுக்கு அளித்த ரிப்ளையைவைத்து அந்தத் தொழிலதிபரின் மீது, சிறு சண்டை வழக்கைக்கூடப் பதிய முடியாது. அவ்வளவு ‘வீக்’கான விவரங்கள்தான் அதுல் ஆனந்திடமிருந்து வந்திருந்தது.

அவரிடம் இதுகுறித்து இறுதியாக, (திங்கட்கிழமை 29.8.2016 - மாலை ) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், நேரில் அழைத்து விவரம் கேட்டிருக்கிறார். அப்போதும், போதிய விவரங்கள் அதுல் ஆனந்திடம் இல்லை. இதுகுறித்து முதல்வருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். அதுல் ஆனந்த் கொடுக்காத தகவல்களைவிடக் கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் ஆளும் கட்சியின் சமீபத்திய எதிரியான சசிகலா புஷ்பா எம்.பி-யிடம் இருப்பதாக ஒரு தகவல் வரவே, அதிகார மையம் சூடாகிவிட்டது. பல ஆண்டுகளாகவே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும், சுரங்கம் - கனிமவளத் துறை ஆணையாளர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தவரிடம் இருக்க வேண்டிய விரல்நுனி விவரங்கள், இப்படி இடம் மாறி இருந்தது.

பிரபல கனிம தொழிலதிபரிடம் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலர் தஞ்சம் புகுந்துள்ளதாக வெளியான தகவல்களும் இதனுடன் சேர்ந்துகொள்ள, அது ஆட்சி மையத்தின் கோபத்தை பன்மடங்கு எகிறவைத்தது.
இன்னொரு புறம், தென்மாவட்ட நாடார் இன மக்களைத் தன் பக்கம் இழுப்பதுபோல் சசிகலா புஷ்பா காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பது, அவர் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்பது என்று துணிச்சலாக வலம் வந்ததும் இந்தக் காரணத்தால்தான் என்றும் தகவல்கள் தீயாய்ப் பரவியது.



அ.தி.மு.க-வைவிட்டு சசிகலா புஷ்பா நீக்கத்தின் பின்னர், நாடார் சமூக மக்கள் அ.தி.மு.க மீது மாற்றுக் கருத்தைக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதால்தான் அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் ஆன கையோடு, அதே தென் மாவட்ட நாடார் இனத்தைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனை மந்திரி பதவிக்குக் கொண்டு வரவைத்ததும்” என்கின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் இருந்த ஞானதேசிகன், கூடுதல் தலைமைச் செயலாளராகி, அதன்பின் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்தவர். தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் பணி ஓய்வுபெற்று, அரசு ஆலோசகரானதும் தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர் மோகன்வர்கீஸ் சுங்கத். அவர் பொறுப்புக்கு வந்து சரியாக 9 மாதங்கள்கூட ஆகாத நிலையில், மின்வாரியத் தலைவராக பொறுப்பில் இருந்த பி.எஸ்.ஞானதேசிகனை அ.தி.மு.க அரசு தலைமைச் செயலாளர் பதவியில் அமரவைத்தது.

கடந்த ஜூன் 8-ம் தேதி திடீரென ஞானதேசிகன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக சேர்மனாக போஸ்டிங் செய்யப்பட்டார். முதல்வரின் செயலாளராக அப்போது இருந்த ராம் மோகன ராவ், தலைமைச் செயலாளராகக் கொண்டு வரப்பட்டார். அதே ராம் மோகன ராவ் ஆணைப்படி பி.எஸ்.ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ‘அதுல் ஆனந்த், ஞானதேசிகன் ஒன்றேபோல் சஸ்பெண்ட் ஆனதற்கு என்ன காரணம்?’

அரசு வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஞானதேசிகன், தலைமைச் செயலாளர் என்ற உச்சத்தில் இருந்தபோது அவர் சொல்வதைத் தட்டாமல் செய்யும் அன்புக்குரியவராக இருந்தவர் அதுல் ஆனந்த். அதனால்தான் அவரிடம் சில, பல விஷயங்கள் அரசு சார்பில் கேட்கப்பட்டன. குறிப்பாக கனிமவளம் சார்ந்த விஷயங்கள்... கனிம தொழில் சார்ந்த பிரபலம் குறித்தும் அப்போது அவரிடம் கேட்கப்பட்டது. எதற்கும் அதுல் ஆனந்த் அசைந்து கொடுக்கவில்லை. முன்னதாக ஞானதேசிகனிடம், சில விஷயங்களை முக்கியமான நபர்கள் மூலம், அதிகாரமையம் கேட்டு வாங்கிவிட்ட நிலையில், அதுல் ஆனந்த், அதில் கால்பங்கு அளவுக்குக்கூடச் சொல்லாமல் அநியாயத்துக்கு விசுவாசத்தைக் காட்டிவிட்டார். அவர் தரப்பில் இருந்து சிறிதளவுகூட விஷயம் வரவில்லை. அதன் விளைவே இந்த சஸ்பெண்ட்... இது முடிவல்ல, தொடக்கம்தான்” என்று அதிரவைக்கின்றனர்.

அரசின் தரப்பில் இதுவரையில் சஸ்பெண்டுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஓர் ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்தவர் மீது, அடுத்த ஆட்சியாளர்கள்தான் வழக்குப் பதிவர். சஸ்பெண்ட் செய்யும் அளவுக்குப் போவர்... ஆனால், முதல் முறையாக அதே ஆட்சியாளர்களால், அதே தலைமைச் செயலாளர் (மாஜி) காலி செய்யப்பட்டிருக்கிறார்

அறிவியல் அறிவோம்: ஒரே மூச்சில் 400 கி.மீ. தூரம்!


பறவைகள் பறப்பதே ஓர் அதிசயம். அப்படி என்றால், சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’ (frigate birds) அதிசயமே அசந்து போகும் அதிசயம் அல்லவா? ‘கப்பல் கூழைக்கடா’, ‘கடற்கொள்ளைப் பறவை’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் பறவையைப் பற்றிய வியக்க வைக்கும் புதிய தகவல்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உணவின்றி, தண்ணீரின்றி, ஓய்வு உறக்கமின்றி, தரையிறங்காமல் தொடர்ந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடியவை என்று உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். காரணம், இதன் இறகுகள் நீர் ஒட்டும் தன்மையைக் கொண்டவை. எனவே, வாத்துபோலத் தண்ணீரில் மிதந்து ஓய்வெடுக்கவோ, முக்குளிப்பான் போலத் தண்ணீரில் மூழ்கி மீனைப் பிடிக்கவோ இதனால் முடியாது.

சாப்பிடாமல் கொள்ளாமல் எப்படி இவ்வளவு தூரம் பறக்கிறது என்கிறீர்களா? அது எங்கே பறக்கிறது? காற்றில் மிதக்கிறது! பெரும்பாலும் இறகை அசைப்பதே இல்லை. அந்த விஷயத்தில் இவர் நம்மூர் பருந்துக்கெல்லாம் அண்ணன்.

மடகாஸ்கர் பகுதியில் வாழும் கப்பல் பறவைகள் சிலவற்றைப் பிடித்து, அதில் உணர்வுக் கருவிகளைப் பொருத்தினார்கள் வெய்மர்ஸ்க்ரிச் தலைமையிலான ஆய்வாளர்கள். இப்பறவை எப்படி இரை எடுக்கிறது, எவ்வளவு வேகத்தில் பறக்கிறது, எத்தனை முறை இறகை அசைக்கிறது, எவ்வளவு தூரம் செல்கிறது போன்ற விஷயங்கள் மட்டுமின்றி, இதயத்துடிப்பு, இறக்கை அசைப்பு உள்ளிட்டவற்றையும் நுட்பமாக ஆராய்ந்தார்கள்.

வானில் சுமார் 400 முதல் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள, மிகமிக அடர்த்தியான மேகக் கூட்டத்துக்குப் பெயர்தான் ‘குமுலஸ்’. விமான ஓட்டிகளுக்கே சவால் தருபவை. பார்ப்பதற்குப் பஞ்சு போலத் தெரிந்தாலும் இந்த வகை மேகத்துக்குள் காற்று மேல் நோக்கிச் சென்றபடி அமளிதுமளியாக இருக்கும். இதற்குள் விமானம் சென்றுவிட்டால், விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஜிவ்வென்று மேல் நோக்கிச் செல்லும். அடுத்த நொடியே திடுமெனக் கீழே இறங்கும். நான்குவழிச் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனம், திடீரென மாட்டுவண்டிப் பாதைக்கு மாறியது போலக் குலுங்கும். இதனால் பொதுவாக ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், விமானத்தில் பயணம் செய்யும் பாதிப் பேருக்கு வாந்தி மயக்கம்கூட ஏற்படும். பல ஆயிரம் கிலோ எடையுள்ள விமானத்தையே அதிர வைக்கிற இந்த மேகத்துக்குள் புகுந்து நம்மாள் சடுகுடு ஆடுகிறான்.

மேகத்துக்குள் புகுந்து, அங்கே வீசுகிற மேல் நோக்கிய காற்றின் உதவியால் காகிதம் போல மேலெழுந்து செல்கிறது கப்பல் பறவை. பிறகு, கிளைடர் போல லாகவமாக காற்றில் மிதந்தபடி கீழ்நோக்கிவரும். நிலத்துக்கு அருகே வந்த பிறகுதான் சிறகை அசைத்துப் பறக்கும். ஆக, உயரே செல்லவும் நெடுந்தூரம் செல்லவும் எந்தவித ஆற்றலையும் பயன்படுத்தாமல், ஆற்றலைச் சிக்கனப்படுத்துகிறது இந்தப் பறவை.

அதெல்லாம் இருக்கட்டும்… சோறு தண்ணி இல்லாமல் எப்படி உயிர் வாழ முடியும் என்று நுட்பமாக ஆராய்ந்தார்கள். அப்போது, கடலுக்கு மேலே தாழ்வாகப் பறந்தபடி லாகவமாக மீனைப் பிடித்து உண்பது தெரியவந்தது. வழியில் கடற்பாறை கிடைத்தால் ஓய்வெடுக்கவும் செய்கின்றன. வழியில் உணவோ, ஓய்விடமோ கிடைக்காவிட்டாலும்கூட இவை கவலைப்படுவதில்லை. இருந்தாலும், கப்பல் பறவை எப்படித் தூங்குகிறது என்பதுதான் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com

உத்தரப் பிரதேச அமைச்சர்களின் சமோசா, தேநீருக்கான செலவு ரூ.9 கோடி

Return to frontpage

உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த 4 ஆண்டுகளில் சமோசா, தேநீர் மற்றும் இதர சிற்றுண்டிக்கு ரூ.8.78 கோடி செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்களில் தேநீர் மற்றும் சிற்றுண்டி பரிமாறப்படுவது உண்டு. இதில் இதுவரை எந்த மாநில அரசும் செலவிடாத அளவில் உ.பி. அமைச்சர்களின் செலவுப் பட்டியல் உள்ளது. இம் மாநிலத்தின் சமூகநலத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சரான அருண்குமார் கோரி, தேநீர், சமோசா மற்றும் குலாப்ஜாமூனுக்காக அதிகபட்சமாக ரூ.22,93,800 செல விட்டுள்ளார். இவரை அடுத்து தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் கைலாஷ் சவுரசியா ரூ.22,85,900 செலவிட்டுள்ளார். இந்தப் பட்டிய லின் மூன்றாவது இடம் பெற்றிருப் பவர் தனது கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் மூத்த அமைச்சரான ஆசம்கான். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரான இவர் தேநீர், சமோசாவுக்காக ரூ.22,86,620 செலவு செய்துள்ளார். இவ்வாறு சிற்றுண்டிக்காக பல அமைச்சர்கள் ரூ.21 லட்சத்துக்கு மேல் செலவிட்டுள்ளனர்.

இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராம் கரண் ஆர்டா, நீர்வள மற்றும் நிலவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜக்தீஷ் சோன்கர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

உ.பி. சட்டப்பேரவையில் கடந்த வாரம் இது தொடர்பாக பாரதிய ஜனதா உறுப்பினர் சுரேஷ் குமார் கண்ணா எழுப்பிய கேள்விக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் எழுத்துமூலம் பதில் அளித்தார்.

அப்போது அகிலேஷ், “கடந்த 2012, மார்ச் 15-ம் தேதி எனது அரசு பதவியேற்றதில் இருந்து 2016, மார்ச் 15 வரை 4 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இந்த 4 ஆண்டு களில் அமைச்சகங்களின் தேநீர், சமோசா மற்றும் இதர சிற்றுண்டி செலவு ரூ.8.78 கோடி” என்றார்.

உபி அரசின் நிர்வாக விதிகளின்படி ஓர் அமைச்சர் நாள் ஒன்றுக்கு மாநிலத்துக்கு உள்ளே ரூ.2500 வரையும் மாநிலத்துக்கு வெளியே ரூ.3000 வரையும் தனது பணிக்காலத்தில் செலவிடலாம் எனவும் தனது பதிலில் அகிலேஷ் சுட்டிக்காட்டினார்.

இதில், கடந்த 2015, அக்டோப ரில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சிவகுமார் பேரியா ரூ.21,93,900 செலவு செய்திருப்ப தாகவும் அகிலேஷ் தெரிவித்தார்.

அமைச்சர்களின் சிற்றுண்டி செலவில் குறைந்தபட்ச தொகை யாக ரூ.72,500 காட்டப்பட்டுள்ளது. இத் தொகையை மகளிர் மேம் பாட்டுத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சராக ஓராண்டு பதவி வகித்த சாதாப் பாத்திமா செல விட்டுள்ளார்.

இது குறித்து ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜேந்தர் சவுத்ரி ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த செலவுகள் பார்ப்பதற்கு மிகவும் அதிகமாகத் தெரியலாம், ஆனால் இவை அனைத்தும் அமைச்சர்கள் தங்களுக்காக மட்டுமே செலவிட்டது அல்ல. அமைச்சர்கள் கூட்டும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காகவும் செலவிடப்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான்” என்றார்.

TNPSC GROUP IV

டிஎன்பிஎஸ்சி | குரூப்- IV | மாதிரி வினா- விடை 1: 10 லட்சம் பேர் போட்டிபோடும் தேர்வில் வெல்ல வேண்டுமா?


அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு. சமூக அந்தஸ்து, பணி பாதுகாப்பு, நல்ல சம்பளம் போன்ற காரணங்கள் இளைஞர்களை அரசு வேலை நோக்கி ஈர்க்கின்றன. தமிழக அரசுப் பணிக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் வரித்தண்டலர் ஆகிய பல்வேறு விதமான பதவிகளில் 5,451 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் வரும் நவம்பர் 6-ல் நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட் டச்சர் பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 30, பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்-2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்றாலும் கூட பெரும்பாலும் பிளஸ்-2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் குரூப்-4 தேர் வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

இவ்வாண்டு 12 லட்சம் பேர்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு ஏறத்தாழ 12 லட்சம் பேர் விண்ணப் பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்பேரில் சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் திருத்தியமைக்கப்பட இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு வேலை உறுதி. எனவேதான், குரூப்-4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் டிஎன் பிஎஸ்சி இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். அப்ஜெக்டிவ் (கொள்குறி வகை) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இருக்கும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்.

பொது அறிவு பகுதியானது அனை வருக்கும் பொதுவானது. பொது தமிழ், பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். பெரும்பாலான விண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வுசெய்கிறார்கள்.

போட்டித் தேர்வின் உத்திகள்

12 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இதில் 12 லட்சம் பேருமே உண்மையான போட்டியாளர்களாக இருக்க முடியாது. அரசு வேலை என்ற ஆசையில் நாமும் எழுதிப் பார்ப்போமே என விண்ணப்பிப்ப வர்களும், தேர்வுக்கான தயாரிப்பே இல்லாமல் எழுதுபவர்களும் இதில் பெரும்பான்மையினராக இருப்பர்.

டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் போட்டித் தேர்வுகளுக்காக முழுமை யான தயாரிப்பில் உள்ளவர்கள் மத்தியில் தான் உண்மையான போட்டி இருக்கும். எனவே, எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இன்று முதல், இருக்கும் காலத்தை துல்லியமாக திட்டமிட்டு பயன் படுத்தி தயாரிப்பில் ஈடுபட்டாலே வெற்றி வசப்படும். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் அல்லது ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். 10-ம் வகுப்பு தரத்தில்தான் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், வெற்றிக்கான மதிப்பெண்ணை தரும் கேள்விகள் சில நேரங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் இருந்தும் கேட்கப்படலாம் என்பதால் அடுத்த கட்டமாக மேல்நிலைப் பள்ளி பாடங்களை படிப்பது கூடுதல் சிறப்பு.

நாட்டு நடப்புகள், கணிதம், திறனறிவு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இனிவரும் காலங்களில் துறைசார் வல்லுநர்கள் விளக்குவார்கள். அவர் களின் வழிகாட்டுதலின்படி தயாரிப்பில் ஈடுபட்டாலே போதும். எனினும், தயாரிப் பின் தொடக்கம் என்பது மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களை படிப் பதில் இருந்து தொடங்குவதே நலம்.

மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் தலங்கள், முக்கிய இடங்கள் என தமிழ்நாட்டை மையமாக வைத்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்ப தால் தமிழகம் குறித்த பொது அறிவு புத்தகத்தை வாங்கி படிப்பது அவசியம். கணிதம் மற்றும் திறனறிவு பகுதியில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் வெளியாகும் கணித மாதிரி வினா - விடைகளை தொடர்ச்சியாக முயன்று பார்ப்பது நேர மேலாண்மைக்கு உதவும்.

வெற்றிக் கொடி கட்டலாம்

‘வெற்றிக்கொடி’ பகுதி மூலம் உயர் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக எண்ணற்ற தகவல்களை மாணவ சமுதாயத்துக்கு வாரி வழங்கிக் கொண் டிருக்கும் ‘தி இந்து’ நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ - மாணவிகளுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு மாதிரி வினா - விடைகளை வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மாதிரி வினா - விடைகளுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். இதற்கு இளைஞர்களிடம் இருந்து ஏகோபித்த ஆதரவும் கிடைத்தது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி வினா-விடைகளையும், அரிய ஆலோ சனைகளையும் வழங்க இருக்கிறோம்.

வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் இப்பகுதி வெளியாகும். அனுபவம் பெற்ற நிபுணர் கள், துறை வல்லுநர்கள் வினா-விடை களை தொகுத்து வழங்க உள்ளனர். வெறும் வினா - விடைகள் மட்டுமல்லாமல் தேர்வுக்கு தயாரா வோருக்குப் பெரிதும் பயன்தரக் கூடிய தயாரிப்பு உத்திகளும், விளக் கங்களும் வழங்கப்பட உள்ளன.

கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் வகுப்பறைக்குள் புகுந்து மாணவி படுகொலை: முன்னாள் மாணவர் கைது



கரூர் அருகே உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் வகுப்பறைக் குள் புகுந்து மாணவியை கட்டை யால் அடித்துக் கொன்ற முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி(19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி அருகே உள்ள வெங்க ளூரைச் சேர்ந்தவர் உதயகுமார்(21). இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த இவர், சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப் படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கல்லூ ரிக்கு வந்த உதயகுமார், வகுப் பறையில் இருந்த சோனாலியைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அங்கு கிடந்த கட்டையால் சோனாலியின் தலை யில் உதயகுமார் தாக்கியுள்ளார். தடுக்க வந்த சக மாணவர்களையும் தாக்கிவிட்டு, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதில், பலத்த காயமடைந்த சோனாலியை அங்கு இருந்தவர் கள் மீட்டு, கரூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனாலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை அடித்து உதைத்த மாணவிகள்


ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை அடித்து உதைத்து மண்டியிடச் செய்த மாணவிகள்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரத் தில் ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை மாணவிகள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்து மண்டியிடச் செய்தனர்.

புவனேஸ்வரத்தில் உட்கல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம் மாலை வகுப்பு கள் முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் வினோத் குமார் என்பவர் மாணவிகளைப் பார்த்து அநாகரிகமாக கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் சக மாணவிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத் துக்குள் சில மாணவிகள் பிரம்பு கம்புகளுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியரை அடித்து உதைத்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்கச் செய்தனர். உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

குடிப்பதற்கும், சமையலுக்கும் மழைநீர் மட்டுமே உபயோகம்: 28 ஆண்டுகளாக பின்பற்றும் முதியவர்

Return to frontpage

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர் தனது குடும்பத் தேவைகளுக்காக குடிப் பதற்கும், சமைப்பதற்கும் மழை நீரை மட்டுமே சேகரித்து 28 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்.

மழை பொழியும் காலங்களில் குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் மழைநீரை சேகரித்து வைத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மழையில்லாத காலங்களிலும் நமக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்காக கொண்டு வரப்பட்ட அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டம் தற்போது பெரும்பாலும் வீடுகள், அலுவலகங்களில் பயன்பாட்டில் இல்லை. மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை போன்ற காரணங்களாலும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. இதனால் மழைக்காலம் முடிந்த சில நாட்களிலேயே, மீண்டும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. குடிப்பதற்குகூட தண்ணீர் கிடைக் காததால் அதிருப்தி அடைந்த மக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

மதுரை வில்லாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த விமானப் படை மற்றும் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சேகர் (70) என்பவர், தனது வீட்டிலேயே மழைநீரைச் சேகரித்து கடந்த 28 ஆண்டுகளாக குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார். மாடியிலிருந்து விழும் மழைநீரைச் சேகரித்து வைப்பதற்காக பிரத்யேகமாக தொட்டி ஒன்றை அமைத்துள்ளார்.

இதுகுறித்து சேகர் கூறியதாவது: வங்கியில் பணியாற்றியபோது ஒருநாள் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும், லாரியில் கொண்டு வரப்பட்ட தண்ணீரைப் பிடிப்பதற்காக மக்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து, வீட்டிலேயே மழைநீரை சேகரிக்க முடிவு செய் தேன். அதன்படி, மாடியிலிருந்து விழும் மழைநீரை பாத்திரங்கள் மற்றும் தொட்டியில் சேகரித்தோம். முதலில் வரும் மழை தண்ணீரில் தூசி கலந்திருக்கும். எனவே, முதல் 10 நிமிடங்களுக்கு வரும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு கிடைக்கும் தண் ணீரை மட்டுமே சேகரிக்க வேண்டும்.



பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மழைநீர்.

இதற்காக தனியாகத் தொட்டி கட்டி உள்ளோம். மாடியிலிருந்து வரும் மழைநீர் குழாய் வழியாக நேரடியாக தொட்டிக்குச் சென்றுவிடும். அதேபோல, மழைக்காலங்களில் பிளாஸ்டிக் தொட்டி, பாத்திரங்களில் சேகரித்தோம். சுத்தமான துணியால் தண்ணீர் சேகரித்துள்ள பாத்திரங்களை மூடிவிட வேண்டும். இந்தத் தண் ணீரை கொதிக்க வைத்தே குடித்து வருகிறோம். சமையலுக்கும் இந்த தண்ணீரையே பயன்படுத்து கிறோம். வெளியூர் சென்றாலும், பாட்டிலில் தண்ணீரைக் கொண்டு செல்வேன். நாளொன்றுக்கு ஒரு குடம் தண்ணீர் செலவாகிறது. இதுவரை, ஒருமுறை கூட தண் ணீருக்குப் பற்றாக்குறை வந்தது கிடையாது. மினரல் வாட்டரைவிட மழை நீர் தூய்மையாக இருப்பதால் வெளியிலும் விலைக்கு வாங்கியது கிடையாது.

எப்படியானாலும் தண்ணீர் தீர்வதற்குள் மழை பெய்துவிடும். வெளியூர் செல்லாத நாட்களில் எங்கிருந்தாலும் மழை பெய்தால் வீட்டுக்கு வந்து விடுவேன். பாத்திரம் கழுவிய தண்ணீரைத் தோட்டத்தில் வளர்க்கும் துளசி, செம்பருத்தி, தூதுவளை, தென்னை, வாழை உள்ளிட்ட தாவரங்களுக்கு ஊற்றுகிறோம். சொந்த வீடு வைத்துள்ள ஒவ்வொரு வரும் மழையை நம்பி நமக்கு நாமே என இத் திட்டத்தைச் செயல்படுத்தினால் குடிநீர் பிரச்சினையை சுலபமாக தீர்த்து விடலாம் என்றார்.

சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி அறிமுகம்

Return to frontpage

நிறுவனம் டிரைவர் இல்லாத காரை சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னமும் அமெரிக்காவில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான்.

கூகுள் நு டோனோமி (Nu Tonomy) என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் இந்நிறு வன செயலியை (App) பயன்படுத்தி இந்த டாக்சி சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு குறிப் பிட்ட வழித்தடத்தில் இந்தக் கார் சேவையை இயக்குகிறது.

தொடக்கத்தில் இந்த கார் பயணம் முற்றிலும் இலவசமாகும். முதலில் 6 கார்களை இதுபோல் டிரைவர் இன்றி இயக்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 12 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை வழங்குவதே இந்நிறுவனத்தின் இலக்காகும். தொடக்கத்தில் இந்த வாடகைக் கார்கள் 6.5 சதுர கி.மீ. தூர அளவிற்குள் இயக்கப்படும். இப்பகுதி ஒன் நார்த் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள வாடிக்கையாளர்கள் நு டோனோமி செயலியைப் பயன்படுத்தினால் அவர்கள் இருப்பிடத் துக்கு கார் வந்து அவர்களை அழைத்துச் செல்லும். தொடக்க நாளன்றே 12 பேர் இந்நிறுவன செயலியைப் பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

ரெனால்ட் ஜே, மிட்சுபிஷி ஐ-எம் உள்ளிட்ட கார்கள் மாற்றம் செய்யப்பட்டு இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கார்களில் 6 செட் லிடார் எனப்படும் உணர் கருவி பொறுத்தப்பட்டிருக்கும். இது ரேடார் போன்று செயல்படும். இதுதவிர காரின் மேல் பகுதியில் ஒன்று சுழன்று கொண்டிருக்கும். முன்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. இது டிராபிக் சிக்னல் விளக்கின் நிற மாற்றங்களை உணர்ந்து காரை இயக்கும்.

கார் எங்கிருந்து தேவை, எதுவரை பயணம் செய்யப் போகிறோம் போன்ற விவரங்களை பதிவு செய்து விட்டால் போதுமானது. இதுபோன்ற டிரைவர் தேவைப்படாத கார்கள் புழக்கத்துக்கு வரும்போது சிங்கப்பூரில் கார்களின் எண்ணிக்கை 9 லட்சத்திலிருந்து 3 லட்சமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டங்கள் முடிந்துவிட்டன. இனி குறிப்பிட்ட வழித்தடங்களில் இதைச் செயல்படுத்த வேண்டியதுதான் என்று நு டோனோமி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கார்ல் இயாக்னெமா தெரிவித்துள்ளார்.

டிரைவர் தேவைப்படாத டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ள நு டோனோமி நிறுவனத்தில் சிங்கப்பூர் மற்றும் மாச சூசெட்ஸ் அலுவலகங்களில் மொத்தமே 50 பணியாளர்கள்தான் உள்ளனர். 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறு வனம் தொடக்கத்தில் அமெரிக்க ராணு வத்துக்கு ரோபோட்டிக் வாகனங் களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. கடந்த ஓராண் டாகத்தான் டிரைவர் இல்லாத வாகன செயல்பாட்டில் கவனம் செலுத்தியது.

கடந்த ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கம் ஒன் நார்த் எனும் பகுதியில் டிரைவர் இல்லாத வாகனத்தை சோதனை ரீதியில் செயல்படுத்திப் பார்க்க இந்நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. இதைச் செயல்படுத்த சிங் கப்பூர் தரைவழிப் போக்குவரத்து ஆணையத்துடன் இந்நிறுவனம் ஒப்பந் தம் செய்து அதை நிறைவேற்றியுள்ளது.

சிங்கப்பூரில் தட்ப வெப்ப நிலை மிகவும் சரியான அளவில் உள் ளது. இங்குள்ள வாகன ஓட்டிகள் சட்ட விதிகளை முறைப்படி பின்பற்றுகின் றனர். இதனால் இங்கு டிரைவர் இல்லா வாகனத்தை செயல்படுத்திப் பார்ப்பதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை என்கிறார் கார்ல்.

ஆட்டோமொபைல் உதிரிபாகங் களை சப்ளை செய்யும் டெல்பி நிறுவன மும் டிரைவர் தேவைப்படாத கார் களை இயக்கிப் பார்க்க சிங்கப்பூர் அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந் நிறுவன கார்கள் அடுத்த ஆண்டு சிங்கப் பூர் சாலைகளில் வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இடப் பற்றாக்குறையும், மனித வள பற்றாக்குறையும் நிலவுகிறது. இவ்விரு பிரச்சினைக்கு டிரைவர் தேவைப்படாத கார்கள் சிறந்த தீர்வாக அமையும் என்று கருதுவதாக சிங்கப்பூர் போக்குவரத்துத் துறையின் நிரந்தர செயலர் பாங் கின் கியோங் தெரிவித்துள்ளார்.

டிரைவர் தேவைப்படாத கார்கள்தான் எதிர்கால சாலையை ஆக்கிரமிக்கப் போகின்றன என்பதற்கு இது ஒரு முன்னோட்டம் என்பதில் சந்தேகமில்லை.

Monday, August 29, 2016

MD course in family medicine in the offing

THE HINDU 

Dr. H.S. Ballal, Pro-Chancellor, Manipal University, Karnataka, on Friday said the Medical Council of India is planning to roll out an MD course in family medicine shortly.

Delivering the 9th Graduation Day address at the Pondicherry Institute of Medical Sciences (PIMS), Dr. Ballal pointed out that while in the past there used to be family physician concept where the family doctor not only was taking care of medical problems but used to be like a senior family member helping the family in other areas like matrimonial and other problems of the family, that trend had disappeared.

It was in this scenario that the MCI was planning to introduce MD in family medicine.

Dr. Ballal called for greater emphasis on prevention of disease which was cheaper with protected water supply, immunisation and clean surroundings. Though a lot of advances were taking place in medical field with newer generation of equipment both for diagnostic and therapeutic purposes, the important thing that we have to recognise is that these facilities should be accessible to the poorest of the poor across the country at a reasonable cost — almost 70 per cent of people live in rural areas and 65 per cent of the population is below poverty line.

Stating that educational institutions “are more sacred than places of worship”, Dr. Ballal felt that sub standard institutions were flourishing only because there was less supply of medical colleges compared to the demand. “If we match the supply and demand, naturally substandard institutions will perish,” he said. There were 426 medical colleges in the country producing more than 50,000 MBBS students but the number of postgraduate seats available especially in clinical subjects was less than a third of the total MBBS graduates, he said.

Some of the States were making rural services compulsory to be eligible for post graduate admission. “The reason why the doctors are not going to rural areas are lack of infrastructure, no supporting staff, no drugs, no equipment and poor facilities regarding accommodation and schools,” Dr. Ballal said.


Higher education should focus on expansion, equity, excellence and employability alongside imparting values and skill development. “If we incorporate all these above mentioned factors we can produce good doctors,” he said.

Dr. Ballal reminded doctors that the medical profession was considered a noble profession. “In the past doctors used to be treated like demi-gods but today our reputation is rapidly going down because of some unethical practices,” he said.

To the young doctors he had a word of advice: “Don’t be mercenaries, money will automatically come with the hard work and dedication to the profession.”

Dr. Renu G Boy Varghese, PIMS Director-Principal, presented a report.

In all, 106 MBBS students graduated and 43 post graduates were awarded their degrees. Six MBBS students received ICMR short term student fellowships while PIMS short term student fellowship was given to nine students.

Dr. Siddhant J Thampi got the Gold Medal for the Best Outgoing Student for 2015. The Aban Memorial Gold Medal for the All Rounder of the Year 2015 was awarded to Dr. Aravind S. and the Dr. Ramachandran A Memorial Best Sports Person for 2015 to Dr. Shrieaswari S.Dr. Ashok Kumar R was declared the Best Intern for 2015 and awarded a Gold Medal. The JT Kuruvila Award for 2015 Best Intern in OBG was awarded to Dr. Divya R.

திங்கட்கிழமையை உற்சாகமாகத் துவக்க உதவும் 4 GIF-கள்..! #MondayMotivation

VIKATA NEWS

இன்று திங்கள் கிழமை. நாம் உச்சபட்ச உற்சாகத்துடன் வேலையை துவங்க வேண்டிய நாள். இந்த நான்கு விஷயங்களை மனதுக்குள் சொல்லிக்கொண்டு பின்னர் வேலையை தொடங்குங்கள்.

1. நான் எந்தவொரு வேலையையும் சிறப்பாகச் செய்வேன் :- எந்தவொரு வேலையும் உயர்ந்ததோ, தாழந்ததோ கிடையாது. செய்யும் தொழிலே தெய்வம் என்பதால், நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதை சிறப்பாகச் செய்யும்போது நீங்கள் வாழ்வில் வளர்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாது. இப்போதைக்கு உங்களை விட இன்னொருவர் உங்களது வேலையை சிறப்பாகச் செய்துவிட முடியாது. அதே சமயம், நீங்கள் இன்னும் சிறப்பாக வேலையைச் செய்யக் கூடியவர். எனவே உங்களது பெஸ்ட்டை நீங்கள் தான் வெளிக் கொணர வேண்டும். nothing is impossible - man

2. எல்லாமே சாத்தியம் :- உங்கள் மீது மட்டுமே வேலைச் சுமை இறக்கி வைக்கப்படுகிறது என நினைக்காதீர்கள். பனிச்சுமை என்பது சில சமயங்களில் தவிர்க்க முடியாது. அதற்காக சோர்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு எந்தவொரு சோதனை வந்தாலும் அதனை சாதனையாக மாற்றும் திறன் இருக்கிறது. உங்களது திறனை உலகுகுக்காட்டும் வாய்ப்பாக இதனை பாருங்கள். எல்லாமே சாத்தியம் என்பது மட்டும் உங்களது மனதில் பதிந்துவிட்டால் இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரமே.you are doing a great job very great job - lady

3. முயற்சியை கைவிடாதீர்கள்:- எல்லா ஜாம்பவான்களும் அவரவரது வேலைகளில் பல்வேறு சாவல்களை சந்தித்து தான் வெற்றிபெற்றிருக்கிறார்கள். நீங்கள் உங்களது வேலையை மிகச்சிறப்பாகச் செய்யும் போது உங்கள் மீது பலர் கல்லெறியலாம். ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் சோர்ந்து விடக்கூடாது. உங்களது முயற்சியை நீங்கள் தொடர வேண்டும். ஏனெனில் உங்களுக்காகத் தான் வெற்றி தேவதை மலை உச்சியில் காத்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். don't give up - bike

4. கனவு காணுங்கள் : - அப்துல்கலாம் சொன்னது தான். கொஞ்சம் டெம்பிளேட்டாக இருந்தாலும் இது தான் முக்கியம். கனவு காண்பதை எப்போதும் கைவிடாதீர்கள். டெஸ்லாவுக்கோ, எடிசனுக்கோ மின்சாரம் என்பது சாத்தியம் என தோன்றியிருக்காவிட்டால் இந்நேரம் நமக்கு விளக்கு வெளிச்சமே இருந்திருக்காது. கம்பியில்லா மொபைல் சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் நினைத்திருந்தால் இந்நேரம் மொபைலில் நீங்கள் இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்க முடியாது. எனவே அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசியுங்கள். உங்களது கற்பனைச் சிறகுக்கு சுதந்திரம் கொடுங்கள்.உங்கள் கனவு தானாக அதுவே நனவாகாது. நீங்கள் தான் உழைக்க வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அது சாத்தியப்படும். ஏனெனில் நீங்கள் ஒரு வாழும் லெஜெண்ட் அல்லவா.

Posted Date : 11:30 (29/08/2016) 30 ஆண்டுகள் சேதி சொல்லும்,'தகவல் மனிதர்' பழனிச்சாமி!

VIKATAN NEWS

திருச்செங்கோட்டில் இருந்து, ஈரோடு செல்லும் வழியில் இருக்கிறது ஐந்து பனை பேருந்து நிறுத்தம். இங்கு வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகைகள் இந்த ஊர் மக்களுக்கு மட்டும், ரொம்ப ஸ்பெஷல். காரணம், இந்த தகவல் பலகையில் தினமும் அன்றைய செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள், அரசின் அறிவிப்புகள் என முக்கிய விஷயங்கள் தினமும் இடம் பெறும். இந்த தகவல் பலகையில், கடந்த 30 வருடங்களாக இந்த தகவல்களை எழுதி சேவை செய்து வருகிறார் அந்த ஊரின் தகவல் மனிதர் பழனிச்சாமி.
யார் அந்த பழனிச்சாமி என விசாரித்து, அவரைக் காண சென்றோம். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் பழனிச்சாமி. ஆனால் 30 ஆண்டுகளாக ஊர் மக்களுக்காக தகவல் பலகையில் எழுதி வருகிறார். இதனால் ஊர்மக்கள் இவருக்கு வைத்திருக்கும் பெயர் 'தகவல் மனிதர்'. இது குறித்து சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

எத்தனை வருடமாக, நீங்கள் தகவல் பலகை எழுதுகிறீர்கள்?

"நான் சிறுவனாக இருந்தபோது, என் வீட்டில் வறுமை. அதனால் எட்டாம் வகுப்பைக் கூட, முழுமையாக முடிக்காம நின்று விட்டேன். ஆனால் அதற்குப் பிறகும், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்ததால் தினசரி நாளிதழ்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். சமூக ஆர்வமும் எனக்கு அதிகம். அதனால், ஏதாவது செய்ய வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் இந்த யோசனை வந்தது. சரியாக 1985-ல் இருந்து தகவல் பலகையில் எழுதி வருகிறேன். இன்னும் எழுதுவேன்".

ஏன் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் எழுத நினைத்தீர்கள்?

"பேருந்துக்காக இங்கே நிற்கும் போது, அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கும். அப்போது அவர்கள் படிக்க வசதியாக இருக்கும் என்றுதான் இங்கே எழுத ஆரம்பித்தேன். பேருந்தில் வருபவர்களும் இதைப் படிக்க முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலருக்கும் உபயோகமாக இருக்கும். அவர்களும் இதனைப் பாராட்டுகிறார்கள். அனைவருக்கும் பயன்படும் விதமாக அரசு வேலைவாய்ப்பு, அரசு அறிவிப்புகள், பொது அறிவு விஷயங்கள் போன்றவற்றை எழுதுகிறேன்".




இதற்காக மாதம் எவ்வளவு செலவு செய்வீர்கள்?

"தினமும் இரண்டு அல்லது மூன்று தினசரிகள் வரை வாங்குவேன். எழுதுவதற்குத் தேவையான மாவும், சாயமும் வாங்கிவந்து நானே எழுதுவேன். பிறகு பள்ளிக்கூட விசேஷம், கண்தான முகாம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக எழுதிக் கொடுப்பேன். ஒரு தட்டி வைக்க சுமார் 50 ரூபாய் செலவாகும். வாரம் 6 தட்டி வைப்பேன். அத்துடன் மாவு, சாயம் என 1,500 ரூபாய் வரை செலவாகும். இதை ஒரு சேவையாக நினைத்து செய்வதால், இந்த செலவும், கஷ்டங்களும் தெரிவதில்லை".

இதைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிறையப் பேர் பாராட்டுவார்கள். ஒரு சிலர் கேலியும் செய்வர். என் பையன் மட்டும் அப்பப்போ என்னை திட்டுவான். அவன் திட்டுவதற்குக் காரணம், எனக்கு சுகர் இருப்பதால் அவ்வப்போது மயக்கம் வரும். அப்போதும் நான் எங்கேயாவது எழுதிக் கொண்டே இருப்பேன். யார் என்ன சொன்னால் என்னங்க? நாம் செய்வதால் மற்றவர்கள் பயனடைகிறார்கள். அது போதுங்க" என்றார் பழனிச்சாமி.

- ச.செந்தமிழ்செல்வன், லோ.பிரபுகுமார்
(மாணவப்பத்திரிகையாளர்கள்)

“ரேஷன் கார்டு அச்சடிக்க பணம் வேண்டும்...” லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்! (வீடியோ ஆதாரம்)

vikatan news

லஞ்சம் வாங்குவதும் குற்றம்.. கொடுப்பதும் குற்றம்...' இந்த வாசகம் எல்லா அலுவலகங்களில் நீக்கமற நிறைந்திருப்பதுபோல, லஞ்சமும் ஊழலும் குடி கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்கள் லஞ்சம் கொடுத்து காரியங்களை விரைவாக முடித்துக்கொண்ட காலம் மலையேறிவிட்டது. மக்கள் தற்போது லஞ்சம் கொடுப்பதை அசிங்கமாகப் பார்ப்பதுடன், லஞ்சம் கேட்கும் ஊழியர்களைப் பொது மக்கள் தைரியமாக அம்பலப்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் ராமன். உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாததால் திருப்பூரில் டைலராக வேலை பார்க்கும் இவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். ஐந்து வருடங்களில் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு நடந்ததில் ராமனின் செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம். ஐந்துமுறை அவரிடன் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர். ஏன் என்று கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ காரணம் சொல்லி உள்ளனர். அதிகாரிகளைப் பொறுத்தவரை ராமன் செய்த தவறு, அவர்கள் கேட்ட லஞ்ச பணத்தைத் தர மறுத்தது. லஞ்சம் தராமல் ரேஷன் கார்டைப் பெற்றுவிடவேண்டும் என ராமன் வைராக்கியத்துடன் இருக்க... ஒவ்வொரு முறையும் அவரது விண்ணப்பம் தட்டிக்கழிக்கப்பட்டதால் வெறுத்துப்போன ராமன் ஒரு முடிவுக்கு வந்தார்.

அந்த முடிவை ராமனே விவரிக்கிறார், ''லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏதாவது பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் போன் கேமராவை ஆன் செய்துவிட்டு, சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பேச்சம்பள்ளி தாலுக்கா ஆபீஸில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி சிவச்சந்திரன் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். என்னுடைய விண்ணப்பத்தைப் பார்த்த அவர், 'புது ரேஷன் கார்டுக்கு பிரின்டிங் செலவு இருக்கு, பல கட்டத்தைத் தாண்டி உங்க விண்ணப்பம் போகணும். அதனால செலவு ஆகும்' என்றார். 'ரேஷன் கார்டு வந்த உடன் பணம் தருகிறேன்' என நான் கூறியவுடன், கையெழுத்துப் போட்டு விண்ணப்பத்தை எறிந்தார். இதை அப்படியே பதிவுசெய்து வந்துவிட்டேன். நான் லஞ்சம் தராததால், ஏதாவது காரணத்தைச் சொல்லி விண்ணப்பத்தை ரிஜக்ட் செய்துவிடுவார்கள். 5000 ரூபாய் தந்திருந்தால் ஒரே மாதத்தில் எண்ணால் புது ரேஷன் கார்டைப் பெற்றிருக்க முடியும். ஆனால், நான் அதை விரும்பவில்லை. எங்கள் ஊரில் பலர், பிறந்த குழந்தைக்கு, பிறந்த சான்றிதழைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு தீர்வு வேண்டும்'' என்றார் ஆதங்கத்துடன்.

இதுபற்றி கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி ராஜேந்திரனிடம் பேசினோம். அவர், ''நீங்கள் சொல்லிய பிறகுதான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வருகிறது. புது ரேஷன் கார்டுக்காக மக்கள் ஒரு பைசாகூடக் கொடுக்க வேண்டியதில்லை. இதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

சென்னை 377: இடைவிடாத 372 ஆண்டு சேவை

THE HINDU TAMIL

தமிழகத்தின் முதல் நவீன மருத்துவமனையான சென்னை அரசு மருத்துவ மனைக்கான விதை 1644-ல் புனித ஜார்ஜ் கோட்டையில் இடப்பட்டது.

அதேநேரம் சென்னை அரசு பொது மருத்துவமனை 1772-ல் இருந்து கடந்த 245 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே செயல்பட்டு வருகிறது. 1644 - 1772-க்கு இடைப்பட்ட காலத்தில் அரசு மருத்துவமனை கட்டிடம் 9 முறை மாற்றப்பட்டது. 2002-ல் கட்டிடம் கட்டப்பட்டது 11-வது முறை.

புதிய இடம்

1771 வரை நகரின் மையமாகக் கருதப்பட்ட ஆர்மீனியன் தெருவில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. 1760-களிலேயே மருத்துவமனையை இடம்மாற்றுவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு, இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டாலும் 1771 வரை ஒரு கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. 1680-களில் மதராஸ் நரிமேடு பகுதியின் தாழ்வான சரிவுகளில் கிழக்கிந்தியக் கம்பெனியின் கார்டன் ஹவுஸ் அமைந்திருந்தது. அந்த இடத்தில்தான் தற்போதைய சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் அமைந்துள்ளன. அதையடுத்த இடமே அரசு மருத்துவமனை கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

அரசு பொது மருத்துவமனை தற்போது அமைந்துள்ள இடத்தில் முதல் கட்டிடத்தைக் கட்டியவர் ஜான் சல்லிவன். 1772 அக்டோபர் 5-ம் தேதியில் இருந்து புதிய இடத்தில் அரசு மருத்துவமனை செயல்பட ஆரம்பித்தது. அன்றைக்கு நகரைப் பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த கோட்டை போன்ற டவுன் சுவரில், அரசு மருத்துவமனைக்கு வழிவிடும் ஒரு கதவு இருந்தது. அது ‘ஹாஸ்பிடல் கேட்’ என்றே அழைக்கப்பட்டது.

அழகை இழந்த கட்டிடங்கள்

ஆண்டுகள் செல்லச் செல்ல அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல், இதயநோயியல், மற்றச் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட, 1960-களில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் தனித்தனிக் கட்டிடங்கள் கட்டப்பட ஆரம்பித்தன. ஆனால், பழைய கட்டிடங்களின் வடிவ அழகை அவை பெற்றிருக்கவில்லை. 2002-ம் ஆண்டில் அரசு மருத்துவமனையின் இரண்டு முதன்மை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இன்றைக்கும் முகப்பில் உள்ள இரண்டு குவிமாட கட்டிடங்களில் இருக்கும் டாக்டர் எம். குருசாமி, டாக்டர் எஸ். ரங்காச்சாரியின் சிலைகள் மட்டுமே 1930-களின் காட்சிகளை நினைவுபடுத்தும் ஒரே அடையாளமாகத் திகழ்கின்றன. முகப்பைத் தாண்டி உள்ளே சென்றால் பழசை நினைவுபடுத்தும் கட்டிடங்கள் இந்த வளாகத்துக்குள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அதேநேரம், இந்தக் கட்டிடங்கள் பலவும் பராமரிப்புக்காக ஏங்கித் தவிக்கின்றன.

மக்கள் மருத்துவமனை

மதராஸ் முதல் மருத்துவமனையின் பெயர் 1692-ல் அரசு மருத்துவமனை என்று மட்டுமே வழங்கப்பட்டது. ‘பொது’ என்ற வார்த்தை அப்போது இல்லை. அதற்குக் காரணம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே அந்த மருத்துவமனை சிகிச்சை அளித்து வந்ததுதான்.

1842-ல்தான் அரசு பொது மருத்துவமனை ஆனது. அப்போதுதான் இந்தியர்களுக்கும் இந்த மருத்துவமனை சிகிச்சை அளிக்க ஆரம்பித்தது. 1899-ல்தான் ராணுவச் சேவையை விடுத்து, முழுக்க முழுக்க மக்களுக்கான மருத்துவமனையாக இது மாறியது.

சென்னையின் மருத்துவச் சாதனைகள்

அரசு பொது மருத்துவமனை பல்வேறு புதிய கண்டறிதல்களுக்காகவும் புகழ்பெற்றிருக்கிறது. காலா அசர் என்ற பயங்கர நோய்க்குக் காரணமாக இருந்த கிருமியை மதராஸ் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்த கர்னல் சி. டோனவன் 1903-ல் கண்டறிந்தார். இந்தத் தகவல் இங்கிலாந்துக்குச் சென்றபோது, டாக்டர் லீஷ்மேன் என்பவரும் அதே கிருமியைக் கண்டறிந்திருந்தது தெரியவந்தது. அதனால், அந்தப் பாக்டீரியாவைக் கண்டறிந்த பெருமை இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அந்தப் பாக்டீரியாவின் பெயரில் இருவருடைய பெயரும் Leishman Donovani இடம்பெற்றது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த டோனவன், அந்த மருத்துவமனையில்தான் அந்தக் கிருமியைக் கண்டறிந்திருக்க வேண்டும்.



அதேபோலப் பெப்டிக் அல்சருக்கான நவீன சிகிச்சைகளில் ஒன்றை இந்தியாவிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தியவர் டாக்டர் டபிள்யு.ஜெ. நிப்லாக். அரசு மருத்துவமனையில் 1905 மார்ச் 2-ம் தேதி இது நிகழ்த்தப்பட்டது.

முதல் தலைமை மருத்துவரின் விநோதங்கள்

மதராஸ் மருத்துவமனையின் முதல் தலைமை மருத்துவராக டாக்டர் எட்வர்டு பல்க்லே 1692-ல் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே இந்தியாவின் முதல் மருத்துவ-சட்ட ரீதியிலான பிரேதப் பரிசோதனையை அவர் நடத்தினார். கிழக்கிந்திய கம்பெனியின் மூத்த அதிகாரி ஒருவருக்குத் தவறாகக் கொடுக்கப்பட்ட மருந்தால் ஏற்பட்ட இறப்பு காரணமாக இந்தப் பிரேதப் பரிசோதனை நடந்தது. ஏற்கெனவே ஆர்செனிக் இருந்த பாத்திரத்தை ஒழுங்காகக் கழுவாமல் மருந்து தயாரித்ததால் இந்த இறப்பு நேர்ந்தது. அதேபோல முதல் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர், முதல் காயமடைந்ததற்கான சான்றிதழை வழங்கியவரும் எட்வர்டு பல்க்லேதான். அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் இவருடைய கல்லறை உள்ளது. மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ள இந்தக் கல்லறையை இப்போதும் பார்க்கலாம்.

நன்றி: மெட்ராஸ் மியூஸிங்ஸ்

குறள் இனிது: கொஞ்சமாவது நினைச்சுப் பாரு குமாரு!

THE HINDU TAMIL

விளையாட்டுகளை பெரிய திரையில் விளையாடிய அனுபவம் உண்டா உங்களுக்கு?

வீடியோ இப்ப இந்தத் துரத்தும் (chase) விளையாட்டை விளையாடலாம் வாங்க.

ராட்சத மோட்டார் பைக்கில் சிரமப்பட்டு பாலன்ஸ் செய்து உட்கார்ந்து விட்டீர்கள் நீங்கள். புர்புர் எனும் பயங்கர சத்தத்துடனும் பெரும் புகையுடனும் வண்டி கிளம்பி விட்டது.

மானசீகமாக வேகம் கொடுக்கின்றீர்கள்; எதிரில் வரும் வண்டியில் மோதி விடாமல் வளைக்கின்றீர்கள்; பின்னால் வரும் பெரிய லாரிக்கு வழி விடுகின்றீர்கள்.

பெரும் இரைச்சலுடன் சீறிப் பாயும் வண்டி உங்கள் கையசைவுகளுக்கெல்லாம் பணிவது ஒரு கிறக்கத்தைத் தருகிறது இல்லையா? ஆனால் புயலாய்ப் பறக்கும் வேளையில் கொஞ்சம் கவனம் சிதறுகிறதே! அடாடா, வண்டி இடது பக்கச் சுவரில் படாரென மோதி விழுகிறதே! அச்ச்சோ தீப்பிழம்பாய் எரிகிறதே! அத்தகைய கோர விபத்தில் உங்கள் உடம்பில் மட்டும் என்ன மிஞ்சும்?

ஆனால் இது வீடியோ விளையாட்டுத்தானே! ஒன்றும் நடக்காதது போல உடனே எழுந்து மீண்டும் ஓட்ட முடிகிறது! இதுவே நிஜ வாழ்க்கையில் சாத்தியமா? விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் எழுதி வைக்கப் பட்டிருந்த இந்த வாசகத்தைப் பாருங்கள்.

‘மற்றவர்களின் தவறுகள் மூலம் கற்றுக்கொண்டு விடுங்கள்; ஏனெனில் உங்கள் தவறுகள் வழியாகக் கற்றுக் கொள்ள நீங்கள் உயிரோடு இருப்பீர்களா எனச் சொல்ல முடியாது!'

உண்மைதானே. அதனால்தான் விமான ஓட்டிகளுக்கு பயிற்சி அறையிலேயே உட்கார்ந்து கொண்டு வானத்தில் விமானத்தை ஓட்டுவதைப் போன்ற சூழ்நிலையைத் தத்ரூபமாக உருவாக்கி விமானத்தைச் செலுத்துவதன் நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள்! அண்ணே, நமது வாழ்க்கையில் நிகழக்கூடிய விபத்துகளை, தவறுகளை இந்த மாதிரி கற்பனை விளையாட்டு விளையாடி கற்றுக் கொள்ளமுடியாதே!

சாலையில், வானத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் வரும் பொழுது என்ன செய்யவேணும் எனப் பயிற்சியளிப்பது போல இதற்கும் ஏதேனும் வழி உண்டா? ஆமாம், இதற்கும் ஓர் எளிய வழி இருக்கிறது. மற்றவர்களின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வதுதான் அது! விளம்பரத்தில், விற்பனையில், வியாபாரத்தில் மற்றவர்கள் செய்த தவறுகளைக் கவனிப்பதும் அவற்றை நாம் தவிர்த்து விடுவதுமான யுக்தி!

ஆனால் கோபம் வந்து கண்ணை மறைப்பது போலவே வெற்றி வந்தாலும் சிலருக்குக் கண்ணை மறைத்து விடுகிறது!

வெற்றி தலைக்கு ஏறக்கூடாது, தோல்வி இதயத்தைத் தாக்கக் கூடாது என்பார்கள்.

இந்த மாதிரியான நேரங்களில் நம்முடன் போட்டியிட்டுத் தோற்றவர்களையும் அவர்கள் செய்த தவறுகளையும் நாம் எண்ணிப்பார்த்தால் நிதானம் வரும்!

மற்றவர்களின் தவறுகளிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்; ஏனெனில் எல்லாத் தவறுகளையும் செய்து பார்க்க உங்கள் வாழ்நாள் போதாது என எலெனர் ரூஸ்வெல்ட் சொல்லியதை மறுக்க முடியுமா?

நாம் மகிழ்ச்சியில் திளைத்து மயங்கும் பொழுது, தம் மறதியினால் கெட்டுப் போனவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்!

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ( குறள்: 539)

somaiah.veerappan@gmail.com

இரட்டை ஜடை போட்டால்தான் படிப்பு வருமா?...பாரதி ஆனந்த்

Return to frontpage

பள்ளிச் சிறுமிகள் பற்றிய நம் நினைவலைகளைத் தட்டிவிட்டால் நம் கண் முன் முதலில் தோன்றும் காட்சி உச்சி வகிடெடுத்து, இரட்டைப் பின்னல்கள் அதன் கீழ் அழகாய்க் கட்டப்பட்டிருக்கும் ரிப்பன்களுடன் ஓர் உருவம்.

இந்த இரட்டைப் பின்னல்தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒரு புகாரை முன்வைத்திருக்கிறார்.

அதில் இடம்பெற்றிருந்த ஐந்து குற்றச்சாட்டுகள்:

1. ஈரமான தலைமுடியை அப்படியே பின்னலாகக் கட்டும்போது அதிலிருந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் பேன் தொல்லை ஏற்படுகிறது.

2. தினமும் இரட்டைப் பின்னல் கட்டிக்கொள்வது நேர விரயமாகிறது. வீட்டில் இருப்பவர்கள் உதவியை நாட வேண்டியிருக்கிறது.

3. இரட்டைப் பின்னலால் முடி உதிர்வு அதிகமாகிறது.

4. காலையில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

5. இந்த விதிமுறை பாலினப் பாகுபாட்டை ஊக்குவிக்கிறது.

இந்தப் புகாரை ஆராய்ந்த மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பெண் குழந்தைகளை இரட்டைப் பின்னல் போட்டுக்கொள்ளும்படி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது, அதேவேளையில் மாணவிகள் தலைமுடியைச் சீராக வாரி வர வேண்டும் என்பதைக் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதுதான் சங்கதி. இந்த உத்தரவுக்கு ஆதரவு இருக்கும் அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. அண்டை மாநிலத்தின் இந்தச் செய்தியை முன்வைத்து நம்மூரில் சிலரிடம் இது குறித்துக் கருத்து கேட்டோம். அந்த மாணவியின் கருத்தை ஆதரிக்கும் தாய்மார்கள், தினமும் எண்ணெய் தேய்த்து இரட்டைப் பின்னல்கள் கட்டுவதும், வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே தலையில் தண்ணீர் விட்டு அலசும் நெருக்கடி ஏற்படுவதும் நிச்சயம் சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு நேர விரயத்தையும் இது ஏற்படுத்துகிறது. இரட்டைப் பின்னல்களும் ரிப்பன்களும் இல்லாமல் தலையைச் சீராக வாரிக்கொண்டு வருமாறு தெரிவிப்பதும் நல்லது என்று சொல்கிறார்கள்.

ஒருசில தாய்மார்களைப் பொறுத்தவரை நேர விரயம் என்றாலும் பள்ளிக்குச் செல்லும்போது சீராக இருப்பதுதான் அழகு. அதுமட்டுமல்லாமல் எப்படி வேண்டுமானாலும் தலைவாரிக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டால் பிள்ளைகள், அதுவும் பதின்பருவ பிள்ளைகள், சிகை அலங்காரத்துக்கே அதிக நேரம் செலவழிப்பார்கள் என்று கூறுகின்றனர்.

இந்த இரு வாதங்களையும் ஆசிரியர் ஒருவரிடம் முன்வைத்தோம். புதுச்சேரி சவராயலு நாயகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமாவதி கூறும்போது, “கேரள மாணவியின் வாதங்கள் அனைத்தும் ஏற்புடையதே. நம் நாடு முழுவதும் கல்வியில் சமத்துவம் இருக்கிறதா? கல்வியில் சமத்துவம் ஏற்பட்டால் இளைய சமுதாயம் ஊக்கம் பெற்று ஏற்றம் காணும். அதை விடுத்து இது போன்ற சிறிய விஷயங்களில் கட்டுப்பாடு கடைப்பிடிப்பதால் என்ன நன்மை இருக்கிறது? ஒரு பெண் குழந்தை அவளது தலைமுடியை நீளமாகவோ கட்டையாகவோ வைத்துக்கொள்வது அவளது உரிமை. பள்ளிக்கு வரும்போது தலை முடியைச் சீராக வாரி வந்தால் போதுமானதே. இரட்டைப் பின்னலும் ரிப்பனும் ஒழுங்கின் அடையாளம் அல்ல. அது நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்க நெறி பிம்பம். கேரள மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் உத்தரவை எல்லா மாநிலங்களும் பரிசீலிக்கலாம்” என்றார்.

இன்னும் பெண் சிசுக் கொலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; பெண்களுக்கு முழுமையாகக் கல்வி கொடுக்க முடியவில்லை; பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. செய்வதற்கு இவ்வளவு இருந்தும் நம் சமூகத்துக்கு இரட்டைப் பின்னல்தான் இன்னும் பிரச்சினை என்பதை நினைத்துப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது.

Sunday, August 28, 2016

நீங்கள் ஒரு நல்ல கணவரா?- 10PointCheck



vikatan.com

"வேலை..குடும்பம்..குழந்தைன்னு நான் நல்லாதானே பாத்துக்கிறேன்.. அப்புறம் எங்க மிஸ் ஆகுது”ன்னு யோசிக்கறீங்களா? அப்ப இந்த 10 பாயிண்ட்ஸ் உங்களுக்குதான். புது ஜோடியில இருந்து சில்வர் ஜூப்லி கொண்டாடின ஜோடிகள் வரைக்கும் இந்த மேட்டர் பொருந்தும். கல்யாணமே ஆகலைன்னாலும் எதிர்காலத்துல யூஸ் ஆகும் ப்ரோ.



1. சமைச்சு கொடுங்க :

உங்க மனைவிதான் தினமும் உங்களுக்கு சமைச்சு தறாங்களா? அப்ப ஒருநாள் நீங்க சமைச்சு கொடுக்க டிரை பண்ணுங்க. சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆளாக இருந்தால், இன்னும் சிம்பிள். உங்க மனைவிகிட்டயே 'நீ சமைக்க சொல்லிக்கொடு, நான் கத்துக்கறேன்'னு அவங்க சொல்லச் சொல்ல கேட்டு அவங்களுக்கு இஷ்டமானதையே செஞ்சு கொடுக்கலாம். சமைச்சது ரொம்ப சுமாராக இருந்தாலும் கண்டிப்பாக இந்த சாப்பாடு அவங்களுக்கு டேஸ்டாக தான் இருக்கும்.


2.எழுதுங்க :

லவ் லெட்டரை காதலிக்கற பொண்ணுக்கு தான் கொடுக்கணும்னு கிடையாது. மனைவிக்கும் கொடுக்கலாம். அவங்களை எவ்வளவு லவ் பண்றீங்க, அவங்க வந்ததுக்கு பிறகு உங்க வாழ்க்கை எப்படி எல்லாம் மாறி இருக்குனு குட்டி காதல் கடிதமா எழுதி கொடுங்க. 'பேப்பர்ல எழுதி பல வருஷம் ஆச்சு பாஸ்?னு யோசிச்சா... மெசேஜ் டைப் பண்ணி அனுப்புங்க. திருமண வாழ்க்கையும், ஒரு வகையான காதல் வாழ்க்கைதாங்க.



3. கிப்ட் கொடுங்க :

வைர மோதிரமோ, தங்க வளையலோ, காஸ்ட்லி டிரஸோ தான் வாங்கிதரணும்னு கிடையாது. அவங்க ரொம்ப நாளா ஒரே செப்பலை பயன்படுத்தறாங்கனு தெரிஞ்சா புது செப்பல் வாங்கிக்கொடுக்கங்க. சின்ன சின்ன பரிசுகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கும். (அதுக்குன்னு வளையல் வாங்கித் தந்தத எல்லாம் கணக்குல காட்டாதீங்க பாஸ்)



4. கட்டிப்பிடிங்க :

கமல் சொன்ன அதே கட்டிப்பிடி வைத்தியம் தான். காலையில எழுந்ததும், ஆபிஸ் விட்டு வந்ததும், தூங்கப்போவதுக்கு முன்னரும்னு சின்ன ஹக் பண்ணுங்க. கிஸ் கொடுங்க. அப்புறம் பாருங்க, ரேம் க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு ஃபோனா வாழ்க்கை சும்மா ஸ்மூத்தா போகும்.



5. சண்டை வந்தா சமாளிக்கணும் :

ரோடு போட்டதும் சாலைகள் குண்டும் குழியுமாக ஆவதும், கல்யாணம் பண்ணதும் பேமிலிக்குள்ள சண்டை வரதும் சகஜம் தான். சண்டை வந்தால், உடனே மனைவி மேல குற்றம் சொல்லாதீங்க. திட்டாதீங்க. எதனால சண்டை வந்ததுனு உட்கார்ந்து பேசி அப்பவே தீர்த்துடுங்க. குழந்தைங்க முன்னாடியோ, உறவினர்கள் முன்னாடியோ சண்டை போட்டுக்காதீங்க. யார்கிட்டயும் உங்க மனைவியை விட்டுக்கொடுத்து பேசாதீங்க. (உங்க அம்மாகிட்ட கூட பாஸ்)



6. ஷேர் பண்ணுங்க :

புது விஷயங்களை ஏதாவது படிச்சலோ, பார்த்தாலோ, கேட்டாலோ ஃபேஸ்புக்ல ஷேர் பண்ற மாதிரி உங்க மனைவியிடமும் ஷேர் பண்ணுங்க. அவங்க ஏதாவது சொன்னா காது கொடுத்து கேளுங்க. பக்கத்து வீட்டு கதையை சொன்னால் கூட சுவாரஸ்யமா கேட்டுக்கோங்க. அலுத்துகாதீங்க. 'நீ சமைச்சு கொடுத்த சாப்பாடு சூப்பர்' , ' டிரஸ் செம'னு அடிக்கடி பாராட்டுங்க.



7. எல்லாத்துக்கும் எதிர்பார்க்காதீங்க :

சிலர் எது வேணும்னாலும் அவங்க மனைவியை தான் எதிர்பார்ப்பாங்க. எந்த பொருள் எங்க இருக்குனு கூட தெரியாத அப்பாவி ஜீவனாகவே வளர்ந்து இருப்பாங்க. அவங்க உங்களுக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து எடுத்துக்கொடுத்தாலும், நாட்கள் போக... போக... இது சலிப்பை ஏற்படுத்தும். 'நம்மள ஒரு வேலைக்காரி மாதிரி பயன்படுத்தறாரோ'னு கூட யோசிக்கலாம். அதுனால, இனி கூப்பிட்ட குரலுக்கு அவங்க ஓடி வரணும்னு நினைக்காதீங்க. ”யாரங்கே”ன்னு கேட்க நாம என்ன புலிகேசியா?


8. ஹெல்ப் பண்ணுங்க :

டைம் கிடைச்சா, அவங்களுக்கு சின்ன சின்ன உதவி பண்ணுங்க. வாஷ்பேஷின்ல பாத்திரம் இருந்தால் கழுவி கொடுங்க. வீட்டை சுத்தப்படுத்துங்க. துணி துவைச்சு காயப்போட உதவுங்க. இந்த ஹெல்ப் எல்லாம் நீங்க அவங்க மேல எவ்வளவு கேர் எடுத்துக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க.

9. டூர் போங்க :

அலுவலகம், வீடு, குழந்தைகள்னு ஒரே இடத்தை சுற்றி சுற்றி வந்தால் சலிப்பு வரலாம். வருஷத்திற்கு ஒருமுறையாவது மனைவி, குழந்தைகளுடன் டூர் போங்க. கொஞ்சம்டைம் இருந்தால் மனைவி கூட லாங் டிரைவ் போங்க. அவங்க அம்மா, அப்பாவையோ, அவங்களுக்கு பிடித்த நண்பரையோனு சர்ப்ரைஸாக வர வைத்து அவங்க முன்னாடி நிறுத்துங்க. இதுக்கு எல்லாம் பலன் கொஞ்ச நாட்களிலேயே தெரிஞ்சுப்பீங்க.

10. பணமும் முக்கியம் :

ஒர் குடும்பம் நல்லா இருக்கணும்ன்னா, கண்டிப்பா பொருளாதாரமும் முக்கியம். உங்க சம்பளம் எவ்வளவு? மாசம் என்னென்ன செலவு ஆகுதுனு மனைவிகிட்ட உட்கார்ந்து பேசி செக் லிஸ்ட் போட்டு செலவு பண்ணுங்க. குழந்தைங்க படிப்பு, எதிர்கால திட்டம்னு எல்லாத்துக்கும் அவங்க கூட கலந்து பேசுங்க. அவங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்கனு புரிஞ்சுப்பாங்க.

இப்படியாக வாழ்ந்தால் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்” பாஸ்,



- ஹேமா

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்ல உள்ள தடை நீங்குமா?



இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில்,பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஆகம விதி என்பார்கள்.இதனால் ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் மாத விலக்குக் காலங்களில் கோயிலுக்குள் செல்வதே இல்லை.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்தப் பெண்ணும் கோயிலுக்குள் போகக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது,' கடவுள் ஐய்யப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி' அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும்.

அதையும் மீறி பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோயில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலைக்குள் சென்று ஐய்யப்பன் சிலையைத் தொட்டு வழிபட்டதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது. திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை எதிர்த்து #HappyToBleed அமைப்பு சமூக வலைதளங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கியது .

இதனைத் தொடர்ந்து அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

"கோயில் என்பது பொதுவான ஆன்மிக தலம். அங்கு வரும் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு அனுமதி மறுப்பது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இந்த பிரச்னையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இந்த வழக்கு அரசியல் சட்ட பெஞ்சுக்கு அனுப்புவதற்கு உகந்தது என்று நாங்கள் நினைக்கக்கூடும். அப்படி மாற்றுவதாக இருந்தால், விரிவான உத்தரவைப் பிறப்பிப்போம் என்று கூறியதோடு, நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தர்ஹாவுக்கு, பெண்கள் செல்ல உரிமை உள்ளது

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவுக்கு, பெண்கள் செல்ல உரிமை உள்ளது’ என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்பை வழங்கியுள்ளது.

பாரதி முஸ்லிம் மகிலா அன்டோலன் அமைப்பைச் சேர்ந்த ஜாகியா சோமான் மற்றும் நூர்ஜகான் சபியா ஆகியோர் 2014-ம் ஆண்டு பொது நல மனு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவின் மீதான விசாரணையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.கனடே மற்றும் ரேவதி மொஹிட்டி ஆகியோர் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

‘‘பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டக் கூடாது!’’

‘தர்ஹாவுக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 15, 19 மற்றும் 25 ஆகியவற்றில் சொல்லப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம், அனைவருக்கும் பொதுவானது. எனவே, தர்ஹாவின் மையப் பகுதிக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது. மதத்தை வழிநடத்தவும், அதன் கொள்கைகளைப் பின்பற்றவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. எனவே, பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டி நாம் தடைபோடக் கூடாது." என்று தீர்ப்பில் கூறியுள்ளோம் ..

ஏன் இந்த தீர்ப்பை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது ?

இந்தத் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள பெண்கள் கொண்டாடி வரும் நிலையில், சபரிமலை கோயில் விவகாரத்திற்கும் முன்னுதாரணமாக வைத்து, ஏன் பார்க்க கூடாது என பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து உழைக்கும் பெண்கள் உரிமை அமைப்பு குழுவின் இணை அமைப்பாளர் லதாவிடம் பேசினோம்... "இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த தீர்ப்பு, சபரிமலை வழக்கிற்கு முன்னுதாரணமாக அமையும் என்று நம்பிக்கை உள்ளது. கேரளாவில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள இடது சாரிகள் தலைமையிலான அரசு உடல் ரீதியான விஷயங்களை வைத்து பெண்களை தடுப்பது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறியுள்ளது. எனவே இதை எடுத்துக்கட்டாக எடுத்துக்கொண்டு இதற்காகப் போராடி வரும் அமைப்புகள் விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. கேரள அரசின் மீது நம்பிக்கை உள்ளது. சபரிமலை கோயிலிலும் விரைவில் பெண்கள் செல்லுவதற்கு சட்டரீதியாக வழிபிறக்கும் என்றார். அதே நேரத்தில் தேவஸ்தான அமைப்பு இந்தத் தீர்ப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் .

மனிதர்கள் வகுத்த சட்டங்களை மனிதர்கள் மாற்ற முடியும்

இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் மொழியிடம் பேசினோம். "மதம் ,ஆட்சி அரசியல், குடும்பம் இவை மூன்றும் ஆண்களின் கையில்தான் உள்ளன. இவை மூன்று இடங்களிலும் பெண்கள் சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். வழிபாட்டுத் தலம் மற்றும் நினைவுசின்னம் எதுவாக இருந்தாலும் அந்தப் பெண்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில், இதுபோன்று உரிமைக்காக போராடும் பெண்களுக்கு உதாரணமாக இருக்கும். இதைப் போன்றது தான் கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்ற விதி முறைகளும். அதனை எதிர்த்து போராட்டத்தை துவங்கி உள்ள பெண்களுக்கு உரிமை கிடைக்க வழிவகை உள்ளது. கோயிலின் சான்றுகளிலோ அல்லது புராணங்களிலோ பெண்கள் நுழையக்கூடாது என்று சொல்லவில்லை. எனவே நல்ல முடிவு வரும். இது மனிதர்கள் வகுத்தது. இதனை மனிதர்களால் நீக்க முடியும்." என்றார்.


கே. புவனேஸ்வரி

vikatan.com

உங்கள் உடல்மொழி சொல்லும்சேதி! #BodyLanguage




அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போலத்தான் நாம் யார் என்பது நம் உடல் மொழியிலேயே தெரிந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல்மொழி என்பது தனித்துவமானது. ஒருவருடைய உடல்மொழியே அவரின் மனநிலையை எளிதாக வெளிப்படுத்தும். நீங்கள் தனியொருவனா, ஆயிரத்தில் ஒருவனா? உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் நீங்கள் யார் என்பதை...!

உலகின் பெரும் ஆளுமைகள் அனைவரும் தனித்துவமான உடல்மொழியை கொண்டவர்கள். நம் அருகாமை உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். படத்தின் முதல் காட்சி சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினிகாந்த். உடைமைகளை பெற்றுக்கொண்டு சிறை வாசலுக்கு நடந்து வர கதவுகள் திறக்கின்றன.அவர் நடந்து வருவது மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது. ஆனாலும் அவரின் முகத்தைக் காட்டும் வரையில் கூட பொறுத்திருக்காமல் எழுந்து நின்று கைதட்டி விசிலடிக்கிறோம் என்றால். அது அவரது உடல்மொழி செய்யும் மேஜிக். உங்கள் உடல்மொழியை மேம்படுத்திக் கொள்வதற்கான சில சிம்பிள் டிப்ஸ் இங்கே...



1. நம்மில் பெரும்பாலானோரும் பேசுகையில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்போம். கைகளை காட்டிக்கொள்வது என்பது நம் எதிராளியிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். மேலும் அந்த உரையாடலில் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவும் செய்கிறோமாம்.



2. பேசிக்கொண்டிருக்கும் பொழுது உதட்டை குவிப்பது. தாடையை சொறிவது. மேலும் என்ன என்பது போல அவசரப்படுத்துவது போன்றவை உங்களுக்கு ந்த விஷயத்தில் ஆர்வமில்லை என்பதை காட்டி உங்கள் நண்பரை சலிப்படையச் செய்யும்.


3. நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை நேரடியாக கண் பார்த்து பேசுவதின் மூலமே சொல்லிவிட முடியும். மனிதனின் 70 சதவிகித தகவல் பரிமாற்றங்கள் உங்கள் சின்ன சின்ன உடல்மொழிகளாலேயே பிறருக்கு கடத்தப்படுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. இடுப்பில் கை வைத்துக்கொண்டு நிற்பது உங்கள் பொறுமையின்மையையும் உங்களுக்கு அந்த உரையாடலில் உள்ள ஆர்வமின்மையையும் காட்டுவதாய் இருக்கும்.

5. நீங்கள் நின்று கொண்டிருக்கும் தோரணையும் உங்கள் உடல்மொழியை அழகாய் கடத்தும். நின்று கொண்டு பேசும்பொழுது பாதங்களின் திசையும் கூட நீங்கள் கிளம்ப தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும்.



6. போலியாக செய்வதை தவிருங்கள். எதேச்சையாக கடந்து செல்கையில் வேறொரு மனநிலையில் இருந்துகொண்டு பிறரை பார்த்து புன்னகை செய்யும் பொழுது அது இயல்பானதாக இருக்காது. மனம் விட்டு சிரித்து உங்கள் இருப்பை பூர்த்தி செய்யுங்கள்.

7. நாம் எப்படி நம் கருத்தை எதிரில் இருப்பவர் காது கொடுத்து கவனிக்க வேண்டும் என நினைக்கிறோமோ. அது போலத் தான் பிறருக்கும் தோன்றும். உரையாடலின் போது பார்வையை வேறு பக்கம் செலுத்துவது. காதுக்குள் விரலை விட்டு எடுத்து அழுக்கு இருக்கிறதா என பார்ப்பது போன்றவையெல்லாம். நம் மீதான நம்பிக்கையை சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும். பிறருடனான உரையாடலில் கண் பார்த்து பேசி பழகுங்கள். அதன் பிறகு உங்கள் மீதான நம்பிக்கை பிறருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்வதை உணர்வீர்கள்.

பிறருடைய உடல் அசைவுகளை பொறுத்தே நம்மை வெளிக்காட்டுவோம். தனியொருவனாக இருப்பதற்கும், ஆயிரத்தில் ஒருவனாக கடந்து போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? மேலும் இதையெல்லாம் ஒரே நாளில் கடைபிடித்துவிட முடியாது தான். ஆனால் நம் உடல், நாம் சொல்வதைத்தானே கேட்க வைக்க வேண்டும்...!

- க.பாலாஜி

மாணவர்களே கட்டிய கழிப்பறை! - மலைக்க வைத்த மனிதநேயம்

vikatan.com

பள்ளிக்கே வராமல் நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர் நாகப்பட்டினம் மாணவர்கள். ' கழிப்பறை இல்லாததே நோய் வருவதற்குக் காரணம் என்பதை உணர்ந்ததால், சக மாணவர்களிடம் வசூல் செய்து கழிப்பறை கட்டும் பணியை முடித்தோம்' என உற்சாகமாகப் பேசுகின்றனர் மாணவர்கள்.

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், தேசத்தின் தூய்மை பற்றிய பிரசாரத்தை முன்னெடுக்கிறது மத்திய அரசு. ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறையின் தேவை பற்றிய விழிப்பு உணர்வு பிரசாரங்கள் வேகமெடுத்துள்ளன. ' கழிப்பறை இல்லாததால் மணமகனை மணக்காத மணப்பெண்' என்பன போன்ற செய்திகள் எல்லாம் வடஇந்தியாவில் சாதாரணம். தமிழ்நாட்டிலும், ஏழை எளிய மாணவனின் வீட்டிற்கு கழிப்பறைக் கட்டிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மாணவர்கள். மாணவர்களின் அசாதாரண முன்னெடுப்பை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் நாகப்பட்டினம் மக்கள்.



நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் உள்ள எஸ்.கே.அரசு உயர் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவர் அகத்தியன். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த அகத்தியன், அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். சக நண்பர்களான வசீகரன், ராகுல், நவீன்ராஜ், ஹரிஷ் ஆகியோர், ' ஏன் பள்ளிக்கு வருவதில்லை?' என விசாரித்துள்ளனர்.

அவர்களிடம், தன் காலில் இருந்து தோல் நோயைக் காட்டி அழுதிருக்கிறார் அகத்தியன். ' அடிக்கடி விஷக் காய்ச்சலும் வந்துவிடுகிறது. சரியான டாய்லெட் இல்லாததுதான் காரணம்' என அழுதிருக்கிறார். ' திறந்தவெளியில் மலம் கழித்ததால்தான் அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகிறார்' என்பதை உணர்ந்த நண்பர்கள், ' நாமே ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, கழிப்பறை கட்டினால் என்ன?' என்ற முடிவுக்கு வந்து, பள்ளி ஆசிரியர் வீரமணியிடம் கூறியுள்ளனர். அவரும், 'மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இந்தத் திட்டம் அமையும். உடனே தொடங்குங்கள்' என உற்சாகப்படுத்தினர்.



இதையடுத்து, சுதந்திரதினவிழா அன்று கழிப்பறை கட்டுவது குறித்து விழிப்பு உணர்வு பேரணியை நடத்தினர். கூடவே, சக மாணவர்களிடம் கையேந்தி காசு வசூல் செய்தனர். ஒருவழியாக கழிப்பறை கட்டுவதற்கான தொகை சேர்ந்துவிட்டது. இதையடுத்து, அகத்தியனின் நண்பர்களே முன்னின்று கழிப்பறையைக் கட்டும் பணியை நிறைவு செய்தனர்.



கொளுத்தும் வெயிலில் சக மாணவனுக்காக கழிப்பறை கட்டும் பணியில் மாணவர்கள் இறங்கியதை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர் சுற்றுவட்டார பொதுமக்கள். மாணவர்களின் செயலைக் கேள்விப்பட்டு கல்வி அதிகாரிகள், அவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டினர்.


'உயிர் காப்பான் தோழன்' என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர் இந்த மாணவர்கள். இந்த மாணவர்களுக்கு நாமும் வைப்போம் ஒரு ராயல் சல்யூட்!

த.அழகுதங்கம்
(மாணவ பத்திரிகையாளர்)

இது நல்லதல்ல... By ஆர். வேல்முருகன்

DINAMANI

கற்றலின் எதிரி விருப்பம் இன்மையோ, மறதியோ, அச்சமோ அல்லது வெறுப்போ கிடையாது. இவை அனைத்தையும் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் தண்டனைதான்.

அறிவியல் உலகம் எத்தனையோ முன்னேற்றத்தைக் கண்டுள்ள இந்தச் சூழ்நிலையிலும் வகுப்பில் சரியாகப் படிக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி, பள்ளிக் குழந்தைகளின் கைகளில் கற்பூரத்தை ஏற்றிச் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளார் அண்மையில் தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர்.

பொதுவாக, தொடக்கப் பள்ளிகளுக்கு ஆசிரியைகளை நியமிப்பது, குழந்தைகளின் மேல் அன்பு செலுத்தி நன்கு கற்றுத் தருவார் என்பதால்தான்.

ஆனால் சூடு வைத்ததன் மூலம் தான் ஆசிரியை பதவிக்குத் தகுதியில்லாதவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார், அந்த ஆசிரியை. எந்த ஆசிரியர் இயக்கமும் குறைந்தபட்சம் இதை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயலால் சூடுபட்ட குழந்தைகளுக்குக் கல்வியின் மேல் கண்டிப்பாக வெறுப்புத்தான் வளர்ந்திருக்கும்.

இது தவிர, பல இடங்களில் தொடரும் பாலியல் வக்கிரங்கள், வகுப்புக்கு குடிபோதையில் வரும் ஆசிரியர்கள், தனக்குப் பதிலாக வேறு ஓர் ஆசிரியரை நியமித்து விட்டு, சொந்த வேலையைப் பார்க்கச் செல்லும் ஆசிரியர்கள் என்று பிரச்னைகளின் வடிவம் வெவ்வேறு விதமாக உள்ளது.

பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு பெருகியுள்ள இந்தக் காலத்திலும் மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாகக் கருதப்பட்டுப் போற்றப்படும் குரு, இவ்வாறு செய்வதுதான் பொதுமக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட சம்பவங்கள் எல்லாம் சிறிய உதாரணங்கள்தான். இதே நிலை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் ஆசிரியர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் மதிப்பு குறைந்துவிடும்.

ஈடுபாடுதான் கல்வி கற்பதன் முதல் படி என்பது ஆசிரியர்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே மிகவும் கேவலமாகப் பார்க்கும் இத்தகைய சூழ்நிலையில், எத்தனை ஆசிரியர்கள் தங்களது மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது கேள்விக்குறிதான்.

ராமேசுவரம் தீவில் ஒரு காலத்தில் தினசரி செய்தித்தாள்களை வீடு, வீடாக விநியோகித்த ஒரு சிறுவன், தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் தினசரிகளில் தலைப்புச் செய்தியாக வந்தது மட்டுமல்லாமல், நாட்டின் முதல் குடிமகனாகவும் உயர்ந்தார் என்பது வரலாறு.

தான் முதல் குடிமகனாக இருக்கும்போது, திருச்சி கல்லூரியில் படித்தபோது தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை, சந்திக்க விரும்பினார் அப்துல் கலாம். பாதுகாப்பைக் காரணம் காட்டி ஆசிரியரை அப்துல் கலாம் இருக்குமிடத்துக்கு அழைத்து வரலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனால் தனக்குப் பாடம் போதித்த ஆசிரியரை தான் சென்று பார்ப்பதுதான் சரி என்று கூறி அந்த ஆசிரியரை தானே சென்று சந்தித்து வந்தார் அப்துல் கலாம்.

நாட்டின் முதல் குடிமகனாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து வரச் செய்வது என்பது அப்துல் கலாமுக்குப் பெரிய விஷயமாக இருந்திருக்க முடியாது.

இவர் சென்று பார்த்ததால் இருவரின் மீதான, ஆசிரியர், மாணவரின் மீதான எண்ணங்களும் மரியாதையும் மிகவும் உயர்ந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒரு மாணவரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பது யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்போதும் பெயர் தெரியாத எத்தனையோ ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் கண்டிப்பாக எந்த விருதும் கிடைக்காது.

அதற்காக அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. தங்கள் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இப்போதும் பல ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுகிறார்கள். தங்கள் ஊதியத்தின் ஒருபகுதியை மாணவர்களின் நலன்களுக்காகச் செலவிட்டு, பாடத்திட்டத்திற்கு அப்பாலும் பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்கு கற்றுத் தந்து கொண்டிருக்கின்றனர்.

முதலில் குறிப்பிட்ட விவகாரத்தில் சூடுபட்ட குழந்தைகள் அச்சத்தின் பிடியில்தான் இருப்பார்கள். அப்படி அச்சத்தின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் ஒரு குழந்தையால் எதைக் கற்றுக்கொள்ள முடியும்?

கற்றல் என்பது குழந்தைக்குக் குழந்தை கண்டிப்பாக மாறுபடும். இதுதொடர்பான விழிப்புணர்வு பெற்றோர்களிடம் மட்டுமல்லாமல், பெரும்பாலான ஆசிரியர்களிடமும் இல்லை.

தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சங்கங்கள் கூக்குரலிடுகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பதற்கே உயர் அதிகாரிகள் சங்கடப்படுகின்றனர்.

இப்போதைய சூழ்நிலையில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் அடுத்துவரும் தலைமுறைக்குக் கல்வியின் மீது நாட்டத்தை ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பார்கள், படிப்பதற்கு மாணவ, மாணவியர் இருக்க மாட்டார்கள்.

இது தனியார் பள்ளிகள் மேலும் வளர்ச்சியடையவே ஊக்கமளிக்கும். இந்த நிலை நாட்டுக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் நல்லதல்ல.

Saturday, August 27, 2016

வி.ஏ.ஓ.க்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த இளைஞரால் பரபரப்பு!



விழுப்புரம்: தந்தையின் இறப்பு உதவித்தொகை பெறுவதற்காக, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் இளைஞர் பிச்சை எடுத்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ம.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். கொளஞ்சியின் மனைவி விஜயா தனது மகன்கள் ஐயப்பன், அஜித்குமார், மகள் அனுசுயா ஆகியோருடன் ம.குன்னத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை வளர்த்து வந்த விஜயாவுக்கு, தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவர் உயிரிழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12,500 வந்துள்ளது. அதைப் பெற வந்த கொளஞ்சியின் மகன் அஜித்குமாரிடம், உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், எனக்கு ரூ.3,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ம.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், நீங்கள் கேட்கும் பணத்தை தர என்னிடம் பணம் இல்லை என அஜித்குமார் கூறி இருக்கிறார். ஆனாலும், பணம் தந்தால் மட்டுமே உதவித்தொகையை பெற முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் கண்டிப்புடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் மனமுடைந்த அஜித்குமார், ம.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள கடை வீதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், ''என் அப்பாவின் ஈம சடங்கிற்கு வாங்கிய கடனை அடைக்க வக்கு இல்லை. என்னிடம் அப்பா இறப்பிற்கு வந்த ரூ.12,500 தருவதற்கு மூன்றாயிரம் ரூபாய் கேட்கிறார் ம.குன்னத்தூர் வி.ஏ.ஓ." என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியபடி, அரசின் உதவித்தொகையைப் பெற கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுக்க, எனக்கு பிச்சை போடுங்கள் என்று அனைவரிடமும் கேட்டுள்ளார்.



இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

'சைக்கிள்' வாத்தியார் முதல் சேட்டிலைட் சேனல் வரை..! பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது இப்படித்தான்

vikatan.com

சைக்கிளில் சென்று ஆசிரியர் பணியைத் தொடங்கிய டி.ஆர்.பச்சமுத்து இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னணி இது!

சென்னை மேற்கு மாம்பலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து பச்சமுத்து வளர்ச்சி அத்தியாயம் தொடங்கியது. கடன் வாங்கித்தான் அந்த பள்ளியை தொடங்கியதாக அவருடன் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கல்வி சாம்ராஜ்ஜியம் மட்டுமல்லாமல் அரசியலிலும் பச்சமுத்து கால் பதித்தார். காட்டாங்கொளத்தூரில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இந்த அளவுக்கு அவரது வளர்ச்சி ஏற்பட்டது மற்றவர்களை வியப்புக்குள் ஆழ்த்துகிறது. ஆனால், அவர் கடந்து வந்த பாதைகளை விவரிக்கிறார் பச்சமுத்துவின் நெருங்கியவர்கள்...

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கி தொழில் நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்வதிலும் எஸ்.ஆர்.எம். கடைபிடிக்கும் பாலிசியே வித்தியாசமானது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல கட்டடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.நர்சிங் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி, எஸ்.ஆர்.எம். ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ், எஸ்.ஆர்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்மருத்துவ கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து. இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார்.

2005ல் நாகர்கோவிலை சேர்ந்த மதன், மருத்துவ மற்றும் இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை மூலம் பச்சமுத்துவிடம் அறிமுகம் ஆகிறார். 2007ல் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் பெரும்பாலான மாணவர் சேர்க்கை மதன் மூலமாகவே நடக்கிறது. ஒரு கட்டத்தில் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் துணை பொதுமேலாளர் என்ற பதவியும் மதனுக்கு வழங்கப்படுகிறது. நகமும், சதையும் போலவே பச்சமுத்து, மதனின் நட்பு இருந்தது. 2011ல் அரசியல் ஆசை துளிர்விட பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியை தொடங்குகிறார். அதிலும் மதனுக்கு மாநில இளைஞரணி பொறுப்பு அளிக்கப்படுகிறது. பச்சமுத்துக்கு சினிமா பிசினஸ் ஆசை வர, ஒரு தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்படுகிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேந்தர் மூவிஸ் உதயமாகிறது. மொட்ட சிவா, கெட்ட சிவா வரை வேந்தர் மூவிஸ் நிகழ்ச்சிகளில் பச்சமுத்து தவறாமல் ஆஜராகினார். இவர்களின் நட்பு பச்சமுத்துவின் குடும்பத்தின் சிலருக்கு பிடிக்கவில்லை.

இதன் பிறகுதான் இருவரையும் பிரிக்க சதுரங்கவேட்டை ஆரம்பமானது. பூஜை அறையில் பச்சமுத்துவின் படத்தை வைத்து பூஜித்தார். அந்த அளவுக்கு பச்சமுத்து மீது அளவு கடந்த பாசத்தையும், மரியாதையும் வைத்திருந்தார் மதன். பச்சமுத்து குடும்பத்தினர் மதன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் முழு நம்பிக்கை வைத்திருந்தார் பச்சமுத்து. இந்த சமயத்தில் பச்சமுத்துவின் உறவினர் ஒருவர் விருகம்பாக்கத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மதன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தனர் பச்சமுத்துவின் குடும்பத்தினர். இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. திருச்சி மருத்துவக் கல்லூரி அனுமதிக்காக டெல்லிவரை சென்று காயை நகர்த்திய மதன் மீது பச்சமுத்து முதன்முறையாக கோபப்பட்டார். திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பெறப்பட்ட பணத்தில் சில கோடிகள் ஆந்திராவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க ஒரு பெண்ணிடம் கொடுக்கப்பட்டது. அந்த அசைன்மெண்டிலும் மதன் சொதப்ப, கோபத்தின் உச்சக்கே சென்றார் பச்சமுத்து.
 
2016 ஜனவரியில் தொடங்கி இவர்களது முட்டல், மோதல் மே மாதத்தில் பூதாகரமாக வெடித்தது. அதற்கு மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வான நீட்டும் ஒரு காரணமாக அமைந்தது.மே 28ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் மதன் எழுதிய தற்கொலை கடிதம் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் காசிக்கு சென்று சமாதி அடைவதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்ட பணத்தை எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலில் எஸ்.ஆர்.எம். நிர்வாகம், மதனுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தது.

உரிய ஆதாரங்கள் வெளிவரத்தொடங்கியதும், மதன் மீது பச்சமுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, மதன் மீதும், பச்சமுத்து மீதும் மாணவர் சேர்க்கை மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை குவித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் திண்டுக்கல் மாவட்ட ஐ.ஜே.கே மாவட்ட செயலாளர் பாபு, மதனின் கூட்டாளி சுதீர், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம் நிர்வாகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால், விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக இன்று பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உசேன் போல்ட்டுகள் ஏன் உருவாவதில்லை?!' -சீறுகிறார் சீமான்

vikatan.com

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நிதி உதவிகள் குவிந்து வருகின்றன. ' தமிழ்நாட்டிலும் உசேன் போல்ட்டுகளுக்கு பஞ்சமில்லை. அவர்களைத் தேர்வு செய்யாமல் குறுக்கீடு செய்வதே விளையாட்டுத்துறை அதிகாரிகள்தான்' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது இந்தியா. " நம்மிடம் வீரர்களுக்குப் பஞ்சமில்லை. தினமும் என்னுடன் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஓடும் வீரர்களைப் பாருங்கள். அத்தனை பேரும் உசேன் போல்ட்டுக்கு இணையானவர்கள்தான். அவர்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டில் தங்கம் வெல்வதற்கு ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

" ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மிக நுட்பமாக கவனிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் போட்டியைக் கைவிட்ட நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளே, அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இரண்டாம் இடத்திற்கான போட்டிகளே தொடர்ந்தன. கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டைக் கைவிட்ட நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் சாதித்துவிட்டன. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் இரண்டு பதக்கங்களையும் பெண்கள்தான் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த நாட்டின் மானத்தைக் காத்த கண்மணிகள் அவர்கள். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் ஒரு தங்கம் வெல்வதற்குக்கூடவா ஆட்கள் கிடைக்கவில்லை?



செர்பியாவில் இருந்து பிரிந்த கொசாவா, வெறும் பத்து லட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடு அது. தங்கம் வென்ற நாடுகள் பட்டியலில் கொசாவா இடம் பெற்றுவிட்டது. உலகின் வெல்ல முடியாத தலைசிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் உசேன் போல்ட். ஜமைக்கா என்ற சிறிய நாட்டைச் சேர்ந்தவர் அவர். அவரை அந்த நாடு எப்படி உருவாக்கியிருக்கிறது பாருங்கள். விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றை ஒரு நாட்டின் அழகான முகங்களாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல விளையாட்டு வீரனை ஒரு நாடு உருவாக்குகிறது என்றால், அந்த நாடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நாட்டில் எல்லாம் வர்த்தக மயமாக்கப்பட்டுவிட்டன. சந்தைப் பொருளாதாரத்தை கவனிக்கவே அரசுக்கு நேரம் சரியாக இருக்கிறது. விளையாட்டுத் துறையின் அனைத்து மட்டத்திலும் சாதி, மத குறுக்கீடுகள் அதிகரித்துவிட்டன.

அதனால் ஏற்படுகிற பின்விளைவுகள்தான் இதெல்லாம். நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் சிறந்த நீச்சல் வீராங்கனையாக திகழ்கிறார். அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு விளையாட்டுத் துறை அதிகாரிகளின் குறுக்கீடுகள்தான் காரணம். இதை அரசியல் என்று சொல்ல விரும்பவில்லை. அரசியல் என்ற சொல்லை புனிதமாகக் கருதுகிறேன். ஆந்திராவிலிருந்து நேற்று பிரிந்து சென்ற தெலுங்கானா மாநிலம் வெள்ளிப் பதக்கம் வெல்கிறது என்றால், அந்த மண்ணைச் சேர்ந்தவர்களின் வெறிதான் வெற்றிக்குக் காரணம். 130 கோடி மக்களில் வேகமாக ஓடுவதற்கு ஓர் இளைஞன் கூடவா நம்மிடம் இல்லை? நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதலில் மிகச் சிறந்த வீரர், வீராங்கனைகள் நம்மிடம் உள்ளனர். அவர்களைத் தேர்வு செய்து இந்த நாட்டின் செல்வங்களாக மாற்ற வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பராமரித்து, விளையாட்டைத் தவிர வேறு எந்த சிந்தனையும் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளி வென்ற பி.சி.சிந்து பேட்டி கொடுக்கும்போதுகூட, ' மூன்று மாதங்களாக செல்போனைப் பயன்படுத்தவில்லை' என்கிறார். எந்த ஒரு கவனச் சிதைவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வெற்றியை நோக்கி அவர் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். நமது தடகள வீராங்கனை சாந்திக்கு உரிய நிவாரணத்தைத் தராமல் அரசு அலைக்கழிக்கிறது. அவருக்கான நீதியை தமிழக அரசே உடனே செய்து தர முடியும். இன்று வரையில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அடுத்து வரக் கூடிய காலகட்டங்களில் பதக்கம் வெல்ல வேண்டுமானால், விளையாட்டுத்துறையை விளையாட்டாக பார்க்க வேண்டும். நியாயமான தேர்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும். ' தன் மதம் சார்ந்தவன், சாதியைச் சேர்ந்தவன்தான் வர வேண்டும்' என்றால் எதுவும் உருப்படாது. மத்திய விளையாட்டுத் துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு.

-ஆ.விஜயானந்த்

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை' அவமானத்தால் தற்கொலையா?

vikatan.com


சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஜீ தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒளிபரப்பாகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தொடர்பாக
சிலர் வழக்கும் போட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் (60) என்பவர் இது போன்றதொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அவமானப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் இரண்டு லாரிகள் சொந்தமாக வைத்திருந்தார். தனது மனைவி அம்பிகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மைத்துனி ரேணுகாவிடம் நெருக்கமாக வாழ்ந்துள்ளார். ரேணுகாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரேணுகாவின் கணவர் மகேந்திரன். ரேணுகா மீது சந்தேகமடைந்த மகேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பன் தரப்பினர் போலீஸுடம் சொன்னபோது,
''சொத்து பிரச்சனை காரணமாக ரேணுகா சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நாட இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட நாகப்பனை ஒளிபரப்ப மாட்டோம் என்று உறுதி கொடுத்து பேசியுள்ளனர். ஆனால் நிகழ்ச்சியில் நாகப்பன் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் ரேணுகாவின் இரண்டு மகள்களிடம் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம்சாட்டியது ஒளிபரப்பானது. இதனால் மனமுடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தங்கள் தந்தை மரணத்திற்கு சொல்வதெல்லாம் உண்மைதான் காரணம் என்று நாகப்பன் மற்றும் அம்பிகா தம்பதியின் மகள் ஆதி , மகன் மணிகண்டன் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர். தனது தந்தை சாவுக்கு நியாயம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. நிகழ்ச்சி தொகுப்பாளரே நீதிபதி போல் தீர்ப்பு கூறியதால் மனமுடைந்து போனார் தனது தந்தை என்று மகன் மணிகண்டன்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வியாபார நோக்கத்துடன் குடும்பங்களில் சாதாரண சண்டைகளை பூதாகரமக்கி அவர்களது அந்தரங்கத்தை படம் பிடித்து போட்டு அதன் மூல காசு பார்த்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடும்பத்தினரை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என நாகப்பனின் உறவினர் சந்திரசேகர் கூறுகையில், 'சமீபத்தில் மேடவாக்கத்தில் ஒரு இடத்தை 45 லட்சம் ரூபாய்க்கு நாகப்பன் விற்றார். அந்தப் பணம் தொடர்பாகவே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரேணுகாவின் வீட்டில் நாகப்பன் குடியிருந்து வந்தார். அங்கும் தகராறு ஏற்பட்டதால் பெரும்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். போனிலேயே தற்கொலை செய்ய வேண்டாம் என்று அந்த உறவினர் தெரிவித்தார். அப்போது, செய்யாத தவறுக்கு என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்த அவமானத்திற்குப் பிறகு என்னால் வெளியில் நடமாட முடியாது.

இதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று நாகப்பன் விரக்தியில் பேசியதோடு இணைப்பையும் துண்டித்துவிட்டார். உடனடியாக உறவினர்கள் எல்லோரும் அவர் வீட்டிற்க்கு சென்றோம். ஆனால் அவர் அதற்குள் தற்கொலை செய்துவிட்டார். ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டபோதே அதை நிறுத்தும் படி, போனில் தகவல் தெரிவித்தோம். ஆனால், எங்களிடம் நிறுத்துவதாக சொல்லியவர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தி நாகப்பனை கேவலமாக பேசியிருக்கிறார்கள். மேலும், நாகப்பன் ரேணுகாவின் இரண்டு மகள்களிடமும் பாசமாக நடந்துகொள்வார். பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவார். அப்படி பாசமாக இருந்தவர் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் மீது நாகப்பனின் தாயார் நாகம்மாள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரில், தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் சேர்க்க நாங்க முடிவு செய்தபோது போலீஸார் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் அவரது பெயர் இல்லாமல் புகார் கொடுத்தும், போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். முதல்வர் தனிப்பிரிவிற்கும், சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அங்கேயும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவோம்.' என்றார்.


இதுகுறித்து ஜீ தமிழ், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்,

''இந்த சம்பவம் குறித்து, ஜீ தமிழ் தொலைகாட்சி நிர்வாகம் சட்ட வல்லுநர்களை வைத்து ஆராய்ந்து வருகிறது. இந்த செய்தியை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி பெரிதுபடுத்தி வருகிறது. பொதுவாக, பிரச்னையோடு வரக்கூடிய நபர்களுக்கு நல்லது செய்வதே எங்களுடைய நோக்கம் ஆகும். எதிர்தரப்பையும் விசாரித்தே அவர்களுக்கான வழிகாட்டுதலை தருகிறோம். அந்த நிகழ்ச்சியில் நான் பேசியபோது கூட, 'குழந்தைகள் உதவி மையத்தின் தொடர்பு எண்ணான 1098 - ஐ தொடர்பு கொண்டு பிரச்னையை கூறியிருந்தாலே, அவர்கள் அதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பார்கள்', என்று சொல்லியிருந்தேன்.'' என்று கூறினார்.

-வே.கிருஷ்ணவேணி

விபத்துகள்

இங்கு விபத்துகள் விற்கப்படுகின்றன...!


சாலையோரக் கடைகளுக்கும் சாலை விபத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்விக்கு சாலையோரக் கடைகளே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று பதில் கிடைக்கிறது.

நீங்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவரா?... அப்படியென்றால், நீங்கள் ஒருநாளில் ஏதாவது ஓர் இடத்தில் திடீரென்று கண்களில் தாக்கும் நொடிப்பொழுது எரிச்சலை அனுபவித்திருக்கக் கூடும். கிராமப்புறங்களில் ஏதேனும் பூச்சி கண்களில் விழுந்துவிடுவதும், நாமும் சற்றுத் திணறி மோட்டார் சைக்கிளை ஓரம்கட்டிவிட்டுக் கண்களைக் கசக்கி, முகத்தைக் கழுவிவிட்டுப் பயணத்தைத் தொடர்வோம். நகர்ப்புறங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் அப்படி நடக்கிறது என்றால், அதற்கான காரணம் பூச்சிகள் அல்ல... சாலையோர புரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் (விரைவு உணவகங்கள்) இருந்து பறந்துவரும் மிளகாய்த்தூள் கலந்த மசாலாவே காரணம்.

குறிப்பிட்ட சில பாதைகள் வழியாகச் செல்லும்போது வாகனத்தை இயக்க முடியாமல் நாம் திணறுகிற அளவுக்கு கண்களில் வந்து காரமான அந்தத் துகள்கள் விழுவதை பலர் அனுபவித்திருப்பார்கள். அந்தவேளையில், வாகனத்தை இயக்குகிறவர், மதுபோதையில் இருந்தார் என்றால் அவரால் வாகனத்தைத் தன்னுடைய வசத்துக்குக் கொண்டுவர முடியாது. வாகனத்துக்கு அவர் வசப்பட்டு விடுவார். எங்காவது மோதி விபத்தையும் ஏற்படுத்திவிடுவார்.

தொடர்ந்து பலநாட்கள், இப்படியான ‘காரமான துகள்கள்’ கண்களில் மோதுவது எப்படி என்று விடாமல் சேசிங்கில் இருந்து கவனித்தபோதுதான் இந்த உண்மை தெரியவந்தது. மேலும் இதுபோன்ற கடைகளில் இருபுறமும் வைக்கப்பட்டிருக்கும், ‘எக்ஸார்சிஸ்ட் ஃபேன்’கள், உள்ளிருந்து காரத்துகள்களை அப்படியே இழுத்துச் சாலைக்கு அனுப்பிவைக்கின்றன. ஒன்றல்ல... இரண்டு ஃபேன்கள்!

‘‘இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்காரர்களிடம் எச்சரிக்கை செய்யவேண்டும். எக்ஸார்சிஸ்ட் ஃபேன்வைத்து உள்ளிருந்து, ‘காரப்பொடி துகள்கள்’ வெளியே வராத அளவுக்கு ஃபேனுக்கு மறைப்பாக ஓர் அட்டையைவைக்க வேண்டும். அப்படி வைத்திருக்கிறார்களா என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனையிட வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டுத் துறை, ஹெல்த் டிபார்ட்மென்ட் முதலிய துறையினரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஃபாஸ்ட் ஃபுட் கடைகளால்தான் பைக்கில் போகிறவர்கள் அதிகமான சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதனால், ஒரு ஏரியாவிலேயே வாரத்தில் 10 விபத்துகள் நடந்துவிடுகின்றன. சாலை விபத்துகளைத் தடுக்கவும், மனித உயிர்களைக் காக்கவும் அரசும், அதிகாரிகளும் இதன்மீது அதிக சிரத்தை எடுத்து கவனம் செலுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 67,250 சாலை விபத்துகளில் 77,725 பேர் காயமடைந்து உள்ளனர். 15,190 பேர் இறந்துள்ளனர். நாட்டிலேயே, தமிழகத்தில்தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. நாட்டின் மொத்த சாலை விபத்துகளில் 14.9 சதவிகிதம் தமிழகத்தில்தான் நடைபெற்று உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற விபத்துகளோடு ஒப்பிடும்போது 2014-ல் தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.

சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 26.4 சதவிகிதமும், லாரி மற்றும் கனரக ஓட்டுநர்கள் 20.1 சதவிகிதமும், காரில் செல்பவர்கள் 12.1 சதவிகிதமும், பேருந்து ஓட்டுநர்கள் - பயணிகள் 8.8 சதவிகிதமும் பாதிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் கூறுகிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர், 26.4 சதவிகிதம் சாலை விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம், அதாவது, நடக்கிற விபத்துகளில் கால்பங்கைவிட 1.4 சதவிகித கூடுதல் சாலை விபத்துகள், இரு சக்கர வாகன ஓட்டிகளால் நிகழ்கிறது.

எல்லாமே அவசரம், அவசரம் என்றாகிவிட்டதில் நாடு முழுவதும் சிறு, சிறு ஹோட்டல்களாக முளைத்திருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் சேவை அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அவசியமாகிவிட்டது. சைவப் பிரியர்கள்தான் இந்த வகை உணவகங்களில் இருந்து தங்களின் வயிறைக் காப்பாற்றி, வாழ்க்கையின் எஞ்சிய காலத்தைப் பாதுகாப்பாக ஆக்கிக் கொண்டுள்ளனர். முந்தைய சில தினங்களுக்கு முன்னர் வாங்கிவைத்த சிக்கனையும், மட்டனையும் வினிகரில் கழுவி, ‘அவசர உணவு’ தயாரிப்புக்கான வாணலியில் மசாலாவுடன் போட்டு உருட்டி, புரட்டி கம்பியில் விட்டுத் தூக்கும்போது சொட்டுகிற எண்ணெய்யின் வழியாக ஒருபோதும்
கறிச்சுவை கெட்டுப்போனதை அறிய முடிவதில்லை.

முகர்ந்து பார்த்தால் மனசே நாற்றமடித்துப் போகும் சில்லி சாஸ், தக்காளி சாஸ்களை சிக்கனின் லெக்-பீஸை சுற்றிலும் ஊற்றி அதில் ஒரு தனிச்சுவையை தேடிடும் ஆராய்ச்சியும் அதிக அளவில் தமிழகத்தில்தான் நடக்கிறது. இது போதாதென்று உயிரைப் பறிக்கும் விபத்துகளும் நடக்கிறது.


உஷார் மக்களே!

- ந.பா.சேதுராமன்

NEWS TODAY 22.04.2024